Translate

Sunday 14 February 2016

திருக்குர்ஆனில் வன்முறை தூண்டப்படுவது உண்மை





திருக்குர்ஆனில் வன்முறை தூண்டப்படுவது உண்மை.. 


அந்த வன்முறை.. தர்மத்தை நிலைநாட்டவே தூண்டப் படுகிறது. வரம்புகளை மீறுகிறவர் மீதே பயன்படுத்தப் படுகிறது. 

என்னை ஒருவன் தாக்கி எனது பொருளை கொள்ளையடிக்கவோ, எனது சகோதிரியை கற்பழிக்கவோ முயல்கிறான்.. அவனை வீரனாக எதிர்கொண்டு தாக்குவது வன்முறையல்ல.. என் மீது அத்துமீறியவனே வன்முறையை கையாண்டவன். 

சட்டத்தை நிலை நாட்ட.. நாட்டை பாதுகாக்க காவல்துறையும், ராணுவமும் இருக்கின்றன. அவர்கள் கைகளில் பூங்கொத்தல்ல.. அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.. ஏன்.? ஆபத்துக் காலங்களில் பயன்படுத்தத் தான்..! வன்முறைக்கு வன்முறையால் பதிலடி கொடுக்கத் தான். இதனை தவறென்று சொல்ல முடியுமா.? 

அநியாயங்களை அழிக்க, அக்கிரமங்களை தடுக்க கண்டிப்பாக எந்தவொருவரும் வன்முறையை பயன்படுத்தத் தான் வேண்டியது வரும்.

அந்த அளவில் தான் திருக்குரானும், அதர்மங்களைக் கண்டு ‘கோழையாக இராதே. வீரனாக எழுந்து நின்று தர்மத்தை நிலைநாட்டு’ என்று தூண்டுகிறது.

No comments:

Post a Comment