Translate

Tuesday 14 June 2016

எழுதுகோலால் எழுத கற்றுக்கொடுத்தது யார்.?






மனிதன் ஒரு பிரத்தியேக படைப்பு. நம்முடைய எண்ணங்களை பரிமாறிக் கொள்கிற பேசும் திறன் எப்படி மனிதனுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள நுண்ணறிவோ.. அதே போல எழுதுகோல் மூலமாக பரிமாறிக் கொள்வதும் ஒரு நுண்ணறிவு. இது மனிதனுக்கு மாத்திரமானது. இதனை வழங்கியவன், நமக்கு காணும்திறனை, செவிப்புலனை வழங்கிய இறைவன். அது தான் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, வீட்டை கொத்தனார் தானே கட்டினான்.? ஏன் நீங்கள் கட்டிய வீடு என்கிறீர்கள்..? உங்கள் குழந்தையை உங்கள் மனைவி தானே மிகுந்த சிரமத்திற்கிடையே பெற்றெடுக்கிறார். ஆண்களாகிய நீங்கள் ஏன் நான் பெற்ற குழந்தை என்கிறீர்கள்..?

உங்கள் சாந்திமிஸ்ஸும், தமிழ்வாத்தியாரும் மனிதனல்லாத ஜீவராசிகளுக்கு எழுத்தறிவு பயிற்றுவிக்க முடியுமா..?


-பூமராங் 


[][][]

No comments:

Post a Comment