Translate

Wednesday 28 October 2015

வாஞ்சிநாதன் சுதந்திரப் போராட்டத் தியாகியா ..?



வாஞ்சிநாதன் என்ற சனாதன வெறிபிடித்த பார்ப்பானால் திருநெல்வேலி மாவட்ட  ஆட்சித் தலைவர்   ராபர்ட் வில்லியம் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டு  (17-6-1911) ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது.

மணியாச்சி ரயில் நிலையத்தில் இந்தக் குரூரம் நடந்தது. இந்தக் கொலையின் பின்னணி என்ன? சுதந்திர தாகமா? வருணா சிரம வெறியா?

ஆய்வுகள் தேவையில்லை - ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் சுடுவதற்கு முன் தன் சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதம் அதற்கான ஆவணமாகும்.

''ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,  கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய  ஜார்ஜ் பஞ்சமனுக்கு (George V) முடி சூட்ட  உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது.

அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம்.  அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண்டிய கடமை.

                                                                                                                        இப்படிக்கு,       

ஆர். வாஞ்சி அய்யர்.

இந்தக் கடிதத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற உணர்வு துடித்து நிற்கிறதா? ஆரிய பார்ப்பனர்களின் சனாதன தர்மம் என்ற வெறி சூலத்தைத் தூக்கிக் கொண்டு தாண்ட வமாடுகிறதா?

கோமாமிசம் தின்னக் கூடிய மிலேச்சன் ஜார்ஜ் பஞ்சமன் என்ற சொற்களைத் துருவித் துருவிப் பார்க்கட்டும் எவரும்.

மிலேச்சன் என்று ஆரியர் என்று யாரைக் குறித்துச் சொல்லுவர்? பஞ்சமன் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?

பார்ப்பனர்களின் வருணதர்மத்தின் கடை கோடியில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களைத்தானே?
அந்தச் சொற்களை ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடப் பயன்படுத்துவதைக் காண வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி வெறியனை - இந்து மதக் கொடியவனை - ஸனாதன சீக்குக் கொண்டவனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று சொல்லுவதும், படு கொலை செய்யப்பட்ட இடமான ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்டுவதும் எந்த ஒழுக்கத்தைச் சேர்ந்தது?

பார்ப்பான் என்றால் பாஷாணமும் பஞ்சாமிர்தம் தானோ!

- மயிலாடன் 

நன்றி; விடுதலை நாளிதழ். (சில திருத்தங்களுடன்)


Tuesday 27 October 2015

ஒளரங்கசீப் - மக்கள் நலன் விரும்பிய ஒரு ஆட்சியாளர்..!




ஒளரங்கசீப் - மக்கள் நலன் விரும்பும் ஒரு ஆட்சியாளர் பொய்களின் மூலம் கொடூரமானவராக மாற்றப்பட்ட கொடுமை ..??


இன்றுவரை பார்ப்பனீய இயக்கங்கள் ஒளரங்கசீப்பை பற்றி குறிப்பிடும் போது அவர் கொடூர மன்னர் கோவிலை இடித்தார் என்று கீறல் விழுந்த ரெகார்டை ஓட்டுவார்கள்.. உண்மையில் ஒளரங்கசீப் கோவிலை உடைத்தாரா ? உண்மை தான் .. கோவிலை மட்டுமில்லை . மசூதியையும் ஒளரங்கசீப் உடைத்துள்ளார்.. அதை போல பல கோவில்களுக்கு மானியங்களும் கொடுத்துள்ளார் , மேலும் ஹிந்துக்களின் பல புனித கடமைகளுக்கு முந்தைய அரசுகள் விதித்திருந்த பல வரிகளையும் நீக்கிய மன்னர் தான் ஒளரங்கசீப் .. 

கோவிலை இடித்தார் என்று கூறும் பார்ப்பனீய இயக்கங்கள்.. எதற்காக ஒளரங்கசீப் கோவிலை இடித்தார்..? என்ற உண்மையை மக்கள் மன்றத்தில் எப்படி கூறாமல் மறைக்கிறார்களோ அதை போன்ற நிலை தான் ஒளரங்கசீப் மசூதியை உடைத்த வரலாற்றையும், ஹிந்து சமூக மக்களுக்கு மானியங்களையும் கொடுத்த வரலாற்றையும் மறைத்து வருகின்றனர். ஏன் மதச் சம்பிரதாயம் என்ற பெயரில் பெண்கள் சதி என்ற உடன்கட்டை ஏறுதல் போன்ற பல செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவரும் ஒளரங்கசீப் தான்.. இந்த உண்மைகள் எல்லாம் மக்களுக்கு தெரியும் பட்சத்தில் ஒளரங்கசீப் கொடூர மன்னர்,  ஹிந்து மக்களுக்கு எதிரான மன்னர் என்ற வாதத்திற்கு பலம் இல்லாமல் போய்விடும் அல்லவா..? அதனால் தான் இப்படியான கேடுகெட்ட நிலைகள். இதன் விளைவு ஒரு சிறந்த மன்னராக மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யாத மக்கள் மனங்களில் நினைவு கூற வேண்டிய ஒளரங்கசீப் என்ற மனிதர் இன்று பார்பனீய இயக்க கூட்டங்களால் இகழப்படும் மன்னராக உள்ளார். 

மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்களை பற்றிய சிறு குறிப்பு..

கோவிலை இடித்தாரா ?

காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒளரங்கசீப் இடித்தார் என்று ஒரு வரலாற்றுப் புரளியைக் கிளப்பிவிட்டார்கள். அப்படி கோயிலை இடிக்கும்படி உத்தரவிட்டது உணமைதான். பொய்யைவிட மோசமானது பாதி உண்மையை சொல்வது என்று சொல்வார்கள். அதுபோல்தான் இந்த சம்பவமும். கோயிலை இடிக்கச் சொன்னார் என்று சொல்கிறார்களே.. அது எதற்காக..?  என்கிற வரலாற்று உண்மையை ஏன் மறைக்கிறார்கள்.?  அந்தக் கோயில் இடிக்கப் பட்டதற்குக் காரணமாக கூறப்படும் சம்பவம் என்னவென்றால், ஒரு இந்து குறுநில மன்னரின் ராணிகள் காசியில் குளிக்க வந்தார்கள். அந்த ராணிகளுள் ஒருவர் இருண்ட இடத்தில் கோயிலுக்குள் வைத்து மானபங்கப் படுத்தப் பட்டார். (அண்மையில் காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்கிற பூசாரி கூட கோயில் கருவறைக்குள் வைத்து ஒரு பெண்ணிடம் கசமுசா செய்த காட்சிகளால் வலைதளங்கள் நாறினவே அதுபோல் ஒரு செய்கைதான் இது.) இந்த சம்பவத்தால் காசி விஸ்வநாதர் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக இந்துக்கள் ஒன்றுகூடி மன்னர் இடம் முறை இட்டனர். இதனால் காசி விஸ்வநாதர் உடைய விக்கிரகம் அங்கிருந்து அகற்றப் பட்டது; கோயில் இடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்துக்களின் கோரிக்கைக்கு மன்னர் செவி சாய்த்ததால் நடந்ததே தவிர மன்னரின் விருப்பத்துக்கு அல்லது கொடுங்கோல் முறைக்கு உட்பட்டது அல்ல. 

மசூதியும் இடித்தார் ?

கோல்கொண்டா என்கிற பகுதியை ஆண்ட மன்னன் தானக் ஷா, அரசுக்கு வரிகட்டாமல் பல வருடங்கள் டிமிக்கி கொடுத்து வந்தான். மன்னர் பலமுறை கேட்டும் வரிகளைக் கட்டாமல் ஒரு முட்டாள்தனமான வேலை செய்தான். அதாவது ஒரு பள்ளிவாசலைக் கட்டினான். அந்தப் பள்ளிவாசலில் ஓரிடத்தில் தான் கட்டவேண்டிய வரிக்குரிய செல்வத்தைப் புதைத்து வைத்தான். இதை ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் ஒளரங்கசீப் அந்த பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்கினார். புதைத்து வைத்திருந்த செல்வம் மீட்கப்பட்டு அரசாங்க கஜானாவில் சேர்க்கப் பட்டது. கோயில் இடிக்கப் பட்டது பற்றி கொடி நாட்டிப் புலம்புவோர் இந்த பள்ளிவாசல் இடிக்கப் பட்டது பற்றி ’பேச்சு மூச்சையே காணோம்.’

கோவில்களுக்கு மானியம் வழங்கியவர்..!

தமிழ்நாட்டில் குமரகுருபரர் என்பவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. சைவ சமயத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் பரப்பியவர்களில் அவர் முக்கியமானவர். குமரகுருபரர் வாழ்ந்து பணியாற்றிய காலம் ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலமே ஆகும் (1625-1688). குமரகுருபரர் கேட்டுக் கொண்டதன் பொருட்டு, காசியில் சைவ மட ஆலயங்களை நிறுவ ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன. அதே போல பல்வேறு மானியங்களும் வழங்கப் பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக் கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவமும் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடை படுத்தவில்லை. (பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802)

சதி என்னும் உடன்கட்ட ஏறுதல்..!

ஒளரங்கசீப் இந்திய மண்ணில் புரையோடிப் போய் இருந்த புண்களை அகற்றுவதில் முனைப்புக் காட்டினார். இது புரோகிதக் கும்பலுக்குப் பிடிக்கவில்லை. உதாரணமாக, இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும் போதே அதே நெருப்பில் இறந்தவரின் மனைவியும் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் இந்துக்களிடையே நிலவி வந்தது. இது உடன்கட்டை அல்லது சதி என்று அழைக்கப் பட்டது.

ஒரு முறை போர்க்களத்தில் இறந்த ஒரு இந்து சமுதாயத்தைச் சார்ந்த வீரரின் உடலை எரித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவனது மனைவியை அந்த நெருப்புக்குள் குதிக்கச் சொல்லி கூடியிருந்த கூட்டத்தார் கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீரனின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த மாமன்னர் ஒளரங்கசீப் அந்த செயலை இரும்புக் கரம் கொண்டு தடுத்தார். மன்னர் தங்களின் மத விஷயத்தில் தலையிடுவதாக அங்கிருந்தோர் கூச்சலிட்டனர்; வாதம் செய்தனர். ஆனால் மன்னர் உறுதியாக இருந்து, அந்த மனைவியை உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார். இனி இந்தக் கொடுமைகள் மொகலாயப் பேரரசில் எங்குமே இருக்கக் கூடாது என்று உடனே உத்தரவும் பிறப்பித்தார். இதற்காகவும் ஒளரங்கசீப் மத விஷயங்களில் தலையிடுவதாக பழி தூற்றப் பட்டார். 

ஹிந்துக்களுக்கு ஜிஸ்யா வரி..! 

ஒளரங்கசீப் மீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச்சாட்டு அவர் முஸ்லிம்களுக்கு ஜக்காத் போல முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்கிற வரியை விதித்தார் என்பதாகும் உண்மையில் இந்த வரி விதிக்கப் பட்டது இந்துக்களின் கோயில்களை நிர்வாகம் செய்வதற்கே ஆகும். இந்த வரி செலுத்துவதில் இருந்து முதியோர், பிச்சைக்காரர்கள், பாதிரியார்கள், அர்ச்சகர்கள், உடல் ஊனமுற்றோர், இராணுவத்தில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு விதிவிலக்கும் தரப்பட்டு இருந்தது.

அந்த ஜிஸ்யா வரியை அரசுக்கு வருமானமாக அவர் ஒருபோதும் விதிக்கவில்லை. இந்த வரியும் கூட ஏற்கனவே ஆண்ட மொகலாய மன்னர்களால் விதிக்கப் பட்டதுதான். இன்று கோயில்களில் உள்ளே நுழைவதற்கு சீட்டுகள், தரிசன சீட்டுக்கள், தனிவழி சீட்டுகள், அர்ச்சனை சீட்டுகள் என்றெல்லாம் அவர்கள் நம்பும் கடவுளைக் காண்பதற்கு வகுப்பு மற்றும் வரிசைவாரியாக கட்டணம் வசூலிக்கிறார்களே, அது மட்டும் சரியாகுமா? இந்தக் கட்டணங்கள் வசூலிப்பது கோயில்களை நிர்வாகம் செய்வதற்கு என்று சொல்பவர்கள் இதையே ஒளரங்கசீப் நாடு முழுவதற்கும் மொத்தமாக அமுல படுத்தினால் அதை எதிர்த்து வரலாற்றில் சேற்றை அள்ளி அவர் மீது பூசுவது ஏன்?

ஹிந்து சமூக மக்களுக்கு பல வரிகளை நீக்கியவர்..! 

உண்மையில் ஒளரங்கசீப் அவர்கள், ஏற்கனவே இந்துக்கள் மீது சுமத்தப் பட்டிருந்த பல வரிகளை ரத்து செய்தார் என்பதே உண்மை. இதை வரலாறு மறைத்து வைத்து இருக்கிறது. இதோ அந்தப் பட்டியல் :-

இந்துக்கள் தங்களின் வாழ்வில் ஒருமுறையாவது காசி சென்று அங்கு ஓடிக் கொண்டிருக்கும் கங்கை நதியில் நீராடி வந்தால் பாவங்கள் நீங்கி விடுமென்பது அவர்களின் நம்பிக்கை. ஒளரங்கசீப்புக்கு முந்திய மொகலாயர்களின் ஆட்சியில் இவ்விதம் காசி செல்வதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் வரி செலுத்த வேண்டியது இருந்தது. இந்த வரியை நீக்கியவர் ஒளரங்கசீப் ஆவார்.

அதே கங்கையில் இறந்தவர்களின் அஸ்தி என்கிற சாம்பலைக் கரைப்பது என்பதும் அதற்கான கங்கைக்கரையில் சடங்குகள் செய்வதும் இந்துக்களின் பழக்கம். இதற்கும் வரி இருந்தது, இந்த வரியையும் நீக்கியவர் சாட்சாத் ஒளரங்கசீப்பே.

புனித நதிகளில் மீன் பிடிப்பதற்கும், பசு மாடுகளில் பால் கறந்து விற்பதற்கும், பெரும்பான்மை இந்துக்கள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் விற்பதற்கும், சிலவகைப் பாத்திரங்கள் செய்து விற்பதற்கும் வரிகள் இருந்தன. அந்த வரிகள் அனைத்தும் ஒளரங்க சீப் உடைய ஆட்சியில்தான் ரத்து செய்யப் பட்டன.

மாட்டின் சாணத்தைத் தட்டி சுவர்களில் ஒட்டிக் காய வைத்து அதை எரிபொருளாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இந்த எரிபொருள் சமைப்பதற்கும் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கும் பயன்பட்டன. இதற்கு ஏற்கனவே வரி இருந்தது. இந்த வறட்டி வரியை விரட்டி அடித்தவர் ஒளரங்கசீப் ஆவார். இதனால் பல கோடி இந்துக்கள் பயன் பெற்றனர். 

ஏதாவது ஒரு அசாதாரணமான சந்தர்ப்பத்தில் ஜாதியில் கீழ்த்தரமான ஒரு விதவைப் பெண்ணை ஒரு உயர்சாதி ஆண் தொட்டு விட்டாலோ, பட்டு விட்டாலோ, திருமணமே செய்து கொண்டாலோ, அதற்காக வரி செலுத்த வேண்டி இருந்தது. இந்த வரியையும் ஒழித்துக் கட்டி விதவை மணத்தை இந்து சமூகத்தில் ஊக்குவித்தவர் ஒளரங்கசீப்.

இந்துக்களின் கோயில் திருவிழா மற்றும் பண்டிகைகளின் போதும் மக்கள் அதிகமாகக் கூடும் சந்தைகளிலும் கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் கட்டிக் கொண்டிருந்த உள்ளூர் வரிகளையும் ரத்து செய்தார்.!

50 ஆண்டுகள் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆட்சி செய்த ஒரு மன்னர் தான் நினைத்திருந்தால் மற்ற முகலாய மன்னர்களை போல சுகபோக வாழ்கையில் வாழ்ந்து இறந்திருக்கலாம்.. ஆனால் தனது வாழ் நாள் முழுவதையும் எளிமையுடனும், மக்கள் நலன் பேணும் ஆட்சியாளராகவே வாழ்வை அமைத்திருந்தார். அது மது உள்ளிட்ட மக்களை அழிக்கும் வஸ்துக்களை தடை செய்ததில் இருந்து, வெள்ளத்தால், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரி ரத்து செய்ததில் இருந்து, பல செயல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம் .

ஒளரங்கசீப் தான் இறக்கும் முன் தன் கைகளால் குல்லா தைத்ததற்கு கூலியாக 4 ரூபாய், 2 அணாகளும், திருக்குர்ஆனிலிருந்து பிரதி எடுத்ததற்காக 305 ரூபாயும் சொந்த சம்பாத்தியமாக இருந்தது. அதனை தன்னுடைய மரணத்திற்குப்பிறகு 'ஏழைகளுக்குச் செலவிட்டு விடுங்கள்' என்றார். "எனது கல்லறை மிகவும் எளிமையாக வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும், சுற்றி பசுமை செடிகள் இருக்க வேண்டும். எவ்வித அழகோ ஆடம்பரமோ, இசையோ இருக்கக்கூடாது..! என உயிலில் எழுதியிருந்தார்.- இப்படி நேர்மையுடன நடந்த ஒரு மனிதரை தான் வரலாற்று திர்புகளின் மூலம் தூற்றுகிறார்கள் சிலர்..

வரலாற்று பக்கங்களில் இருந்து ஔரங்கசிப் பற்றி இன்னும் பல நல்ல செயல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.. ஆனால் என்ன இந்த உண்மைகள் எல்லாம் நம்மில் பலருக்கும் தெரியாது.என்பதே உண்மை.. காரணம் எந்த ஒரு கேடுகெட்ட ஊடகமும் ஔரங்கசிப் நல்லவர் என்று கூறவில்லை .. மாறாக பொய்களின் மூலம் ஒரு நல்ல ஆட்சியாளரை மக்கள் வெறுக்கும் ஒரு நபராக காட்சிபடுத்தியத்தில் வெற்றி பெற்றுவிட்டன என்பதே. .. நாமும் அவர்கள் கொடுக்கும் பொய்யான இருட்டடிப்புக்களின் மூலம் வரலாற்றை மறந்த சமூகமாகவே உள்ளோம்..


நன்றி: Nsa khadir.


மாமன்னர் ஒளரங்கஜேப்'பின் நெஞ்சை உருக்கும் உயில்..!


'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்'.
'என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.
உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கூறப்பட்ட நபர் யார் என்று தெரிகிறதா ? முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்த ஒளரங்கசீப் தான். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ( 1657 – 1707 ) ஆட்சியை புரிந்தவர்.,ஆனால் இறுதி வரை ஆடம்பரத்தை விரும்பாத அரசு கஜானா பணத்தை பயன்படுத்தாத ஒரே ஒரு முகலாய மன்னராக இருந்தார்..இவரை தான் பொய்களின் மூலம் மக்கள் மனங்களின் மோசமான மன்னராக சித்தரித்து வருகின்றனர் பார்ப்பனீய இயக்கங்கள்...
நன்றி: Nsa Khadir .


மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாறு.,மௌலானா முகம்மது அலி ஜோஹர்.



மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு.,
1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி ஜோஹருக்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார் அவர்கள், அவ்வரவேற்புரையின் போது:
"காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்..!" என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி. 1930 - இல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க காந்திஜியுடன் செல்கிறார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
மாநாட்டில் பேச அவருக்கு ஐந்து நிமிடங்களே அனுமதிக்கப்பட்டிருந்தது. தேச நலனுக்காக தேக நலனையும் பொருட் படுத்தாமல் பேசுகிறார். கால  அவகாசத்தை மறந்து இரண்டு மணி நேர அவரது உரையை, ஆங்கில ஏகாதிபத்திய அரங்கு கேட்டது.
மௌலானா ஆற்றிய அவ்வுரையின் இறுதி வார்த்தைகள்:
"என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகிறேன். (என்று உரத்த குரலில் கூறியவர்) அவ்வாறு என் தேசத்திற்கு நான் திரும்புவது எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்!  இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை கொடுங்கள் !
* ‘’I Want to go back to my country’’. He said in a loud voice. ‘’If I can go back with the substance of Freedom in my hand. Otherwise Iwill not go back to a slave country. Iwill even prefer to die in a foreign country so long as it is a Free Country,and if you do not give us Freedom in India, You will have to give me a grave here.’’
- Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothres, P.231.

லண்டன் வட்டமேசை மாநாட்டில் மௌலானா முஹம்மது அலி பேசிய படி அங்கேயே 04-01-1931- இல் காலமானார். அவர் எண்ணம் போல் ஒரு சுதந்திர மண்ணில் மரணம் நிகழ்ந்தாலும், அவரது ஜனாஸாவை (இறந்த உடலை) லண்டனில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. 'எங்கள் மண்ணில் நல்லடக்கம் செய்கிறோம்' என்று 22 நாடுகள் அவரது ஜனாஸாவை வேண்டி நின்றன.
இறுதியாக பைத்துள் முகத்தஸின்(ஜெருசலம்) பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி கிலாபத் கமிட்டியை வேண்டிக் கொண்டதற்கிணங்க மௌலானாவின் ஜனாஸா பைத்துல் முகத்தஸில் அல்-அக்ஸா பள்ளிவாசல் (முஸ்லிம்களின் புனித இல்லம்) அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேளலானா முகம்மது அலி அவர்கள் புனித ஹஜ் பயணம் சென்றபோது புன்த கஃபா ஆலயத்தின் திரைசீரையைப் பிடித்து கண்ணர் மல்கியவாறு கேட்ட பிரார்த்தனை :
"இறைவா...
என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா !
சுதந்திரம் பெற்ற இந்தியாவில்
இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா..!"


பாபர் மசூதிக்காக போராடிய ஹிந்து சகோதரர் அக்க்ஷய் பிரம்மச்சாரி..!



பாபர் மசூதியை மீட்க முஸ்லிம்கள் மட்டும் போராடவில்லை. மாறாக பல ஹிந்து சகோதர்களும் தங்களால் ஆன மட்டும் பார்ப்பனீய இயக்கவாதிகளின் சூழ்ச்சிகளை எதிர்த்து போராடினர் . அவர்களில் ஒருவர் தான் அக்க்ஷய் பிரம்மச்சாரி. பாபர் மசூதி விவகாரத்தில் இசுலாமியர்களுக்காக குரல் கொடுத்த காந்தியவாதி.அன்று பார்ப்பனீய இயக்கத்தின் ஊதுகுழலலாக செயல்பட்ட உ.பி.காங்கிரசில் எழுந்த நியாயக்குரல் அக்ஷய் பிரம்மச்சாரியினுடையது மட்டுமே.


இவர் பாபர் மசூதி பிரச்சினையை சட்டத்தின் மூலம் தீர்க்க அரும்பாடுபட்டார். ஆனால் அன்று நீதிபதியாக இருந்த நாயர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதை பிறகு தெரிந்துகொண்டார். பின்பு இவர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபை ரவுடிகள் இவரை அடித்துத் துரத்தினர்.

ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதிலும் எடுத்து செல்லவும், பிரதமரிடம் கூட கொண்டு செல்லும் அளவுக்கு உறுதி காட்டினார். அப்போதைய பிரதமர் நேரு இவரை லால் பகதூர் சாஸ்திரியை பார்க்க சொன்னார். உத்தரப்பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரி, அயோத்தியில் பிரச்சினை ஏதும் இல்லை என்று சட்ட சபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.

ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சிவரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் நியாயம் பெற்றுத் தர முடியவில்லை.

பாபர் பள்ளிவாசலை இடித்த கருப்பு தினம் (டிசம்பர் 6) நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் தருணத்தில் இம்மனிதரை நினைவுகூர வேண்டும்.

நன்றி - இணையம்.


வரலாற்று திரிபு..திட்டமிட்டு மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்..!



வரலாற்று திரிபு ..திட்டமிட்டு மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள்..


1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்…! இதுவே பெரிய யுத்தம்..! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ்-உத்-தௌலா. நமது வரலாற்றாசியர்களின் வாதப்படி ‘முதல்ல்ல்ல்ல் இந்திய சுதந்திரப்போர்’ எப்போதாம்..?

1857..? ஏன்..? ஏன்..? ஏன்..? ஏன்…?
ஏன்… இந்த வரலாற்று திரிபு..???

எல்லாம் அவாளால் எழுதப்பட்ட அவர்களுக்கு சாதகமான வரலாற்று கிறுக்கல்கள்..திட்டமிட்டு மறைக்கப்பட்ட திட்டமிட்டு மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் சுதந்திர போராட்ட தியாகங்கள்..

வடக்கில் சிந்திய முதல் ரத்தம்..

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய்உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து,ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.

ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய ரத்தம்.. வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தம்தான். அதன் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது

வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால்.

நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது. இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா. ஆப்கானியப்படைவீரர் அலிவர் திகான் கி.பி. 1726ல் துருக்கியிலிருந்து இந்தியா வந்து வங்காளப் படையில் சேர்ந்தார். பின்பு 1740ல் வங்காளத்தின் நவாப் ஆனார். அவருக்குப்பின் 24 வயதான அவரது பேரர் சிராஜ்-உத்-தௌலாவங்காள நவாபாக ஆனார்.

சிராஜ்-உத்-தௌலா மற்ற நவாப்கள் போலல்லாமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர்களை கலங்கடித்த மாவீரராவார். ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சிராஜுத்தெளலாவின் புகழ் வடக்கே மிக விரைவாக பரவியது. 1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம்.

இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா. ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது.

கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 22”க்கு 14” அளவு கொண்ட ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான். உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தா புறப்பட்டுச் சென்றார்கள். இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த கீழறுப்பு வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். 1757ல் வெள்ளையர் முகாமிட்டிருந்த கல்கத்தா துறைமுகத்தை சிராஜுத்தெளலா தாக்கினார். நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயலிழது விட்ட போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார். கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை வஞ்சகமாக கொன்றான். இவ்வாறு வடக்கே தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர் சதியால் கொன்றனர்.

நன்றி: Nsa Khadir.

சகோதரி கீதாவை காப்பாற்றிய பாகிஸ்தானிய குடும்பம்!




காது கேட்காமல் வாயும் ஊமையாகிப் போய் தனது சிறு வயதில் தவறுதலாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி பாகிஸ்தான் சென்று விட்டார் சகோதரி கீதா. அவரை 14 வருடங்களாக தனது வீட்டிலேயே தனது மகளைப் போல பாவித்து அவரது விலாசத்தையும் கண்டு பிடித்து தற்போது இந்தியாவில் அவரது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வந்துள்ள அப்துல் சத்தார் குடும்பத்துக்கு இறைவன் நன்மைகளை வாரி வழங்குவானாக!
அந்த பெண் கீதாவின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் அவர் வழிபடும் தெய்வங்களின் படங்களை ஒரு ரூமில் வைத்து அவருக்கு சகல சௌரியங்களையும் செய்து கொடுத்துள்ளது அப்துல் சத்தார் குடும்பம். 'இந்த மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை' என்ற குர்ஆனின் வசனத்தை செயல்படுத்திக் காட்டியுள்ளது இவரது குடும்பம்.
இதனிடையே கீதாவை இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த எதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையான 'டான்' வெளியிட்ட செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிதியை அறக்கட்டளை நிறுவனர் அப்துல் சத்தார் எதி பணிவுடன் மறுத்துவிட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவரது மகன் அன்வர் காஸ்மி இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாக அந்தப் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்துத்வாவாதிகளே!
இனியாவது அப்துல் சத்தாரைப் போன்று மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். மாட்டை காட்டி மனிதனைக் கொல்லும் மிருக புத்திக்கு இனியாவது விடை கொடுங்கள்.

நன்றி:  சுவனப் பிரியன். 

அவமானத்தால் தலை குனிகிறேன் - ஆர்.எஸ்.எஸ் குறித்து கடற்படை முன்னாள் தளபதி!


அவமானத்தால் தலை குனிகிறேன் - ஆர்.எஸ்.எஸ் குறித்து கடற்படை முன்னாள் தளபதி! 
.
திங்கட்கிழமை, 26 October 2015 18:44 பகுதி: இந்தியா 
.
புது டெல்லி : சமீப காலமாக தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ராம்தாஸ் இந்திய ஜனாதிபதி, பிரதமருக்கு திறந்த மடல் எழுதியுள்ளார்.
.
இந்திய கடற்படையின் முன்னாள் தளபதியும் அமைதிக்கான மாக்சாசே விருது வாங்கியவருமான அட்மிரல் லக்ஷ்மி நாராயண் ராமதாஸ் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 பக்க திறந்த மெடல் ஒன்றை எழுதியுள்ளார். அம்மடலில் இருந்து சில முக்கிய பகுதிகள் பின் வருமாறு:
.
"கனத்த இதயத்தோடு இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். சுதந்திரம் கிடைத்த சில நாட்களிலேயே 14 வயதில் இந்திய ராணுவத்தில் இணைந்து 45 ஆண்டுகள் பணியாற்றி கப்பற்படை தளபதியாக ஓய்வு பெற்றவன் எனும் அடிப்படையில் இந்தியா சந்தித்த பல்வேறு மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன்.
.
இக்கடிதத்தை எழுதும் நானும் இந்து நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவனே. எனக்கு தெரிந்த இந்து மதம் அன்பாலும் பிறரை மதிக்கும் தன்மையாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்டது. வன்முறையையும் எதையும் சகித்து கொள்ள முடியா இன்றைய இந்துத்துவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது நான் அறிந்த இந்து மதம்.
.
எண்பது வயதாகும் முதியவனாகிய நான் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலால் அவமானத்தால் தலை குனிகிறேன். இந்திய ராணுவத்தில் போர்கப்பல்களிலோ, போர் விமானங்களிலோ அல்லது காலாட்படையிலோ இந்து, முஸ்லீம், கிறித்துவர் எனும் வேறுபாடு பார்க்கப்பட்டதில்லை. அப்படியிருக்கையில் ஏன் மே 2014க்குப் பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்?
.
இன்று ஒவ்வொரு முஸ்லீமும் தன்னுடைய நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளது வேதனைக்குரியது. குறிப்பாக அவர்களின் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அவர்கள் எதை உண்ண வேண்டும் என்பதற்கான உரிமையும் மறுக்கப்படும் சூழலிலும் இது தொடர்கிறது. தெளிவான திட்டமிடப்பட்ட கூட்டு கலவரங்கள் கவலையளிக்கும் செயலாகும்.
.
இந்து ராஷ்டிராவைக் கட்டமைக்கும் ஓரே நோக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை இந்து அமைப்புகளும் செயல்படுவது கவலைக்குரியது. மேலும் இதற்கு அரசு தரப்பில் கவலையளிக்கிறது, வேதனை தருகிறது என்று எளிதான பதில்களைச் சொல்வதன் மூலம் தன் கடமையிலிருந்து அரசு நழுவுகிறது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களும் இவ்வாறே பேசுவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல.
.
இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் நெருப்போடு விளையாடுகிறோம் என்பதை உணர வேண்டும். முஸ்லீம்கள், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோர் ஏற்கனவே ஒடுக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது நமக்கான வரமாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் நாம் இவர்களின் செயல்பாடுகளால் பிற நாடுகளால் ஃபாசிஸ்டுகளாக பார்க்கப்படுகிறோம்.
.
இந்திய ஜனாதிபதி, பிரதமர் இருவரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பதவியேற்றுள்ளீர்கள். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியுள்ள படி ஒவ்வொரு மனிதனின் பேச்சுரிமை, வழிபாட்டுரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம். இவ்வரசு அவ்வாறு செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் எனக்கும் உண்டு.
இப்போதே இதை தடுக்கா விட்டால் பிறகு எக்காலத்திலும் தடுக்க முடியா அளவு மோசமாகி விடும் என்பதைச் சொல்லி கொள்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்."
.

****************************
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை.
. 
(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. 
.
தலித் பகுஜன் மக்களை உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.
.
இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.
.
சுற்றறிக்கையிலிருந்து . . . . ( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர்களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.
.
பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களி டையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல்மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.
.
சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும். ஒரு ரத்ததான முகாம் நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
.
தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.
.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக்கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும். 
.
நமது கட்டளைப்படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை படிக்கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத் தப்பட வேண்டும்.
.
கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண்டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.
.
முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர் ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.
.
இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும். 
.
தாழ்த்தப்பட்டவர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள பேக்லாக் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள், அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
.
சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்பவர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.
.
இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவியுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
.
யோகீந்தர் சிக்கந்த்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
.


நன்றி : Tamilselvan Sp



மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் 1.25 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது..!



அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் 1.25 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது..


அமெரிக்காவில் இனவெறி நீங்க வெள்ளையர்கள் இஸ்லாத்தை ஏற்பதே தீர்வு என்று மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம் ஏலத்தில் சுமார் 1.25 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது .. இந்திய மதிப்பில் சுமார் 9 கோடிகள் ஆகும்.. 



இக்கடிதம் மால்கம் எக்ஸ் ஹஜ் சென்ற பொழுது மக்காவில் இருந்து 1964 எழுதப்பட்டதாகும்.. மக்காவுக்கு செல்லும் வரை நேசன் ஆப் இஸ்லாத்தின் தவறான வழிகாட்டுதலில் இஸ்லாம் என்பது கருபர்களுக்கான மார்க்கம் என்ற தவறான சிந்தனையில் இருந்ததாகவும் .. மக்காவில் பல இன , நிற , கலாட்சார மக்களை பார்த்த பொழுது அவர்களுக்குள் எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் இறைவன் ஒருவனே அவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற சகோதரத்துவத்தின் படி மக்களின் வாழ்வியலை அமைக்க சிறந்த ஒரே வழி இஸ்லாம் தான் என்றும் அது முதல் வெள்ளையர்களுக்கு எதிரான கட்டுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திய மால்கம் எக்ஸ் ... அமெரிக்காவில் இனவெறியும் நிறவெறியும் நீங்க ஒரே தீர்வு இஸ்லாம் தான் என்று பிரகடனப்படுத்திய முதல் கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.. 


ஆறு பக்கங்களை கொண்ட இந்த கடிதத்தில் இஸ்லாத்தை பற்றிய , ஹஜ்ஜில் தான் பார்த்த சகோதரத்துவத்தை பற்றி முழுமையாக மால்கம் எக்ஸ் விவரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

நன்றி: Nsa khadir.


காயிதே மில்லத் ஒரு மதவெறியர்..! எச்.ராஜாவின் உளறலும் கிருஷ்ணமூர்த்தி அய்யரின் வாக்குமூலமும்..



காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜாவின் உளறலும் கிருஷ்ணமூர்த்தி அய்யரின் காயிதே மில்லத் பற்றிய வாக்குமூலமும் .. 


காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.


அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. 

பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர். 

காயிதே மில்லத் வாழ்ந்த குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு எதிரில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

காயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என்கிறார். அறிந்த கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்ன சொல்கிறார்?

''எங்களுக்குள் அந்த இந்து-முஸ்லிம்கிற ஃபீலிங்சே கிடையாது. 

நான் பிராமினா இருந்தா கூட Im very much attached with Qaide Millath. அந்த மாதிரியே பழகிட்டேன் அவர்கிட்ட. அதனால அவர் வீட்டில எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் இருந்தது. So, He was very helpful எனக்கு. 

காயிதே மில்லத் எனக்கு உதவி செய்தது போல் வேறு யாரும் இங்கு இருக்கிறவர்கள் எனக்கு உதவி செய்யல. அதனால அவரை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவர் இறந்தபோது அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

ஒரு அன்கான்சியஸ் ஸ்டேஜுக்கே வந்துவிட்டேன்.''

கிருஷ்ணமூர்த்தி அய்யரின் இந்த வாக்குமூலம் ஒன்று போதும்; காயிதே மில்லத் யார் என்பதை உலகம் உணர்வதற்கு!

----ஆளூர் ஷாநவாஸ்

பார்ப்பனீய வியாதிகளுக்கு மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்வது ஒருகாலமும் பிடிக்கப்போவதில்லை .. காரணம் கேடுகெட்ட அரசியல்..


நன்றி: Nsa Khadir. 



Sunday 25 October 2015

ஆர்.எஸ்.எஸ்-இன் தேசபக்தி இலட்சணம்..!!!


தேசபக்திக்கு உதாரணமாக தங்களை கட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் தேசபக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நடக்கும் காலகட்டத்தில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டி, ஆங்கிலேயர்களின் காலை நக்கிப் பிழைத ஆர்.எஸ்.எஸ் கும்பல், தங்களது பழைய வரலாறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து, தங்களது இந்திய துரோகத்தை,மோசடிகளை மறைத்து  இந்தியாவின் தேசபக்தர்களாக வேஷம் கட்டி வருகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்தபோது, இந்து இளைஞர்களை ஆங்கிலேய இராணுவத்தில் சேர்த்த பாவிகள், இவர்கள்.! ஆர்.எஸ்.எஸ். காவிக்  கும்பலின் ராணுவ வீரர்களைக் கொண்டே ஆங்கிலேயர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி  வந்தார்கள்.

அதுமட்டுமில்லை, ஆங்கிலேயர்களை வெளியேற்ற 1942-யில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை காங்கிரஸ் ஆரம்பித்து, கம்யுனிஸ்டுகள்முஸ்லிம்லீக் போன்ற அமைப்புகள் ஆதரித்து, போராடிய போதுஇந்த காவி துரோகிகள் சுதந்தியதுக்காக  போராட வில்லை அந்நியர்களை எதிர்க்கவில்லை! மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வாக்கர்  இந்து இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்தினார். எங்கே தங்கள் பிள்ளைகள் காங்கிரசில் சேர்ந்துஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்திசிறைக்கு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் பார்ப்பனர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்.(பார்ப்பனர்களுக்கு  என்னே.. தேசபக்தி !)

எப்போதும் தங்களது நலனை மட்டுமே பெரிதாக நினைக்கும் பார்ப்பன கும்பல் இன்று தேசபக்திக்கு சொந்தகாரர்கள் போல போடும் வேடமும் அடிக்கும் கூத்தும், ஆர்ப்பட்டமும், நடிப்பும் சொல்ல தரமற்றது. வேட்கக்கேடானது.

இந்தியாவில் எல்லோரும் சுதந்திரத்திற்காக போராடிய போது,சிறை பட்டபோதுசெக்கிழுத்து,கல்லுடைத்து கஷ்டப்பட்டபோது ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது வாழ்வை, வசதியை இழந்தபோது, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஆங்கிலேயரை   பயன்படுத்தி  தங்கள் சொந்த நலனை, வியாபரத்தை நடத்தினார்கள்.

'டிரெவர் டிரைபர்க்' என்ற பத்திரிக்கையாளர் அதனை  எழுதியுள்ளார்.

"அதே நேரத்தில் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டீஷ்  ராணுவத்துக்கு வேண்டிய  ராணுவ எந்திரங்களை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் டுகளை எடுத்தனர்.1943-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோதுஇருந்த உணவுப் பொருள்களை எல்லாம்  இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாரிக் கொண்டு போய், பிரிட்டீஷ் ராணுவத்தினருக்கு கொடுத்தனர். பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் கொடுமைக்கு உள்ளாயினர். இந்த காண்ட்ராக்டு காரர்களிடம் பணம் ஏராளமாக வர ஆரம்பித்தது பிரிட்டீஷ் ராணுவ நிதிக்கு பணத்தை அள்ளி வீசினர்.( அப்போதுதானே காண்ட்ராக்டு கிடைக்கும் } ஆர்.எஸ்.எஸ்செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அரசாங்கம்  பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்துக் காட்டுகிறது..!" என்று டிரெவர் டிரைபர்க் அவரது  FOUR FACES OF SUBVERSION என்ற நூலில்( பக்கம்-27) எழுதி  உள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் விசுவாசம் காட்டி  இந்திய சுதந்திரத்துக்கு இடையுறாக ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் சேர்த்தும்,காண்ட்ராக்டு எடுத்தும், கூட்டிகொடுத்தும்காட்டிகொடுத்தும்  துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்  இன்று தேச பக்தர்களாக,சுதந்திர போராட்ட வீரர்களாக, தேச தலைவர்களாகதங்களை கூசாமல் சொல்லி கொள்ளுகிறார்கள்!   ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் ஆங்கிலபக்தியை  இன்று, இந்திய தேசபக்தியாக  சொல்லி  ஏமாற்றுவதை என்னவென்று சொல்வது

SOURCE: