Translate

Showing posts with label பூமராங். Show all posts
Showing posts with label பூமராங். Show all posts

Thursday, 23 June 2016

இறை நம்பிக்கையுள்ளவர் வைத்தியம் பார்க்கலாமா.?

கேள்வி: 

[நபியே] நீர் கூறும்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு. அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்." [திருக்குர்ஆன் 
10:49]

இப்படித்தானே உங்கள் அல்லாஹ் சொல்கிறான்.? பிறகு ஏன் உங்க தவணையை நீட்டிக்க விரும்புகிறீர்கள்.? ஏன் உங்கள் நோய்க்கு வைத்தியம் செய்கிறீர்கள்.? 


  =================================================


பதில்: 

ஒரு முஸ்லிமை பொறுத்தவரை உலக வாழ்க்கையில் அனைத்தும் சோதனை. பசியும், தாகமும், இதர உபாதைகளும், நோயும் இன்னபிற அனைத்தும் சோதனை. அருளப்படும் செல்வங்களும் சோதனை.. அதன் இன்பங்களும் சோதனை. இதன் மூலம் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்பதை இறைவன் பார்க்கிறான். 
மனிதன் 
தன்னுடைய நன்மைக்காக எத்தனை  தான் முயன்றாலும் இறைவனது நாட்டத்தின் படியே  எதுவும் நடக்கும். அவனது வல்லமையை மனிதனுக்கு புரிய வைக்கவே இந்த இறை வசனம்.   


பசி வந்தால் இறைவனிடம் 'பிரார்த்தனை மட்டும் செய்.!' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை.. பிரார்த்தனையும் செய்ய வேண்டும். அது தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் பயன் தர.! அத்துடன், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, நேர்மையான முறையில் உழைத்து பொருளை சம்பாதிக்க வேண்டும். அவ்வாறு தூய்மையான முறையில் பெறப்பட்ட அதனை பிறருக்கும் கொடுத்து நாமும் உண்ண வேண்டும் என்றே இஸ்லாம் பணிக்கிறது. 

தாகத்திற்கான தண்ணீரை பெற, படைத்த இறைவனை பிரார்த்தித்தால் மட்டும் போதாது.. அவன் கை-கால்கள் எனும் கருவிகளை உங்களுக்கு வழங்கியிருக்கிறான்.. பிரார்த்தித்தால் மட்டும் போதுமென்றால் எதற்காக அந்தக் கருவிகளை இறைவன் வழங்க வேண்டும்..?

கிணற்றை நோண்டு.. தண்ணீரை அவன் தருவான் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. 

இந்த உலகின் நிலையாமையை மனதிலிருத்தி.. இந்த வாழ்க்கை ஒரு சோதனை என்பதை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப காரியங்களை ஆற்ற வேண்டும். அது தான் இஸ்லாம். 

திருக்குர்ஆன் 2:155:  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள்,உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! 

திருக்குர்ஆன் 
2:156-157:    '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'

வாழ்க்கையில் எதிர்படும் எந்தவொரு சோதனையையும் இறை நம்பிக்கையுடன் நேர்கொண்டால் அது அவனுக்கான நன்மையாகவே அமையும் என்பதுவே இஸ்லாம். 

“சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்) 

“ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் “என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன்”என்று கூறுவான். (நூல் : முஅத்தா)

ஆகவே ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் நோய்வாய்படுவதும் ஒரு சோதனையே.அந்த சோதனையின் போது இறைநம்பிக்கையுடன் பொறுமை காப்பதும்.. அதற்குண்டான வைத்தியம் செய்வதும்.. நிவாரணத்திற்காக இறைவனை பிரார்த்திப்பதும் தான் இஸ்லாம் காட்டும் ஆன்மிகம்.

“மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

“ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

“அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால், இறைவனால் தடை செய்யப்ட்ட பொருளின் மூலம் மருந்துவம் செய்யாதீர்கள்! “என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத்


[][][]

Sunday, 19 June 2016

ஷஹீத் பழனிபாபாவும், பீஜே அவர்களும்



கருணாநிதியின் மீது அன்றைக்கு முஸ்லிம் சமூகம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக, காயல்பட்டிணம் வந்த எம்ஜிஆரின் மீது முஸ்லிம்களில் சிலர் செருப்பு வீசினார்கள்.. அதில் மிகவும் அவமானப்பட்ட-ரோசப்பட்ட எம்ஜிஆர், காவி கபோதி ராமகோபாலன் தலைமையில் இந்து முன்னணி அமைய வழி வகுத்தார்.. தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் திமுக-கருணாநிதிக்கு பூர்ண ஆதரவை நல்கி வந்த நிலையில், முஸ்லிம்கள் மீது எழுதப்படாத அடக்குமுறைகளை எம்ஜிஆர் கட்டவிழ்த்து விட்டார்.

அந்த சூழலில் சிங்கம் போல வீறு கொண்டு எழுந்தவர் தான், தமிழக முஸ்லிம் மக்களால் மறக்க முடியாத மாமனிதர் தலைவர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்கள்.

காந்தியார் கொலைக்குப் பிறகு அடங்கி கிடந்த பார்ப்பன இந்துத்துவாவாதிகள், எண்பதுகளுக்குப் பிறகு தங்களை புதுப்பித்துக் கொள்ள.. பாபரே மஸ்ஜித் உள்ளிட்ட பிரச்சனைகளை கையிலெடுத்த நேரம். முஸ்லிம்களை எதிரிகளாக காட்டி பார்ப்பனர்கள் பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்ட துவக்கிய காலம்.

அது போன்ற நிலையில் தான், ஷஹீத். பழனிபாபா அவர்கள், எந்த அரசு தீவிரவாதத்தையும், அடக்குமுறைகளையும் ஆண்மையுடன் எதிர்கொள்ள வேண்டுமென்று சொல்லி முஸ்லிம் இளைஞர்களை தட்டியெழுப்பினார். அரசியல் ரீதியில் இந்துத்துவாவிற்கு எதிராக அன்றைக்கு செயல்பட்டு வந்த கருணாநிதியோடும், அவர் முதுகில் குத்தினப் பிறகு டாக்டர் ராமதாஸோடும் மேடைகளில் முழங்கினார்.. அந்த ராமதாஸும் பின்பு முதுகில் குத்தினார் என்பது தனி கதை.

அன்றைக்கு தனியொரு மனிதனாக-முஸ்லிமாக நம்முடைய சமுதாயத்திற்காக பாடுபட்டு.. அதற்காகவே கொல்லப்பட்ட பழனி பாபா அவர்களை கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் மௌத்தாகி போனவரை இழிவு படுத்துவதும் கொச்சைப் படுத்துவதும் நன்றியுள்ள சமுதாயத்திற்கு அழகா.? என்பதை சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பின் தொடர்ச்சியாக பீஜே அவர்களின் தலைமையில் தமுமுக தொடங்கி செயல்பட ஆரம்பித்தது.. யாராக இருந்தாலும் முஸ்லிம்கள் என்ற அளவில் யாவரையும் ஒன்றிணைத்து போராடி வந்த பழனிபாபாவின் செயல்பாடுகளுக்கு மத்தியில்.. பீஜே அவர்கள் மக்களை ஷிர்க்'கிலிருந்து தூய்மைப்படுத்தி.. இஸ்லாத்தின் அடிப்படையில் அவர்களை அணி திரட்டினார்.. பழனிபாபா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து குரல் கொடுத்து வந்த நிலையில்.. பீஜே அவர்கள் யாருடைய ஆதரவுமில்லாமல் களத்தில் நின்றார்..

பிறகு ஒரு கட்டத்தில் ராமதாஸ் பிஜேபியுடன் இணைய முயற்சி செய்த பொழுது, பழனிபாபா அவர்கள் தனியாளாக விடப்பட்டார்.. பீஜேயுடன் இனி இணைந்து செயல்படுவார் என்ற செய்திகள் வந்தன.. பழனிபாபா அவர்கள் அது தொடர்பாக பீஜே அவர்களுக்கு தூது அனுப்பியதாகவும்.. இடையில் சிலர் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால்.. அல்லாஹுவின் நாட்டம், பழனிபாபா அவர்கள் காவிக் கயவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்..

இது தான் பழனிபாபா மற்றும் பீஜே அவர்களின் கதை.

இங்கே சில சகோதரர்கள் உண்மை விளங்காமல் மாற்றி மாற்றி பீஜே அவர்களையும் பழனிபாபா அவர்களையும் திட்டுவதையும், தரம்தாழ்ந்து வசை பாடுவதையும் சகித்துக் கொள்ள முடியாமல் தான் இந்த பதிவை எழுதினேன்.

பழனிபாபா அவர்களை சந்தித்த பொழுதை..நான் இன்னும் மறக்க வில்லை.. சகோ. காமில் அவர்கள் என்னை அறிமுகம் செய்துவித்த பொழுது நாற்காலியிலிருந்து எழுந்து நின்று பழனிபாபா அவர்கள் எனது கைகளை குலுக்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.. அவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை விட.. இன்றைக்கு அவர் மீதும்.. அதற்கு பதிலடியாக சகோதரர் பீஜே அவர்கள் மீதும் சகதி வாரி எறிவது.. மிகவும் கொடூரமானது.. இதயத்திலே ஈட்டியை பாய்ச்சுவது போன்றது.


-பூமராங். 



[][][]

Wednesday, 15 June 2016

பலதார மணம் இஸ்லாத்தில் மட்டும் உள்ளதா..?



கேள்வி: 

இஸ்லாமிய பெண்கள் இஸ்லாத்தை பின்பற்றினாலும் அவர்கள் நபியின் எல்லா செயல்களையும் ஆதரிப்பவர்களாக இருப்பதில்லை... வேண்டுமானால் சவால் விடுகின்றேன்... என் கணவன் விபச்சாரம் போன்ற தவறான வழியில் செல்லாமல் இருக்க அவருக்கு 4 திருமணங்கள் தேவைப்பட்டால் தாராளமாக செய்து கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறோ, ஒழுக்கக்கேடோ இல்லவே இல்லை, என்று கூறும் ஒரே ஒரு பெண்ணை உங்களால் காட்ட முடியுமா? 



நமது பதில்: 

இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் அத்தனை பெண்களும் நபிகளாரின் பலதார மணத்தை ஆதரித்தவர்கள் தான்.. 


வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியருடன் வாழ்ந்த முருகன் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் தமிழர்களால் வணங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். [நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட] 


ஏக பத்தினி விரதம் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபது ஆயிரம் மனைவியர் இருந்ததாக பார்ப்பனிய இந்துப் புராணங்கள் கூறுகின்றன.


கிருஷ்ணனுக்கு பாமா, ருக்மணி எனும் இரு மனைவியர் இருந்ததாகவும் புராணங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவரும் நமது நாட்டில் இந்துக்களால் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறார். 


எத்தனையோ மன்னர்களும், மற்றவர்களும் இந்த மண்ணில் பல மனைவியரை மணந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 


அது போல் கிறித்தவர்களும், யூதர்களும் பெரிதும் போற்றும் தாவீது ராஜா, ஆப்ரகாம், யாக்கோபு மற்றும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பல மனைவியருடன் வாழ்ந்ததாக பைபிளிலும், யூத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூத கிறித்தவ சமுதாயத்தினர் அவர்களை வெறுக்கவில்லை. 


இஸ்லாம் தான் பலதார மணத்தை முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தது போல் பிரச்சாரம் செய்யப் படுவது அடிப்படையில்லாதது என்பதை இதன் மூலம் அறியலாம். 


தி.மு.க தலைவர் கருணாநிதி முஸ்லிமாக இல்லாதிருந்தும் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துகிறார். இது சட்டப்படி குற்றம் என்றால் பல தடவை அவர் தமிழகத்தின் முதல்வராக ஆனது எப்படி?


இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கா.காளிமுத்து பல தடவை அமைச்சராகவும், சபாநாயகராகவும் ஆனது எப்படி?


பலதாரமணம் புரிந்து அறந்தாங்கி திருநாவுக்கரசு பலதடவை மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனது எப்படி? 


பெண்ணியத்திற்காக வரிந்து வரிந்து எழுதுகிற எழுத்தாளர் பாலகுமாரன் இரண்டு மனைவிமார்களை ஏககாலத்தில் கொண்டிருப்பவர் தானே..? அதிலும் ஒரே படுக்கையை இருவருடனும் சமமாக பகிர்ந்துக் கொள்வதாக சொல்லியிருப்பவர் தானே.?


இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்.


இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதிமன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.


மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது ரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு ஆஒத 1965 நஈ 1566) 



சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.
(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திரகோஷ் AIR 1971 sc 1153)


ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். 
(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848) 


காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105) 


இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. இதன் மூலம் பலதார மணம் செய்வது  தான் தவறு, திருமண பந்தத்திற்கு வெளியே வைப்பாட்டி வைத்துக் கொள்வதோ, விபச்சாரம் செய்வதோ சட்டப்படி தவறில்லை என்றாகிறது. அதுவும் போக, யார் அதிக பலதார மணங்களை செய்கிறார்கள் என்று பார்த்தால் 
யாருக்கு பலதார மணத்திற்கு அனுமதியுள்ளதோ அவர்களை விட 
யாருக்கு பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் தான் அதிக அளவில் பலதார மணம் புரிந்துள்ளனர்.


1951 முதல் 1960 வரை பலதார மணம் புரிந்தவர்கள் பற்றிய புள்ளி விபரம் 
தயாரிக்கப்பட்டது. அந்தப் புள்ளி விபரப்படி இந்துக்கள் 5.06 சதவிகிதமும் 
முஸ்லிம்கள் 4.31 சதவிகிதமும் பழங்குடியினர் 17.98 சதவிகிதமும் பலதாரமணம் புரிந்துள்ளனர். 


அதாவது 1951 முதல் 1960 வரை நூறு முஸ்லிம்களில் நான்கு பேர் பலதாரமணம் செய்துள்ளனர். ஆனால் நூறு இந்துக்களில் ஐந்து பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர். நூறு பழங்குடியினரில் 18 பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர் என்று இந்தப் புள்ளி விபரம் கூறுகிறது. சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற தலைப்பில் 1974-ல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 


பழங்குடியினரும் இந்துக்கள் தான். அவர்களையும் இந்துக்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால் பலதார மணம் புரிந்த இந்துக்கள் பலதார மணம் புரிந்த முஸ்லிம்களை விட மிக அதிக சதவிகிதமாக இருப்பார்கள்.


இந்நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.?  
[][][]

Tuesday, 14 June 2016

மனோவேகமும்-செயல் வேகமும்





நாம் மிகுந்தப் பசியோடும் தாகத்தோடும் இருக்கும் பொழுது ஒரு சட்டி சோற்றையும் ஒரு பானை தண்ணீரையும் உண்ண, பருக ஆவேசம் உண்டாகும்.

ஆனால்.. உண்ண அமரும் பொழுது ஒரு தட்டு உணவுக்கு மேல் உள்ளே செல்லாது.. இரண்டு மூன்று குவளை தண்ணீருக்கு மேல் பருக முடியாது.

அது தான் மனிதனின் மனோவேகத்திற்கும்.. உடலின் இயலாமைக்கும் உள்ள வேறுபாடு.

-பூமராங் 

மகாநதி - பிரபஞ்சன்



என்னமோ தெரியல.. வாழ்க்கை வரலாறுகளை படித்துக் கொண்டிருந்த எனக்கு நாவல்கள் மீது திடீர் ஆசை வந்து விட்டது..

நூலகம் போய் தேடினதில் இரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டது.. ஒன்று பாலகுமாரனின் 'கனவு கண்டேன் தோழி.. இன்னொன்று எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் பிரபஞ்சனின் 'மகாநதி'


நூலகத்தில் இரண்டு நூல்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.. [அதிலும் அந்த கண்ணாடி போட்ட பொம்பளை ரொம்ப மோசம்..!]

இதுவா.. அதுவா என்று மனது பெண்டுலம் ஆடிக் கொண்டிருந்தது.. இறுதியில் பிரபஞ்சன் தான் ஜெயித்தார்..

'கனவு கண்டேன் தோழி'யை நூலக செல்பிலேயே ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டு.. வீட்டுக்கு வந்து புத்தகத்தை புரட்டுகிறேன்..

பிரபஞ்சனின் வார்த்தைகள் மகாநதியாக ஓடுகிறது..

"வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கி பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா.?

நான் அதை அனுபவித்திருக்கிறேன். குலை நடுங்க, மேனிபுளகமுற, அச்சத்தால் உலர்ந்து, சந்தோசத்தால் கிளர்ந்து, பெருவிருப்போடு உயிர் தோய்ந்து நான் அனுபவித்திருக்கிறேன். இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் மகாநதி, ஒரு கணம் சட்டென்று உறைந்து நின்று, பின்னர் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்..? "

மீதி வாசித்தப் பிறகு..!


[][][] 

நாகூரும் நானும். -பூமராங்





நான் முதன்முதல் சவூதி செல்ல விசா வந்த பொழுது, எனது தாயார் என்னையழைத்து,


'' நீ வெளிநாடு செல்கிறாய்.. நாகூர் அவுலியாவின் துவா பரக்கத் பெற்று தான் பயணம் செல்ல வேண்டும்.. அப்படித் தான் உங்கத்தாவும் ஆரம்பத்தில் சிங்கப்பூர் சென்ற பொழுது நாகூர் தர்காவில் வியாழன் இரவு தங்கி பாத்திஹா ஓதி விட்டு சென்றார்கள்.. அதே போல நீயும் போய் தங்கி விட்டு வா..!" என்று எனக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தார்கள்..


நானும் அம்மாப் பேச்சை தட்டாமல், பஸ் ஏறி நாகூரில் இறங்கி.. தர்காவை விசாரித்து அங்கு சென்றேன்.. இதெல்லாம் தான் இஸ்லாமென்று நினைத்திருந்த காலமது.


நான் தர்காவினுள் நுழைந்ததும் நுழையாததுமாக அங்கிருந்த சேவிங் செய்த, தாடி வைத்த முல்லாக்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் 'பாத்திஹா' ஓதிக் கொள்ளுமாறு என்னை போட்டு இழுத்தார்கள்..


நான் ஒன்றும் புரியாமல்..பயத்தில் அவர்களிடமிருந்து என்னை உருவிக்கொண்டு உள்ளறைக்கு சென்றேன்.. அங்கே ஒருவர் பச்சை தலைப்பாகை, நீண்ட ஜிப்பா, ஆட்டுக்கு இருப்பது போன்ற தாடி, கையில் நீண்ட மயிலிறகு தோகை சகிதமாக.. ஏதோ ஒரு பையன் பரிச்சையில் பாஸாக 'பாத்திஹா' ஓதி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.. நான் ஒரு ஓரத்தில் நின்று நான் ஏற்கனவே கற்று வைத்திருந்த பாத்திஹாவை ஓதி விட்டு இரா தங்குவதற்காக வெளியே வந்தேன்.


அங்கே மேலும் எனக்கு அதிர்ச்சி.. ஆண்கள்-பெண்களெல்லாம் ரொம்ப சகஜமாக ஒன்றோடு ஒன்றாக கிடந்தார்கள்..


என்னை பாத்திஹா ஓத கையைப் பிடித்து இழுத்து கலவரப்படுத்தியதும், உள்ளே ஒரு முல்லா அவ்லியாவுக்கு இடைத்தரகராக நின்று கொண்டு புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்ததும் எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.. அதோடு அங்கு நிலவிய சூழலும் பிடிக்க வில்லை.. நான் உடன் பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்து விட்டேன்.


'' இரா தாங்காமல் ஏன் திரும்பி வந்தாய்..?'' என்ற எனது தாயாரின் கேள்விக்கு மார்க்கரீதியாக பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை.. 'எனக்கு பிடிக்க வில்லை' என்று மட்டும் சொன்னேன்.


ஆனால்.. சில காலம் ஓடி.. பீஜே என்றொருவர்.. இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கிறார் என்று கேள்வி பட்டு.. வேண்டா வெறுப்பாக அவரது பேச்சை கேட்டேன்..


அல்ஹம்துலில்லாஹ்.. என்னுடைய குழப்பங்களுகெல்லாம் தெளிவு பிறந்தது.. தூய்மையான இஸ்லாம் எனது இயல்புக்கு முரண்படாமல் இருப்பதை உணர்ந்தும் மிகவும் அகமகிழ்ந்தேன்..


எல்லா புகழும் அல்லாஹுவிற்கே..

எழுதுகோலால் எழுத கற்றுக்கொடுத்தது யார்.?






மனிதன் ஒரு பிரத்தியேக படைப்பு. நம்முடைய எண்ணங்களை பரிமாறிக் கொள்கிற பேசும் திறன் எப்படி மனிதனுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள நுண்ணறிவோ.. அதே போல எழுதுகோல் மூலமாக பரிமாறிக் கொள்வதும் ஒரு நுண்ணறிவு. இது மனிதனுக்கு மாத்திரமானது. இதனை வழங்கியவன், நமக்கு காணும்திறனை, செவிப்புலனை வழங்கிய இறைவன். அது தான் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, வீட்டை கொத்தனார் தானே கட்டினான்.? ஏன் நீங்கள் கட்டிய வீடு என்கிறீர்கள்..? உங்கள் குழந்தையை உங்கள் மனைவி தானே மிகுந்த சிரமத்திற்கிடையே பெற்றெடுக்கிறார். ஆண்களாகிய நீங்கள் ஏன் நான் பெற்ற குழந்தை என்கிறீர்கள்..?

உங்கள் சாந்திமிஸ்ஸும், தமிழ்வாத்தியாரும் மனிதனல்லாத ஜீவராசிகளுக்கு எழுத்தறிவு பயிற்றுவிக்க முடியுமா..?


-பூமராங் 


[][][]

Thursday, 9 June 2016

மனிதன் எங்கே.?




ஒரு தத்துவஞானி பட்டப்பகலில் ஒரு அரிக்கன் விளக்கை ஏற்றிக் கொண்டு கடைத்தெருவில் எதையோ, யாரையோ தேடுவது போல சென்றுக்கொண்டிருந்தார்.

மக்களுக்கு பயங்கர ஆச்சரியம். அந்த ஞானியை பைத்தியமேன்றோ, முட்டாளென்றோ அழைக்க எவருக்கும் துணிவு வரவில்லை. அதிலொருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. அந்தப் பெரியவரை பார்த்து.. “என்ன தேடுகிறீர்கள்..?” என்று கேட்டான், கிண்டலாக. அதற்கவர், ‘’நான் மனிதனை தேடிக் கொண்டிருக்கிறேன்..! என்று சொன்னார்.  அது கேட்டு அங்கே இருந்த மக்களெல்லாம் அதிர்ந்தார்கள்.

அந்தப் பெரியவர் என்ன சொல்ல வருகிறார்..? அவரைச் சுற்றி கூடியவர்களெல்லாம் மனிதர்களில்லையா..? 

ஆடை அணிந்திருப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லிவிட முடியுமா..? இரண்டுக் கால்களில் செங்குத்தாக நடப்பவனெல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? ஏதாவதொரு மத அடையாளங்களுடன் சுற்றித் திரிபவனை எல்லாம் மனிதன் என்று சொல்லி விட முடியுமா..? கடவுளுமில்லை.. பாப-புண்ணியங்களும் இல்லையென்று சொல்பவனெல்லாம் மனிதனென்று சொல்லி விட முடியுமா..? 

கொலைகாரன், காமுகன், திருடன், நயவஞ்சகன், அயோக்கியன், இவர்களெல்லாம் தோற்றத்தில் மிருகம் மாதிரியா இருக்கிறார்கள்..? 

மனிதனை ஏன் எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை..? 

அதிலுள்ள சிக்கலே.. எல்லாப் பயல்களும் மனித ரூபத்தில் திரிவதால் தான்.. 

இதில் ஆத்திகனென்ன.. நாத்திகனென்ன..


[][][]

Sunday, 27 March 2016

மக்கள் நல கூட்டணியும் குருட்டுப் பூனைகளும்







மக்கள் நல கூட்டணியை குருட்டுப் பூனையை போல பிராண்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

1] தே.மு.தி.க வுடன் இணைந்தாலும், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தாலும், தனிநபர், தனிக்கட்சி ஆட்சி என்பதை உடைத்தெறியும் கூட்டணி மந்திரிசபை எனும் உயர்ந்த ஜனநாயக தத்துவம் தமிழகத்திற்கு ஏற்றம் தரும் நல்ல கொள்கையாக நீங்கள் பார்க்க வில்லையா..?

2] திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக எனும் அரசியல் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர, இப்போதைக்கு கிடைக்கின்ற வாய்ப்பை தானே எவரும் பயன்படுத்த முடியும்.? அந்த வகையில் தே.மு.தி.க உடன் ம.ந கூட்டணி இணைந்தது எவ்வாறு தவறாகும்.?

3] தே.மு.தி.க, திமுக வுடன் இணைந்து கலைஞர் தலைமையில் ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பொம்மையாட்சி நடைபெறுவதையும், பாஜக வுடன் இணைந்து தமிழகத்தில் மதவாத சக்திகள் தலை தூக்குவதையும், தே.மு.தி.கவை தன் பக்கம் இழுத்ததன் மூலம் தடுத்த ம.ந. கூட்டணியின் ராஜதந்திரம் பாராட்டுக்குரியதில்லையா.?

4] மக்களின் ஓட்டை பொறுக்கி ஜெயித்துவிட்டு, ஒட்டு போட்ட மக்களை சந்திக்காமல் முதலமைச்சர் நாற்காலியில் திமிருடன் ஒரு சர்வாதிகாரியைப் போல அமர்ந்திருக்கிற ஜெயலலிதா..

சிலை வைப்பது, மணிமண்டபம் கட்டுவது, மறைந்த தலைவர்களின் பெயர்களை சூட்டுவது அதன் மூலம் சாதி,மத ஒட்டு வங்கிகளை உருவாக்கி வைத்துக் கொண்டு, நாட்டை குடும்பத்தினர் கொள்ளையடிக்க அனுமதிப்பது என்பது போன்ற கயமைத்தனம் கொண்ட திமுக..கருணாநிதி..

வன்னியர் ஒட்டு அன்னியருக்கில்லை என்று முழங்கி விட்டு அன்னியர் ஓட்டை வன்னியருக்கு தேடும் பாமக..

காந்தியின் தேசத்தை கோட்சேயின் தேசமாக மாற்றத் துடிக்கும் பாஜக..

சிங்களவனுக்கு ராஜபக்சே என்றால் தமிழனுக்கு சீமான் என்பது போல பாசிசத்தின் பாதையில் இனத்தூய்மை பேசும் நாம் தமிழர் கட்சி..

இத்தகையோர் மத்தியில் தான்.. ம.ந. கூட்டணி-தே.மு.தி.க கூட்டணி இந்தளவுக்காவது நல்ல கொள்கைகளுடன் எழுந்துள்ளது.. இதனை தூற்றுவது நியாயமா..?


பூமராங் 

28.3.2016


[][][]

Tuesday, 23 February 2016

ஹஜருல் அஸ்வத்தை [ கறுப்புக் கல்லை] சுற்றி வருவது மூட நம்பிக்கையில்லையா.?






Pravin Vinu இன் கேள்வி: 

கருங்கல்லை ஏன் சுத்துறீங்கன்னு கேட்டால்,  அது கருங்கல்லுதான்'ன்னு எனக்கே திருப்பி சொல்றீங்க.. அது கருங்கல்லுன்னு எனக்கு தெரியாதா..? அதை ஏன் சுத்துறீங்க..?
முகமது சுத்துனாரு அதனால சுத்துறோம்'ங்கிறீங்க.. இதுக்கு பேர்தான் மூடநம்பிக்கை என்று நாங்கள் சொல்கிறோம். 

---------------------------------------------------------
---------------------------------------------------------
பதில்: 

உண்மையில் மூடநம்பிக்கை என்பது என்ன.?

அனாமதேயமாக யாரோ, எவரோ செய்த எந்தவித அர்த்தமுமில்லாத விசயங்களை புனிதப் படுத்துவது.. புனிதமாக கருதப்படும் அவை மனிதனுக்கு நன்மையோ தீமையோ செய்து விடும் என்று கருதுவது.. ஆகியவை தான் மூட நம்பிக்கை..

கருங்கல்லை சுற்றுவது உள்பட உள்ள முஸ்லிம்களின் ஹஜ் கிரியைகள்.. முஹம்மது அவர்கள் செய்தார்கள்.. தன்னைப் பின்பற்றுபவர்களை செய்யச் சொன்னார்கள். பகுத்தறிவு மார்க்கத்தை தந்த நபிகளாரை தங்களுடைய ஆன்மீக வழிகாட்டியாக, தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டப் பிறகு, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்வது தான் நல்ல முஸ்லிம்களுக்கு அழகு..

தன்னுடைய நோயை தீர்ப்பார் என்று நம்பினால் மருத்துவர் சொல்வதையெல்லாம் அனுசரிப்பது தான் நல்ல நோயாளிக்கு அழகு.!

அப்படியானால் அந்த ஹஜ் கிரியைகள் எதற்காக..?

கடவுள்களை ஒன்று படுத்தினால் தான் மனிதன் ஒன்று பட முடியும் என்ற தலையாய கொள்கையை-தத்துவத்தை கொண்டிருக்கிற மார்க்கம் இஸ்லாம். அந்த இறை ஏகத்துவத்தை நிலை நாட்ட.. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மூடநம்பிக்கைகளை எல்லாம் அடித்து நொறுக்கியவர் இப்ராஹீம் அவர்கள். அந்த இப்ராஹீம் தனிமனிதராக இருந்து மக்களின் மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றையும் தன்னுடைய அயராத உழைப்பால், தளராத உறுதியால் போக்கி மக்களை சீர்திருத்தம் செய்தார்கள்.

அத்தகைய அவர்களை நினைவு கூறும் விதமாகத் தான் ஹஜ் கிரியைகள் யாவும் அமைந்திருக்கின்றன. இப்ராஹீம் அவர்களை பின்பற்றி முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இறை ஏகத்துவத்திற்காக, மனித குல ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்ற மகத்தான சிந்தனை அங்கே தோற்றுவிக்கப் படுகிறது.

மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக நடைபெறும் உறுதியேற்பு நிகழ்ச்சிகள் எப்படி மூடநம்பிக்கை என்றாகும்.?

-பூமராங் 


[] [] []

Sunday, 14 February 2016

திருக்குர்ஆனில் வன்முறை தூண்டப்படுவது உண்மை





திருக்குர்ஆனில் வன்முறை தூண்டப்படுவது உண்மை.. 


அந்த வன்முறை.. தர்மத்தை நிலைநாட்டவே தூண்டப் படுகிறது. வரம்புகளை மீறுகிறவர் மீதே பயன்படுத்தப் படுகிறது. 

என்னை ஒருவன் தாக்கி எனது பொருளை கொள்ளையடிக்கவோ, எனது சகோதிரியை கற்பழிக்கவோ முயல்கிறான்.. அவனை வீரனாக எதிர்கொண்டு தாக்குவது வன்முறையல்ல.. என் மீது அத்துமீறியவனே வன்முறையை கையாண்டவன். 

சட்டத்தை நிலை நாட்ட.. நாட்டை பாதுகாக்க காவல்துறையும், ராணுவமும் இருக்கின்றன. அவர்கள் கைகளில் பூங்கொத்தல்ல.. அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.. ஏன்.? ஆபத்துக் காலங்களில் பயன்படுத்தத் தான்..! வன்முறைக்கு வன்முறையால் பதிலடி கொடுக்கத் தான். இதனை தவறென்று சொல்ல முடியுமா.? 

அநியாயங்களை அழிக்க, அக்கிரமங்களை தடுக்க கண்டிப்பாக எந்தவொருவரும் வன்முறையை பயன்படுத்தத் தான் வேண்டியது வரும்.

அந்த அளவில் தான் திருக்குரானும், அதர்மங்களைக் கண்டு ‘கோழையாக இராதே. வீரனாக எழுந்து நின்று தர்மத்தை நிலைநாட்டு’ என்று தூண்டுகிறது.

Monday, 28 December 2015

அல்லாஹுவை படைத்தது யார்.?







சகலத்தையும் படைத்தது அல்லாஹ் என்றால் அல்லாஹுவை படைத்தது யார்..?

இது வழக்கமாக நாத்திகர்கள் கேட்கும் கேள்வி..!!

1) இப்படிக் கேட்டால் ஆத்திகர்கள் பதிலில்லாமல் தடுமாறுவார்கள் என்பது அவர்களது எண்ணம். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது பகுத்தறிவற்ற, சிறுபிள்ளைத் தனமான கேள்வி.!

2) இஸ்லாத்தின் இறையியலை புரிந்தவர்கள் இவ்வாறு கேட்கவே மாட்டார்கள். பிரபஞ்சத்திற்கு அப்பாலுக்கும் அப்பாலுள்ள..பிரபஞ்ச நியதிகளையெல்லாம் படைத்த- அந்த நியதிகளுக்கும் அப்பாற்பட்ட ஆதியும் அந்தமுமில்லாத இறைவனை தான், முஸ்லிம்கள் நாங்கள் அல்லாஹ் என்று அழைக்கிறோம்.

பார்க்க: திருக்குர்ஆன் 2:255 / 112:1-4

3) அழகான ஒரு ஓவியத்தை பார்க்கிறோம். அந்த ஓவியம் தானாக உருவானதல்ல. அதனை திறமையானதொரு ஓவியன் தான் வரைந்திருக்க முடியும் என்று நம்புகிறோம். அந்த ஓவியனை சந்திக்கிறோம். அவனும் தானாக உருவானவனல்ல. மற்றெல்லோரையும் போல அவனுக்கும் பெற்றோர் இருப்பதை அறிந்துக் கொள்கிறோம். இப்படியாக ஒன்றுக்கு மற்றொன்று நதிமூலம், ரிஷிமூலம் என்று செல்வதை காண்கிறோம்.

உலகத்தை பார்க்கிறோம். அனுபவிக்கிறோம். அது தானாக உருவானதல்ல என்று மனிதப் பகுத்தறிவும், விஞ்ஞானமும் சொல்கிறது. அதன் காரண கர்த்தா, சகல வல்லமையுடன் ஒருவன் இருக்கிறான்..என்று பகுத்தறிவு தீர்மானிப்பது இயல்பு.

ஆனால் அதற்கும் மேலே அந்த காரண கர்த்தா எவ்வாறு தோன்றியிருக்க முடியுமென்பதை அறிய வேண்டுமானால், மற்ற உலகப் பொருட்களை எல்லாம் காண முடிவது போல, அவனையும் காண முடிந்தால் தானே அது சாத்தியப்படும்.? நமது புலனறிவுக்கு எட்டாத தூரத்தில் இருந்துக் கொண்டு அனைத்தையும் ஆட்டுவிப்பவனை எவ்வாறு துரும்பிலும் துரும்பான மனிதன் ஆராய முடியும்.?

4) உலகத்தை பார்க்கிறோம். அதன் நன்மை-தீமைகளை அனுபவிக்கிறோம். அதன் காரணமாக அதன் தன்மைகளை ஆராய்ந்தறியும் தேவை நமக்கிருக்கிறது. இயற்கை நியதிகளில் உழலும் நாம், அதற்கும் அப்பாற்ப்பட்ட இறைவனின் ஆதியந்தத்தை பற்றி அறிவதால் என்ன லாபம்..? அறியாததால் என்ன நட்டம்..? அல்லாஹ் ஆதியும் அந்தமுமில்லாதவன் என்ற செய்தி மனிதனுக்கு வந்தப் பிறகு மேற்கொண்டு அதனை குறித்து அறிந்துக் கொள்வதற்கான தேவை மனிதனுக்கு எங்கே இருக்கிறது.?

Wednesday, 25 November 2015

ஆபாசம்..பார்வையிலா.? உடையிலா..?





கடந்த 25.9.2015 அன்று தந்தி டிவியில் ஆபாசம்..பார்வையிலா.? உடையிலா.? எனும் தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய பெண்ணியவாதிகள் முன்வைத்த இயல்புக்குப் பொருந்தாத, செயற்கையான வாதங்களை-கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. தொட்டதற்கெல்லாம் ஆணாதிக்கம் என்கிறார்கள். பெண்களின் அரைகுறை ஆடைகளைப் பற்றி தொடர்ந்து ஆண்கள் விமர்சனம் செய்தால், ஒருவேளை எல்லாவற்றையும் அவிழ்த்து போட்டுவிட்டு அம்மணமாக சாலையில் இறங்கி விடுவார்களோ, என்கிற அச்சம்தான் அவர்களது வார்த்தைகளை கேட்கும்பொழுது நமக்கெல்லாம் உண்டாகிறது.!







முதலில் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள்(!) சிலவற்றைப் பார்ப்போம்.

# ஆடை என்பது அணியும் அந்தப் பெண்ணின் சௌகரியத்தை பொறுத்தது. இப்படித் தான் ஆடை அணிய வேண்டுமென்று வற்புறுத்துவது ஆணாதிக்க சிந்தனை.

# ஆடையில் ஆபாசம் என்பது பார்க்கின்றவர் பார்வையில் தான் இருக்கிறது.

# வெளிவேலைகளில் ஈடுபடுகிற பெண்கள், பதினெட்டு முழ புடவையை உடல் முழுக்க சுற்றிக் கொண்டு சாலைகளில் நடக்க முடியுமா..? ஓடிச் சென்று பஸ் ஏற முடியுமா..?

# முழுமையான ஆடை அணிந்த பெண்கள் யாரும் பாலியல் வன்முறைகளுக்கு பலியாக வில்லையா.? செக்ஸியாக உடை அணிந்து வெளியே செல்லும் பெண்கள்தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றார்களா.? வீட்டில் சொந்த இரத்த உறவுகளாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் இருக்கிறார்களே.? தந்தையே மகளைக் கற்பழித்த கதைகளை நாம் செய்திகளாக கேள்விப் பட்டதில்லையா.? இவற்றிற்கெல்லாம் செக்ஸியாக அணியும் உடைதான் காரணம் என்று கூறமுடியுமா.?

# சிறு குழந்தைகள் கூட கற்பழிக்கப் படுகிறார்களே.. அதற்கும் ஆடை தான் காரணமா.?

# பாலியல் தொந்தரவு, பாலியல் வன்முறைகளை செய்கின்ற ஆண்களை கட்டுப்படுத்தாமல் அதனால் பாதிக்கப்படும் பெண்களையே குற்றம் சாட்டுவது ஆணாதிக்க சிந்தனை. பிரச்சனையை திசை திருப்புகிற ஆணாதிக்க அயோக்கியத்தனம்.

# எங்கள் ஆடைகளில் நாங்கள் அழகாக தெரிவது தான் எங்களுக்கு முக்கியம்.. அது எங்களுடைய சுதந்திரம். அதில் ஆண்களின் கவனம் சிதைந்தால், பாதிக்கப்பட்டால், அதற்கு ஆண்களுக்குள் இருக்கும் வக்கிரப் புத்தி தான் காரணம்.

# தனிமனித சுதத்திரமான ஆடை சுதந்திரத்தை பெண்களிடமிருந்து பறிக்கப் பார்ப்பது ஆணாதிக்க ஒடுக்குமுறை. தாங்கள் சொல்கிற ஆடைகளை மாத்திரம் அணிந்துக் கொண்டு, பெண்கள் தங்களுக்குக் கீழ் ஒரு போகப் பொருளாக இருக்க வேண்டுமென்ற ஆண்களின் பழமைவாத எண்ணங்களின் வெளிபாடு..!

நடுநிலையுடன் இந்த விஷயங்களை ஆராய்வோம்.!

முதலில் ஆண்களின் உளவியலை புரிந்துக் கொள்வோம். ஆண் என்பவன் அடிப்படையில் பெண்ணின்பத்தை பெரிதும் விரும்பக் கூடியவனாக இருக்கிறான். கண்ணால் காமுறுபவனாகவும், கண்டதை கற்பனை செய்து அதனை வளர்த்துக் கொள்பவனாகவும் இருக்கிறான். உணவு, உறக்கம் என எதையும் மறக்கச் செய்து எதிர்பார்த்து ஏங்க வைப்பது தான் அவனது செக்ஸ் உணர்வு. (பெண்ணின் காமம் அது போன்றதல்ல. ஆண்களைப் போல சதா சர்வநேரமும் காமஉணர்வை தலையில் சுமந்து இருப்பவர்களல்ல. ஆடை அலங்காரம், சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற காரியங்களிலேயே பெரும்பாலும் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர்கள் அவர்கள்.!) “The man's desire is for the woman. but the woman's desire is rarely other than for the desire of the man." என்று முன்பு ஒரு அறிஞர் சொன்னார். அதன் காரணமாகவே ஆண்களுக்கான செக்ஸ் தேவைக்காக மாத்திரம் விபச்சார விடுதிகள் நடத்தப் படுகின்றன. அங்கே விலை கொள்ளப்படும் பொருளாக பெண் இருக்கிறாள். காமத்தின் தேவை இரு பாலாருக்கும் சமமாக இருந்திருந்தால், உலகத்தில் ஆணும் சந்தைப் பொருளாக்கப் பட்டிருக்கவேண்டும்.

ஆண் காம வயப்படுகிற பொழுது சிந்தனாசக்தியை இழந்து விடுகிறான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இறையச்சமோ, சட்டத்தின் மீதான பயமோ, சமூக நாணமோ இல்லாத ஒருவன் தனிமையில் இருக்கும் பெண்ணுக்கு மிகவும் ஆபத்தானவன். அதோடு அவன் மதுவும் அருந்தியிருந்தால் கேட்கவே வேண்டாம்.

'காதல் ஹார்மோன்' என்றே சொல்லப்படுகின்ற ஆக்ஸிடோஸின்கள் பாலுணர்வு வழிந்தோடும் வேளைகளில் ஒருவரது நடவடிக்கைகளை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. மூளையின் மேற்பரப்பில் முன்பகுதியில் ப்ரிஃப்ரண்டல் கார்ட்டெக்ஸ் என்று சொல்லப்படும் இடத்தில் ஆக்ஸிடோஸின் வயப்படும் இந்த நியூரான்கள் அமைந்திருக்கின்றன. ஒருவரது குணாதிசயம், கற்கும் ஆற்றல், சமூக நடத்தை போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி இது.


How arousal affects decision-making

The importance stopping the process of sexual arousal in the very earliest stage becomes clear when we consider that the activity of the brain’s limbic system (which deals with emotions like fear and sexual arousal, and is involved in the release of hormones like adrenaline) tends to shut down the activity of the prefrontal cortex, which ‘is responsible for higher-level cognitive functions like decision-making’. 

The limbic system operates by influencing the endocrine system and the autonomic nervous system. It is highly interconnected with the nucleus accumbens, the brain’s pleasure center, which plays a role in sexual arousal and the “high” derived from certain recreational drugs.

…adrenaline shuts down the pre-frontal cortex, thereby inhibiting it from thinking. The body is further readied for action…One way to understand the relationship between the limbic brain and the prefrontal cortex is by way of ratio: the degree of limbic activity is usually inversely proportional to prefrontal activity. The more reactive (limbic) we are, the less we are in thinking (pre-frontal cortex) mode, and vice versa.

So as I understand it, when the mind and body are in a state of sexual arousal, the limbic system is in full swing, which results in the shutting down of the prefrontal cortex, which is that higher part of the brain that makes decisions (Should I look at porn? Is this really a wise thing to do?). Contrary to common thought, sexual temptation is not a battle between the pleasure centre and the rational part of the mind. The rational part is already dead – it’s not even fighting. Is it any wonder that we fail to make the right decision 80% of the time?


இயற்கை ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாகத்தான் படைத்துள்ளது. அறிவு, வீரம், உடல் திண்மை, உணர்வு போன்றவற்றில் இருவரும் ஒன்றாக இல்லை. ஆணின் ஆண்ரோஜன் (ANDROGEN) ஆக்ரோசம், வீரம் போன்ற குணங்களை கொடுக்கும். பெண்ணின் ஈஸ்ட்ரோஜன்(OESTROGEN) மென்மை, எளிதில் உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்களை தரும். கவர்ந்திழுக்க கூடியவளாக பெண்ணையும் கவரப்படக் கூடியவனாக ஆணையும் இயற்கை அமைத்திருக்கிறது. உடல் வலிமையினாலும் மனோபலத்தாலும் ஆணை ஒரு புலிக்கு ஒப்பிட்டால் ஆணை விட பலவீனமான பெண்ணை மானுக்கு ஒப்பிடலாம். பெண்ணை பஞ்சாகவும் ஆணை நெருப்பாகவும் ஒப்பிடலாம்.

‘’பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சு, உரசல், ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும்பாடாக இருக்கிறது..!’’ என்று 4-4-99 தினமணி கதிரில் பெருமூச்சு விட்டிருந்தார், பெண்ணிய எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள். ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பது சிறந்தது என்பதே அவருடைய தீர்க்கமான கருத்து.

ஆணையும் பெண்ணையும் எத்தனை தான் சமதளத்தில் வைத்து பார்த்தாலும் மிகைத்த உடல் வலிமையின் காரணமாக ஆண்களால் பெண்களுக்கு எப்பொழுதும் ஆபத்து இருக்கிறது என்பதை பகுத்தறிவுள்ள எவரும் புரிந்துக் கொள்ள முடியும். இந்நிலையில் ஆண்களின் உணர்ச்சிகளை சீண்டுகிற, தூண்டுகிற வேலையை எந்த அறிவுள்ள பெண்ணும் செய்ய துணியலாமா..? முள்ளின் மீது இலை பட்டாலும், இலையின் மீது முள் பட்டாலும் பாதிக்கப்படப் போவது இலைதான் என்கிற பொழுது இலை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா..?

இது தொடர்பாக எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சிலப் பகுதிகள்..!

“இயல்பில் ஆண் முரட்டுத் தசைவலிமையில் பெண்ணைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும், மனவலிமையில் பெண்ணைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான். பெண்ணின் உடல் சார்ந்த வலுவின்மையை ஆண் தனக்குச் சாதகப் படுத்திக் கொண்டு பெண்களை வெற்றி கொள்ளுவதைப் பெண் எவ்வாறு நியாயமென்று ஒப்புக்கொள்ள மாட்டாளோ, அவ்வாறே மனம் சார்ந்த தனது வலுவின்மையைப் பெண் சீண்டுவது கூடாது என்று நினைக்கவும், அதனைப் பெண்ணுரிமை என்று ஒப்புக்கொள்ளாதிருப்பதற்கும் ஆணுக்கு உரிமை உண்டு..!”

@@

“அண்மைக்காலமாய்ப் பெண்களில் சிலர், நல்ல வேளை.! சிலர்தான்.! அருவருக்கத்தக்க முறையில் வெளிப்பாடாய் உடுக்கத் தலைப் பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் அணியும் பனியன்களிலும், டி-ஷர்ட்டுகளிலும் உள்ள வாசகங்களை இங்கே எடுத்து எழுதி, இந்தக் கண்ணியமான நாளிதழின் பக்கத்தை மாசுபடுத்த விரும்பவில்லை. வம்புக்கு இழுக்கும் இந்த வாசகங்களைப் படிக்கும் ஆண் அருவருப்பான முறையில் எதிரொலிக்கவே செய்வான். அவனது படைப்பு அப்படி! குச்சிக்குச் சேலை கட்டிவைத்தாலும் அதைப் பார்த்ததும் எச்சில் ஊறும் வாய் அவனுடையது. ‘அவன் என்னை இடிக்காமல் விலகிப் போகட்டுமே? அவன் இடிப்பான் அல்லது அசிங்கமாய் ஏதேனும் விமர்சிப்பான் என்பதற்காக நான் என் உடையணியும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ன?’ எனும் பெண்ணின் பதில் கேள்வியில் அசட்டுத்தனமமே ததும்புகிறது..!” 

@@

“கொஞ்ச நாள்களுக்கு முன்னால்; பெண்களுக்கான ஓர் ஆங்கில இதழில் அதன் ஆசிரியை, பெண்களின் எறிபந்து/ கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு ஆண்களின் கூட்டம் அலைமோதுவதையும், பெண்கள் விளையாடுகையில் ஆபாசமான விமரிசனத்துடன் அவர்கள் ஊளை இடுவதையும் பற்றி அங்கலாய்த்துக் கட்டுரை எழுதியிருந்தார். உறுப்புகள் வெளித்தெரியும் வண்ணம் உடையணிந்து குதித்தால் இயல்பில் மோசமான மனநிலையுள்ள அவர்கள் அப்படித்தான் எதிரொலிப்பார்கள். அப்படி எதிரொலித்த ஆண்களை “மலம் தின்னும் பன்றிகள்” என்று அந்த ஆசிரியர் விமர்சித்திருந்தார். ‘அவர்கள் பன்றிகள் என்பது தெரிகிறதல்லவா.? அப்படி இருக்கும்போது, ஏன் வெளிப்பாடான உடை அணிந்து ஆண்களைப் பன்றிகளாக்கும் “மலம்” ஆகப் பெண்கள் மாற வேண்டும்’ என்று நான் எழுதிய பதில் கடிதத்தை அவர்கள் வெளியிடவில்லை என்பது வேறு விஷயம்..!”

@@

“அண்மையில் பெண்ணிய இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் பெண்களின் உடைக்கட்டுப்பாடு பெண்களின் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டிருந்தது. அதே கட்டுரையின் ஓரிடத்தில், ‘உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்கள் உடைகளைக் கால்கள் தெரிய, தூக்கிச் செருகிக்கொண்டால்தான் வேலை செய்ய முடியும். நம் நாட்டில் வயலில் உழைக்கும் பெண்களும், கட்டட வேலை செய்யும் பெண்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பெண்கள்தான் பாலியல் கொடுமைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லப்பட்டிருந்தது. கண்கூடான நிலை என்பது இதுதான். இது ஆண்களின் பொதுவான, மாறாத மனப்பான்மையையே காட்டுகிறது..!”

நன்றி – தினமணி – 2008

ஆண் பெண் உளவியல் குறித்து மனோதத்துவ மருத்துவர் ஷாலினி அவர்கள் விவரிப்பதை இங்கே எடுத்துக் காட்டுவது சிறப்பாக இருக்கும். கவர்ச்சியான, அரைகுறை ஆடைகளுடன் பொது இடங்களுக்கு வரும் பெண்கள், ‘புணர்ச்சிக்கு தான் தயார்.! என்பதை தான் சமிக்கையாக ஆண்களுக்கு சொல்கிறார்கள்..’’ 

வீடியோ லிங்க்.

ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக இருப்பதைக் கண்ட டி.ஜி.பி கில், உணர்ச்சி மேலீட்டால் அவரது பின்புறத்தை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது, சில வருடங்களுக்கு முன்னால். படித்த, உயர் பதவியில் இருந்த, இளமையை கடந்த ஒருவரே இப்படி..!! 



இன்றைய சமூகத்தில் ஆண் எங்கேயும் எப்பொழுதும் பாலுணர்ச்சி தூண்டுதல் பெற்றவனாகவே இருக்கிறான். அவன் விரும்பி பார்க்கின்ற சினிமா, தொலைக்காட்சி, அதில் வரும் ஆபாச காட்சிகள்.. பேசப்படும் இரட்டை அர்த்த வசனங்கள்..அரைகுறை ஆடைகளில் பெண்ணுடலின் நளினங்களை விருந்து படைக்கின்ற நடனங்கள், கொச்சையான பாடல்கள், திரும்புகிற பக்கமெல்லாம் ஆண்களை ஈர்க்கும் வகையில் தெரிகிற கவர்ச்சியான பெண்களை கொண்ட விளம்பரங்கள்.. பத்திரிக்கைகளை புரட்டினால், முன்பக்கம், நடுப்பக்கம், பின்பக்கமென செக்ஸ்பாம்’களின் கவர்ச்சி படங்கள்.. அதோடு கிசுகிசு எனும் பெயரில் காமரசம் சொட்டும் நடிகைகளின் அந்தரங்க செய்திகள்.. இவையெல்லாம் ஆண்களை பொறுத்தவரை பெண்ணென்றால் சிவந்த உதடு, ஏக்கத்தில் காமப்பார்வையை கக்கும் கண்கள், திமிறிய மார்பகங்கள், வளைந்த ஒடுங்கிய இடையின் நளினம், அதில் கவர்ச்சியான தொப்புள், அதற்கும் கீழே அவிழ்த்து விடுமோ என்று அஞ்சத் தக்க ஆடை.. பருத்த தொடை, வெளுத்த தேகம்..இவைதான்.

ஏற்கனவே பெண்ணை ஜடமாகவும், ஆணுக்கான போகப்பொருளாகவும், கவர்ச்சி பிண்டமாகவும் சமூகம் வடிவமைத்துள்ள நிலையில்.. அத்தகைய பாலுணர்வு கொந்தளித்த மனதுடன் உள்ள ஆணுக்கு முன்னால் கைக்கெட்டிய தூரத்தில், கண் முன்னே.. அரைகுறை ஆடையுடன், தனிமையில் ஒரு பெண் நின்றால் என்னாவாகும்..?

ஆபாச படங்கள், அரைகுறை ஆடைகளில் பெண்களின் தன்னிச்சையான போக்கு, மீடியா மற்றும் சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை ஆகியவையே பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு காரணம். இத்தகைய சூழ்நிலையில் சட்டங்களை வைத்துக்கொண்டு அரசு ஒன்றும் செய்ய முடியாது.


சில வருடங்களுக்கு முன்னால் லண்டனில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு குற்றம் குறித்து ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட செய்தி 21-02-2010 தினமலர் நாளேட்டில் வெளியானது. 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் கற்பழிக்கப் படுகின்றனர் என்றும் இந்த சம்பவம் நடப்பதற்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக உள்ளனர் என்றும் பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர். இளம்பெண்கள் தொடை தெரியுமளவிற்கு குட்டை பாவாடை போன்ற கவர்ச்சியான ஆடைகள் அணிவதும், சிலர் ஆண் நண்பர்கள் வீட்டில் தங்குவதும், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும், வம்பை அவர்களே விலை கொடுத்து வாங்குவது போலாகி விடுகிறது. விருந்து நிகழ்ச்சிகளில் மேலாடை விலகுவது கூட தெரியாமல் நடனமாடுவதும் ஆண்களை சபலத்திற்குள்ளாக்கி விடுகிறது. இவற்றால் தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கின்றன என்று அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 

கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவதற்கு மீடியாக்களும், ஆபாச படங்களுமே காரணம். ஆபாச கருத்துக்களுடன் வெளியாகும் பத்திரிக்கைகளை படிக்கும் இளம் வயதினர் அதனால் பாதிக்கப் படுகின்றனர். மீடியாக்களில் வக்கிரமான, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றது. சமூக பொறுப்பற்றத்தன்மையே இத்தகைய குற்றங்களுக்கு காரணம்.


கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு காரணம்’: பிரபல பாடகரின் கருத்தால் வெடிக்கும் சர்ச்சை

பெண்கள் கற்பழிப்பிற்கு உள்ளாவதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல பெண் பாடகர் ஒருவரின் கருத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த கிரைஸ்சி ஹைண்டே(63) என்ற பெண் பாடகர் வார பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கிரைஸ்சி அளித்த பேட்டியில், ‘காம உணர்வுகள் என்பது மனிதர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். ஆனால், அதனை தூண்டிவிட்டு கற்பழிப்பிற்கு முதல் காரணமாக அமைவது பெண்கள் உடுத்தும் ஆபாச ஆடைகள் தான்.

சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணின் ஆடை அறைகுறையாகவும், மிக மிஞ்சிய கவர்ச்சியுடன் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு மோகத்தை தூண்ட தான் செய்யும்.

ஆபாச ஆடைகள் மட்டும் இன்றி, குடித்துவிட்டு தள்ளாடியவாறு சாலையில் செல்லும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு தவறு செய்ய தான் எண்ணம் வரும். இது முழுக்க முழுக்க பெண்களின் தவறு தான்.

பெரும்பாலான கற்பழிப்பு சம்பவங்கள் பெண்கள் குடித்துவிட்டு, போதை பொருள் அருந்திவிட்டு இரவு நேரங்களில் சாலையில் செல்லும்போது தான் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.

ஒருவேளை, நாகரீகமாக, மற்றவர்களின் முகம் சுழிக்காதவாறு உடை உடுத்திக்கொண்டு செல்லும்போதும் கற்பழிப்பு நிகழ்ந்தால், அது மட்டுமே அந்த ஆணின் குற்றம் ஆகும்.

மேலும், தனக்கு 21 வயது இருந்தபோது போதையில் இருந்த என்னை சில நபர்கள் அழைத்து சென்று மிகவும் கொடுமைப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் என்னுடைய தவறு தான்.

இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என கிரிஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.


சிலருக்கு ஆபாசமான செயல்களை பார்ப்பது கிளர்ச்சியை ஏற்படுத்தும். காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் காட்சிப்படுத்தி வெளிவரும் பாலுணர்வுக் கிளர்ச்சி நிகழ்படங்களை பார்ப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொப்புளை பார்ப்பது மட்டுமே கிளர்ச்சியை ஏற்படுத்தும். இதனை பார்வைக் காமம் என்று குறிப்பிடுவர். பெண்களின் தொப்புள் பல வடிவங்களில் இருந்தாலும் ஆங்கில எழுத்து "T" போன்ற செங்குத்தான வடிவம் கொண்ட தொப்புளே மிக கவர்ச்சியானது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இளம் பெண்கள், இடை ஆட்டக்களைஞர்கள், நடிகைகள் மற்றும் பாப் இசை பாடகிகள் போன்றோர் தொப்புளில் தோடு மாட்டிக்கொள்கின்றனர். இவைகளும் தொப்புளை நோக்கி பார்வைகளை ஈர்க்க காரணமாகின்றது. ஆண்களுக்கு, தொப்புளை வெளிகாட்டும் பிக்கினி(BIKINI), லோ ஹிப் ஜீன்ஸ் போன்ற உடைகளில் பெண்களை காண்பதும், பெண்களுக்கு மேல்சட்டை உடுத்தாத ஆண்களை காண்பதும் காம உணர்வைத் தூண்டும்.



பிரபல மனோதத்துவ நிபுணரும், இஸ்ரேல் ‘டெல்ஹாய் கல்லூரி’யின் பெண் கல்வித்துறைத் தலைவருமான “அவிகைல் மூர்” என்பவர் “பெண்ணின் ஆடைக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஓர் ஆய்வை நடத்தினார். 

உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் காணும் போது ஆண்களுக்கு உண்டாகும் பாலியல் உணர்வு எவ்வளவு என்று கண்டுபிடிப்பது தான் அந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். அந்த ஆய்வை நடத்தி முடித்த பின்னர் மக்கள் மன்றத்தில் அவர் தமது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

Journal Of International Women`s Studies, என்று பெயரிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் பாகம் 2 பக்கம் 4இல் “ஆய்வில் பங்கெடுத்த ஆண்களில் 29.8 சதவீதம் பேருக்கு பெண்களை அரைகுறை ஆடைகளில் பார்க்கும் போதெல்லாம் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். 58.1 சதவீதம் பேருக்கு பெரும்பாலான சமயங்களில் உடல் பாகங்கள் வெளியில் தெரியும்படி ஆடை அணியும் பெண்களைக் கண்டால் பாலியல் தூண்டல் உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர்”. (Journal Of International Women`s Studies, Vol. II 4 May 2010) மேற்கோள் காட்டப்பட்ட நூல்:”இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்” இலக்கியச் சோலை வெளியீடு. பக்கம் 27.)

ஆண்கள் பலரின் எண்ணத்தில் பெண்ணென்றாலே அவளுடைய சில அங்க அவயங்கள் தான். மார்பு, உதடு, தொப்புள், உடல் வளைவுகள், அவளது கூந்தல்.. இவையெல்லாம் சேர்ந்து தான் பெண்ணென்ற பிம்பம் மனதில் உரக்க ஒலிக்கிறது. பெண் என்பவள் வெறும் அங்கங்களின் சேர்க்கையாக ஆண்களின் மனதில் வியாபிக்க காரணமென்ன..?

“ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்..! என்று எழுத்தாளர் ஞானி கூட ஒரு தடவை சொன்னார்.

கவர்ச்சி, ஆபாசமான அரைகுறை ஆடை தான் காரணமென்றால் காமத்திற்கேதுவான உடல் வளைவுகளோ, கவர்ச்சியான அங்க அவயங்களோ இல்லாத பச்சிளம் குழந்தைகளும் மனித மிருகங்களால் கற்பழிக்கப்படுகிறார்களே..என்று சிலர் கேட்கின்றனர். அது போன்ற வக்கிர மிருகங்களுக்கு இந்த உலகத்தில் இடமில்லை என்று பிரகடனப் படுத்தும் வகையில் அரசு அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதோடு அத்தகைய கொடுஞ்செயல் புரிந்தவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினால், அவர்களது வக்கிரம் தூண்டப்படுவதற்கு மேற்குறிப்பட்ட நவநாகரீக பெண்களும், அவர்களை வியாபாரப்படுத்தும் மீடியாக்களும், ஆபாச விளம்பரங்களும் தான் காரணம் என்பது கண்டிப்பாக தெரிய வரும். . காமம் மேலிட்ட ஒருவன் நிராசையடைகிற பொழுது, இது போன்ற எளிதில் கிட்டுகிற சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறான் என்பது தான் நிஜம்.

பத்திரிக்கைகளில் பெண்களின் ஆபாச படங்களை முன்பக்கம் நடுப்பக்கம் கடைசி பக்கமென்று இட்டு காசாக்க முடிவது போல், ஏன் டூ பீஸில்..சிங்கிள் பீஸில் ஆண்களின் படங்களை இடுவதில்லை..?

சினிமாவில் கூட ஆண்களை இந்த நாட்டுக்கு பொருந்தாத கோட்..சூட் போட்டு நடிக்க வைக்கின்ற பொழுது, பெண் கதாநாயகிகளை மாத்திரம், கடும் குளிர் பிரதேசங்களில் நடிக்க வைத்தாலும், டூபீசிலும், அரை நிர்வாணத்திலும் படமாக்கும் சூட்சுமம் என்ன..?

வாகனமாக இருந்தாலும், ஆண்கள் உபயோகிக்கும் சேவிங் பிளேடோ, ஜட்டியோ, நறுமண குப்பியோ. எதுவாக இருந்தாலும் அவற்றின் விளம்பரங்களில் சம்பந்தமில்லாமல் செக்ஸ் பாம்’களின் காமரசம் சொட்டும் படங்கள் ஏன்.? அதிலும் ஆணுறை விளம்பரத்திற்கு கேட்கவே வேண்டாம்.

முன்பு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மீறி மார்பை மறைக்க விரும்புவோர் சீலைவரி செலுத்தவேண்டும். அது போன்ற நிலையில் பெண்கள் ஆடை சுதந்திரம் வேண்டுமென்று எந்த பெண்ணியவாதியாவது போராடினால் வரவேற்கலாம், பாராட்டலாம். ஆனால் கேவலம், அரைகுறை நிர்வாணத்தில் செல்லும் விருப்பத்தையே ஆடை சுதந்திரம் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் உரிமை கோரிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது..?

ஆடை சுதந்திரம் கோருபவர்கள் யாரென்று ஆராய்ந்தால், அவர்களுக்கு பின்னால் சதை வியாபாரிகள் ஒளிந்துக் கொண்டிருப்பது தெரியும். இன்றைய உலகமயமாக்களில் குடிக்கின்ற தண்ணீர் முதல் சுவாசிக்கின்ற காற்று வரை சந்தைப் பொருளாக மாறிக் கொண்டிருக்கிற நிலையில் அவற்றையெல்லாம் சந்தைபடுத்த இளமையான, கவர்ச்சியான பெண்களின் உருண்ட விழிகளும், சிவந்த உதடுகளும், திரண்ட மார்பகங்களும், ஒடிந்த இடைகளும், ஒட்டின வயிற்றில் ஒட்டி வைத்தது போன்ற தொப்புளும், வழுவழு தொடைகளும் தேவை.. அதற்காகவே அழகு போட்டி நடத்துகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இந்த விபச்சாரத்தை கருத்தியல்ரீதியாக பிரச்சாரம் செய்பவர்களுக்கு புரட்சிப் பெண் எனும் பட்டம் தருகிறார்கள்.! 

உடை அரசியல்

ஆடை என்பது தனிமனித சுதந்திரத்தின் பாற்பட்டது எனவும், அரைகுறையாக, கவர்ச்சியாக ஆடை அணிந்தாலும் சமூகம் அதற்காக கவலைப்படக் கூடாது. அதனை ஆபாசம் என்று சொல்லி தங்களை கட்டுப்படுத்த முயலக் கூடாது. தங்களை காண்பதன் மூலம் ஆண்களுக்கு உண்டாகிற அந்தத் தீய எண்ணங்களுக்கு ஆண்களே தான் காரணம். அதனை அவர்கள் தான் திருத்திக் கொள்ள வேண்டுமேத் தவிர, தங்களது ஆடை சுதந்திரத்தை தடுக்கக் கூடாது என்று குமுறுகிற குமரிகள், ஆடை என்பது மனித நாகரீகத்தின் உயரிய அடையாளம் என்பதும், அது அணிபவர்களுடைய மனநிலையை, அவர்களது தனித்துவத்தை, சமூகத்தின் பல்வேறு நிலைகளை பிரதிபலிக்கின்ற கண்ணாடி என்பதும் தெரிய வேண்டாமா.? சும்மாவா சொன்னார்கள், ஆள் பாதி, ஆடை பாதி என்று.

சமீப காலம் வரை உடையும் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக நிலவி வந்ததை மறக்க முடியுமா.? அதன் மூலம் நடைபெற்று வந்த சாதிய அடக்குமுறைகளை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். சாதாரண மேல் துண்டை இடுப்பில் கட்ட வேண்டுமா.? தோளில் இட வேண்டுமா.? அல்லது அக்குளில் இடுக்கிக் கொள்ள வேண்டுமா.? என்பதை உயர் சாதிகள் எனப்பட்ட ஈனச் சாதிகள் தீர்மானித்தன. தாழ்ந்த சாதிக்காரன் சட்டை அணியக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. குடை பிடித்துச் செல்லக் கூடாது. அவர் வீட்டுப் பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது. மீறி மறைக்க விரும்பினால் சீலை வரி அரசுக்கு செலுத்த வேண்டும் என்பன போன்ற வன்கொடுமைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் அவற்றையெல்லாம் பெரியார், அண்ணா, ஜோதிபா பூலே, வைக்கம் முகம்மது பஷீர் போன்ற எண்ணற்றவர்கள் போராடியதன் விளைவாகவே எவருக்கும் சமமாக ஆடை அணிகின்ற சுதந்திரத்தையே நாம் பெற்றிருக்கிறோம். அந்த சுதந்திரத்தை பாழ்படுத்தும் வகையில் அல்லது கேலி செய்திடும் வகையில் அரைகுறை ஆடை அணிய பெண்கள் சுதந்திரம் கேட்பது என்ன நியாயம்.? 

நாம் அணியும் ஆடையில் தன்மானம், குடும்ப மானம் இருக்கின்றது, அதிகாரத்தையும், சமூகத்தின் பொதுவான நாகரீகத்தையும் அரசியலையும் கொண்டிருக்கிறது. காக்கியுடையில் மிடுக்குடன் வருகின்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கின்றோம். ராணுவத்திற்கென்று பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வரும் வீரனை நேசிக்கின்றோம். அணிகின்ற ஆடை மூலமாகவே தொழிலாளர்களை, முதலாளிகளை, அரசியல் வாதிகளை, இன்னபிற மக்களை உணர்கிறோம், அறிகிறோம். சமூக அநீதிகளுக்கு எதிரான கலகங்களும் உடை வடிவத்தில் பிரதிபலித்ததை வரலாற்றில் படிக்கின்றோம்.

காந்தியும் அம்பேத்கரும்

மகாத்மா காந்தியும் சரி, சட்டமேதை அம்பேத்கரும் சரி, சமூகத்தை சீர்படுத்த நிறைய எழுதினார்கள். தங்கள் வாழ்நாளில் எண்ணற்ற மக்கள் திரள்களில் பங்கேற்று சமூக மாற்றத்திற்கான கணக்கில்லாத போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்கள். இதற்கெல்லாம் அச்சாணியாக தங்களுக்கான ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். உயர் குலத்தில், உயர்வான கல்வி பயின்று, கை நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த மகாத்மா காந்தியவர்கள், இந்த நாட்டின் ஏழை எளிய மக்களை பிரதித்துவப் படுத்தும் வகையில் மேலாடை தவிர்த்து அரையாடையில் வலம் வந்தார். நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆடை அணியுமளவிற்கு அவர்களது வாழ்க்கைத்தரம் உயரும் வரை தான் முழுமையான ஆடை அணிவதில்லை என்று சங்கல்பம் கொண்டிருந்தார். அவரது அந்தக் கோலம் அவரது கொள்கையை, நாட்டின் நிலைமையை பிரதிபலித்தது. சுதந்திர போராட்டக் காலத்தில் மக்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மனிதனுக்குரிய அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் அவர்கள், வாழ்நாள் முழுக்க ஆங்கிலேயர் போல கோட், சூட் அணிந்து முழு ஆடையை அணிந்து வந்தார். அதற்கு காரணம், அவர் பிறந்து வளர்ந்த சமூக மக்கள் மானத்தை மறைக்க சிறிய ஆடை தவிர வேறேதும் அணியக் கூடாதென்று மேல்சாதிக்காரர்களால் நிர்பந்திக்கப்பட்டார்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன் எதிர்வினையாகவே ஒடுக்கும் மக்களின் ஆடையை தன்னுடைய ஆடையாக அணிந்து கலகம் செய்தார், அம்பேத்கர். இங்கேயும் ஆடையே சமூக மாற்றத்திற்கான போர்கருவியாக செயல்பட்டதை காண முடிகிறது. 

தோள்சீலைப் போராட்டம் தொடங்கி அம்பேத்கர் வரை நிலப்பிரபுத்துவ மற்றும் பார்ப்பனிய வர்ணாசிரம அடக்குமுறைகளுக்கு எதிரான நீண்ட நெடிய ‘ஆடைப் போராட்டத்தை’ இந்த பெருவாரி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களால் நடைபெற்று வந்துள்ளதை வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் தான் நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்தப்பிறகு, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமத்துவமான சீருடை அணிந்திடும் நடைமுறையை அரசு கொண்டு வந்தது. இவை தான் ஆடை சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டம் என்பதை நவீன நாரிமணிகள் புரிந்துக் கொள்ள வேண்டும். 

ஏமன் நாட்டைச் சார்ந்த ‘தவக்குல் கார்மன்’ (Tawakkul Karman) எனும் இஸ்லாமியப் பெண்மணியின் பெயரை பிரபல டைம் மாத இதழ் 2011–ஆம் ஆண்டிற்கான (Person Of The Year) சிறந்த பெண்மணிக்கான விருதுக்கு பரிந்துரை செய்தது. அதே ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கான அவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 

உலக நாடுகளின் தலைவர்கள், தலைசிறந்த விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் ஆகியோர் முன்பு இஸ்லாமிய ஹிஜாப்’பில் வந்து பரிசை பெற்றுக் கொண்டு மேடையிலிருந்து கீழிறங்கிய ‘தவக்குல் கார்மனை’ உலக ஊடகங்களின் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அதில் ஒரு நிருபர்: “நீங்கள் ஏன் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களின் அறிவாற்றலுக்கும், உயர்ந்த சிந்தனைக்கும் பொருந்துகின்றது.?” என்று தவக்குல் கார்மனை கேட்டார். அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல்,

“ஆதி மனிதன் ஆடையில்லாதவனாகவே இருந்தான். அவனின் அறிவுப் பெருகப் பெருக ஆடைகளை அணிய ஆரம்பித்தான். நான் இன்றைக்கு யார்.? என்ன உடுத்தியிருக்கின்றேன்.? என்பது என் சமூகம் எத்தனை தூரம் அறிவிலும், நாகரீகத்திலும் முன்னேறி இருக்கிறது என்பதற்கான அடையாளமே தவிர பின்னடைவுக்கானதல்ல. ஆடைக் குறைப்பே மனிதனை மீண்டும் ஆதிகாலத்திற்கே அழைத்துச் செல்லும் பின்னடைவாகும்.” என்றார். (Nobel Peace Prize winner "Tawakkul Karman," 'The mother of Yemen's revolution,' when asked about her Hijab by journalists and how it is not proportionate with her level of intellect and education, replied: “Man in early times was almost naked, and as his intellect evolved he started wearing clothes. What I am today and what I’m wearing represents the highest level of thought and civilization that man has achieved, and is not regressive. It’s the removal of clothes again that is a regression back to the ancient times.''






ஹிஜாப் (ஆடை நிர்ணயம்) குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது.?

அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்; 

يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ  يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ [الأعراف:27,26]


“ஆதமுடைய மக்களே.! உங்கள் வெட்கஸ்தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். இன்னும், இறை அச்சம் எனும் ஆடையே மிகச் சிறந்தது. அவர்கள் (மக்கள்) சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.!'’


'’ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் (ஆதம், ஹவ்வா) இருவரையும் ஷைத்தான் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் சோதனைக்குள்ளாகி விடவேண்டாம். அவர்கள் வெட்கஸ்தலங்களை அவர்களுக்குக் காண்பிக்க ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் காணாத வகையில் அவனும் அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நாம் ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக ஆக்கி விட்டோம்.!’'

(திருக்குர்ஆன்- 7:26,27)

வெட்க உணர்வு மனிதனுக்கே உரிய குணமென்பதையும், அது தான் மனிதனை மிருகத்திலிருந்தும் பிரித்து தனி அந்தஸ்தைத் தருகிறது என்பதையும், மனிதனை வெட்கம் கெட்டவனாக மாற்ற சைத்தான் அயராது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையும் இந்த வசனங்கள் மூலம் புரிந்துக் கொள்ள முடியும். ஆடை மனிதனுக்கு ஒரு அத்தியாவசிய தேவை எனும்பொழுது, இஸ்லாம்-திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆண் பெண் இருவருக்குமாக ஆறு அம்சங்களில் ஆடையை வரையறை செய்கிறது.

ஆடை என்பது மனித உடலை முழுமையாக மறைத்திருக்க வேண்டும். இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு. ஆண் தொப்புளிலிருந்து முழங்கால் வரை குறைந்த பட்சம் மறைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணோ முகமும் முன்கைகளும் தவிர்த்து மற்ற பாகங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். இது தவிர உள்ள மற்ற ஐந்து அம்சங்களும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானவையே.

அணிகின்ற ஆடை இறுக்கமில்லாமலும், உடலின் வடிவத்தை வெளிகாட்டாதவாறும் இருக்க வேண்டும்.

உடலின் பாகங்கள் வெளியே தெரிகிறவாறு மெல்லிய ஆடைகளை அணியக் கூடாது.

எதிர்பாலினரை கவரும் வகையில் கவர்ச்சியான ஆடைகளை அணியக் கூடாது.

எதிர்பாலினர் அணிவது போன்ற ஆடைகளை அணியக் கூடாது. ஆண், ஆணுக்குரிய ஆடையையும், பெண், பெண்ணுக்குரிய அடையையும் தான் அணிய வேண்டும்.

மாற்று மதத்தை பிரதிபலிக்கின்ற அடையாளங்களை கொண்ட ஆடைகளை அணியக் கூடாது.

இதுகாறும் கற்புநெறியை பெண்களுக்கு மாத்திரம் வலியுறுத்தி வந்த உலக நடைமுறைக்கு மாற்றாக இஸ்லாம் இருபாலருக்கும் பொதுவில் அதனை வைக்கிறது. திருக்குர்ஆன் ஆண்களுக்குத் தான் முதலில் கற்பை போதிக்கின்றது. பிறகு தான் அதனை பெண்கள் பேண சொல்கிறது. பெண்களை காணுகிற பொழுது ஆண்கள் முதலில் பார்வைகளை தாழ்த்திக் கொண்டால், அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டு விடும் என்று இஸ்லாம் சமூக ஒழுக்கத்தை அறிவுறுத்துகிறது.



قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ  وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا [النور: 30، 31]


“நபியே, விசுவாசமுள்ள ஆண்களுக்கு நீர் கூறுவீராக..’ அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் மர்மஸ்தானத்தை(கற்பை)யும் பேணிக் காத்துக் கொள்ளட்டும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை நன்கு உணர்பவன்.!” (திருக்குர்ஆன்-24:30)


என்று ஆண்களுக்கு இறைவன் முதலில் கட்டளையிட்டு விட்டுத் தான் பிறகு வரும் அடுத்த வசனத்தில் பெண்களுக்கான கற்புநெறியை போதனை செய்கிறான். 

நபியே, விசுவாசமுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக.. அவர்களும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் மர்மஸ்தானத்தை(கற்பை)யும் பேணிக் காத்துக் கொள்ளட்டும். அன்றி (தங்கள் தேகத்தில்) வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் அழகையும், அலங்காரத்தையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளட்டும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளட்டும்.!” (திருக்குர்ஆன்-24: 31)


يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا } [الأحزاب: 59]


'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க, இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிகக் கிருபையுடையவன்.!” (திருக்குர்ஆன்- 33:59)


இஸ்லாத்தில் கற்பின் மாண்பை ஆண்களுக்கு போதனை செய்த பின்பு தான் பெண்களுக்கு அது பற்றிப் போதிக்கிறது. சமூகத்தில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திய போதனைகளை சற்று காண்போம். இவை இன்றைய உலகத்திற்கு எந்த அளவு தேவைப்படுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.


صحيح مسلم (4/ 2047)
 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَا، مُدْرِكٌ ذَلِكَ لَا مَحَالَةَ، فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ»


“(ஒருஆண் செய்யும்) இரு கண்களின் விபச்சாரம், அன்னிய பெண்ணைப் பார்த்தல், இரு காதுகளின் விபச்சாரம், அவள் பேசுவதை கேட்டல், நாவின் விபச்சாரம், அவளுடன் பேசுதல், கையின் விபச்சாரம், அவளைப் பிடித்தல், காலின் விபச்சாரம், (அவளைத்தேடி) நடத்தல், மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன. அல்லது பொய்யாக்குகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..!” (நூல்: முஸ்லிம்)



صحيح مسلم (2/ 978)
عَنْ أَبِي مَعْبَدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَقُولُ: «لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا وَمَعَهَا ذُو مَحْرَمٍ، وَلَا تُسَافِرِ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ


“உங்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன், அவளுடைய திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட உறவினர் (அவளுடைய தந்தை, சகோதரன்,மகன் போன்றோர்) இருந்தாலேயன்றி தனித்திருக்க வேண்டாம் உங்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன், அவளுடைய திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட உறவினர் இருந்தாலேயன்றி பயணிக்க வேண்டாம் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..!” (நூல்: முஸ்லிம்)

 
صحيح مسلم (1/ 266)
عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ»


“ஒரு ஆண் மற்றொரு ஆணின் மறைவிடத்தைப் பார்க்கவேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறைவிடத்தைப்பார்க்கவேண்டாம். ஓர் ஆண் மற்றொரு ஆணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம். ஒருபெண் மற்றோரு பெண் ணுடன் ஒரே ஆடையில் சேர்ந்திருக்க வேண்டாம்.!” என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்முஸ்லிம். )



صحيح البخاري (7/ 37)
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ: «الحَمْوُ المَوْتُ»




“பெண்களிடம் நீங்கள் செல்வதற்கு உங்களை நான் எச்சரிக்கிறேன்.!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “கணவனின் சகோதரர் (அப்பெண்ணிடம்) செல்லலாமா.?” என்று மதீனாவாசிகளில் ஒருவர் கேட்டார். “கணவனின் சகோதரர்; மரணம் (போன்று தான்)..!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி) (நூல்: புகாரி முஸ்லிம்)


صحيح مسلم (3/ 1680)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»

“சில பெண்கள் ஆடைகள் அணிந்தும் நிர்வாணமாகவும், ஆண்களைச் சுண்டி இழுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்களது தலை முடி ஒட்டகத்தின் திமில் போன்று இருக்கும். (இப்படியான ஒரு கூட்டம் இனி தோன்றுவார்கள்) இவர்களை நான் பார்த்ததில்லை. இவர்கள் நரகவாதிகளாக இருப்பார்கள்'.!” என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)







ஆண்-பெண் கற்பு நெறி, பெண்ணின் பாதுகாப்பு, கட்டிக்காக்கப்பட வேண்டிய குடும்ப அமைப்பு, அதில் பேண வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் குறித்து நபிகளாரைப் போன்று விரிவாக இந்த அளவு நடைமுறை சாத்தியத்துடன் எடுத்துக் சொன்ன, வாழ்ந்தும் காட்டிய மற்றொரு சமூகச் சீர்திருத்தவாதியையோ, நாட்டுத்தலைவரையோ, ஆன்மீகவாதியையோ எங்கும் காண முடியாது. 


முஸ்லிமான ஆண்-பெண் இருபாலரும் தங்களது பார்வையையும் ஆடையையும் பேணிக் கொள்வதன் மூலம், கற்பு, ஒழுக்க விழுமியங்களை வளர்த்து குடும்ப அமைப்பை உயிர் போல கட்டிக் காப்பது அவரவர் தலையாய கடமை என்பதை நபிகளாரின் பொன்மொழிகளில் எங்கும் பரந்து காணலாம். அன்னியப் பெண்ணை ஏறிட்டுப் பார்ப்பதும் தவறு, கவர்ச்சியான தோற்றத்துடன் ஒரு பெண் ஆணின் முன் தோன்றுவதும் தவறு என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

இஸ்லாமிய சட்டம் இரண்டு வழிமுறைகளில் செயல்படும். ஒன்று தனிமனித ஒழுக்கத்தை போதனைகள்,அறிவுரைகள் மூலம் புகட்டி சமூகத்தை ஆரோக்கியமானதாக வார்த்தெடுக்க முயலும். இரண்டாவதாக சமூகத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் வரம்பு மீறுபவர்களை கடுமையாக அது தண்டிக்கும். அதன்படி யாராவது பெண்களை கற்பழித்தால், கற்பழிக்க முயன்றால் அவர்களுக்கு மரணதண்டனை கண்டிப்பாக வழங்கப்படும். இதன் மூலம் பெண்களின் சுதந்திரம் இஸ்லாமிய சமூகத்தில் நிலைநாட்டப்படுகிறது. 

பெண்கள் ஹிஜாப்(ஆடை நிர்ணயம்) அணிய வேண்டுமென்பதை இஸ்லாம் மட்டும் கூறவில்லை. இந்து, கிறித்துவ வேதங்களும் கூறுகின்றன.

ஹிஜாப் பற்றி இந்து மதம்..

உனக்காகப் படைத்த உன் சீமாட்டிக்குக் கூறு.! உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள்.! பார்வையை மேல் நோக்காதே.! அது உன் பாதத்தை நோக்கி இருக்கட்டும்.! பிறர் எவரும் உன் வெளித்தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்!” (ரிக்வேதம் 8:33:19)

ஹிஜாப் குறித்து கிறிஸ்துவ மதம்..

“ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ண வெளியே போயிருந்த போது தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக் கண்டான். ஒட்டகத்தில் வந்த ரெபெக்காள் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கை பார்த்த போது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள்.” (ஆதியாகமம் 24:62-65)

“தூதர்களினிமித்தம் பெண்கள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்” என்று பவுல் கூறுகின்றார். (கொரிந்தியா 11:10)

For Further Readings