Translate

Saturday 30 April 2016

இஸ்லாத்திலிருந்து வெளியேறும் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களா??




இஸ்லாத்திலிருந்து வெளியேறும் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களா.?


----------------------------------------------------------------------------



*இஸ்லாம் மனிதனுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது; மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை! 

[திருக்குர்ஆன் 2:256] "மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமில்லை.." 


[திருக்குர்ஆன் 
18:29] "நீர் கூறுவீராக: உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள இது சத்தியமாகும்; ஆகவே, எவர் நாடுகிறாரோ அவர் விசுவாசிக்கட்டும்; இன்னும் எவர் நாடுகிறாரோ அவர் நிராகரித்துவிடட்டும்.." 


[திருக்குர்ஆன் 
10:99] "மேலும் உமது இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவருமே முற்றிலும் விசுவாசித்திருப்பாரர்கள்; எனவே மனிதர்களை_ அவர்கள் விசுவாசிகளாகிட வேண்மென்று நீர் நிர்பந்திருக்கிறாரரா?" 


இந்த வசனங்கள் மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்பதை தீர்க்கமாக தெரிவிக்கின்றன!

. . . .


*ஒருவர் குழப்பம் விளைக்காமல் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் தண்டனை இல்லை!


[திருக்குர்ஆன் 
4:137]"நிச்சயமாக விசுவாசங்கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னரும் நிராகரித்து, பின்னரும் நிராகரிப்பை அதிகப்படுத்தி கொண்டனரே அத்தகையோர்_ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டுபவனாகவும் இல்லை." 

இந்த வசனத்தின்படி, சிலரை பற்றி இறைவன் கூறும் போது, 2 தடவை இஸ்லாத்திருந்து வெளியேறியோர் என்கிறான்! 

இஸ்லாத்திலிருந்த வெளியேறிய ஒரே காரணத்துக்காக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் 2வது தடவை இஸ்லாத்திலிருந்து வெளியேற முடியுமா?? 


Saheeh Bukhari (tamil) Book 29 Number 1883, (english) 1784 & Muslim 1383 


"ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறுநாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கபட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கிவிடுங்கள்! என்று கேட்டார். நபி (ஸல்) 3 முறை அதை மறுத்தார்கள். "மதீனா உலையை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்று திகழ்வார்கள்."

இங்கே இஸ்லாத்திலிருந்து வெளியேறிய அந்நபரை நபி கொல்ல கட்டளையிடவில்லை! 

இதன்படி இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒரே காரணத்திற்காக எவரும் கொல்லப்படுவதில்லை!! 

. . . . .

*இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவரை கொல்ல வேண்டுமானால், அந்த நபர் இஸ்லாமிய ஜமாத்தில் பிரிவினையை ஏற்படுத்தியவராக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் செய்தவராக இருக்கவேண்டும்!! 

¤ஒரு முஸ்லிமை மூன்று காரணங்களுக்காகவே தவிர கொல்லக்கூடாது. அதில் மூன்றாவது

(والتارك لدينه المفارق للجماعة)

மார்க்கத்தை விட்டு வெளியேறி ஜமாத்தில் பிரிவினையை ஏற்படுத்தல். 

(அறிவிப்பவர் ஆயிஷா (r).  
Muslim 1676 (eng))


இதன்படி கூட்டமைப்பை பிரித்து மேயும் முர்தத்தையே கொல்ல வேண்டும்  என்று இதன் மூலம்  விளங்கலாம்..!!


¤இதே போன்ற செய்தியில் ஒரு முஸ்லிமை கொல்லும் மூன்றாவது காரியம்! 

(رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله)

ஒரு மனிதர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் யுத்தம் செய்தல். 

(Sunan Nasai book 37 number 4048 Sunan abu dawud book 38 number 4339) 


இவற்றின்படி ஒரு மதம் மாறியவரை கொல்ல வேண்டுமானால், அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக யுத்தம் செய்தவனாக இருக்க வேண்டும்!! 


மதம் மாறிய ஒரே காரணத்துக்காக ஒருவரை கொல்ல முடியாது! அவர் கொல்லப்பட வேண்டுமானால், அவர் கூட்டமைப்பில் பிரிவினை ஏற்படுத்துபவராகவோ அல்லது இஸ்லாத்திற்கு எதிராக யுத்தம் பண்ணுபவராக இருக்க வேண்டும்!! 

. . . . . .


*இஸ்லாத்திலிருந்து வெளியேறி அதோடு நின்றுவிடாமல் இவற்றை செய்த ஒருவருக்கு , ஒரு முஸ்லிம் அடைக்கலம் கொடுத்தால் அவரும் பாதுகாக்க படுவார்!! 


(كان عبدالله بن سعد بن أبي سرح يكتب لرسول الله <صلى > فأزله الشيطان فلحق بالكفار فأمر به رسول الله <صلى> أن يقتل يوم الفتح فاستجار له عثمان بن عفان فأجاره رسول الله <صلى>) 


அப்துல்லாஹ் பின் ஸஅது பின் அபூஸர்ஹ் இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு எழுதி கொண்டிருந்தார். ஆனால் ஷைத்தான் அவரை வஞ்சித்துவிட அவர் நிராகரிப்போரிடம் இணைந்து கொண்டார். மக்கா வெற்றியின் நாளில் அல்லலாஹ்வின் தூதர் அவரை கொன்றுவிடும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் உஸ்மான் பின் அப்பான் அவருக்காக அபயம் தேடினார். எனவே அல்லாஹ்வின் தூதர் அபயம் வழங்கினார்கள்.

(sunan abu dawud book 38 number 4358) 


இதன்படி கொல்லப்பட வேண்டிய இஸ்லாத்திலிருந்து வெளியேறியவருக்கு ஒரு முஸ்லிம் அபயம் கொடுத்தாலும் அபயம் பெறுவார் என்று இதன் மூலம் விளங்கலாம்!! 

. , . . .



*இஸ்லாத்தை ஏற்பது போல அதை நிராகரிக்கவும் ஒருவருக்கு சுதந்திரமுண்டு! 

*ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒரே காரணத்திற்காக அவரை கொல்வதற்கு குர்ஆனோ ஏற்றுகொள்ளத்தக்க சரியான ஹதீஸ்களோ கூறவில்லை.

*ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி அதோடு நின்றுவிடாமல் இஸ்லாத்திற்கெதிராக யுத்தம் செய்தாலோ அல்லது கூட்டமைப்பில் பிரிவினை ஏற்படுத்தினாலோ அப்போது அவர் கொல்லப்பட வேண்டியவர்! 


*இப்படிப்பட்ட மதம் மாறியவனுக்கு ஒரு உண்மையான முஸ்லிம் அபயம் கொடுத்தால் அவன் பாதுகாக்கப்படுவான்!!

- - - - 

 நபியவர்கள் காலத்தில் 
இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவப்பட்டிருந்தது. 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க பல நிராகரிப்போர் நேரம் பார்த்து காத்திருந்தனர். இஸ்லாத்திலிருந்து வெளியேறி இஸ்லாமிய அரசின் எதிரிகளோடு சேருவார் என்றால், எதிரகளுக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன. இப்படிபட்ட துரோகிகளை கொல்வது மிக சரியானதே! 


இதை அமெரிக்கா, இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளன!!


உதாரணமாக அமேரிக்காவில் வாழும் ஒருவன் அமெரிக்காவை தாக்க அதன் எதிரிகளுக்கு இரகசியங்களை வழங்கினால் அவனை அமெரிக்கா என்ன செய்யும்?
 

இந்தியாவின் இரகசியங்களை தீவிரவாதிகளுக்கு ஒரு படைவீரன் வழங்கினால் அவனை என்ன செய்வார்கள்??


இதை இஸ்லாம் செய்தால் தவறாம்.. இந்த நாடுகள் செய்தால் நியாயமாம்!!


நன்றி: இஸ்லாமும் கிறிஸ்தவமும். 



[][][]

Wednesday 6 April 2016

மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!






மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!

------------------------------------------------------------

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.


ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தினத் தந்தி
05-04-2016

-----------------------------------------------------------

'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'

-குர்ஆன் 37: 143,144,145

யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.

அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.

ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.

மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.

இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.

திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.

ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.

திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.

ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.

இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.




[][][]


Monday 4 April 2016

இஸ்லாம் இல்லாமல் இந்தியா இல்லை-மணிசங்கர் அய்யர் பேச்சு..!!






இஸ்லாம் இல்லாமல் இந்தியா இல்லை, முஸ்லிம்களின் தேசப்பற்றை சோதிப்பது தவறு - காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேச்சு....!!

ஜனநாயக இந்தியாவில் இந்திய முஸ்லிம்கள் என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் பேசியவை பின்வருமாறு...


இந்தியாவை பிரிக்கும் போது இங்கேயே (இந்தியாவிலேயே) வாழ்வது என தேர்வு செய்த முஸ்லிம்களுக்கு இந்தியா மீது தேசப்பற்று உள்ளதா? இல்லையா? என சோதித்து பார்ப்பது பெரிய குற்றம்.

இதைவிட மிகப்பெரிய குற்றம் ஏதாவது இருக்க முடியுமா? இந்தியா இல்லாமல் இஸ்லாம் இல்லை. இஸ்லாம் இல்லாமல் இந்தியா இல்லை.

இந்தியாவிற்கும் இஸ்லாமிற்குமான இந்த உறவை முறியடிக்க நினைப்பவர்களே தேச விரோதிகள்.

இந்தியாவை விட்டுச் செல்லும் வாய்ப்பு அன்றைக்கு முஸ்லிம்களுக்கு இருந்தது என்றாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருக்கவே விரும்பினர். முஸ்லிம்களின் தேச விசுவாசத்தை சோதிக்க வேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம்.

சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய படை ஆசாத் ஹிந்த் பாவுஸ் என்றே உருவாக்கப்பட்டது. சுதந்திர பாரத் சேனா என்று அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

LINKS:





[][][]