Translate

Friday 18 December 2015

அமெரிக்கர்களின் முட்டாள்தனமான "War on Terror" ஏற்படுத்திய விளைவுகள் என்ன.?



அமெரிக்கர்களின் முட்டாள்தனமான "War on Terror" ஏற்படுத்திய 


விளைவுகள் என்ன.?

குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டெட் க்ரூஸின் 

பேட்டியிலிருந்து...


2002 லிருந்து 2014 வரை மத்தியக் கிழக்கு நாடுகளில், தீவிரவாதத்தால் 

ஏற்பட்ட இறப்புகள் 4500 சதவீதம் அதிகரிப்பு.!


ஈராக்:

அமெரிக்கா, இராக்கை ஆக்ரமிப்பதற்கு (2003 க்கு) முன் : 

-தற்கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை: 0

-1.5 மில்லியன் கிறித்துவர்கள் நல்ல முறையில் வாழ்ந்தனர்.


இராக் ஆக்ரமிக்கப் பட்டதற்குப் பின்:

-தற்கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை: 1892

-கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை: பல லட்சம்

-1 மில்லியன் கிருத்துவர்கள், வெளியேறி விட்டனர்.!


பாகிஸ்தான்:

9/11 க்கு முன்:

-தற்கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை: 1

9/11 க்குப் பின்:

-தற்கொலைத் தாக்குதல்களின் எண்ணிக்கை: 486


மேலும் ஆப்கானிஸ்தான், சோமாலியா, சிரியா போன்ற பல நாடுகளில் 

பல மடங்கு அதிகரித்துள்ளது.


இதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்புகள்:

-பொருளாதார இழப்பு 6 ட்ரில்லியன் டாலர்.

-7000 க்கும் அதிகமான இராணுவ வீர்கள் சாவு.

-இந்த போரில் ஈடுபட்ட, முன்னால் ராணுவ வீரர்கள் ஒரு நாளைக்கு 22 

பேர் வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

லிபியாவைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. நிலைமை படு மோசமாக உள்ளது.

அமெரிக்காவின், "War on Terror" சாதித்தது என்ன.? பொய்யை மூலதனமாக கொண்டு ஆரம்பித்த இந்த 

செயலால், பல லட்சக்கணக்கான மக்களின் உயிரழப்பு, பொருளாதார சேதம் இன்னும் எத்தனையோ 

இழப்புகள். ஜனநாயக அரசியலை உண்டாக்குவோம் என்ற போலித்தனமான செயல்களால், தீவிராவதம் 

என்ற அடக்க முடியாத பூதம் தான் வெளியில் வந்ததே தவிர, ஜனநாயகம் இல்லை. இதனால் உலகம் அனுபவிப்பது, அதிகமான போர், தீவிரவாதம் மட்டுமே.

Ref Source: Truth Media & Reality Check



No comments:

Post a Comment