Translate

Friday 24 June 2016

இந்துமதத்தை உண்டாக்கியது, வெள்ளைக்காரன்.!





“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.!” 

(நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266)

[][][]

Thursday 23 June 2016

இறை நம்பிக்கையுள்ளவர் வைத்தியம் பார்க்கலாமா.?

கேள்வி: 

[நபியே] நீர் கூறும்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு. அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்." [திருக்குர்ஆன் 
10:49]

இப்படித்தானே உங்கள் அல்லாஹ் சொல்கிறான்.? பிறகு ஏன் உங்க தவணையை நீட்டிக்க விரும்புகிறீர்கள்.? ஏன் உங்கள் நோய்க்கு வைத்தியம் செய்கிறீர்கள்.? 


  =================================================


பதில்: 

ஒரு முஸ்லிமை பொறுத்தவரை உலக வாழ்க்கையில் அனைத்தும் சோதனை. பசியும், தாகமும், இதர உபாதைகளும், நோயும் இன்னபிற அனைத்தும் சோதனை. அருளப்படும் செல்வங்களும் சோதனை.. அதன் இன்பங்களும் சோதனை. இதன் மூலம் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்பதை இறைவன் பார்க்கிறான். 
மனிதன் 
தன்னுடைய நன்மைக்காக எத்தனை  தான் முயன்றாலும் இறைவனது நாட்டத்தின் படியே  எதுவும் நடக்கும். அவனது வல்லமையை மனிதனுக்கு புரிய வைக்கவே இந்த இறை வசனம்.   


பசி வந்தால் இறைவனிடம் 'பிரார்த்தனை மட்டும் செய்.!' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை.. பிரார்த்தனையும் செய்ய வேண்டும். அது தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் பயன் தர.! அத்துடன், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, நேர்மையான முறையில் உழைத்து பொருளை சம்பாதிக்க வேண்டும். அவ்வாறு தூய்மையான முறையில் பெறப்பட்ட அதனை பிறருக்கும் கொடுத்து நாமும் உண்ண வேண்டும் என்றே இஸ்லாம் பணிக்கிறது. 

தாகத்திற்கான தண்ணீரை பெற, படைத்த இறைவனை பிரார்த்தித்தால் மட்டும் போதாது.. அவன் கை-கால்கள் எனும் கருவிகளை உங்களுக்கு வழங்கியிருக்கிறான்.. பிரார்த்தித்தால் மட்டும் போதுமென்றால் எதற்காக அந்தக் கருவிகளை இறைவன் வழங்க வேண்டும்..?

கிணற்றை நோண்டு.. தண்ணீரை அவன் தருவான் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. 

இந்த உலகின் நிலையாமையை மனதிலிருத்தி.. இந்த வாழ்க்கை ஒரு சோதனை என்பதை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப காரியங்களை ஆற்ற வேண்டும். அது தான் இஸ்லாம். 

திருக்குர்ஆன் 2:155:  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள்,உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! 

திருக்குர்ஆன் 
2:156-157:    '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'

வாழ்க்கையில் எதிர்படும் எந்தவொரு சோதனையையும் இறை நம்பிக்கையுடன் நேர்கொண்டால் அது அவனுக்கான நன்மையாகவே அமையும் என்பதுவே இஸ்லாம். 

“சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்) 

“ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் “என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன்”என்று கூறுவான். (நூல் : முஅத்தா)

ஆகவே ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் நோய்வாய்படுவதும் ஒரு சோதனையே.அந்த சோதனையின் போது இறைநம்பிக்கையுடன் பொறுமை காப்பதும்.. அதற்குண்டான வைத்தியம் செய்வதும்.. நிவாரணத்திற்காக இறைவனை பிரார்த்திப்பதும் தான் இஸ்லாம் காட்டும் ஆன்மிகம்.

“மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

“ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

“அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால், இறைவனால் தடை செய்யப்ட்ட பொருளின் மூலம் மருந்துவம் செய்யாதீர்கள்! “என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத்


[][][]

இறைவனது பண்புகளாக குர்ஆன் குறிப்பிடும் 99 பெயர்கள்.!





"நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்," என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் – "அதனை மனனம் செய்தவர்" – என்று வந்துள்ளது. (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)

"அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான –பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.!'’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6410. அபூஹூரைரா (ரலி).

99 Names of Allah with English & Tamil meanings...

1 Allah (الله) The Greatest Name -

2 Ar-Rahman (الرحمن) The All-Compassionate- அளவற்றஅருளாளன்



3 Ar-Rahim (الرحيم) The All-Merciful-நிகரற்ற அன்புடையோன்



4 Al-Malik (الملك) The Absolute Ruler-உண்மையான அரசன்



5 Al-Quddus (القدوس) The Pure One-தூய்மையாளன்



6 As-Salam (السلام) The Source of Peace-சாந்தி அளிப்பவன்



7 Al-Mu'min (المؤمن) The Inspirer of Faith-அபயமளிப்பவன்



8 Al-Muhaymin (المهيمن) The Guardian-இரட்சிப்பவன்



9 Al-Aziz (العزيز) The Victorious-மிகைத்தவன்



10 Al-Jabbar (الجبار) The Compeller-அடக்கியாள்பவன்



11 Al-Mutakabbir (المتكبر) The Greatest-பெருமைக்குரியவன்



12 Al-Khaliq (الخالق) The Creator-படைப்பவன்



13 Al-Bari' (البارئ) The Maker of Order-ஒழுங்கு செய்பவன்



14 Al-Musawwir (المصور) The Shaper of Beauty-உருவமைப்பவன்



15 Al-Ghaffar (الغفار) The Forgiving-மிக மன்னிப்பவன்



16 Al-Qahhar (القهار) The Subduer-அடக்கி ஆள்பவன்



17 Al-Wahhab (الوهاب) The Giver of All-கொடைமிக்கவன்



18 *Ar-Razzaq (الرزاق) The Sustainer *-உணவளிப்பவன்



19 Al-Fattah (الفتاح) The Opener-வெற்றியளிப்பவன்



20 Al-`Alim (العليم) The Knower of All-நன்கறிந்தவன்



21 Al-Qabid (القابض) The Constrictor-கைப்பற்றுபவன்



22 Al-Basit (الباسط) The Reliever-விரிவாக அளிப்பவன்



23 Al-Khafid (الخافض) The Abaser-தாழ்த்தக்கூடியவன்



24 Ar-Rafi (الرافع) The Exalter-உயர்வளிப்பவன்



25 Al-Mu'izz (المعز) The Bestower of Honors - கண்ணியப்படுத்துபவன்



26 Al-Mudhill (المذل) The Humiliator-இழிவுபடுத்துபவன்



27 As-Sami (السميع) The Hearer of All-செவியுறுபவன்



28 Al-Basir (البصير) The Seer of All-பார்ப்பவன்



29 Al-Hakam (الحكم) The Judge-அதிகாரம் புரிபவன்



30 Al-`Adl (العدل) The Just-நீதியாளன்



31 Al-Latif (اللطيف) The Subtle One-நுட்பமானவன்



32 Al-Khabir (الخبير) The All-Aware-உள்ளூர அறிபவன்



33 Al-Halim (الحليم) The Forbearing-சாந்தமானவன்



34 Al-Azim (العظيم) The Magnificent-மகத்துவமிக்கவன்



35 Al-Ghafur (الغفور) The Forgiver and Hider of Faults-மன்னிப்பவன்



36 Ash-Shakur (الشكور) The Rewarder of Thankfulness-நன்றி அறிபவன்



37 Al-Ali (العلى) The Highest-மிக உயர்ந்தவன்



38 Al-Kabir (الكبير) The Greatest-மிகப்பெரியவன்



39 Al-Hafiz (الحفيظ) The Preserver-பாதுகாப்பவன்



40 Al-Muqit (المقيت) The Nourisher-கவனிப்பவன்



41 Al-Hasib (الحسيب) The Accounter-விசாரணை செய்பவன்



42 Al-Jalil (الجليل) The Mighty-மகத்துவமிக்கவன்



43 Al-Karim (الكريم) The Generous-சங்கைமிக்கவன்



44 Ar-Raqib (الرقيب) The Watchful One-காவல் புரிபவன்



45 Al-Mujib (المجيب) The Responder to Prayer-அங்கீகரிப்பவன்



46 Al-Wasi (الواسع) The All-Comprehending-விசாலமானவன்



47 Al-Hakim (الحكيم) The Perfectly Wise-ஞானமுள்ளவன்



48 Al-Wadud (الودود) The Loving One-நேசிப்பவன்



49 Al-Majid (المجيد) The Majestic One-பெருந்தன்மையானவன்



50 Al-Ba'ith (الباعث) The Resurrector-மறுமையில் எழுப்புபவன் 

51 Ash-Shahid (الشهيد) The Witness -சான்று பகர்பவன்



52 Al-Haqq (الحق) The Truth-உண்மையாளன்



53 Al-Wakil (الوكيل) The Trustee-பொறுப்புள்ளவன்



54 Al-Qawiyy (القوى) The Possessor of All Strength-வலிமை மிக்கவன்



55 Al-Matin (المتين) The Forceful One-ஆற்றலுடையவன்



56 Al-Waliyy (الولى) The Governor-உதவி புரிபவன்



57 Al-Hamid (الحميد) The Praised One-புகழுடையவன்



58 Al-Muhsi (المحصى) The Appraiser- கணக்கிடுபவன்



59 Al-Mubdi' (المبدئ) The Originator-உற்பத்தி செய்பவன்



60 Al-Mu'id (المعيد) The Restorer-மீளவைப்பவன்

61 Al-Muhyi (المحيى) The Giver of Life-உயிரளிப்பவன்



62 Al-Mumit (المميت) The Taker of Life-மரிக்கச் செய்பவன்





63 Al-Hayy (الحي) The Ever Living One-என்றும் உயிரோடிருப்பவன்



64 Al-Qayyum (القيوم) The Self-Existing One-உள்ளமையுள்ளவன்,என்றும் நிலையானவன்,



65 Al-Wajid (الواجد) The Finder-பெருந்தகை மிக்கவன்



66 Al-Majid (الماجد) The Glorious-தனித்தவன்



67 Al-Wahid (الواحد) The One, the All Inclusive, The Indivisible-அவன் ஒருவனே



68 As-Samad (الصمد) The Satisfier of All Needs-தேவையற்றவன்



69 Al-Qadir (القادر) The All Powerful-ஆற்றலுள்ளவன்



70 Al-Muqtadir (المقتدر) The Creator of All Power-திறமை பெற்றவன்



71 Al-Muqaddim (المقدم) The Expediter-முற்படுத்துபவன்



72 Al-Mu'akhkhir (المؤخر) The Delayer-பிற்படுத்துபவன்



73 Al-Awwal (الأول) The First-ஆதியானவன்



74 Al-Akhir (الأخر) The Last-அந்தமுமானவன்



75 Az-Zahir (الظاهر) The Manifest One-பகிரங்கமானவன்



76 Al-Batin (الباطن) The Hidden One-அந்தரங்கமானவன்



77 Al-Wali (الوالي) The Protecting Friend-அதிகாரமுள்ளவன்



78 Al-Muta'ali (المتعالي) The Supreme One-மிக உயர்வானவன்



79 Al-Barr (البر) The Doer of Good-நன்மை புரிபவன்



80 At-Tawwab (التواب) The Guide to Repentance-மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்



81 Al-Muntaqim (المنتقم) The Avenger-பழி வாங்குபவன்



82 Al-'Afuww (العفو) The Forgiver-மன்னிப்பளிப்பவன்



83 Ar-Ra'uf (الرؤوف) The Clement-இரக்கமுடையவன்



84 Malik-al-Mulk (مالك الملك) The Owner of All-அரசர்களுக்கு அரசன்



85 Dhu-al-Jalal wa-al-Ikram(ذو الجلال و الإكرام)The Lord of Majesty and Bounty-கண்ணியமுடையவன் சிறப்புடையவன்

86 Al-Muqsit (المقسط) The Equitable One-நீதமாக நடப்பவன்



87 Al-Jami' (الجامع) The Gatherer-ஒன்று சேர்ப்பவன்



88 Al-Ghani (الغنى) The Rich One-சீமான்-தேவையற்றவன்



89 Al-Mughni (المغنى) The Enricher-சீமானாக்குபவன்



90 Al-Mani'(المانع) The Preventer of Harm-தடை செய்பவன்



91 Ad-Darr (الضار) The Creator of The Harmful-தீங்களிப்பவன்



92 An-Nafi' (النافع) The Creator of Good-பலன் அளிப்பவன்



93 An-Nur (النور) The Light-ஒளி மிக்கவன்



94 Al-Hadi (الهادي) The Guide-நேர்வழி செலுத்துபவன்



95 Al-Badi (البديع) The Originator-புதுமையாக படைப்பவன்



96 Al-Baqi (الباقي) The Everlasting One-நிரந்தரமானவன்



97 Al-Warith (الوارث) The Inheritor of All-உரிமையுடைவன்



98 Ar-Rashid (الرشيد) The Righteous Teacher-வழிகாட்டுபவன்



99 As-Sabur (الصبور) The Patient One-மிகப்பொறுமையாளன்


நமது இந்து நண்பர்கள் இறைவனின் பண்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு உருவத்தைக் கற்பித்து விட்டார்கள். எனவே தான் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள் உண்டானது. இந்து மதத்தை நன்கு ஆய்வு செய்தவர்கள் ஏகத்துவ சிந்தனையில்தான் இருப்பர்.

நன்றி:  Nazeer Ahamed





[][][]

Tuesday 21 June 2016

சனாதன பார்ப்பன வெறியன் வாஞ்சிநாதன் அய்யர் சுதந்திரப் போராட்ட தியாகியா.?



சனாதன பார்ப்பன வெறியன் வாஞ்சிநாதன் அய்யர் சுதந்திரப் போராட்ட தியாகியா.? 

வீர வணக்கங்கள் சனாதன பார்ப்பன வெறியன் வாஞ்சிநாதனுக்கா அல்லது மாமனிதன் ஆஷ்துரைக்கா? 

இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள்.

அரசியல், அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்.?

"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலே ஆஷ் எனும் கயவன் திருநெல்வேலி கலெக்டராக இருந்த போது இந்தியர்கள் மீது மேற்கொண்ட கொடிய அடக்குமுறை கண்டு வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன் எனும் தேசபக்தி மிகுந்த பார்ப்பன இளைஞன் மணியாச்சி ரயில் நிலையத்தில் அந்த ஆஷ் கயவனை சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து போனான்.!" 

-என்று அந்த பார்ப்பன இளைஞனின் வீரத்தை மெச்சி அவனுடைய நினைவு தினத்திலே பத்திரிக்கைகள் எல்லாம் அவனை பெருமையுடன் நினைவு கூர்வதைக் கண்டு அந்த வீர வாஞ்சியைப் பற்றி தெரிந்து கொள்ள பழைய சேதிகளை எல்லாம் புரட்டி தேடிப் பார்த்தால் அவை வேறு ஒன்றைத் தெரிவிக்கின்றனவே.!

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.

மேலும் அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது. 

இதை உறுதி செய்யும் விதமாக ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் தனது "தமிழன்" பத்திரிக்கையில் "சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்.!” என்பதாக அயோத்திதாச பண்டிதர் குறிப்பிட்டதை கவனிக்கலாம்.
.
''குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.

குற்றால அருவிகளில் சாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்  ஆஷ் என்பது நம்மில் எத்தணை பேருக்கு தெரியும்.?

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு.

ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைப்பயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர், காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். 

பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு, "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை'' என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்கிறான். 

ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து, ''நீ போய் பார்த்து வா.!" என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து, 

"மொத பிரசவம் துரை. சின்ன பொண்ணு. ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம் எங்கிட்டு துரை பொழைக்க போகுது.!" என்றான்.

"ஏன். மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே.!" என்று துரை கேட்க , "அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க. அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது.?" என்றான்  முத்தா ராவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். 

மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். 

அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறார். 

என்ன விடயம் என்பதைச்  சொல்லி விட்டு ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தான். 

மருத்துவமனை செல்ல அக்கிரஹாரத்தை தாண்டி தான் 
வண்டி
 சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டு வண்டி மறிக்கப்படுகிறது. 

ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப் போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விட மறுக்கிறார்கள். 

வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்து விடுவோம் என எச்சரிக்கிறார்கள். 

வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . 

இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்கிறான்  ராவுத்தர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். 

குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் 

"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்கிறார்கள்.

வழி விட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே, வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார். 

மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கபடுகிறது. 

அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள். 

ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். 

அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது. 

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,

சனாதான காவலனாக, மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது. 

இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவணக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது. 

சரி வாஞ்சி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தானே, அது என்ன கூறுகிறது என்று பார்த்தால்..

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.

அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

ஆர். வாஞ்சி அய்யர்”

1911-ம் ஆண்டு ஜீன் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தின் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கலெக்டர் ஆஷ்-ஐ சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன், ஆஷ் கொலைக்கான காரணமாக தன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த ஆவணமே மேற்கண்ட கடிதம்.

ஆக, இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல, இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது,

மாபெரும் வீரனாக, புரட்சியாளனாக, சுதந்திர தாகம் கொண்டவனாக விடுதலைப் போரில் வெள்ளையரின் அநீதி கண்டு கொதித்தெழுந்தவனாக வாஞ்சிநாதனை உருவகப்படுத்தி இது நாள் வரையிலும் வரலாறுகள் எழுதப்பட்டு வந்து கொண்டிருந்தன. 

தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஆஷ்-ன் கொலையே முதலும் கடைசியுமானது.

இக்கடிதத்தின் பின்னணியில் பார்த்தோமானால் சுதந்திரம் என்பதை விட சனாதனமும், ”எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்” எனும் வரிகள் வெள்ளையர்களின் ஆளுகையிலிருந்த இந்த தேசத்தை மீண்டும் பிராமணீய ஆட்சிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கையே முன்னணியில் நிற்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. 

”கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை” எனும் வரிகள் மாட்டுக்கறி உண்ணும் உழைக்கும் வர்க்கத்தினரின் மீதான உச்சபட்ச வெறுப்பை உமிழும் இடமாகவும், இன்றளவும் திட்டுவது என்றால் கூட குறிப்பிட்ட சிலசாதிப் பெயர்களை பயன்படுத்தி திட்டும் வழக்கத்தின் முன்னோடியாக ஜார்ஜ்-ஐ பஞ்சமனாக வரிந்து எழுதியதில் காண முடிகிறது.

புஷ்யமித்ர சுங்கன் துவங்கி காலந்தோறும் பிராமணீயம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கொலை செய்யவும் சூழ்ச்சிகள் செய்யவும், தேவைகளை பொறுத்து தன் எதிரிகளுடன் இணங்கியும், எதிர்த்தும், வளைந்து நெளிந்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதே வரலாறு.

ஆனால் எழுதப்பட்ட வரலாறுகள் பெரும்பாலும் பிராமணீயத்திற்கு ஆதரவாகவே எழுதப்பட்டு நம்மை நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. 

சரிங்க, என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரன் நம்மள அடிமைப்படுத்திதானே வச்சிருந்தான், அதனால அவன கொன்னது புரட்சி தானே என்று நீங்கள் நியாயப்படுத்த முயலலாம். 

ஆனால் காலனி ஆட்சி நிலை கொள்வதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே இங்கே உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் நாய்களை விட பூனைகளை விட பன்றிகளை விட தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதே நீங்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் நிதர்சனமான உண்மை.

அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் சம்மாக நடத்த வேண்டும் என கலெக்டர் ஆஷ் வலியுறுத்தியதாக தெரிகிறது. 

வ.உ.சி யை கைது செய்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கை என்று காலப் போக்கில் நம்ப வைக்கப்பட்டாலும் வ.உ.சி கைது குறித்து எந்த குறிப்பும் மேற்குறிப்பிட்ட கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
 
மேற்படி செய்திகளை அயோத்திதாச பண்டிதரும் தன்னுடைய பத்திரிக்கையில் அப்போது எழுதி இருக்கிறார்.

1934-ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு. 

சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் என்பதும், பிராமணீய ஆதிக்கம் என்றும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதே வாஞ்சிநாதனின் குறிக்கோள்.

“நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று பார்ப்பனியம்; மற்றது முதலாளித்துவம்” என்கிற அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை சரியான முறையில் உள்வாங்கி வரலாறு அணுகப்பட வேண்டும். 

ஆஷ்துரை சமதர்மத்தை காக்க முனைந்திட்ட மனிதநேயம் போற்றிய மாமனிதன்.

ஆஷ் எனும் மாமனிதருக்கு வீர வணக்கங்கள்.


By Beemarao, மு.செ. பாதுஷா , Meena , முத்தழகன்


[][][]

நீங்காத நினைவுகள்.. (நபிகள் நாயகம்)-ஜோதிர்லதா கிரிஜா




10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலேசில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் கிடைப்பதுண்டு. அதன் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அவரது கட்டுரை அடக்கியிருந்த பிரமிக்கத்தக்க செய்தியை இன்றளவும் மறக்கவே முடியவில்லை. பத்திரப்படுத்தியிருந்த அதை இன்றுதான் தேடி எடுக்க முடிந்தது. அதன் சில பகுதிகளை அப்படியே இதில் தருகிறேன்.
அவரது கட்டுரை:


“ எங்கோ அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் தோன்றியிருப்பினும்அவரது வருகை பற்றி இந்து மத வேதங்களில் முன்னறிக்கை செய்யப்பட்டிருக்கிறது என்று பெரியவர் ஒருவர் கூறிய போது அதை ஆராய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.


குறிப்புகளைப் பார்க்கிற போது பெருமளவு உண்மை இருப்பதைக் கண்டு நானே வியப்புற்றேன். மகரிஷி வியாச முனிவரால் எழுதப் பட்ட பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பவிஷ்ய புராணத்தில் கீழ்க்காணும் சூத்திரம் வருகிறது:
ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச
ஆச்சார்யண ஸமன்வித

மஹாமத் இதிக்கியாத

சிஷ்ய சாகா ஸமன்வித

நிரூபஷ்சேவ மஹாதேவ

மருஸ்தல நிவாஸினம் 
(பவிஷ்ய புராணம் – பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5.8)


ஒரு மிலேச்ச – அதாவது அந்நிய – நாட்டிலே ஒரு ஆச்சாரியர் தன் சீடர்களுடன் வருவார். அவரது பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.



மஹாமத் – முஹம்மது


மிக மிகத் தெளிவாகப் பெயரும் இடமும் குறிக்கப்பட்டிருப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. அந்த ஆச்சாரியரின் இனம் அவர்களுடைய தோற்றம்பற்றியும் அதே புராணம் கூறுகிறது.


“ லிங்க சேதி சிகாஹீன
சுமச்சுறுதாரி ஸதாஷக

உச்சலாபி ஸர்வபக்ஷி

பனிஷ்யகி ஆனோமம

முசலை நைஸ்மஸ்கார

(பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3)


அவர்கள் – லிங்க சேதி – அதாவதுசுன்னத்து -செய்துகொண்டிருப்பார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தம் போட்டு அழைப்பார்கள். முசலை என்று அறியப்படுவார்கள்.” என்று அந்தப் புராணம் கூறுகிறது.
மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். மிகத் தெளிவான ஒரு காட்சி புலப்படும்!
லிங்க சேதி – சுன்னத் – என்பது இந்து மதத்தில் இல்லாதது. குடுமி என்பது இந்து மதத்துக்குத் தேவையானது. ஆனால்சிகாஹீனம் – மயிரைக் களைவது – என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதை விட வியப்புத் தருவது முசலை என்ற சொல்.



முஸ்லிம் – முசல்மான் என்பவற்றோடு முஸலை” என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்!




இம்மட்டோநபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றி கூறப்பட்டதோ என நினைக்கும் வண்ணம் வேதத்திலேயே கூறப்பட்டிருக்கிறது.




“ இதம் ஜன இபக்ருத
நாரா சம் ஸஸத விஷியதே
ஷஷ்பீம் சஹஸ்ர நவனீதம்
சசௌரம் அருவ மேஷு தன்மஹே
உஷடி ருயங்லம் பிறவாஹிணோ
வநூ மந்தோஹிர் தசா
வத மர ரத் தஸாயனீ
ஜீ ஹிவுதே திவ
ஈஷ்மான உபஸ்மிறுத
ஏவந் தர்ஷயே மாமஹே
சதம் நிஷ்காந்த சஸரஜ
ஸ்ரீ ணி சதான்னியவதாம்
ஸ்ஹஸ்ரா தசகோ நாம்
(அதர்வ வேதம், 20 ஆம் காண்டம்)

“ பக்தர்களே! இதைக் கவுரவத்துடன் கேட்பீர்களாக! புகழக் கூடியபுகழ் பெறக்கூடிய அந்த மா மஹரிஷி 60,090 மக்கள் மத்தியிலே தோன்றுவார். "
(முகம்மது என்றாலேபுகழப்பட்டவர்புகழுக்குரியவர் என்று பொருள். அவர் தோன்றிய போதுமக்கா மாநகரின் மக்கள் தொகை 60,000!)
"அவர் 20 ஆண்-பெண் ஒட்டகங்களில் சவாரி செய்வார். அவரது மகத்துவம் சுவர்க்க லோகம் வரை செல்லும். அந்த மகரிஷிக்கு 100 தங்க நாணயங்கள் இருக்கும்."

(ஒட்டகத்தில் தோன்றும் மகரிஷியை நாம் இந்தியாவில் காணவில்லை. ஆகவே இது நபிகளைப் பற்றிக் குறிப்பதே ஆகும்.)

10 முத்து மாலைகளும் 100 தங்க நாணயங்களும் அரேபியாவைத் துறந்து அபிசீனியா சென்ற 100 நபி தோழர்களைக் கூறும்.
"10 முத்து மாலைகளும், 300 அரபிக் குதிரைகளும், 10 ஆயிரம் பசுமாடுகளும் இருக்கும்."
(நபிகள் நாயகத்தால் சொர்க்கத்தின் வாரிசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 10 பக்தர்களைக் குறிக்கும் சொல்தான் 10 முத்து மாலை. நபிப் பெருமானாருடன் முதற் போர்க்களத்தில் இருந்த 313 பேர் குதிரைகளாகவும் மக்கா வரை சென்ற போது அவருடன் இருந்த 10 ஆயிரம் பேர் 10 ஆயிரம் பசுமாடுகள் எனும் செல்வங்களாகச் சித்திரிக்கப்பட்டதாகவும் மவுல்வி முகம்மது உமர் கூறுவார்.)
நபிகள் நாயகத்தை உலகத்தின் அருட்கொடை என்றே அல்குர் ஆன் ஷரீபு கூறும்.


ரிக்வேதத்தில் உலக அருட்கொடையாக 10 ஆயிரம் பேருடன் தோன்றிப் புகழ் பெறுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.


அன ஸவந்தா ஸக்பதிர் மாமஹே
மேகாவா சேதிஷ்ஷடா
அசுரோ பகோன
திரை விஷ்னோ அஞேத காப்பி
ஸஹஸ்னரா வைச்சுவாரை
திறையம் ருணாஷிகேத
(ரிக்வேதம் மந்திரம் 5, சூக்தம் 28)

ஆகவேத மொழியிலும் மாமஹே” என்றும்மஹாமத் என்றும் கூறப்பட்டிருப்பதும் தொடர்புடைய செய்திகள். சரியாகவே சொல்லப்பட்டிருப்பதும் பெரிய வியப்புக்குரியவையாக இருக்கின்றன.
அடுத்து வரும் கட்டுரைகளில் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளைப் போக்குவதற்கு முயல்கிறேன். (தொடரும்)
@@ 

மேலே உள்ளது முரசொலி அடியாரின் கட்டுரையாகும். நான் காதலிக்கும் இஸ்லாம்” என்கிற தலைப்பில் நீரோட்டம் நாளிதழில் அவர் எழுதிவந்த தொடரின் ஓர் அத்தியாயமே மேற்காணும் கட்டுரை. இந்த அத்தியாயத்துக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு வியப்பு: ஆனால் உண்மை! – இந்து மத வேதங்களால் முன் கூட்டிச் சொல்லப்பட்டவர் நபிகள் நாயகம்” என்பதாகும். இந்தக் கட்டுரையைப் படித்து நான் அடைந்த வியப்பை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டே நினைவில் நின்ற இதை இங்கே எழுதியுள்ளேன்

வியப்படைபவர்கள் வியப்படையலாம். இந்திய மூதாதையர்கள் சொன்னது எதுவானாலும் அதைத் துளியேனும் ஆராயத் தயாராக இல்லாமல்எள்ளி நகையாடுவதையே இயல்பாகக் கொண்டவர்கள் கேலி செய்யலாம். இது அவர்களுக்காக எழுதப்படவில்லை! அவர்கள் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கட்டும். அதனால் யாருக்கும் இழப்பு இல்லை! எது ஒன்றையும் சிறிதளவேனும் ஆராயாமல் அப்படியே நம்புவதும் சரிநம்பாமல் கேலிசெய்வதும் சரிஇரண்டுமே தவறு என்பதே நமது கருத்தாகும்.



-ஜோதிர்லதா கிரிஜா


[][][]