Translate

Friday 18 December 2015

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் (1)-ஏ.கே.அப்துர் ரஹ்மான்



அத்தியாயம் 1

பேரண்டப் படைப்பின் சுருக்கமான வரலாறு

கல் தோன்றி மண் தோன்றி பற்பல பாலூட்டிகளும் தோன்றிய பின் மானிடனும் தோன்றி விண்ணை நோக்கி வியக்கத் துவங்கினான். அப்போது அவனுக்கு விண்ணகம் என்பது ஒரு சூரியனும், ஒரு சந்திரனும், துளித்துளியாய் ஒளிரும் ஏராளமான விண்மீன்களுமேயாகும். எல்லையற்ற பேருருவாய் விரிந்திருக்கும் பேரண்டம் பற்றி வேறொன்றும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் மனிதர்களில் பலர் விண்ணகப் பொருட்களைத் தெய்வங்களாகக் கருதி அவைகளுக்கு ஆலயங்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

பேரண்டம் வடிவமைத்த வல்லோன் வையகத்தை வழிநடத்த அவ்வப்போது அனுப்பி வைத்த வழிகாட்டிகளாம் தூதர்கள் அவ்விண்ணகப் பொருட்கள் தெய்வங்களன்று; அவையனைத்தும் மனிதர்களின் பயன்பாட்டிற்காக இறைவனால் படைக்கப்பட்ட படைப்பினங்கள்; ஆகவே ஏகனாகிய அவர்களின் இறைவனை மட்டுமே அவர்கள் வழிபட வேண்டும் எனப் போதித்து வந்தனர்.

அதே நேரத்தில் மக்களில் மற்றொரு சாரார் விண்ணில் காணப்படுபவையெல்லாம் விண்ணில் எவ்வாறு நிலைநிற்க முடிகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கினர். வெறும் கண்களால் பார்த்து அவர்களின் அறிவிற்கேற்றவாறு அவர்கள் விளங்கிக் கொண்டதை தலைமுறை தலைமுறையாக கைமாற்றி வந்தனர். இதன் விளைவாக படிப்படியாய் விண்ணில் மேலும் சில கோள்களும் துணைக்கோள்களும் இருப்பதை அவர்கள் விளங்கினர். இதைத் தெரிந்து கொண்ட போது இவை யாவும் விண்ணில் எவ்வாறு தோன்றின என்று அறிய ஆசை பிறந்தது. ஆயினும் அப்போது விண்ணகத்தைப் பற்றிய மிகக் குறைந்த தகவல்களே அவர்களிடம் இருந்ததால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தக் காரணத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாறா நிலைப் பேரண்டம்?

பேரண்டத்தைப் பற்றி மிகக் குறைந்த தகவல்களே அவர்களிடம் இருந்ததாலும் அவைகளிலும் பல தவறான அனுமானங்களாக இருந்ததாலும் பேரண்டம் என்றும் நிலையானது; மாற்றமில்லாதது; ஆதியோ அந்தமோ இல்லாதது; அது என்றென்றும் நிலைத்திருப்பது என்ற கருத்துக்கு வந்தனர். இக்கருத்தின் அடிப்படையில் பேரண்டம் என்பது தாமாக இருந்து கொண்டிருப்பது, மேலும் அதற்கு ஒரு படைப்பாளன் தேவை இல்லை என்ற முடிவை அவர்களில் சிலர் ஏற்றுக் கொண்டனர். இது ஏறத்தாழ 1948 இல் உருவாக்கப்பட்ட 'மாறா நிலைக் கோட்பாட்டை' கிட்டத்தட்ட ஒத்திருக்கும் ஒரு கோட்பாடாகும்.

பற்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பண்டைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியும் தத்துவ மேதையுமான அரிஸ்டாட்டில் (384–322) இக்கருத்தை ஏற்றுக் கொண்டவராவார். “பேரண்டம் ஆரம்பம் எதுவுமின்றி கடந்த காலத்திலும் இருந்துள்ளது. இனி எப்போதும் அது எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் என அரிஸ்டாட்டில் போதனை செய்து வந்தார். இது இறைத் தூதர்களால் போதிக்கப்பட்டு வந்த இறைவனின் வேத நூல்களுக்கு மாற்றமான கருத்தாகும். எனவே தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அரிஸ்டாட்டிலின் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பேரண்டம் இறைவனால் படைக்கப்பட்டது. ஆகவே அதற்கோர் ஆரம்பம் இருக்க வேண்டும் என நம்பினர்.

அறிவியல் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானியாகப் போற்றப்படும் ஐசக் நியூட்டன் (1672 – 1727) பேரண்டத்தைப் புரிந்து கொள்வதற்குரிய மிகவும் பயனுள்ள பற்பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ஆனால் அவரால் பேரண்டம் தாமாகத் தோன்றியது என்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அவர் தமது புகழ் வாய்ந்த “பிரின்ஸிப்பியா'' எனும் நூலில் பேரண்டத்தை உருவாக்கிய பெருமையை கடவுளுக்கு வழங்கினார்.

பொதுவாக விண்ணகப் பொருட்களின் இயக்கம் குறித்து பற்பல விதிகளை அவரால் கண்டுபிடிக்க இயன்ற போதிலும் அது எப்போது எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி எதுவும் அவரால் கூற இயலவில்லை. இருப்பினும் இது குறித்து சரியான கருத்தொன்று ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியலாளர்களால் உருவாக்க முடிந்தது.

பெரு வெடிப்புக் கோட்பாடு

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கானன் லிமாயிட்டர் எனும் அறிவியலாளர் பேரண்டத்தின் தோற்றம் பற்றி இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் கருத்து ஒன்றை உருவாக்கினார். பேரண்டத்தைப் பற்றி அதுவரை அவருக்குக் கிடைத்த எல்லாத் தகவல்களையும் ஒன்றிணைத்து விரிவாகவும், ஆழமாகவும் பரிசீலனை செய்து இறுதியாக ஒரு கருத்துக்கு வந்தார். லிமாயிட்டர் இந்தக் கருத்தைக் கூறும் போது ஓர் அதிரடி வேட்டு நடந்த இடத்திற்கு ஒருவர் சென்றால் எப்படிப்பட்ட சுற்றுச் சூழலை அவரால் அங்கு உணர முடியுமோ அப்படிப்பட்ட ஓர் உணர்வை உணர முடிவதாக சில அறிவியல் எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வேட்டு வெடித்ததிலிருந்து தோன்றி கலைந்து கொண்டிருக்கும் புகை மூட்டமும் சற்று மிகுதியான வெப்பமும் உணர முடிவதைப் போன்று இப்போதும் பேரண்டம் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு காலகட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு “ஒரு முழு முதல் அணு இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில்  அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின் போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரமாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.

அந்த அணு எப்படித் தோன்றியது? அது ஏன் வெடித்தது? போன்ற கேள்விகளுக்கு இது வரை அறிவியலாளர்களால் விடை கூற இயலவில்லை. தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பெரு வெடிப்புக்குப் பிறகு பொருட்கள் தோன்றிய விதத்தை விபரமாகக் கூறுகின்றன. அந்த விபரங்கள் வருமாறு :

விண்ணகப் பொருட்களின் தோற்றம்

பெரு வெடிப்பு நிகழ்ந்த வினாடியின் பல்லாயிரத்தில் ஒரு கண நேரத்தில் வெளியிடப்பட்ட வெப்பத்தின் அளவு எல்லையற்றது என்கிறார் தற்கால விஞ்ஞானிகளில் தலைசிறந்தவரான டீஃபன் று. ஹாக்கிங் அவர்கள். ஒரு வினாடிக்குப் பிறகு இந்த வெப்பம் ஆயிரம் கோடி டிகிரியாகக் குறைந்திருக்கும் என்கிறார் அவர். அந்த நேரத்தில் பேரண்டத்தில் பெரும்பாலும் ஒளித் துகள்களும் மின் அணுக்களும் நியூட்ரினோக்களும் அவைகளின் எதிர் துகள்களும்  மட்டுமே இருந்திருக்கக் கூடும் என்கிறார் ஹாக்கிங்.

பெருவெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும் கன ஹைட்ரஜன் வாயுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் எனவும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவைகளிலிருந்து “லிதியம் மற்றும் “பெரில்லியம் போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும் எனவும் ஹாக்கிங் கூறுகிறார். *

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்தப் பொருட்களுமே இல்லாத ஆனால் பேரண்டம் மொத்தமும் பற்பல தனிமங்களின் மையக் கருக்களும் அடிப்படைத் துகள்களாலும் உருவாக்கப்பட்ட புகைமூட்டம் போன்று காணப்பட்டதாகத் தெரிகிறது. மணல் துளிகள் கூட இல்லாத இந்த வெறும் புகை மூட்டத்திலிருந்து மாபெரும் காலக்சிகளும், நட்சத்திரங்களும், ஏனைய விண்ணகப் பொருட்களும் எவ்வாறு உருவாயின என்பதைப் பற்றி கீழ்க்காணும் விபரங்களைத் தெரிவிக்கிறார் ஹாக்கிங்.

* (பார்க்க : பக்கம் 124 / எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம். இதற்கு மேல் ஹாக்கிங் அவர்களின் மேற்கோள்கள் அனைத்தும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இப்புத்தகத்தில் நாம் விவாதிக்கும் அறிவியல் தொடர்பான தகவல்கள் பெரும்பாலானவைகளுக்கு ஹாக்கிங் அவர்களையே மேற்கோள் காட்டியுள்ளோம். ஏனெனில் இப்புத்தகத்தில் நாம் விவாதிக்கும் அறிவியல் விஷயங்களில் இன்றைய உலகின் தலைசிறந்த அறிவியலாளராகவும் ஏனைய விஞ்ஞானிகள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவராகவும் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று அறிவியல் மேதை நியூட்டன் அலங்கரித்த கேம்பிரிட்ஜின் லுக்கேஷியன் பேராசிரியராக தற்போது பதவியில் அமர்ந்திருப்பவர் ஹாக்கிங் அவர்கள் என்பதே காரணமாகும்.)

காலக்சிகளின் தோற்றம்

சிலமணி நேரத்திற்குள் ஹீலியம் மற்றும் இதர தனிமங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும். அதன் பிறகு 10 லட்சக்கணக்கான வருடங்கள் குறிப்பிடும்படியான வேறு நிகழ்ச்சிகள் எதுவுமின்றி பேரண்டம் விரிவடைந்து கொண்டிருக்கும். படிப்படியாக வெப்பம் தணிந்து சில ஆயிரம் டிகிரிக்கும் குறைந்த போது அவைகளால் மின்காந்தக் கவர்ச்சியை வெல்ல முடியாமல் போகவே அவை அணுக்களாக இணையத் துவங்கின. பேரண்டம் மொத்தமும் விரிந்து குளிரவே அடர்த்தி மிகுதியாக இருந்த சில பகுதிகளில் ஈர்ப்பு விசையின் காரணமாக பேரண்டத்தின் விரிவாக்கத்தில் வேகக் குறைவு ஏற்பட்டிருக்கும். (பார்க்க : பக்கம் 125)

மேற்கண்ட தகவல்களிலிருந்து பல 10 லட்சக்கணக்கான வருடங்கள் பேரண்டத்தில் அணுக்கள் கூட உருவாக முடியாமல் அணுக்களின் மையக் கருக்களும் அடிப்படைத் துகள்களும் (போட்டான்கள், எலக்ட்ரான்கள், நியூரினோக்கள் போன்றவை) நிறைந்த புகைமூட்டம் போன்று காணப்பட்டது எனத் தெரிகிறது. அடிப்படைத் துகள்கள் அணுக்களாய் இணைய வேண்டுமாயின் அவைகளுக்கிடையே மின்காந்த விசை செயல்பட வேண்டும். (இது குறித்து இப்புத்தகத்தில் வேறு பகுதியில் கூறப்படுகிறது) ஆனால் மின்காந்த விசை அவ்வளவு உயர்ந்த வெப்ப நிலையில் செயல்பட இயலாது. எனவே வெப்பம் குறைவதற்கு 10 லட்சக்கணக்கான வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இந்நிலையில் வாயுக்களின் அடர்த்தி சில இடங்களில் மிகுதியாகக் காணப்படவே அப்பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் அதன் பயனாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இருந்தும் அப்பகுதிகளில் “காலக்சிகள் உருவாயின.

நட்சத்திரங்கள் மற்றும் இதர தனிமங்களின் தோற்றம்

காலப்போக்கில் காலக்சியில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் ஈர்ப்பு விசையால் சுருக்கமடைந்து வேறிட்டன. பிறகு இம்மேகத்திரள்களில் அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று மோதி அணுக்கரு இணைவிற்கு போதுமான வெப்பத்தை உற்பத்தி செய்தன. பிறகு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாக இணைந்து அதனால் உற்பத்தியான மிகுதியான வெப்பம் வெப்ப அழுத்தத்தை அதிகரித்து ஈர்ப்பு விசையை சமன் செய்தது. இதன் விளைவாக அம்மேகத் திரள்கள் மேலும் மேலும் சுருங்கி விடாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு அம்மேகத் திரள்கள் நமது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களாக மாறின.

இவ்வாறு உருவாகும் நட்சத்திரங்கள் அணுக்கரு இணைவின் மூலம் ஹைட்ரஜனை எரித்து ஹீலியமாக மாற்றி அதனால் உற்பத்தியாகும் ஆற்றலை ஒளியாகவும், வெப்பமாகவும் கதிர் வீச்சாகவும் வெளியேற்றுகிறது.

பேரண்டத்தில் நமது சூரியனை விட ஆயிரக்கணக்கான மடங்கு பெரிய நட்சத்திரங்களும் உள்ளன. பொருண்மை மிகுதியாக உள்ள நட்சத்திரங்கள் அவைகளின் மிகுதியான ஈர்ப்பு விசையைச் சமன் செய்வதற்கு மிகுதியான ஹைட்ரஜனை எரித்து வெப்ப அழுத்தத்தை மிகுதியாக்க வேண்டும். எனவே அவைகளில் உள்ள ஹைட்ரஜன் நூறு தச லட்சம் வருடங்களில் தீர்ந்து போகவே ஈர்ப்பு விசை மிகைத்து அவை சுருங்கத் தொடங்கும். இந்த நிலையில் ஹீலியம் வாயு கனமான கார்பன், ஆக்ஸிஜன் போன்ற தனிமங்களாக மாற்றமடைகின்றன.

நியுட்ரான் நட்சத்திரம், கருங்குழி, சூப்பர் நோவாக்கள்

சுருங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பொருண்மை மிகுந்த நட்சத்திர மையத்தில் அடர்த்தி கூடிக் கொண்டே வந்து அவை நியூட்ரான் நட்சத்திரங்களாக மற்றும் கருங்குழிகளாக மாற்றமடைகின்றன. இந்த நட்சத்திரங்களின் வெளிப் பகுதி பிரமாண்டமான ஒளியுடன் வெடித்து சூப்பர் நோவாக்களாக சிதைவடைகின்றன. சிதைவடைவதற்கு சற்று முன் அவற்றுள் மேலும் கனமான தனிமங்கள் தோன்றுகின்றன. இந்த நட்சத்திரங்கள் சிதைவுற்ற பின் (சூப்பர் நோவாவாக ஆனபின்) அவற்றின் சிதைவிலிருந்து உருவாகும் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களில் இந்தக் கனமான தனிமங்கள் நேரடியாகச் சென்று விடுகின்றன. நமது சூரியனில் இப்படிப்பட்ட தனிமங்கள் இரண்டு சதவீதம் இருக்கின்றன. ஏனெனில் நமது சூரியன் இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறை நட்சத்திரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நமது சூரியன் 500 கோடி வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சூப்பர் நோவாவிலிருந்து உருவான நட்சத்திரமாகும்.

(மேற்கண்ட தகவல்கள் யாவும் ஹாக்கிங் எழுதியவையாகும். பார்க்க : பக்கம் – 125, 126)

சென்ற நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஹார்லோ ஷேப்லி கடந்த காலத்தில் 500 லிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் தெளிவாகக் குறிப்பிடக்கூடிய ஒரு “படைப்புக் கணம் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். [1958.] இதற்கு மேல் ஷேப்லியை மேற்கோள் காட்டும் அனைத்து குறிப்புகளும் இப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.)

பேரண்டம் நிரந்தரமானது. அதற்கு ஆரம்பமோ, முடிவோ இல்லை என நம்பி வந்த அறிவியல் உலகிற்கு பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது எனும் அறிவியல் கண்டு பிடிப்பு பெரும் வியப்பிற்குரியதாகும். ஹாக்கிங் அவர்களைப் பொருத்த வரை இந்த துவக்கம் 1000 – 2000 கோடி வருடங்களுக்கு இடைப்பட்டதாகும். (பார்க்க : பக்கம் – 9)

பெரு வெடிப்பின் வினோதப் போக்கு

ஷேப்லியின் கூற்றுப்படிப் பார்த்தால் பேரண்டப் படைப்பின் போது மிகவும் குழப்பமான கட்டங்கள் உருவாகி இருந்ததாகவும் அப்போது சிக்கலான விண்ணகப் பொருட்களாம் நெபுலாக்கள் (நட்சத்திரங்கள் தோன்றும் புகைமூட்டம் போன்ற மேகக் கூட்டங்கள்) நட்சத்திரக் கூட்டங்கள் காலக்சிகள் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டன எனவும் தெரிய வருகிறது. அதன் பிறகு விண்ணில் நடைபெற்ற விண்ணகப் பொருட்களின் தொடர்ச்சியான மோதல்களும், வெடிப்பு நிகழ்ச்சிகளும் குழப்பமான நிலையை நீடிக்கச் செய்தது. வெடித்துச் சிதறிய நட்சத்திரங்கள் மற்றும் இதர விண்ணகப் பொருட்கள் தூசுப்படலங்களாகவும், வாயுப்பொருட்களாகவும் மாறி அடுத்த தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்கின எனவும் தெரிய வருகிறது.

லிமாயிட்டரின் இப்பெருவெடிப்புக் கோட்பாடு பற்பல அறிவியல் தரிசனங்களுக்கு மிக உறுதியாக ஒத்து அமைந்த-முரண்பாடற்ற-அறிவியல் கருத்தாகும் எனக் கூறுகிறார் அறிவியலாளர் ஷேப்லி (பார்க்க : பக்கம் – 143) இது மட்டுமன்றி ஐன்டீனுடைய சார்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹாக்கிங் மற்றும் அவரது கூட்டாளி அறிவியலாளர் “பென்ரோ அவர்களாலும் “பெரு வெடிப்புக் கோட்பாடு மெய்யான அறிவியல் கோட்பாடு என 1970ல் நிரூபிக்க முடிந்தது. அதே நேரத்தில் மார்க்ஸினுடைய சித்தாந்தத்தின் நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் பணிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அத்துடன் பெருவெடிப்புக் கோட்பாடின் “வினோதத் தன்மை* ஐன்ஸ்டீனுடைய கோட்பாட்டின் அழகை அழிப்பதாக எண்ணம் கொண்டவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. (பார்க்க : பக்கம் – 54)

மாறாநிலைக் கோட்பாட்டின் தோற்றம்

பெருவெடிப்புக் கோட்பாடு என்பதே ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்பதை நாம் அறிவோம். அக்கோட்பாடு, `காலத்திற்கு ஒரு தொடக்கம் எனக் குறிப்பிட்டது பலரையும் தொல்லைக்கு உள்ளாக்கியது. காலத்திற்கு ஒரு தொடக்கம் எனும் கருத்தும் கூட கடவுளின் அபாரமான படைப்பாற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதை உணர்ந்து கொள்ளாமல் அக்கருத்து படைப்புப் பணியில் இறைவனின் தலையீட்டை மறுக்கக் கூடுமோ என பலரையும் ஐயம் கொள்ள வைத்ததே அவர்களைத் தொல்லைப்படுத்தியதற்குக் காரணமாகும்.

**“வினோதத் தன்மை என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப்படும் அல்லது பயன்படாத நிலையே “சிங்குலாரிட்டி (வினோதத்தன்மை) ஆகும். பெருவெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்தக் கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெருவெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெருவெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே பெருவெடிப்பு வினோதம் ஆகும். (பார்க்க : பக்கம் – 9)

காலத்தின் தொடக்கம் என்பது பெருவெடிப்பாகும். வேறு வார்த்தையில் கூறினால் பெருவெடிப்பு நிகழ்ந்த மைக்ரோ கணத்தில் தாம் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெருவெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பதாகும். காலம் இல்லையேல் நிகழ்ச்சிகளும் இல்லை. எனவே பேரண்டத்தைப் படைத்தது இறைவனாக இருந்திருந்தால் படைப்புப் பணிகள் யாவும் பெருவெடிப்புக்குப் பிறகே இறைவன் நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் பெரு வெடிப்புக்குப் பிறகு நடைபெற்ற யாவும் கடவுளின் தலையீடு இன்றி விதிகளின்படி செயல்பட்டதாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இதுவே காலத்திற்கு ஒரு தொடக்கம் உண்டு எனும் கருத்து படைப்புப் பணியில் கடவுளின் தலையீட்டைத் தவிர்த்து விடுமோ என்று சிலர் ஐயப்படுவதற்குரிய காரணமாகும். ஆனால் பெருவெடிப்புக்குப் பிறகு இறைவனின் தலையீடு படைப்புப் பணியில் இருக்கவில்லை என்பதும் பெருவெடிப்புக்குப் முன்பு நிகழ்ச்சிகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதும் திருக்குர்ஆன் கூறும் இறைமைக் கோட்பாட்டையும் அந்த இறைவனின் படைப்புத் திறனையும் மிகமிக வலுவாக நிரூபித்துக் கொண்டிருக்கும் மாபெரும் அறிவியல் ஆதாரமாகும் என்பதை நாம் இந்நூலில் மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கியுள்ளோம்.

பெருவெடிப்புக் கோட்பாடு நிரூபிக்கப்பட்ட அறிவியலைப் போன்று பரவலாக அனைத்து அறிவியலாளர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருவதைக் கண்ட கத்தோலிக்க சபையினர் இம்முறை சுதாரித்துக் கொண்டனர். கோபர் நிக்கஸின் பிரச்சனையில் நடைபெற்றதைப் போல இந்த முறையும் நடைபெறாதவாறு பார்த்துக் கொண்டனர். எனவே பெருவெடிப்புக் கோட்பாடு பைபிளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளதாக அறிவித்தனர். உடனே நாத்திகச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பெருவெடிப்புக் கோட்பாட்டை மறுப்பதற்கு வகை தேடினர். ஹாக்கிங் கூறுகிறார் :

“மறு பக்கத்தில் கத்தோலிக்கச் சபையினர் 1951ல் பெருவெடிப்பு மாதிரி பைபிளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளதாகக் கூறி அதைப் பற்றிக் கொண்டனர். ஆகவே பெருவெடிப்பு நடைபெற்றது என்ற முடிவைத் தவிர்த்து விடவேண்டும் என்பதற்காகப் பற்பல முயற்சிகள் செய்யப்பட்டன. அவற்றுள் மாறாநிலைக் கோட்பாடு மிகப் பரவலாக ஆதரவு பெற்ற கோட்பாடாக 1948ல் பெருவெடிப்புக் கோட்பாட்டின் எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. ஹெர்மன் போன்டி, தாம கோல்டு, ஃப்ரட் ஹோயல் ஆகிய மூவர் இதை உருவாக்கியவர்கள் ஆவார்கள். (பார்க்க : பக்கம் 50)

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு எவ்வளவு எதிர்ப்புகள் தோன்றிய போதிலும் முடிவில் ஹாக்கிங், மற்றொரு புகழ்பெற்ற அறிவியலாளராம் பென்ரோசுடன் இணைந்து பெருவெடிப்புக் கோட்பாடு உண்மையே என்று நிரூபித்ததோடு பெருவெடிப்பு நடைபெற்றதில் கடவுளின் தேவையையும் சில இடங்களில் வலியுறுத்தியுள்ளார். (இதைப் பற்றிய செய்தியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது) மேலும் பெருவெடிப்புக் கோட்பாட்டை எதிர்ப்பதற்காக முன் வைக்கப்பட்ட மாறாநிலைக் கோட்பாடும் முடிவில் அறிவியல் உலகிலிருந்து துடைத்தெறியப்பட்டது.

மாறாநிலைக் கோட்பாடு குறிப்பிடும்படியான எந்த திருத்தல்களோ, புதுமைகளோ இன்றி பழைய நாத்திகக் கோட்பாடாகிய பேரண்டம் ஆதி அந்தம் இல்லாத நிரந்தரமான அமைப்பு எனும் கொள்கையை தீவிரமாகவும், ஆர்வத்துடனும் திரும்பவும் உயிர்ப்பித்துக் கொண்டதே அன்றி வேறில்லை. கடவுட்கோட்பாட்டை அறிவியல் துணையுடன் எப்படியாவது எதிர்க்க வேண்டும் எனும் முயற்சியே இதுவாகும். ஆயினும் வீரமிக்க, நேர்மையான அறிவியலாளர்கள் பலரும் ஹாக்கிங் அவர்களைப் போன்றே பெருவெடிப்புக் கோட்பாடு கடவுளின் தேவையை ஏற்றுக் கொள்வதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.

அறிவியலாளர் ஷேப்லியைப் போன்றவர்கள் பெரு வெடிப்புக் கருதுகோளில் (ழலயீடிவாநளளை) கடவுள் நம்பிக்கையின் சுவை இருப்பதாகக் கூறுகிறார்கள். (பார்க்க : பக்கம் 43)

மாறா நிலைக் கோட்பாட்டின் வீழ்ச்சி

பேரண்டம் விரிவடைவதால் ஏற்படும் விண்ணகப் பொருட்களுக்கு இடையிலான இடைவெளிகளை புதிய காலக்சிகள் உருவாகி நிரப்பி விடுவதால் பேரண்டம் ஒரே நிலையாக (ளவளவஉ) எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என மாறா நிலைக் கோட்பாடு கூறியது. ஆனால் இக்கோட்பாடு ஐன்டீனின் சார்பியல் தத்துவத்தின்படி நேரடியாக ஏற்றுக் கொள்ள இயலாததால் சார்பியல் கோட்பாட்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியது. மேலும் புதிய காலக்சிகளை உருவாக்குவதற்குத் தேவை யான அளவு புதிய பொருட்கள் விண்ணில் தோன்று கின்றனவா என ஆய்வு செய்து பார்த்த போது புதிய காலக்சி களை உருவாக்குவதற்குத் தேவையான அளவை விட மிகக் குறைந்த அளவு புதிய பொருட்களே (ஒரு கன கிலோ மீட்டருக்கு ஒரே ஒரு அடிப்படைத் துகள் மட்டுமே ஒரு வருடத்தில் உருவாகிறது) உருவாகுவதாகக் கண்டனர்.

இவை அனைத்திற்கும் மேலாக அறிவியலாளர்கள் பென்சியா மற்றும் வில்சன் (ஞநணேயைள யனே றுடைளடி) ஆகியவர்கள் 1965ல் செய்த விண்ணில் பரவியுள்ள நுண் அலை கதிர்வீச்சின் (ஆஉசடிறயஎந சயனயைவடி) கண்டுபிடிப்பு மாறாநிலைக் கோட்பாட்டிற்கு முரண்பட்டதால் இக்கோட் பாடு இறுதியாக அறிவியல் உலகிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. (பார்க்க : பக்கம் 51) அதன் பிறகு 1970ல் தனது கூட்டாளி `பென்ரோ அவர்களுடன் இணைந்து ஹாக்கிங் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் பெருவெடிப்புக் கோட்பாட்டை நிரூபித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை நாம் கண்ட அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகளிலிருந்து பேரண்டத் தோற்றத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும் நம்பகமான செய்திகளால் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் கோட்பாடு பெருவெடிப்புக் கோட்பாடே என்பது தெளிவு. எனவே தூய திருமறைக் குர்ஆன் இது குறித்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். முதலாவதாக பெரு வெடிப்புக்கு முன் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஷேப்லி கூறும் மாபெரும் ஆதி அணுவைப் பற்றிப் பார்ப்போம்.

மாபெரும் ஆதி அணு?

கானன் லிமாயித்தரின் கணிப்புக்கு இசைய அறிவியலாளர் ஹார்லோ ஷேப்லி ஒரு மாபெரும் ஆதி அணுவைப் (ய ஞசஅநஎயட ளரயீநச யவடிஅ) பற்றிக் குறிப்பிட்டதை நாம் முன்னர் கண்டோம். இந்த அணு வெடித்துச் சிதறியதால் உருவான தூசுப் படலத்திலிருந்து நமது பேரண்டம் தோன்றி இருப்பதாக ஷேப்லி குறிப்பிடுகிறார். ஆனால் திருக்குர்ஆனை ஆதி யோடந்தமாய் படித்துப் பார்த்தால் இப்படிப்பட்ட ஓர் அணு பேரண்டம் படைப்பதற்கு முன் இருந்ததாக எங்கும் காண முடியாது. எடுத்த எடுப்பிலேயே ஏன் இப்படி ஒரு சோதனை? மாபெரும் ஆதி அணுவாகக் குறிப்பிடப்படுவது யாது?

இந்த அணு நமது வியாழன் (துரயீவைநச) கோளின் அளவுற்கு இருந்திருக்கக் கூடும் என சில அறிவிலாளர்களால் அனு மானிக்கப்பட்டது. பேரண்டத்தில் இது வரை உள்ளதாக அறியப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களின் அடிப்படைத் துகள்களையும் மிக நெருக்கமாக அழுத்தினால் அப்பொருள் கணக்கிட முடியாத அளவு பளுவுடன் இருப்பினும் அதன் கொள் அளவு வெறும் வியாழன் கோள் அளவிற்குச் சுருங்கி விடும் எனக் கணக்கிடுகின்றனர். பேரண்டத்தில் இது வரை கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களில் உள்ள அடிப்படைத் துகள்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு எனப் பார்த்தால் ஷேப்லி அவர்களின் குறிப்புப்படி 1079 (ஒன்றுக்குப் பின் 79 சைபர்களைக் கொண்ட எண்ணுக்குக் குறையாத தாகும்.(பார்க்க: பக்கம் 72,73) ஹாக்கிங் அவர்களின் கணக்குப்படி 1080 (ஒன்றுக்குப் பின் 80 சைபர்கள்) கொண்ட எண்ணுக்குச் சமமாகும்.

மேற்கூறப்பட்ட அதி பிரம்மாண்டமான அளவு துகள்கள் பேரண்டத்தில் இருப்பின் அவைகள் ஒரு வியாழன் கோள் அளவிற்குச் சுருக்க முடியுமா எனும் ஐயம் எழுவது இயற்கையே. இருப்பினும் விண்ணகப் பொருட்களுக்கு இடையே இருக்கும் காலி இடங்களை மட்டுமின்றி பொருட்களுக்குள் பொதுவாக காணப்படும் காலி இடங் களையும் கணக்கிலெடுத்தால் இந்த ஐயம் அகன்றுவிடும். அத்துடன் இவைகளைப் பற்றிய அறிவு இறைவனின் படைப்பாற்றல் எவ்வளவு மகத்தானது என்பதை சிறிதள வேனும் ஒருவருக்குப் புலப்படுத்தும்.

பொருட்கள் யாவும் மூலக் கூறுகளால் (அடிடநஉரடநள) உருவானவை என்பது நமக்குத் தெரியும். ஆயினும் மூலக் கூறுகளுக்கிடையில் நிறைய காலி இடம் உண்டு. அதைப் போல் மூலக் கூறுகள் அணுக்களால் உருவானவை என்பதும் நமக்குத் தெரியும். ஆயினும் அணுக்களுக்கிடையேயும் காலி இடம் உண்டு. அதைப் போல் அணுக்கள் என்பவை மையக்கரு, எலக்ட்ரான்களால் உருவானவை என்பதும் நமக்குத் தெரியும். இவைகளுக்கிடையேயும் காலி இடம் உண்டு. சான்றாக ஒரு அணுவின் பொருண்மை முற்றிலுமாக அதன் மையக் கருவிலேயே அடங்கியுள்ளது. ஆனால் அதன் மையக்கரு அணுவின் பரிமானத்தில் (ளுணைந) 1012 (ஒன்றுக்குப் பின் 12 சைபர்கள் கொண்ட எண் = ஒரு இலட்சம் கோடி)-ல் ஒரே ஒரு பங்கு மட்டுமேயாகும்! இது அணு என்பதே கிட்டத்தட்ட முற்றாகக் காலியிடம் எனப் பொருள் படுகிறதன்றோ? (இப்போது நாம் செல்களால் உருவாகி யுள்ளோம்; ஆனால் நமது செல்கள் அணுக்களால் உருவாகி யுள்ளன என்பதால் நாம் இப்போதும் கூட கிட்டத்தட்ட ஒன்றுமில்லாத ஒன்றால் ஒருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இது காட்டுகிறதன்றோ! இறைவனின் படைப் பாற்றலை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் உண்டா?) எனவே தாம் இப்பேரண்டத்தை அப்படியே ஓர் அழுத்து அழுத்தி அடிப்படைத் துகள்களுக்கிடையே இடைவெளியே இல்லாமல் சுருக்கினால் இப்பேரண்டம் நமது வியாழன் கோள் அளவிற்கு பரிமாணமுள்ள பொருளாக மாறும் எனக் கணக்கிட்டிருந்தனர் சில அறிவியலாளர்கள். ஆனால் திருமறைக்குர்ஆனில் இப்படிப்பட்ட பேரணுவைப் பற்றிய விபரம் எதுவும் இல்லவே இல்லை.

பேரணுவின் திடீர் மாயம்

இப்போது வியப்பிற்குரிய செய்தி என்னவெனில் பேரண்டம் படைக்கப்படுவதற்காக அதனுடைய அடிப்படைத் துகள்கள் அதற்கு முன்னரே தயாராக இருந்திருக்க வேண்டியதில்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும் ஈடு இணையற்ற அந்த அதிரடி வேட்டு (க்ஷபை யெபே) நடைபெறுவ தற்காகவும் எந்த ஒரு பொருளும் இருந்திருக்க வேண்டிய தில்லை எனவும் அறிவியல் கூறுகிறது.

(இறைவன் உண்டு என்றும் அவன் எல்லாம் வல்லவன் என்றும் நம்புகின்றவர்களுக்கு மேற்கூறப்பட்ட நவீன அறிவியல் கருத்துக்கள் அவர்களது நம்பிக்கையை மேலும் வலுவாக்கும். அதே நேரத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்களால் இவை எப்படி நம்ப முடியும்?)

இப்போது பேரண்டம் உருவாக்கப்படுவதற்குத் தேவை யான அடிப்படைத் துகள்கள் கூட முன்னர் இருக்கவில்லை யெனில் வெறும் `வேட்டில் (நஒயீடடிளடி) இருந்து பொருட்கள் எப்படி உருவாயிற்று எனக் கேட்டால் ஹாக்கிங் பதிலளிக் கிறார். “பதில் என்னவெனில் க்வாண்டம் கோட்பாட்டில் (ளூரயவேரஅ வாநடிசல) துகள்கள் ஆற்றலில் இருந்து துகள்/எதிர்த்துகள் எனும் ஜோடிகளாய் (ஞயசவஉடந / யவேயீயசவஉடந யீயசைள) உருவாக்கப்படும் (பார்க்க : பக்கம் 136) என்பதாகும்.

இப்போது எழும் மற்றொரு வினா என்னவெனில் பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்டவெளியில் ஒன்றுமே இல்லையெனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் “பெருவெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிமாணம் பூஜ்யமாகும்; (ணநசடி ளணைந) அதன் வெப்பம் எல்லை அற்றதுமாகும் (கேவைந) என்கிறார். (பக்கம் 123)

இங்கு பெருவெடிப்புக்கு முன்னால் நமது பேரண்டத் தின் பரிமாணம் எவ்வளவு இருந்தது என்பதைப் பற்றி எதையும் கூறாமல் பெருவெடிப்பு நிகழும் நேரத்தில் அதன் அப்போதைய பரிமாணம் என்ன என்பதைப் பற்றியே ஹாக்கிங் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெரு வெடிப்புக்கு முன்னால் என்ன இருந்தது அல்லது என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் அறிவியல் திறமையை பெருவெடிப்பின் வினோதத் தன்மை – சிங்குலாரிட்டி – நம்மிடமிருந்து பறித்து விட்டது. அத்துடன் பெருவெடிப்புக்கு முன்னால் இருந்திருந்தால் அல்லது நிகழ்ந்திருந்தால் அவைகள் நமது பேரண்டத்தோடு எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும் அறிவியல் விதிகள் கூறுகின்றன. எனவே பெருவெடிப்பு நிகழும் போது பேரண்டம் பூஜ்யமாக இருந்தது என்பதிலிருந்து வெடிப்பு நிகழ்ந்த பொருளின் பரிமாணம் பூஜ்யமாகவே இருந்தது என்பது தெளிவு!

ஆம்! பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை இறைவன் படைத்தான்! உங்கள் இறைவனின் படைப்பாற்றலை என்னவென்று மதிப்பிடுவீர்!

அதே நேரத்தில் அப்போது வெளியிடப்பட்ட ஆற்றலின் அளவு எல்லையற்றது எனக் கூறுகிறது அறிவியல் கண்டு பிடிப்புகள். வெப்பம் என்பது ஆற்றலின் `அருவம் என்பது நமக்குத் தெரியும். அந்த ஆற்றலே முதற்கண் அடிப்படைத் துகள்களாகி அவைகளே பிறகு அணுக் கருக்களாகி, அவைகளே பிறகு அணுக்களாகி, அவைகளே பிறகு மூலக் கூறுகளாகி, அவைகளே மீண்டும் பற்பல பருப் பொருட் களாகி அவைகளிலிருந்தே ஆயிரக்கணக்கான கோடி காலக்சிகளும், கோடானு கோடி ,கோடி நட்சத்திரங்களும், கோடனு கோடானு கோடி, கோடி விண்ணகப் பொருட்களும் உருவாயின என ஐயத்திற்கிடமின்றி அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

சுருங்கக் கூறின் இம்மாபெரும் பேரண்டம் வெறும் ஆற்றலிலிருந்து படைக்கப்பட்டிருப்பதாக அதிநவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவதை நாம் தெளிவாக அறிகிறோம். பேரண்டத்தைப் படைத்த வல்ல இறைவனின் மாட்சிமை மிக்க திருக்குர்ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறான் :

“விண்ணகத்தை நாம் வல்லமை கொண்டு படைத்தோம்…

(51 : 47)

எவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மையை இச்சிறு வாக்கியத்திற்குள் திருமறைக் குர்ஆன் கூறியுள்ளது! அடிப்படைத் துகள்கள் இடைவெளி இன்றித் திணிக்கப்பட்ட ஒரு பேரணுவால் பேரண்டம் படைக்கப்படாமல் வெறும் ஆற்றலைக் கொண்டே பேரண்டம் படைக்கப்பட்டது என ஒருவர் கூற வேண்டுமாயின் எந்த அளவிற்கு அறிவியல் ஞானம் அவருக்கு இருக்க வேண்டும் என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை அல்லவா!

1958ல் கூட சிறந்த அறிவியலாளராம் ஷேப்லி எழுதிய நூலில் (டிக வாந ளவயசள யனே அந) பல முறை இந்த ஆதிப் பேரணு வைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். (ஆயினும் 1970ல் எழுதப்பட்ட ஹாக்கிங் அவர்களின் நூலில் – ஹ செநைக ளைவடிசல டிக வஅந – இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.) ஆனால் ஆற்றலின் வரைவிலக்கணம் கூடத் தெரிந்திராத ஏழாம் நூற்றாண்டில் வந்த திருமறையாம் திருக் குர்ஆனால் இத்தவறான கற்பனைப் பொருளை மிக எளிதாகத் தவிர்க்க முடிந்தது மட்டுமின்றி பேரண்டத்தின் மெய்யான மூலப் பொருள் `ஆற்றலே என்பதையும் கூற முடிந்தது எனில் திருக்குர்ஆன் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை இது மிகத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா! மேலும் திருமறை கூறும் இந்த அறிவியல் ஆதாரம் பெருவெடிப்புக் கொள்கைக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

பேரண்டத்தில் பெருங்குழப்பம்

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கிசையப் பார்க்கும் போது பேரண்டத்தில் இன்று காணப்படும் நட்சத்திரங்கள் யாவும் ஆதியிலேயே தோன்றியவை இல்லையென்றும், ஆதியில் தோன்றிய நட்சத்திரங்களும் இதர விண்ணகப் பொருட் களும் ஒன்றோடொன்று மோதி உடைந்து சிதறியும் இரண்டாம் நிலை வெடிப்பு நிகழ்ச்சிகளால் (ளுநஉடினேயசல நஒயீடடிளடிளே) வெடித்துச் சிதறியும் பேரண்டம் தூசு துகள்களால் புகை மூட்டம் போல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இத்தூசுப் படலங்களிலிருந்து அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் தோன்றியதாகவும் தெரிகிறது.

பெருவெடிப்பு நிகழ்ந்து பேரண்டம் விரிவடையத் துவங்கியதும் அங்கு பெரும் குழப்பமான (உயடிள) நிலை காணப் பட்டதாக அறிவியலாளர் ஷேப்லி கூறுகிறார். ஆரம்பத்தில் சராசரி பொருளடர்த்தி (யஎயசயபந அயவநசயைட னநளேவைல) மிக அதிகமாக இருந்ததாகவும், நட்சத்திரங்கள் ஒன்றோ டொன்று மிக நெருக்கமாக இருந்ததாகவும் பற்பல காலக்சிகள் தனித்தனி தொகுதிகளாகப் பிரிந்து இராமல் ஒன்றுக்குள் ஒன்று திணிக்கப்பட்டும் ஒன்றன் மீது ஒன்றாகக் குவிக்கப்பட்டும் இருந்தமையால் மோதல்களும், இரண்டாம் நிலை வெடித்தல்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார். குளிர்ச்சியான தொலைவுக்கு எறியப்பட்ட பறக்கும் வாயு விரைவிலேயே குளிர்ந்து, உறைந்து கோள்களைப் போன்ற பொருட்களாக பெருமளவிற்கு உருவாகி மீண்டும் மோதி வெடித்து அதனால் உருவாகும் புகை மூட்டம் போன்ற தூசுகளிலிருந்து அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் தோன்றின என அவர் கூறுகிறார்.

(பார்க்க : பக்கம் 53, 54)

சுருங்கக் கூறின் பேரண்டம் ஆரம்பக் கட்டங்களில் இப்போது இருப்பது போன்று ஒழுங்குடன் இல்லாமல் ஒழுங்கற்ற குழப்பமான நிலையிலேயே இருந்ததாகத் தெரிய வருகிறது.

அறிவியலாளர் ஹாக்கிங் இந்த சாத்தியத்தை ஒப்புக் கொள்வதோடு இப்படிப்பட்ட ஒரு குழப்பமான நிலையி லிருந்து இன்று காணப்படும் இவ்வளவு வழவழப்பான (ளுஅடிடிவா) மற்றும் ஒழுங்கான (சநபரடயச) பேரண்டம் எப்படித் தோன்றியது எனக் காண்பது கடினமாகும் எனவும் குறிப்பிடுகிறார். (பார்க்க : பக்கம் 129. 130)

குழப்பம் அகன்றது ஒழுங்கு வந்தது

இன்றைய உலகின் மிகச் சிறந்த அறிவியலாளராக மதிக்கப்படும் ஹாக்கிங் அவர்களை வியப்பிற்குள்ளாக்கிய பேரண்டத்தின் இன்றைய நிலை திருக்குர்ஆனுக்கு வியப் பளிக்கவில்லை. அது கீழ்க்கண்டவாறு அதன் காரணத்தைக் கூறுகிறது :

“பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை (ஒழுங்குபடுத்த) நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (பிறகு) இரண்டு நாட்களில் ஏழு வானங் களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும்அதற்குரிய கட்டளையை அறிவித்தான்…

(41 : 11,12)

இந்த வசனங்களில் அடங்கி இருக்கும் அறிவியல் சிந்திப்பவரை வியக்க வைப்பதாகும்.

முதலாவதாக இந்த வசனங்களில் வானங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் இம்மாபெரும் பேரண்டம் ஏழு வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட ஏழு பெரும் தொகுதிகளாக அமையப் பெற்றுள்ளது என்பதோ இல்லது இப்பேரண்டம் முழுவதும் ஒரே தன்மையினதாக இருப்பின் இப்பேரண்டத்தை தவிர வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட மேலும் ஆறு பேரண்டங்கள் இருக்கின்றன என்பதோ இதன் பொருளாக இருக்கலாம். இவற்றுள் எது உண்மை என்பதைக் கண்டு பிடிக்கும் திறமையை நமது அறிவியல் இன்னும் பெற்று விடவில்லை என்பதால் அறிவியலைக் கொண்டு இந்த விபரத்தை மதிப்பிட இயலாது என்பது தெளிவு.

ஆயினும் வானத்தை வகைப்படுத்தி அமைக்கும் பணி ஒரு கட்டத்தில் நடைபெற்றது என்பது அந்த விபரத்தில் தெளிவாகத் தென்படுகிறது. இதைத் தானே ஷேப்லி, ஹாக்கிங் போன்ற சிறந்த அறிவிளலாளர்களின் கூற்றி லிருந்து முன்பத்திகளில் கண்டோம். இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரிந்தது?

மேலும் பேரண்டப் படைப்பின் ஒரு கட்டத்தில் வானங் கள் வெவ்வேறு தொகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டது என திருமறை கூறியதிலிருந்து அதற்கு முன் ஒழுங்கற்ற ஒரே அமைப்பாக அது இருந்தது என்பது அதன் உட்பொருளாக விளங்குகிறதல்லவா! இந்த நவீன அறிவியல் உண்மை ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரிந்தது?

ஒழுங்குபடுத்துவதற்கு முன் வானங்கள் புகை வடிவாக இருந்ததாக திருமறை மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் இல்லையெனில் அது எப்படித் தெரிந்து கொண்டது?

மேலும் திருமறை வசனங்களில் வானங்கள் ஒழுங்கு படுத்தப்பட்ட காலகட்டம் என்ன என்பதைக் கூட மிகத் தெளிவாகக் கூறுவது நமது கவனத்தை மிகவும் கவர்கிற தல்லவா? வானங்கள் ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்ற போது நாம் வசிக்கும் இந்த பூமி படைக்கப்பட்டிருந்ததாக திருமறை வசனங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன. நமது பூமி படைக்கப்பட்டிருப்பின் நமது சூரியனும் படைக்கப்பட்டுவிட்டது என்பது அதன் பொருள். இதிலிருந்து இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை நட்சத்திரமாகிய சூரியன் படைக்கப்படும் வரை நமது பூமி உட்பட அனைத்து கோள்களும், நட்சத்திரங்களும், இன்ன பிற விண்ணகப் பொருட்களும், காலக்சிகளும் கூட ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து ஒழுங்கற்ற தாறு மாறான ஒரேஒரு குழுவாகக் காணப்பட்டது எனத் தெரிய வருகிறது. இந்த அறிவியலைக் கூட மற்றொரு வசனத்தில் மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது திருக்குர்ஆன். அந்த அற்புதமான இறை வசனம் இதோ :

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதை யும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (இத்திருமறை நமது வார்த்தையல்ல என்று கூறி) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

(21 : 30)

எவ்வளவு அற்புதமாக வானங்களும், பூமியும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாகக் கலந்து ஒரே ஒரு தொகுதியாகக் காணப்பட்ட அறிவியல் உண்மையை திருமறைக் குர்ஆன் இந்த வசனத்தில் வெளிப்படுத்தியுள்ளது!

திருக்குர்ஆனுடைய கூற்றுக்கிசைய பூமி உட்பட அனைத்து விண்ணகப் பொருட்களும் போதுமான இடைவெளியின்றி ஒன்றாகக் கலந்து ஒரே தொகுதியாக இருந்திருப்பின் அந்தக் காலகட்டத்தில் அப்பொருட்களுக் கிடையே இடைவிடாத மோதல்களும் அதன் பயனாக விண்ணகப் பொருட்களின் தொடர்ச்சியான வெடித்துச் சிதறல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று எல்லாமே ஒரு குழப்பமாகவும் (ஊயடிள) மற்றும் விண்ணகப் பொருட்களின் ஒழுங்கற்ற இயக்கங்களாகவும் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் என்பது தெளிவு. திருமறையிலிருந்து விளங்கப் பெறும் இக்கருத்தைத் தான் அறிவிளலாளர்கள் ஷேப்லி மற்றும் ஹாக்கிங் போன்றவர்கள் கூறியதாக முன்பத்திகளில் கண்டோம். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த இந்த அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனுக்கு ஏழாம் நூற்றாண்டில் எப்படித் தெரிந்தது? திருக்குர்ஆன் மனித அறிவால் உருவாக்கப்பட்டதில்லை என்பதை இது நிரூபிக்கிறதன்றோ!

(இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் உயிருள்ள அனைத்து பொருட்களும் தண்ணீரிலிருந்தே படைக்கப் பட்டது என்பதும் இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் அறிவியல் உண்மையாகும். இது உயிரியல் சார்ந்த அறிவியல் என்பதால் இப்பகுதியில் அது ஆய்வு செய்யப்படவில்லை.)

இப்போது முன்னர் கண்ட திருவசனங்களையும் (21 : 29, 41 : 11) இணைத்துப் பார்த்தால் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரும் வானும் வானகப் பொருட்களும் ஒழுங்கற்ற தாறுமாறான நிலையில் இருந்ததாகவும் அவை இறைவன் நாடியவாறு ஒழுங்குற வேண்டும் என்பதற்காக “நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டுப்பட்டு நடப்பீர்களாக எனும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திருமறையின் வேறுபட்ட நடை

இந்த இடத்தில் சிலருக்கு இறைவனுக்கும் அவனது உயிரற்ற படைப்பினங்களுக்கும் (வானமும், பூமியும்) இடையே நடைபெற்ற உரையாடல் சற்று புதிராகத் தோன்றலாம். ஆனால் படைப்பினங்களுடையதைப் போல இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதோ அல்லது அவனது ஆற்றல் எதையெல்லாம் உள்ளடைக்கியுள்ளது என்பதோ நம்மால் ஒருக்காலும் விளங்கிக் கொள்ள இயலாத தாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் (சநடயவஎந ளவயவநள) ஒப்பீடுகளையும் (ஊடிஅயீயசளைடிளே) கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன் (ஹளெடிடரவந). எனவே அவனது அறிவாற்றல் உயிருள்ளவை அல்லது உயிரற்றவை எனும் வேற்றுமை களால் பாதிக்கப்படாமல் உயிருள்ளவைகளைப் போன்றே உயிரற்றவைகளின் சிறப்பியல்புகளையும் உள்ளடக்கியதாகும்.

மற்றொரு விதத்தில் பார்த்தால் மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். சான்றாக நாம் ஒரு விண்வெளிக் கப்பலை (ளுயீயஉந சடிஉமநவ) எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் பறப்பதற்கும் பறத்தலில் செய்யப்பட வேண்டிய பற்பல மாற்றங்களுக்கும் பூமியில் இருந்து கொண்டே நாம் அவைகளுக்கு உத்தரவு இடுகிறோம். அவைகள் நமது உத்தரவுகளை வார்த்தை தவறாமல் நிறைவேற்றுகின்றன. ஒவ்வொரு முறையும் அவை விண்ணிற்கு ஏவப்படும் போது அவை ஏவப்படுவதற்குத் தயாராக உள்ளனவா எனத் தவறாமல் அவைகளை வினவுகிறோம். சில நேரங்களில் அவை தங்களது பரிபூரண சம்தத்தைத் (திருமறையில் “நாங்கள் விரும்பியே கட்டுப்பட்டோம் என விண்ணும், மண்ணும் கூறியதைப் போன்று) தெரிவிக்கின்றன. எனவே அவை உடனே ஏவப்படுகின்றன. சில நேரங்களில் அவை தயக்கம் காட்டுகின்றன. உடனே பொறியாளர்கள் அவை களை ஏவும் முயற்சியை நிறுத்திவிட்டு தயக்கத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து சீர் செய்து அதன் பிறகு அவைகளின் ஒப்புதலைப் பெற்று அவைகளை ஏவுகின்றனர்.

மேற்கூறப்பட்ட விபரங்கள் எதுவும் நமக்குப் புதிராக இருப்பதில்லை. நமக்கும் உயிரற்ற இப்பொருட்களுக்கும் இடையில் நடைபெறும் இக்கருத்துப் பரிமாற்றம் மனித மொழிகளிலன்றி மின் அணு மொழியிலாகும் என்பதும் நாம் தெரிந்திருக்கிறோம். ஆனால் படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய இறைவன் நம்மால் ஒரு போதும் விளங்கிக் கொள்ள இயலாத மேலும் சிறந்த மொழிகளில் தமது உயிரற்ற படைப்பினங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லவன் என்பது மிகவும் ஏற்கத்தக்கதேயாகும்.

ஒழுங்கீனத்திலிருந்து ஒழுங்கிற்கு…

இப்போது இறைவன் விண்ணையும் மண்ணையும் கட்டுப்படும்படி கட்டளையிட அக்கட்டளைக்கு அவை பணிந்த பிறகு என்ன நடந்தது எனப் பார்ப்போம். இந்தக் குழப்பமான நிலையிலிருந்து பேரண்டம் படிப்படியாக இப்போதிருக்கும் ஒழுங்கு நிலைக்கு வந்ததாக ஹாக்கிங் கூறுவதை முன்பத்திகளில் கண்டோம். திருமறைக் குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

(வானங்களும், பூமியும் அவை விரும்பியே கட்டுப்பட்டதாகக் கூறிய போது) இரண்டு நாட்களில் (அவைகளை அவன்) ஏழு வானங்களாக அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான்….

(41 : 12)

வானும், வானகப் பொருட்களும் ஒட்டுமொத்தமாகக் கலந்தும் குவிந்தும் ஒரே ஒழுங்கற்ற குழுவாகக் கிடந்த அமைப்பு, தனித் தனியான ஏழு பேரண்டங்களாகப் பிரிக்கப்பட்டதை இவ்வசனம் தெரிவிக்கிறது. அவற்றுள் ஒவ்வொரு பேரண்டத்திற்கும் அதன் இயக்கம் தொடர்பான கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டது என்பதிலிருந்து அவைகள் ஒவ்வொன்றும் அதன் பிறகு அக்கட்டளை களுக்கு (விதிகளுக்கு) இசையவே இயங்குகின்றன என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிய வருகிறது. இவ்வாறு ஓர் அமைப்பு அதற்குரிய விதிகளுக்கு இசைய இயங்கு வதைத்தாம் நாம் ஒழுங்கான இயக்கம் எனக் கூறுகிறோம்.

பேரண்டத்தின் திடீர் தோற்றம்

இம்மாபெரும் மகா மகா பேரண்டம் தோன்றியதில் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமாகத் திகழ்வது இரண்டு நிகழ்ச்சிகளாகும். அதில் ஒன்று அதி, அதி கம்பீரமான ஒரு பிரமாண்ட வெடிப்பு நிகழ்ச்சி. இரண்டாவதாக இவ்வெடிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு மயிரிழையைப் பல்லாயிரம் பாகங்களாகக் கிழித்தாலும் அதில் ஓர் இழையின் அளவு கூடத் தாமதமின்றி நடைபெற்ற அவ்வெடிப்பாற்றலின் விரிவாக்கம். இவற்றுள் பேரண்டப் படைப்பின் முதல் கால்வைப்பாக இருக்கும் பெருவெடிப்பு என்பது வெறும் ஒரு மைக்ரோ கணத்தை விடக் குறைந்த நேரத்தில் திடீரெனத் தோன்றிய ஓர் அதிர் வேட்டாகும்.

தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே ஓர் ஊசிப் பட்டாசு கூட வெடிக்கும் எனும் போது ஈடு இணையற்ற அம்மாபெரும் அதிர் வேட்டு எப்படி நிகழ்ந்தது? வெடிப் பொருள் எப்படித் தோன்றியது? வெடிப்பதற்கு முன் எவ்விதமான சூழ்நிலை நிலவியது? என்பன போன்ற எந்தக் கேள்விக்கும் விடை கண்டுபிடிக்கும் ஆற்றல் நமது அறிவியலுக்குக் கிடையாது. அந்த அளவிற்கு பெரு வெடிப்பு வினோதம் (க்ஷபை யெபே ளபேரடயசவைல) நமது அறிவியலை முடமாக்கி விட்டது. இன்றைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாம் ஹாக்கிங், அறிவியலாளர் `பென்ரோ உடன் இணைந்து பெரு வெடிப்புக் கேட்பாட்டை நிரூபித்துள்ளதாக நாம் முன்னர் கண்டோம். அதைக் குறித்து அவர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

“பேரண்டம் எவ்வாறு தோற்றமெடுத்தது என்று ஒருவர் கூற வேண்டுமாயின் காலத்தின் துவக்கத்திலேயே நடை முறையில் இருந்த விதிகள் பற்றிய அறிவு அவருக்கு இருக்க வேண்டும். பொது சார்பியல் தத்துவத்தின் நூலியல் கோட்பாடு (ஊடயளளஉயட வாநடிசல) சரியாக இருந்தால் நானும், ரோஜர் பென்ரோசும் நிரூபித்த வினோத சூத்திரங்கள் (ளுபேரடயசவைல வாநடிசநஅள) காலத்தின் துவக்கம் எல்லையற்ற அடர்த்தியும் (கேகேவந னநளேவைல) கால-இடத்தின் (ளுயீயஉந – வஅந) எல்லையற்ற வளைவாகவும் (கேவைந உரசஎயவரசந டிக ளயீயஉந – வஅந) உள்ள ஒரு புள்ளியாய் இருந்திருக்கும். அப்படிப்பட்ட புள்ளியில் அறியப்பட்ட எல்லா அறிவியல் விதிகளும் பழுதாகி (செநயம னடிற) விடும் (பார்க்க : பக்கம் 140)

உண்மையிலேயே பெரும் கண்டுபிடிப்பைத் தாம் இம்மாபெரும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட கூற்றிலிருந்து விளங்குகிறது. ஒரு பொருள் எல்லையற்ற அடர்த்தியைக் கொண்டிருந்தால் அதற்குள் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகள் நமக்கு வழங்கவில்லை. ஆயினும் எல்லையற்ற எதையும் கட்டுப்பட வைக்கும் விதிகளைக் கூட உருவாக்கி இப்பேரண்டத்தைத் தோற்றுவித்த இறைவனுக்கு கால அடர்த்தியின் எல்லையின்மையோ, அல்லது கால – இடத்தின் வளைவின்* எல்லையின்மையோ ஒரு பொருட்டல்ல. ஆகவே பேரண்டம் எப்படித் தோன்றியது என்பதை வினோத சூத்திரங்களால் அறிவு முடமாகிப் போன மானிடர்களுக்காக பேரண்டத்தை எப்படி அவன் தோற்றுவித்தான் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறான் :

“அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து “ஆகு என்று கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

திருக்குர்ஆன் 2 : 117

* கால – இடத்தின் வளைவு : இது அறிவியல் மேதை ஐன்டீன் கண்டுபிடித்த அறிவியலாகும். இதில் இரண்டு அறிவியல் சித்தாந்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக பேரண்டத்திலுள்ள அனைத்தும் சார்பியல் நிலைக்கு உட்பட்டது. ஆனால் `காலம் மற்றும் `இடம் ஆகியவை தவிர. இவை சார்பியலுக்கு உட்படாத சுயேட்சையாகவே (யளெடிடரவந) எப்போதும் நிலை கொண்டிருக்கும் என ஐன்டீனுக்கு முன்புள்ள அனைத்து அறிவியலாளர்களும் நம்பி வந்தனர். ஆனால் ஐன்டீன் தன்னுடைய புகழ் வாய்ந்த சார்பியல் தத்துவத்தின் (வாநடிசல டிக சநடயவஎவைல) வாயிலாக காலம் மற்றும் இடம் ஆகியவைகளும் சார்பியலானவை எனக் கருதி சமன்பாடுகளால் நிறுவினார். இத்தத்துவத்தை பிரதிபலிப்பதற்காகவே `காலம் மற்றும் `இடம் எனும் வார்த்தைப் பிரயோகத்தையே மாற்றி `கால – இடம் (ளயீயஉந – வஅந) எனத் திருத்தி அமைக்கப்பட்டது.

இரண்டாவதாக ஆகாயம் வளைந்திருக்கிறது எனும் புரட்சிகரமான மற்றொரு சித்தாந்தத்தையும் தமது பொது சார்பியல் தத்துவத்தின் வாயிலாக நிறுவினார். அறிவியல் ஆய்வுகளால் இச்சித்தாந்தம் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த வளைவைத்தாம் தமது அறிவியல் ஆய்வுகளில் ஹாக்கிங் மற்றும் பென்ரோ ஆகியோர் அவ்வளைவுப் பேரண்டம் படைக்கப்படுவதற்கு முன் அப்பேரண்டம் ஒரு புள்ளியாக இருந்த காலகட்டத்தில் எல்லைக்கு உட்படாத, எல்லையற்றதாக இருந்தது எனக் கூறுகிறார்கள். (ஆகாயம் வளைந்திருக்கிறது என்பதோ ஒரு பொருளின் வளைவு எல்லைக்குட்படாதது என்பதோ நமது அறிவுக்கெட்டாத போதும் அது அறிவியல் கண்டுபிடிப்பு என்பதால் நாம் அதை நம்புகிறோம் என்பதையும் கருத்தில் கொள்க.)

இந்த அற்புதமான திருமறை வசனத்தில் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மிக முக்கியமாக கேள்விக்குத் தகுந்த பதில் கிடைக்கிறது. பேரண்டப் படைப்பு துவங்கு வதற்கு (பெருவெடிப்புக்கு) முன் அதற்குரிய சூழலாக என்ன இருந்தது? வெடித்த பொருள் எது? வெடிக்க வைத்த காரணங்கள் யாது? என்பதே நமது பிரதானமான கேள்வி களாகும். ஆனால் திருக்குர்ஆன் பேரண்டப் படைப்பு துவங்கு வதற்கு முன் அதற்காக பிரத்யேகமான எவ்விதச் சூழலும் இருந்ததில்லை எனவும் பேரண்டத்தை உருவாக்கியிருக்கும் பொருட்கள் கூட அதற்கு முன்னால் இருந்ததில்லை யெனவும் கூறுவதோடு படைப்பு நிகழ்ச்சி இறைவனுடைய கட்டளையால் தோன்றியது எனவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.

காரணமில்லாக் காரியம்

பேரண்டம் தோன்றுவதற்கு என்னென்ன அறிவியல் காரணங்கள் (ளுஉநைவேகைஉ சநயளடிளே) இருந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது என ஆய்வு செய்யத் தலைப்பட்ட நம்மை பேரண்டம் தோன்றுவதற்கு எவ்வித அறிவியல் காரணங் களும் இல்லை எனப் பொருள்படும் திருமறையின் கூற்று பெரும் வியப்பிற்குள்ளாக்குகிறதன்றோ! எவ்வித அறிவியல் காரணங்களும் இன்றி கற்பனைக் கெட்டாத இம்மாபெரும் பேரண்டம் தோன்றி இருக்க முடியுமா என்ற கேள்விக்கு `ஆம்! பேரண்டம் தோன்றியதற்கு எவ்விதக் காரணமும் வினோத சூத்திரங்கள் காரணமாக நம்மால் கண்டு பிடிக்க இயலாது என்பதோடு ஒருகால் பெருவெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் கூட அதற்கும் பெரு வெடிப்பிற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இருந்திருக்க முடியாது என்றும் எனவே பேரண்டப் படைப்பின் துவக்கமாகிய பெருவெடிப்பு எவ்விதக் காரணமும் இன்றி நிகழ்ந்தது எனக் கூறி அற்புதங்களின் அற்புதமாய் வான்மறைக் குர்ஆனில் நாம் என்ன கண்டோமோ அதை அப்படியே மெய்ப்பிக்கிறது உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாம் ஹாக்கிங் போன்றோர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகள்!

இவ்வளவு அற்புதமான இருபதாம் நூற்றாண்டின் அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிலும் அறிவிய லாளர்களால் கூட நம்புவதற்குக் கடினமாக இருக்கும் மாபெரும் அறிவியல் அற்புதங்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரால்- அவர் ஒரு மாபெரும் விஞ்ஞானி யாகவே இருந்தால் கூட – கூறி இருக்க முடியும் என பகுத்தறியும் திறனுள்ள எந்த நபரால் ஏற்றுக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் கூறும் அறிவியலிலிருந்து இறைவன் எந்த நாளில் அதில் எந்தக் கணத்தில் `ஆகுக! எனக் கட்டளையிட்டானோ அதன் பிறகு ஒரு மைக்ரோ கம் கூடத் தாமதமின்றி உடனே பேரண்டத்தின் படைப்பு துவக்கம் (க்ஷபை யெபே) குறித்தது என்பதும் அதிலிருந்து இன்று வரை பேரண்டம் என்னென்ன பொருட்களால் எப்படி எப்படி வடிவமைய வேண்டும் என அவன் தனக்குள் வடிவமைப்பு செய்திருந்தானோ அவ்வாறே நிகழ்ந்து வருகிறது என்பதும் தெளிவாக விளங்குகிறது.

இறைவனின் சொல்லாற்றல்

இங்கு பலருக்கும் ஏற்படக் கூடிய ஐயம் யாதெனில் வெறும் `ஆகுக! (க்ஷந!) என்று ஒரு கட்டளை பிறப்பித்த உடன் அக்கட்டளை பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்யும் என்பதாகும். இந்த ஐயம் மனிதர்களாகிய நம்மைப் போன்றே இறைவனையும் கற்பனை செய்வதால் ஏற்படுவதாகும். நாம் `ஆகுக! என்று கூறும் போது நமது கட்டளை வெறும் காற்றின் அதிர்வலைகளாக வெளிவருவதால் அதற்கு எதையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் இருப்பதில்லை. நமது அறிவுத் திறன் என்பது வினோத சூத்திரங்களால் (ளுபேரடயசவைல வாநடிசநஅள) முடமாக்கப்பட்டு பெருவெடிப்புக்கு அப்பால் உள்ளதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத பலவீனத் துக்கு உட்பட்டதாகும். எனவே இறைவனின் இயற்பியலைப் பற்றி நமது அறிவுத் திறனால் புரிந்து கொள்ள முடியாது. நிலைமை இவ்வாறிருக்க இறைவனின் வார்த்தைகள் எந்த வடிவத்தில் வெளிப்படும் என்பதை எப்படி நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்? ஆயினும் நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட திருமறை வசனங்களிலிருந்து அவனது வார்த்தை கள் அவனது நாட்டத்தையும் உள்ளடக்கிய ஆற்றலின் வடிவாக வெளிப்படும் திறன் கொண்டது என்பது விளங்குகிறது!

மானிடர்க்கு வழிகாட்டியாய் வந்த மாமறைக்குர்ஆனின் வசனங்கள் பெரு வெடிப்புக்கு முன் இறைவனின் `ஆகுக! என்ற வார்த்தை தவிர மற்றவை யாவும் (பேரண்டத்தின் வடிவமைப்புப் பணிகள் – னநளபைபே றடிசமள) அவனுக்குள் ளேயே இருந்ததே அன்றி அண்ட வெளியில் எதுவும் தோன்றி இருக்கவில்லை எனப் பொருட்பட்டதாகக் கண்டோம். இதையே நாம் நமது வினோத சூத்திரங்களால் முடமாகிப் போன இயற்பியல் மொழியில் மொழி மாற்றம் செய்தால் அதன் பொருள் பெருவெடிப்புக்கு எதுவுமே காரணமாக இருந்திருக்கவில்லை என்றும் எனவே பெருவெடிப்பே பெரும் புதிரானது என மாற்றமடைவதைக் காணலாம். மிகச் சரியாக இதே கருத்தைத் தான் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறி சத்தியத் திருமறையை மெய்ப்பித்துக் கொண்டு வருகின்றன.

இம்மாறைக்குர்ஆன் தெய்வீக வெளிப்பாடே அன்றி மானிடப் படைப்பன்று என்பதை மேற்கண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்குப் புலப்படுத்தவில்லையா?

விரிந்து செல்லும் பேரண்டம்

பேரண்டப் படைப்பில் பெருவெடிப்பிற்கு அடுத்தாற் போன்று பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் மற்றொரு இயற்பியல் காரணி பேரண்டத்தின் தொடர்ச்சியான விரிவாக்க மாகும். பெருவெடிப்பு நடைபெற்ற அதே கணத்தில் வெடித்தலில் இருந்து வெளிப்பட்ட ஆற்றலின் விரிவாக்க மும் பிறகு ஆற்றலில் இருந்து தோன்றிய பொருட்களின் விரிவாக்கமும் இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் ண்டிருக்கின்றது. பேரண்டத்தின் இந்த விரிந்து சொல்லும் இயற்பியல் பண்பு இல்லாதிருந்தால் இப்பேரண்டம் பல கோடி வருடங்களுக்கு முன்னரே அழிவுற்றிருக்கும்.

பேரண்டத்தின் இந்த இயற்பியல் பண்பு சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற விஞ்ஞானி ஹப்பிள் (ழரடெந) அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அவருடைய நிறமாலை (ளுயீநஉவசடிளஉடியீந) ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட `ரெட் ஷிப்ட் (சுநன ளாகைவ) எனும் இயற்பியல் விளைவை `டாப்ளர் விளைவுடன் பொருத்திப் பார்த்து பேரண்டம் விரிந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்தார். திருமறையை இறை வேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பை நாம் தனித் தலைப்பில் ஆய்வு செய்துள்ளோம். எனவே பேரண்டப் படைப்பு நிகழ்த்தப்பட்ட கால அளவைப் பற்றிய ஆய்விற்குள் செல்வோம்.

`ஆகுக! – உடனே ஆகி விடும்!

திருமறையில் நாம் முன்னர் கண்ட வசனத்தைச் சுட்டிக் காட்டி திருமறையின் விமர்சகர்கள் சிலர் திருக்குர்ஆன் பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளதாய் கூறுகிறார்கள். பெருவெடிப்புக் கோட்பாடு பேரண்டம் உருவாவதற்கு 500 லிருந்து 1500 கோடி வருடங்கள் அல்லது 1000 லிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டது எனக் கூறுவதை நாம் கண்டோம். ஆனால் திருக்குர்ஆன் இதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

“அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து “ஆகு என்றே கூறுவான். உடனே அது ஆகிவிடும்.

திருக்குர்ஆன் 2 : 117

இறையாற்றலும் சார்பியல் கோட்பாடும்

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பேரண்டம் தோன்றுவதற்கு தேவைப்பட்டது 500 கோடியிலிருந்து 2000 கோடி வருடங்கள் என்பதைக் கண்டோம். ஆனால் இறைவன் ஏதேனும் ஒன்றைப் படைக்க நாடினால் அதனிடம் `ஆகுக! என்று சொல்வான். உடனே அது ஆகிவிடும் எனப் பல இடங் களில் திருக்குர்ஆன் கூறுகிறது. இதை ஒரு கோணத்தில் பார்த்தால் “இறைவன் எவ்வாறு அதை உருவாக்க நாடினானோ அவ்வாறே எவ்விதத் தடங்கலோ தாமதமோ இன்றி அவ்வாறே உருவாகி விடும் என்பது அதன் விளக்கமாக இருக்கின்ற அதே வேளையில் மற்றொரு கோணத்தில் பார்த்தால் இறைவனின் கட்டளை பிறந்த மறுகணமே அவன் நாடியது எதுவோ அது அங்கு தோன்றி விடும் என்பது போன்ற அர்த்தமும் அதற்கு இருப்பது போன்று தோன்று கிறது. இதன் விளக்கம் யாது என்பதே நமது கேள்வியாகும்.

இக்கேள்விக்குரிய பதில் ஐன்டீனின் சார்பியல் கோட்பாட்டில் அமைந்துள்ளது. அதை ஓரிரு உதாரணங் களுடன் சுருக்கமாகக் காண்போம்.

காலம் மற்றும் இடம் ஆகியவையும் சார்பியல் நிலைக்கு உட்பட்டது என ஐன்டீனின் சார்பியல் கோட்பாடு கூறுவதை நாம் முன்னர் கண்டுள்ளோம். நாம் ஒரு சாலை வழியாகப் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். அச்சாலையின் வலது பக்கம் இருக்கும் ஒரு குன்று அந்த இடத்தை விட்டு நகராமல் அதே இடத்தில் இருக்கும் போதே அதே சாலையில் (நாம் பயணம் செய்யும் திசைக்கு எதிராக) பயணம் செய்யும் வேறு சிலர் அக் குன்று சாலையின் இடது பக்கம் இருப்பதாகக் காண்பார்கள். இதிலிருந்து இடம் என்பது நிலையானதல்ல; சார்பானது (அதைப் பார்வையிடும் பார்வையாளர்களைச் சார்ந்தது) என்பது தெரிகிறது.

இதைப் போலவே இப்போது நாம் நமது சூரியனில் ஒரு பெரும் வால் நட்சத்திரம் மோதுவதைப் பார்க்கிறோம் என வைத்துக் கொள்வோம். நமது சூரியனிலிருந்து ஒரு இலட்சம் ஒளியாண்டு தொலைவில் மற்றொரு நட்சத்திரக் குடும்பத்தி லுள்ள ஒரு கிரகத்தில் அறிவு ஜீவிகள் இருப்பதாகவும் அவர்கள் நமது சூரியனை ஆய்வு செய்து கொண்டிருப்ப தாகவும் வைத்துக் கொள்வோம். ஆயினும் நாம் இப்போது நமது சூரியனில் கண்ட வால் நட்சத்திர மோதல் வேற்று கிரகத்தில் இருக்கும் அந்த அறிவு ஜீவிகளால் நாம் பார்த்த அதே நேரத்தில் பார்க்க இயலாது. அவர்கள் இந்த காட்சியைப் பார்க்க வேண்டுமாயின் ஒரு லட்சம் வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒருகால் சார்பியல் கோட்பாட்டைப் பற்றி எதுவுமே அறிந்திராத நபர் இப்புத்தகத்தைப் படிப்பதாக இருந்தால் இவருக்கு இது பெரும் புதிராகவே இருக்கக் கூடும். ஆயினும் மற்றவர்கள் இதற்குரிய காரணத்தைப் புரிந்து கொள்வதால் இது மிகச் சாதாரணமான எளிய உண்மையாக எடுத்துக் கொள்வார்கள்!

ஆம்! ஓரிடத்தில் நடைபெற்ற ஒரே நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி ஒரு சிலருக்கு உடனே நடைபெற்றதாகவும் வேறு சிலருக்கு ஒரு இலட்சம் வருடங்கள் கழித்து நடைபெற்றதாகவும் தெரிகிறது! இதில் ஏதேனும் ஒரு கூற்றை (உடனே நடந்ததாகக் கூறும் கூற்று) மெய் என்றும் மற்றதைப் பொய் என்றும் கூற முடியுமா? முடியவே முடியாது. இரண்டு கூற்றுமே மெய்யாகும்! ஏனிந்த விபரீதம்! வேறொன்றும் இல்லை சூரியன், வால் நட்சத்திரம், பார்வையிடும் நபர்கள் மட்டுமின்றி காலமும் சார்பானது என்பதாலேயே சூரியனில் நிகழ்ந்த மோதலின் காட்சி அதைப் பார்வையிடும் குழுக் களுக்கிடையில் வெவ்வேறு காலத்தில் தென்பட்டது. எனவே காலத்தின் இயல்பு அதைப் பார்வையிடும் பார்வையாளர் களைச் சார்ந்ததே என இதிலிருந்து விளங்குகிறது.

இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தில் காலத்தைப் பார்வையிடும் நபர் நம் போன்று சார்பியல் நிலைக்கு உட்பட்டவர் அன்று. அவன் இம் மாபெரும் பேரண்டத்தின் படைப்பாளன். அவன் சார்பிய லைக் கடந்த முழுமை(ஹளெடிடரவந)யானவன். எனவே அவன் முன்னர் இல்லாமல் இருந்து விட்டு நாளையும் இல்லாமல் போய் விடும் நபர் அன்று. அவன் எப்போதும் உள்ளவன். அவன் தனது இயற்பியல் குணத்தில் தன்னிறைவு பெற்று அதே நிலையில் (அந்த ஒரே நிலையில்) என்றென்றும் உள்ளவன். எனவே அவனுக்கு கடந்த காலம் அல்லது எதிர்காலம் என்பதெல்லாம் இல்லை. அவனுக்கு எல்லாமே நிகழ்காலம்!

இதையே வேறு விதத்தில் கூறினால் கடந்து சென்ற எல்லாக் காலங்களிலும் அவன் இருந்தான். அப்போது எந்தெந்த (அவனுக்கே உரிய) இயற்பியல் நிலையில் அவன் இருந்தானோ அதே நிலையிலேயே இப்போதும் இருக்கிறான். மேலும் வரப்போகும் எதிர்காலம் யாவிலும் அவன் இருப்பான். அப்போது என்னென்ன இயற்பியல் நிலையில் அவன் இருப்பானோ அதே நிலையிலேயே அவன் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறான் என்பதாகும்.

சுருங்கக் கூறின் “முழுமை (ஹளெடிடரவந) எனும் சொல்லின் ஆழமான மற்றும் நிறைவான அர்த்தத்தில் அவன் முழுமை யானவன். எனவே கடந்த காலமோ, எதிர்காலமோ இல்லாத அவனுக்கு வெறும் 2000 கோடி வருடம் என்பது வினாடியைப் போன்று அற்பமானதே எனப் பொருள்படக் கூறினால் அது ஏழாம் நூற்றாண்டைப் பொருத்தவரை பிரமிக்கச் செய்யும் ஆழமான ஓர் அறிவியல் உண்மையன்றோ! எனவே “ஆகுக! என அவன் ஏதேனும் ஒன்றுக்கு (தன் மனதில் உள்ள நாட்டத் தில் உருவான பொருளுக்கு) கட்டளை இட்டால் `உடனே அது ஆகிவிடும் எனக் கூறினால் அவனைப் பொருத்த வரை (நம்மைப் பொருத்தன்று) மறுகணமே அது தோன்றி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் பெருவெடிப்பு நிகழ்ந்த போது காலம் என்பது எல்லையற்ற அடர்த்தி (கேவைந னநளேவைல) கொண்டதாக இருந்தது என ஹாக்கிங் கூறியதை நாம் முன்னர் கண்டோம். ஹாக்கிங் கூறியது மெய்யென்றால் இறைவனுடைய கட்டளைக்கும் பேரண்டத்தின் தோற்றத்திற்கும் இடையில் கால இடைவெளி எதுவும் இருக்க இயலாது என்பது மிகத் தெளிவாகும். ஏனெனில் காலம் அப்போது எல்லையற்ற அடர்த்தியைக் கொண்டிருந்தது என்பதால்!

மானிடப் பார்வையில் படைப்புக் காலம்

இறைவன் சார்பியல் நிலைக்கு அப்பாற்பட்டு எல்லா நிலைகளிலும் முழுமையானவனாக இருப்பதால் சார்பியல் பண்புகளுக்கு அவன் கட்டுப்படுவதில்லை. எனவே சார்பியல் பண்புகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட இயற்பியல் அமைப்பைக் கொண்ட மனிதர்களால் உணரப்படும் 2000 கோடி வருடத்தின் கால அளவு என்பது இறைவனைப் பொருத்தவரை அர்த்தமற்றதாகும். ஹாக்கிங் அவர்களின் காலத்தின் எல்லையற்ற அடர்த்தி பற்றிய அறிவியல் கண்டு பிடிப்பு நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட திருமறை வசனத்தை (உடனே ஆகிவிடும்!) மேலும் மேலும் மெய்ப்பித் துக் கொண்டிருக்கிறது எனும் விபரங்களை இப்போது நாம் ஐயத்திற்கு இடமின்றி கண்டு தெளிந்தோம். எனவே இப்போது சார்பியல் நிலைக்குக் கட்டுப்பட்ட மனிதர்களின் பார்வையில் பேரண்டம் தோன்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு எவ்வளவு என்பதைப் பற்றித் திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். இது குறித்து திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

வானங்களையும், பூமியையும் அதற்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

(50 : 38)

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான்.

(7 : 54)

இறைவன் பேரண்டத்தை `ஆகுக! எனக் கட்டளை யிட்ட உடனே (மனிதர்களின் கால அளவின்படி மறுகணமே) பேரண்டம் தோன்றி விட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது எனக்கூறி திருக்குர்ஆனை விமர்சனம் செய்பவர்களின் கூற்று தவறானது என்பதை மேற்கண்ட திருமறை வசனங்கள் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆயினும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு நமது கணக்கின்படி ஆறு நாட்கள் என்பது எந்த விதத்தில் சரியாகும் எனும் கேள்விக்குள் நுழையும் முன்னர் இவ்வசனங்களைக் குறித்து செய்யப்படும் மற்றொரு விமர்சனத்தை எடுத்துக் கொள்வது சிறப்பாகும். அந்த விமர்சனம் வருமாறு :

பேரண்டம் படைக்கப்படுவதற்கு ஆறு நாட்களே ஆயின என ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் வேறு சில வசனங்களுடன் இது முரண்படுகிறது என்பதே அந்த விமர்சனமாகும். முரண்படும் வசனங்களாக கீழ்க்காணும் வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவைகளாவன :

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக் கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகவும் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

(41 : 9)

அதன் மேலே (பூமியின் மேல்) முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதில் உணவுகளை நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

(41 : 10)

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

(41 : 11)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்) இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

(41 : 12)

மேற்கண்ட வசனங்களில் அடிக்கோடிட்ட நாட்களின் எண்ணிக்கையை கூட்டினால் (2+4+2) மொத்தம் எட்டு நாட்கள் கிடைக்கின்றன. எனவே பேரண்டம் படைக்கப் படுவதற்கு இந்த வசனங்களில் எட்டு நாட்கள் எனக் கூறி இருக்கும் போது முன்னர் கண்ட வசனங்களில் ஆறு நாட்கள் எனக் கூறி இருப்பது முரண்பாடாகும் என்பதே அவர்கள் கூறும் விமர்சனமாகும்.

இந்த விமர்சனம் தவறாகும். ஏனெனில் புகை மூட்டம் போன்ற மேகத்திலிருந்து பூமி கோள வடிவில் உருவாகி வரு வதற்கே வசன எண் 41 : 9 ல் கூறப்பட்ட இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் அதற்கடுத்த வசனத்தில் பூமியைக் கோள வடிவில் உருவாக்கியதோடன்றி அதன் தனிச் சிறப்பான அடையாளங்களாம் (ளுயீநஉயைட கநயவரசநள) மலைகள் (வாயு மண்டலம், கடல்கள், காடுகள்) உட்பட அதன் உயிராதாரப் பொருட்கள் அனைத்தையும் உருவாக்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வசன எண் 41 : 9 ல் கூறப்பட்டுள்ள இரண்டு நாட்கள் வசன எண் 41 : 10 ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நாட்களில் அடங்கி விடுகிறது. எனவே இந்த வசனங்களிலும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்களின் எண்ணிக்கை ஆறு என்பதால் முன்னர் கூறப்பட்ட முரண்பாடு அகன்று விடுகிறது.

நாட்களின் அளவு கோல்கள் யாவை?

திருக்குர்ஆனின் மீது நடத்தப்படும் அறிவியல் விமர்சனங்களில் மிக முக்கியமான விமர்சனமே இந்த ஆறு நாட்கள் தொடர்பானதாகும். வெறும் ஆறே நாட்களில் இவ்வளவு மகா மகா பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறுவது நகைப்பிற்கு இடமானதாகும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த விமர்சனம் ஒரு நாள் நம்முடைய கணக்கின்படியான 24 மணி நேரமாகும் எனக் கற்பனை செய்வதால் ஏற்பட்டதாகும்.

ஒரு நாள் என்பதன் கால அளவு 24 மணி நேரமாகும் என்பது நமது பூமிக்கு மட்டுமே செல்லுபடியாகும் கால அளவாகும். ஆனால் இந்தக் கால அளவு நமக்கு கூப்பிடு தொலைவில் இருக்கும் சந்திரனில் கூட செல்லுபடியாகாது. அங்கு ஒரு நாள் என்பது நம்முடைய 24 மணி நேரத்தைப் போன்று 28 மடங்காகும். அங்கு மாதமும் நாளும் ஒரே கால அளவைக் கொண்டதாகும். இதற்கு மாறாக வியாழன் (துரயீவைநச) கோளில் ஒரு நாள் என்பது வெறும் 10 மணி நேரமாகும்.

நாள் என்றால் எங்கும் எப்போதும் 24 மணி நேரமே எனும் பல்லவியை திருக்குர்ஆன் பாடிக் கொண்டிருப்பதில்லை என இத்திருமறையை ஒரே ஒருமுறை படித்தவர்களால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மேலும் திருக்குர்ஆன் நாள் என்ற சொல்லை வெவ்வேறு கால அளவைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தி இருப்பதையும் நாம் பார்க்க முடியும். சான்றாக பேரண்டம் அழிக்கப்பட்ட பிறகு அங்கு நிலைநிற்கப் போகும் நாளைப் பற்றிக் கூறும் போது அந்த நாள் நம் நமது பூமியில் கணக்கிடும் 50,000 வருடங்களுக்குச் சமமானது எனக் கூறுகிறது.

(பார்க்க 70 : 4)

இதைப் போன்றே இப்போது நாம் எந்தப் பூமியில் வசித்துக் கொண்டிருக்கிறோமோ மேலும் எந்தப் பூமியின் 24 மணி நேரத்தை ஒரு நாள் என்று கூறுகிறோமோ அதே பூமியின் ஒரு நாள் என்பது இறைவனிடத்தில் எந்த அளவு கோலால் அளக்கப்படுகிறது என்பதைக் கீழ்க்கண்டவாறு திருமறை கூறுகிறது :

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசர மாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.

(22 : 47)

மேற்கண்ட வசனத்திலிருந்து தெரியவரும் விபரங் களாவன : இறைவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து குற்றம் புரிந்தால் மறுமையில் வேதனை செய்யப்படுவீர்கள். மேலும் இந்த மறுமை சமீபமானது என இறைத்தூதர் மக்களை எச்சரித்த போது அதற்குப் பதிலாக அம்மக்கள் இறைத் தூதரிடம் “நீ கூறுவது உண்மையாக இருந்தால் அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வா! எனக் கேலி செய்தனர். இதைக் குறித்து இறைவன் தன்னுடைய தூதரிடம் கூறும் விபரமே மேற்கண்ட வசனமாகும்.

இந்த வசனத்தில் மறுமை சமீபமானது என இறைத் தூதர் கூறத் தொடங்கி பல வருடங்கள் ஆன பிறகும் மறுமை வராததற்குக் காரணம் இந்த அற்பமான பூமியைப் பொருத்த அளவில் கூட இறைவனிடம் ஒரு நாள் என்பது எந்தக் கால அளவைக் கொண்டதோ அந்தக் கால அளவு நமது கணக்கின்படி 3,65,000 (1000 வருடங்களுக்கு) நாட்களுக்கு சமமானதாகும். எனவே மறுமை சமீபமானது என 1400 வருடங்களுக்கு முன் இறைத் தூதர் கூறியது மனிதர்களின் கணக்குப்படியன்று. அது பூமியைப் பொருத்த வரையிலான இறைவனின் கணக்குப்படியாகும். எனவே இறைவனின் கணக்குப்படி மறுமை அப்போதும் சமீபமாகவே இருந்தது என்பதை இறைத் தூதரைக் கேலி செய்த மக்களை இந்த வசனம் எச்சரிக்கிறது.

இந்த அற்பமான பூமியைப் பொருத்தவரை இறைவன் ஒரு நாள் எனக் குறிப்பிடுவது நாம் கணக்கிடும் 3,65,000 நாட்களையே எனில் இம்மாபெரும் பேரண்டத்தில் ஒரு நாள் என்பது நமது கணக்கின்படி மாபெரும் கால அளவைப் பெற்றதாகவே இருக்கக் கூடும் என நம்மால் யூகிக்க முடியுமேயன்றி பூமின் நாளைப் பற்றி இறைவன் வெளிப் படையாகக் கூறியதைப் போன்று பேரண்டத்தின் நாளின் (பேரண்டம் படைக்கப்படும் போது நிலவிலிருந்த நாளின்) கால அளவை இறைவனே கூறாதவரை நம்மால் அனுமானிக்க இயலாது.

நமது பூமியைப் பொருத்தவரை ஒரு நாள் என்பதற்கு நம்மிடம் இருக்கும் அளவு கோல் (ஊசநவநசடி) பூமி அதன் அச்சில் ஒரு முறை சுற்றும் கால அளவாகும். ஆனால் பூமியோ, இதர கோள்களோ, நட்சத்திரங்களோ, காலக்சிகளோ படைக்கப்பட்டிராத, ஆனால் அவை யாவும் படைக்கப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் `ஒரு நாள் என்பதன் அளவு கோல் என்ன என்பதை எப்படி நிர்ணயிப்பது? பேரண்டம் தோன்றுவதற்கு முன்னர் நிலை நின்ற காலத்தின் அளவு கோலை நம்மால் அறிய முடிந்தால் அதை வைத்தாவது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன என்பதைக் கண்டறிய முடியும். ஆனால் நாம் அறிந்திருக்கும் அறிவியல் விதிகள் பேரண்டத்தின் தொடக்கம் குறித்த வினாடிக்கு முன்னர் உள்ள எதையும் கண்டுபிடிக்கும் திறமையைப் பெற்றிருக்கவில்லை. இதைப் பற்றி ஹாக்கிங் இவ்வாறு கூறுகிறார்.

வரையறையில்லாத காலம்

`பேரண்டம் எல்லையற்ற அளவு சின்னதாகவும் எல்லை யற்ற அளவு அடர்த்தியாகவும் இருந்த போது, `பெருவெடிப்பு என அழைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது என ஹப்பிளின் தரிசனங்கள் (டீளெநசஎயவடிளே) அபிப்பிராயப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனம் (யீநசனஉவடி) செய்யும் அறிவியல் விதிகளின் அனைத்துத் திறமைகளும் பழுதடைந்து விடும். இந்தக் காலகட்டத்திற்கு முன் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்திருந்தால் அப்பொழுதும் இப்போதுள்ள கால கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவைகளுக்கு அதனால் பாதிப்பை ஏற்படுத்த இயலாது. கிரகித்தறியக் கூடிய பின்விளைவுகள் எதுவும் அதற்கு இல்லாததால் அவைகளின் உள்ளமையைப் புறக்கணிக்கலாம். முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பில் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்தத் தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்.

(பக்கம் : 9)

மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் கூற்று பெரு வெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருந்தால் அவைகளைக் கண்டு பிடிக்கும் திறமை நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு இல்லை என்பதைத் தெரிவிக்கிறது. அவ்வாறு ஏதேனும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருந்தால் கூட அவை நடைபெறவில்லை எனப் புறக்கணிக்கலாம் என்கிறார் அவர். ஏனெனில் அவ்வாறு ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தால் அவைகளின் பின் விளைவுகள் பெருவெடிப்பு நிகழ்ச்சித் தொடர்களில் காணப்பட வேண்டும் எனவும் ஆனால் அப்படி ஏதும் இப்போது காணப்படவில்லை என்பதுமே இந்தப் புறக் கணிப்புக்குக் காரணம் என்றும் கூறுகிறார். மேலும் மற்றொரு கருத்தையும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெருவெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.

மேற்கண்ட விபரங்களிலிருந்து பேரண்டம் படைக்கப்படும் முன்னர் வரையறுக்கப்பட்ட காலம் எதுவும் இல்லை என்பதாலும் அவ்வாறு இருந்திருந்தாலும் நம்மால் அதைக் கண்டு பிடிக்க இயலாது என்பதாலும் பேரண்டம் படைக்கப் பட்ட காலத்தில் ஒரு நாள் என்பது என்ன வென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பது தெளிவு. இந்த இக்கட்டான நிலையில் பேரண்டம் படைப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக திருமறை கூறும் நாட்களின் கால அளவு என்ன என்பதை நம்மால் கண்டு பிடிக்க இயலாது என்பது தான் முடிவா? இதற்கோர் தீர்வே இல்லையா?

கண் சிமிட்டும் தீர்வு

திருமறை கூறும் பேரண்டம் படைக்கப்பட்ட நாட்களின் கால அளவை நம்மால் கண்டுபிடிக்க இயலவே இயலாதா? எனும் வினாவுடன் மெய்யும் பொய்யும் பிரித்தறிவிக்கும் இந்த அற்புதத் திருமறையை ஆய்வுக் கண்களோடு பார்வை யிட்டால் அறிவியல் கண்களைக் கூட இருட்டாக்கி விட்ட `வினோத சூத்திரங்களால் (ளபேரடயசவைல வாநடிசநஅள) இம்மியும் பாதிக்கப்படாமல் `அந்த நாட்களின் கால அளவை அறிவித் துக் கொண்டிருக்கும் `குர்ஆன் சூத்திரம் (ணுரசயஉ கடிசஅரடய) ஒன்று அதன் வசனங்களில் இழையோடுவதைக் கண்டு பிரமித்துப் போகிறோம்! திருமறை கூறுகிறது :

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(16 : 77)

பேரண்டத்தின் அழிவைப் பற்றிய தகவலே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் பேரண்டத்தின் அழிவு எப்போது ஏற்படும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவைக் குறிப்படுவதற்கு எந்த அளவுகோல் பயன்படுத்தப்பட்டதோ அதே அளவுகோலே அதன் அழிவு எப்போது எனக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதாகும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது பேரண்டம் அழிவுறும் நேரம் என்பது இமை வெட்டுவதை விடக் குறைந்த நேரத்தில் வந்திருக்க வேண்டும். இது கூறப்பட்டு 1428 வருடங்களாகியும் அந்த நேரம் இன்னும் வந்து விடவில்லை! ஏன்?

காலம் சார்பற்றது, அது சுயம் பூரணமானது (ஹளெடிடரவந) என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை வாழ்ந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும், இறைவ னுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர். இதன் காரணமாக இந்த வசனம் பேரண்டத்தின் அழிவு எப்போது என்று கூறவில்லை. ஆனால் பேரண்டம் அழிவைத் தொடங்கி விட்டால் எவ்வளவு நேரத்தில் அழிவு முடிவடையும் என்பதையே கூறுவதாக சிலர் எண்ணிக் கொண்டனர். ஆனால் இந்த அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் கண் இமைக்கும் நேரத்தில் இப்பேரண்டம் அழிவுற்று விடாது. (இப்படி நினைப்பது உண்மையில் நகைப்புக்குரியதாகும் என்பதையும் கருத்தில் கொள்க.)

பேரழிவு நடைபெறும் போது நிகழக் கூடிய சில நிகழ்ச்சிகளைப் பற்றி திருமறை பல இடங்களில் கூறுகிறது. அவற்றுள் சில இவ்வாறு கூறுகிறது :

சூரியன் சுருட்டப்படும் போது; நட்சத்திரங்கள் உதிரும் போது; மலைகள் பெயர்க்கப்படும் போது; கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது; விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது

(81 : 1-5)

வானம் பிளந்து விடும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது, கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது

(82:1-3)

வானம் பிளந்து விடும் போது, கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அடிபணியும் போது, பூமி நீட்டப்படும் போது

(84 : 1-3)

மேற்கண்ட இறை வசனங்களை ஒரு முறை பார்த்தாலே எவ்வித விளக்கமும் தேவையின்றி இவை யாவும் வெறும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடைபெற இயலாது என்றும் எனவே கண் இமைக்கும் நேரத்தை விட குறைவான நேரம் என்பதை நமது கணக்கின்படி எடுத்துக் கொண்டு பேரண்டம் அழிவுற்று முடியும் நேரத்தை அதனுடன் பொருத்திப் பார்த்தாலும் அந்த நேரத்திற்குள் பேரண்டம் அழிவுற்று முடிந்து விடாது. எனவே மேற்கூறப்பட்ட வசனத்தில் பேரண்டத்தின் அழிவைக் குறித்து தெரிவிக்கப்பட்ட கால அளவு எக்காரணத்தைக் கொண்டும் மனிதனின் காலக் கணக்கினடிப்படையிலன்றி பேரண்டத்தைக் குறித்து இறைவனிடம் உள்ள கணக்கினடிப்படையிலேயாகும் என்பது தெளிவாகிறது. இந்த முடிவை மற்றொரு கோணத்திலும் சரிபார்ப்போம்.

இறை மறுப்பாளர்களின் கேலியும், கேள்வியும்

பேரண்டம் எப்போது அழிவுறும் என இறைவன் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. இறைவனால் அனுப்பப்பட்ட தூதராம் முஹம்மது (இறைவனின் சாந்தி அவர் மீது நிலவட்டுமாக!) நபியை ஏற்காமலும், இறைவனுக்குக் கட்டுப்படாமலும் இருந்தால் மறுமையில் தண்டிக்கப்படுவீர்கள் எனத் திருக்குர்ஆன் இடைவிடாமல் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. இதைக் கேட்ட இறை மறுப்பாளர்கள் “மெய்யாகவே அப்படி ஒரு மறுமை இருந்தால் அது எப்போது வரும்? அது நடைபெறும் நேரத்தை எங்களிடம் கொண்டு வா! எனக் கூறி கேலி செய்து கொண்டே வந்தனர். இப்பரிகாசங்களுக்கு இறைவன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பதில் சொல்கிறான். அதில் ஒன்றே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனமாகும். சான்றாக இறை மறுப்பாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதையும் அதற்கு இறைவன் தனது மாமறையில் பதிலளிப்பதையும் இவ்வாறு காணலாம் :

அந்த நேரம் எப்போது வரும் என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். அது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும் பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும் என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(7 : 187)

மேற்கண்ட இறை வசனத்தில் இறை மறுப்பாளர்கள் மறுமையின் நேரம் எப்போது எனக் கேட்பதையும் அந்த நேரத்தைப் பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்றும் அந்த நேரம் வந்தவுடன் நாமே அதை நிகழச் செய்வோம் என இறைவன் கூறுவதையும் கண்டோம். மற்றொரு சந்தர்ப்பத் தில் திருக்குர்ஆன் இறை மறுப்பாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறது.

“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்) என்று அவர்கள் கேட்கின்றனர். ஒரே ஒரு சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே அது பிடித்துக் கொள்ளும்.

(36 : 48,49)

மேற்கண்டவாறு பலவிதமான எச்சரிக்கைகள் இறைவன் புறத்திலிருந்து செய்யப்பட்ட பின்னரும் நிராகரிப் பாளர்கள் தங்களது நையாண்டியை நிறுத்தாமல் “மறுமை உண்டென்றால் அது எப்போது? நீ உண்மையாளனாக இருந்தால் அதைக் கொண்டு வா எங்களிடம் எனக் கூறி இறைத் தூதரை அவமதித்து வந்தார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து மற்றொரு எச்சரிக்கை இவ்வாறு வருகிறது :

அவனே முந்தைய ஆது மற்றும் ஸமூது சமுதயத்தையும், (அதற்கு) முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் விட்டு வைக்காது அழித்தான். அவர்கள் மிகப் பெரும் அநீதி இழைத்து வரம்பு மீறியோர்களாக இருந்தனர். (லூத்துடைய சமுதாயமான) தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊரையும் ஒழித்தான். அதைச் சுற்றி வளைத்துக் கொள்ள வேண்டியது சுற்றி வளைத்துக் கொண்டது. உனது இறைவனின் அருட்கொடைகளில் எவற்றில் சந்தேகம் கொள்கிறாய்? இது முந்தைய எச்சரிக்கைகளில் ஒரு எச்சரிக்கை! நெருங்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது! அல்லாஹ்வையன்றி அதை வெளிப்படுத்துபவர் எவருமில்லை. இந்தச் செய்தியிலா ஆச்சரியப்படுகிறீர்கள்? அழாமல் சிரிக்கிறீர்கள். அலட்சியம் செய்வோராகவும் இருக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கே ஸஜ்தா (சிரம் பணிந்து) வணங்குங்கள்.

(53 : 50 – 62)

இறைவனுடைய இந்த எச்சரிக்கையில் மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களையும், அட்டூழியங்களையும் இறைவன் அனுமதித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றும் குற்றவாளிகளை அவன் தண்டிப்பான் என்றும் அழுத்தமாகக் கூறுவதோடு அவர்களின் மூதாதையர்கள் அவ்வாறு கொடுமைகள் புரிந்த போது அவர்களைத் தண்டித்த வரலாறுகளை நிராகரிப்போர்களுக்கு நினைவூட்டுகிறான். மேலும் இறைவனின் இத்தூதர் (முஹம்மத் – இறைவனின் சாந்தி அவர் மீது நிலவட்டுமாக!) தூதர்களின் பட்டியலில் இறுதியானவர்களாக இருப்பதால் உலக மொத்தத்திற்கும் இவரே தூதராக அனுப்பப்பட்டுள்ளார். எனவே இவருக்குப் பிறகு இவ்வுலகின் ஆயுள் முடிவடைகிறது. எனவே மறுமையின் நேரமும் நெருங்கி விட்டது என மறுமையைப் பற்றி கூறப்படும் வசனங்களிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மறுமையின் நேரம் நெருங்கி விட்டது என்பதைத் திரும்பத் திரும்ப திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. (பார்க்க : 6:31, 12:107, 20:15, 21:40, 22:55, 31:34, 33:63, 38:15, 41:47, 43:66,85, 47:18, 79:42,43) இருந்த போதிலும் நிராகரிப்பாளர்கள் மறுமையை மறுத்துக் கூறி இறைத் தூதரைக் கேலி செய்வது தொடர்ந்து கொண்டிருந்த போது மேலும் உறுதி வாய்ந்த மிகத் தெளிவான வார்த்தைகளால் அவர்களை எச்சரிக்கை செய்கிறான் பேரண்டத்தின் படைப்பாளனாம் வல்ல இறைவன். அந்த எச்சரிக்கை தாம் நாம் முன்னர் கண்ட வசனத்தில் (16 : 77) கூறப்பட்டிருக்கும் (கண் சிமிட்டுவதை விடக் குறைந்த நேரத்தில் மறுமையின் நேரம் வந்து விடும் எனும்) செய்தியாகும்.

கேள்விக்கேற்ற பதில்

நாம் இது வரை கேட்ட திருமறை வசனங்களிலிருந்து நிராகரிப்பாளர்களின் கேள்வி மறுமையின் நேரம் எப்போது என்பதைப் பற்றியேஆகும் என்பதை விளங்கிக் கொண் டோம். இதற்கு மாறாக மறுமை தோன்றி விட்டால் அது எவ்வளவு நேரத்தில் முடிவடையும் எனும் செய்தியில் யாருமே அங்கு அக்கறை காட்டவில்லை என்பதையும் ஐயமற விளங்கிக் கொண்டோம். மறுமையையே நம்பாதவர்கள் “மறுமை ஒன்று உண்டென்றால் அது எப்போது? எனும் கேள்வியைத் தாம் கேட்பார்களேயன்றி மறுமை வந்து விட்டால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் எனும் கேள்வியை எழுப்ப மாட்டார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

எனவே இறைத் தூதரிடம் அவர்கள் எழுப்பிய கேள்வி மறுமை (இப்பேரண்டம் அழிக்கப்பட்டு, மற்றொரு வடிவத் தில் இதைத் திரும்பப் படைத்து, மனிதர்கள் உயிர்ப் பிக்கப்பட்டு, விசாரணை நடத்ததப்படுவதாகக் கூறப்படும் நிகழ்ச்சியின் நேரம்) எப்போது என்பதேயாகும் என்பதால் இறைத் தூதரிடம் அவர்கள் எதனைக் குறித்து கேள்வி தொடுத்துக் கொண்டிருந்தார்களோ அதனைக் குறித்தே திருமறையும் பதில் சொல்லியது என்பதை ஏற்றுக் கொள்வதில் இதற்கு மேல் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லையன்றோ?

இப்போது நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத்தின் (16:77) பின்னணியை ஓரளவு விளங்கிக் கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள `நேரம் என்பது மறுமை எப்போது தொடங்கும் என்பதைப் பற்றியதே எனும் ஐயமறத் தெரிந்து கொண்டோம். எனவே இவ்வசனத்தில் குறிப்பிட்டபடி மறுமை ஏன் இன்னும் தொடங்கவில்லை என்பதை இப்போது ஆய்வு செய்வோம்.

வேறுபட்ட காலக் கணக்குகள்

நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத்தின் பொருள் சுருங்கக் கூறின் “(மறுமை) நேரத்தின் காரியம் கண் இமை வெட்டுவது போன்றதா அல்லது அதை விட நெருங்கியதோ அன்றி வேறு இல்லை என்பதாகும். இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டதற்கேற்ப காரியம் நடைபெற்றிருந்ததால் இந்த வார்த்தைகள் சொல்லி முடிப்பதற்குள் மறுமையின் நேரம் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இந்த வார்த்தை கள் சொல்லப்பட்டு 1428 வருடங்கள் கழிந்த பிறகும் மறுமை நேரம் துவங்கவில்லை. இது ஏன் என்பதே இப்போது நம் முன் இருக்கும் கேள்வியாகும். பேரண்டம் படைக்கப் படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் அந்தக் கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கக்கின்படியாகும். அக்காலத்தில் நாமும் இல்லை நாம் அறிந்தவரை பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக்கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படியன்று. எனவே இப்பேரண்டத்தின் அழிவு (மறுமையின் ஆரம்பம்) எப்போது என்பது குறித்து இறைவன் கூறியதும் நமது கணக்கின்படி யன்று. மாறாகப் பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். இதன் காரணமாகவே மறுமை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதே இந்த வினாவிற்குரிய பதிலாகும்.

மேற்கண்ட பதிலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு கண் இமை வெட்ட நமக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதைக் கவனிப்போம். இமை வெட்டுவ தற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு வினாடியில் இரண்டு, மூன்று முறை நம்மால் இமை வெட்ட முடியும். ஆயினும் திருக்குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்துவிடும் எனக் கூறுவதில் திருப்தி அடையாமல் அதை விடக் குறைவான நேரத்தில் மறுமை வரக் கூடும் எனக் கூறுகிறது. எனவே இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட் (அடைட ளநஉடினே) கணத்தில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கம் இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

திருக்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும்அற்புதத்தின் பால் நாம் இப்போது வந்து சேர்ந் துள்ளோம்! ஆம்! யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவைக் கண்டு பிடிப்பதற்கான ஓர் அரிய சூத்திரத்தை இப்போது நாம் திருமறையிலிருந்து முதலாவதாகக் கண்டு விட்டோம். விளக்கமாகக் கூறுவோம்.

திருக்குர்ஆன் கூறும் கணித சூத்திரம்

பேரண்டத்தின் அழிவு (மறுமையின் ஆரம்பம்) எப்போது என்பது பற்றித் திருமறை கூறிய காலஅளவு ஏறத்தாழ 0.2 வினாடி எனத் திருமறை வசனத்திலிருந்து நாம் அனுமானித்தோம். ஆயினும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1428 வருடங்களாகியும் இப்பேரண்டம் இன்னும் அழிவுறத் துவங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதைய 1428 வருடங் களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1428 வருடங்களை விட அதிகம் என்பதாகும். சுருக்கமாக : 0.2 வினாடி ழூ 1428 வருடங்கள்

இந்த இடத்தில் திருமறையின் கணக்குப்படி பேரண்டத்தின் 0.2 வினாடி என்பது உலகியல் கணக்கின்படி 1428 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை `1428 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1428 வருடங் களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் நிலைபெறும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1428 வருடங் களுக்கு மேல் என்றே குறிப்பிட முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1428 என்ற எண் நிரந்தர (ஊடிளேவயவே)மான தன்று என்றும் அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1429, 1430, 1431 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் வாசகர்கள் எளிதாக விளங்கி இருப்பீர்கள்.

இப்போது வாசகர்களிடம் மற்றொரு வினா எழலாம். “பேரண்டத்தின் 0.2 வினாடி என்பதன் சரியான விளக்கம் இப்போதும் மர்மமாகவே இருக்கிறதன்றி திட்டமாக அதன் காலத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லையே! இது ஏன்? என்பதே அந்த வினாவாக இருக்கும். இதை விளங்குவதற்கு நாம் வேறு சில விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே முதலாவதாக பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறப் பட்டிருக்கும் ஆறு நாட்கள் என்பதன் கால அளவு நமது உலகியல் கணக்குப்படி திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்தால் கணக்கிடுவோம். அக்கணக்கு வருமாறு:

கணக்கிடும் முறை

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி

ஒரு நாளில் உள்ள மொத்தம்

0.2 வினாடிகள் = 0.2 வினாடி ஒ வினாடி ஒ நிமிடம் ஒ மணி

5 ஒ 60 ஒ 60 ஒ 24

= 43200 (0.2 வினாடிகள்)

ஃ ஆறு நாட்களுக்கு = 43200 ஒ 6 = 2259000 —– 1

பேரண்டத்தின் 0.2 வினாடியின்

காலஅளவு = 1428 (உ.வ.மே) *

ஃ 6 நாட்களில் மொத்தமுள்ள

0.2 வினாடிகளின் கால அளவுக்கு

நிகரான உலகியல் வருடங்கள் = 1428 ஒ 2259000

= 370,13,76,000 (உ.வ.மே)

என்னவென்று புகழ்வோம் இம்மாமறை தந்த கணித சூத்திரம் தனை!

திருக்குர்ஆன் விடுக்கும் அறை கூவலிலிருந்து உருவா கும் ஏனைய புரட்சிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் பளிச்சிடுவது அதன் அறிவுப் புரட்சியாகும். அந்த அறிவுப் புரட்சியின் ஓர் அம்சமே இது போன்ற அறிவியல் புரட்சி யாகும். திருமறையில் காணப்படும் அதன் அறிவுப் புரட்சி வையகத்தில் அதை ஈடு இணையற்ற அற்புதமாக விளங்கச் செய்கிறது!

இது வரை உலகில் தோன்றிய மாபெரும் அறிவியலாளர் களால் நடத்தப்பட்ட பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கே இப்பேரண்டம் உருவாகுவ தற்கு 500 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங் களாயின என்பது. இந்த அறிவியல் உண்மையன்றோ திருமறையின் கணித சூத்திரம் கூறிக் கொண்டிருக்கிறது!

பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடிவருடங்களாயின என கானன் லிமாளிட்டரை மேற்ள் காட்டி ஹார்லோ ஷேப்லி கூறுகிறார்!

பேரண்டம் உருவாகுவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப் பட்டன எனக் கூறுகிறார் டீஃபன் று. ஹாக்கிங்!

பேரண்டம் உருவாக்கப்படுவதற்கு 370 கோடி (முழுமை செய்த எண்ணில்) வருடங்களுக்கு மேல் தேவைப்பட்டன எனக் கூறுகிறது இந்த அற்புத் திரு மறையிலிருந்து நாம் கண்ட கணித சூத்திரம்!

திருமறை கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறிவிளலளர்களால் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளோடு ஒட்டி வருகிறதல்லவா!

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குர்ஆனை மெப்பிக்கிறதா? அல்லது பொய்ப்பிக்கிறதா? என்பதைக் கண்டறிய முயற்சி செய்பவர்களுக்கு மிகச் சிறந்த ஆதாரமே பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைப் பற்றிய திருக்குர்ஆன் கூறும் கணித சூத்திரமாகும். ஏனெனில் திருக்குர்ஆன் அறிவியலுக்கு முரணானது எனக் கூற நிராகரிப்பாளர்கள் பயன்படுத்தி வந்த முக்கியமான விமர்சனமே திருமறை கூறும் பேரண்டத்தின் படைப்புக் காலமாகும். இப்போது அவர்கள் எண்ணி வந்ததற்கு மாறாக திருமறை கூறிக் கொண்டிருக்கும் பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவை அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிரூபிக்கும் பணியையே செய்து வருகின்றன எனப் புரிந்து கொள்வதில் இதற்கு மேல் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லை.

எதிர் நோக்கும் விமர்சனம்

பேரண்டம் படைக்கப்பட்ட கால அளவைக் கண்டு பிடிக்க திருமறையிலிருந்து நாம் பெற்ற சூத்திரத்தைக் காணும் நமது விமர்சகர்கள் இக்கணித சூத்திரம் நமக்கு உதவுவதை விட அவர்களின் நிலைபாட்டிற்கே கூடுதலாக உதவும் என மீண்டும் தப்பெண்ணம் கொள்ளக்கூடும். ஏனெனில் இப்பேரண்டம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் நிலை நின்றாலும் திருமறை கூறிய பேரண்டப் படைப்பின் கால அளவுக்கு (6 நாட்களுக்கு) அது சாதகமாகவே அமையும். அதே நேரத்தில் இப்பேரண்டம் இன்னும் கிட்டத்தட்ட ஒரு பதினாயிரம் வருடங்கள் நிலைத்திருந்தால் அது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிவியல் அனுமானத்திற்கு எதிராக அமையும்.

சான்றாக இப்பேரண்டம் இன்னும் 8572 வருடங்கள் நிலைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால் திருக்குர்ஆன் வழங்கப்பட்டு அன்றைக்கு (8572 வருடங்கள் கழித்து) 10,000 வருடங்கள் (1428 + 8572) ஆகிவிட்டது எனப் பொருளாகும். அந்த நிலையில் திருமறை அப்போதும் கூறிக் கொண்டிருக்கும் “மறுமை நேரம் கண் இமைப்பது போன்றதோ அல்லது அதை விடக் குறைந்தோ அன்றி வேறில்லை எனும் திருமறை வசனத்திற்கு என்ன பொருளாக இருக்கக் கூடும்? அப்போது அதன் பொருள் பேரண்டத்தின் 0.2 வினாடி (கண் இமைப்பதை விடக் குறைந்த நேரம்) என்பது உலகியல் கணக்குப்படி 10,000 வருடங்களை விட மிகுதியானது என்பதாகும். இந்த நிலையில் திருமறையில் இருந்து நாம் பெற்ற சூத்திரத்தின்படி பேரண்டம் படைக்கப்பட்டதாகத் திருமறை கூறிய ஆறு நாட்களின் கால அளவு கணக்கிட்டால் அது இவ்வாறு அமையும்.

விமர்சகரின் கணக்கு

பேரண்டத்தின் 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி = 10,000 வருடங்கள்

6 நாட்களில் உள்ள மொத்தம்

0.2 வினாடி அலகுகள் =22,59,000 —– 1

ஓர் அலகு 0.2 வினாடியின்

கால அளவு 10,000 வருடங்களுக்கு

மேல் என்றால் 22,59,000

அலகுகளின் கால அளவு = 22,59,000 ஒ 10,000

=2259,00,00,000 வருடங்களுக்கு மேல்.

மேற்கண்ட கணக்கின் அடிப்படையில் திருக்குர்ஆன் வழங்கப்பட்ட பின்னரும் பதினாயிரம் வருடங்கள் இப் பேரண்டம் நிலை பெற்றால் பேரண்டம் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் உலகியல் கால அளவு திருமறையிலிருந்து பெற்ற கணித சூத்திரத்தினடிப்படையில் கணக்கிடும் போது 2,250 கோடி வருடங்களுக்கு மேல் எனும் இலக்கத்தைக் காட்டுகிறது. இது அறிவியலாளர் ஹாக்கிங் கூறும் உயர்ந்த அளவாகிய 2000 கோடி வருடங்களை மீறி விடுகிறது. எனவே நமது விமர்சகர்கள் இக்கணித சூத்திரம் திருக்குர்ஆன் அறிவியலுக்கு முரணானது எனும் கருத்தை ஊர்ஜிதப் படுத்தவே உதவுகிறது என வாதிடக் கூடும் எனக் கூறினோம்.

இந்த இடத்தில் இப்பேரண்டம் இன்னும் 8500 வருடங்களுக்கு மேல் நிலை பெற்றிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது எனும் மறுகேள்வி எழலாம். ஆயினும் இன்றைய அறிவியல் அனுமானங்களின்படி இச்சூரியக் குடும்பம் அழிவுறுவதற்கே பல மில்லியன் வருடங்கள் தேவைப்படும் எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். பேரண்டம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டால் குறைந்த பட்சம் 1000 கோடி வருடங்களுக்குள் அழிந்து விடுவதற்கான எவ்வித அறிகுறியும் இப்போது தென்படவில்லை எனக் கூறுகிறார் ஹாக்கிங்!

“1000 கோடி வருடங்கள் எங்கே! வெறும் 10,000 வருடங்கள் எங்கே? எனக் கூறி நமது கணிப்பை விமர்சகர்கள் எள்ளி நகைக்கக் கூடும். ஆனால் திருமறை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மற்றுமோர் அற்புதத்தையும் அவர்கள் பார்த்து விட்டுப் பிறகு நகைப்பதா அல்லது திகைப்பதா? என முடிவு செய்யட்டும்.

திகைக்க வைக்கும் திருக்குர்ஆன்

திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்தி லிருந்து இப்பேரண்டம் வெறும் பதினாயிரம் வருடங்கள் கூட நீடிக்கப் போவதில்லை எனக் கண்டோம். ஆனால் இப்பேரண்டம் ஆயிரம் கோடி வருடங்களுக்குள் கூட அழிவுறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என ஹாக்கிங் கூறுகிறார். இப்போது திருக்குர்ஆன் கூறுவது உண்மையாக இருப்பின் ஒன்று ஹாக்கிங் செய்த அறிவியல் அனுமானம் தவறாக இருக்க வேண்டும் அல்லது பேரண்டம் விரைவிலேயே அழிவதற்கான அறிகுறிகள் தென்பட்டிருந் தும் அவர் பொய் கூறுவதாக இருக்க வேண்டும். இவற்றுள் எது உண்மை என திருக்குர்ஆனைக் கேட்டால் அதன் வரிகளுக்கிடையில் இருந்து வெளிப்படும் பதில் நம்மை வியக்கச் செய்கிறது.

ஆம்! ஹாக்கிங் அவர்களின் அறிவியல் அனுமானத்தி லும் தவறில்லை, அவர் கூறுவது பொய்யும் இல்லை என்பதே திருமறையின் பதிலாகும். இதெப்படி சாத்தியமாகும் என நம்மைத் திகைப்பிலாழ்த்தும் சத்தியத் திருமறை அதற்கான காரணத்தையும் அதன் பற்பல வசனங்களில் கூறிக் கொண்டி ருக்கிறது. சான்றாக :

உங்களிடம் அந்த நேரம் “திடீரென வரும் வரை அல்லது (மறுப்போர்க்கு) பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏக இறைவனை) மறுப்போர் இதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.

(22 : 55)

அவர்கள் உணராத நிலையில் திடீரென்று அந்த நேரம் அவர்களிடம் வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?

(43 : 66)

பேரழிவுக்கு அறிகுறிகள் இல்லை

மேற்கண்ட திருமறை வசனங்களில் அடிக்கோடிடப் பட்ட வாசகங்களைக் கவனித்தால் அவற்றுள் பேரண்டத்தின் அழிவைப் பற்றி மிக முக்கியமாக இரண்டு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். முதலாவது பேரண்டத்தின் அழிவு திடீரென ஏற்படக் கூடியதாகும் என்றும் இரண்டாவது அந்த அழிவு நிகழப் போகும் விபரத்தை நம்மால் முன்கூட்டியே உணர்ந்து கொள்ள முடியாது என்பதுமாகும். பேரண்டத்தின் அழிவு நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்குரிய அறிகுறிகள் இப்பேரண்டத்தில் இருந்து வருவது நமது அறிவியல் கண்களுக்குப் புலப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அறிகுறிகள் எதுவும் தென்படாமல் பேரண்டம் அழிவுறுமாயின் அதுவே நம்மால் உணர்ந்து கொள்ள இயலாத நிலையிர் பேரண்டம் அழிவுறும் நிகழ்ச்சியாகும். இப் பேரண்டம் அப்படிப்பட்ட நிலையிலேயே அழிவுறும் என்பதே மேற்கண்ட திருமறை வசனங்கள் தெரிவிக்கும் செய்தி யாகும்.

(மேலும் பார்க்க 6 : 31, 12 : 107, 21 : 40, 47 : 18)

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டத்தின் அழிவு எந்தக் கணத்தில் துவங்குமோ அந்தக் கணம் வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் நமக்குப் (நமது அறிவியல் அறிவுக்கு) புலப்படாது என்பதையே திருமறை கூறிக் கொண்டிருக்கிறது. திருமறையின் இக்கூற்றிலிருந்து 1000 கோடி வருடங் களுக்குள் பேரண்டம் அழிவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனும் ஹாக்கிங் அவர்களின் அனுமானம் தவறான அனுமானம் இல்லை என்பதும் அவர் கூறியது பொய் இல்லை என்பதும் ஐயமறத் தெளிவாகி, நம்மை வியப்பிற்குள் ஆழ்த்துகிறது!

ஹாக்கிங் அவர்களின் எந்த அறிவியல் அனுமானம் (ஆயிரம் கோடி வருடங்களுக்குள் இப்பேரண்டம் அழியாது எனும் அனுமானம்) திருமறையிலிருந்து நாம் பெற்ற கணித சூத்திரத்தை திருமறையின் விமர்சகர்களுக்குச் சாததகமாக மாற்றி விடும் எனக் கருத வாய்ப்பு இருந்ததோ உண்மையில் அதே ஹாக்கிங் அவர்களின் அதே அறிவியல் அனுமானத்தை இந்த ஒப்பற்ற மாமறை தனக்கே சாதகமாக, தன்னையே மெய்ப்பிக்கும் அறிவியல் அனுமானமாக மாற்றி விட்ட வித்தையைக் கண்டு திகைப்படையாமல் இருக்க முடியுமா?

இப்பேரண்டம் அழிவதற்கான எந்த அறிகுறியும் அது அழிவுறப் போகும் வினாடி வரை தென்படவே தென்படாது எனத் திருமறை கூறினால், ஆம்! ஆம்! தென்படவே தென்படவில்லை எனக் கூறி திருமறையை மெய்ப்பிக்க இத்துறையில் ஆற்றல் பெற்ற அறிவியல் நிபுணர்களும் இருக்க வேண்டுமல்லவா? உண்மையிலேயே அப்பணியைத் தான் ஹாக்கிங் போன்ற உலகின் தலை சிறந்த விஞ்ஞானி கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனும் போது திகைப்பிற்கு மேல் திகைக்க வைக்கும் இம்மாமறை திருக்குர்ஆனின் தெய்வீக ஆற்றலுக்கு இதை விடச் சிறந்த அறிவியல் ஆதாரம் வேறென்ன வேண்டும்?

பேரண்டம் அழிவதற்கான எவ்வித அறிகுறிகளும் தென்படாமல் அது திடீரென அழிவுறும் என்பது இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு வியப்பளிப்பதில்லை. ஏனெனில் அதனை ஆக்கவும், அழிக்கவும் ஆற்றலுள்ளவன் தன் ஆளுகையில் அதை வைத்திருக்கிறான் என்றும் அழிப்பதற் கென்றே படைக்கப்பட்டிருக்கும் இப்பேரண்டத்தை அவன் நாடிய போது அழிப்பான்; ஆயினும் அவன் அழிக்கப் போகும் கணம் வரை அதில் அழிவதற்கான எவ்வித அறிகுறியும் தென்படப் போவதில்லை என்பதும் திருக்குர்ஆனிலிருந்து அவர்கள் விளங்கியுள்ளார்கள்.

சான்றாக உலகை உலுக்கிய இரண்டு அழிவுச் செய்தி களை சில வருடங்களுக்கு முன் நாம் பார்த்தோம். முதலாவது பாப்ரி மஜிதின் கட்டிடத்திற்கு மேல் விஷமிகள் ஏறும் வரை அக்கட்டிடம் அழிவதற்கான எந்த அறிகுறியும் அக்கட்டிடத் தில் தென்படவில்லை. ஆனால் விஷமிகள் அதன் மீது ஏறிய அடுத்த கணமே அது அழியத் துவங்கிற்று. இதைப் போன்று உலக வர்த்தக மையத்தை (றுடிசடன கூசயனந உநவேநச) விஷமிகள் விமானத்தால் இடிக்கும் வரை அக்கட்டிடத்தில் அழிவதற்கான எந்த அறிகுறியும் தென்பட்டிருக்காது. ஆயினும் விஷமிகள் அதனைத் தாக்கியதும் அது அழிவுறத் துவங்கியது. இதைப் போன்று பேரண்டத்தை அழிக்க வல்ல பேரொலி (நம் அறிவுக்கு இது வரை எட்டாத விசித்திரமான ஒலி) ஒலிக்கப் பட்ட அதே கணத்தில் அதன் அழிவு தொடங்கி விடும்.

இயற்கையும் செயற்கையும் வெவ்வேறானவை

இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மிகமிக முக்கியமான செய்தி யாதெனில் உலக வர்த்தக மையம் சில விஷமிகள் தகர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறையிலிருந்து மிகவும் நம்பத் தகுந்த செய்திகள் அமெரிக்க ஜனாதிபதிக்கு அது தகர்க்கப்படும் சில நாட்களுக்கு முன் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தங்கள் நாட்டிலேயே மிகச் சிறந்த ஒரு பொறியாளர்கள் குழுவை அமைத்து அக்கட்டிடம் உடனே அழிவுறுவதற்கான அறிகுறிகள் ஏதேனும் அக்கட்டிடத்தில் தெரிகிறதா? என சோதித்து அறிக்கை சமர்ப்பிக்கக் கூறினால் அவரைப் பற்றி என்னென்று சொல்வது? ஒரு கால் ஒரு ஜனாதிபதி இப்படிப்பட்ட நிலையில் ஒரு பொறியாளர் குழுவை அமைத்ததாகவும் அக்கட்டிடத்தைச் சோதனை யிட்டு அக்கட்டிடம் குறைந்த பட்சம் மூன்று நூற்றாண்டு களுக்குள் அழிவுறும் அறிகுறிகள் எதுவும் அதில் தென்பட வில்லை என அறிக்கை சமர்ப்பித்ததாகவும் வைத்துக் கொள்வோம். இந்த அறிக்கைக்கும் உளவுத்துறை சமர்ப்பித்த தகவலுக்கும் இடையில் என்ன தொடர்பு?

பொறியாளர்களின் இந்த அறிக்கையைப் பார்த்து விட்டு பகுத்தறிவுள்ள யாரும் பொறியாளர்களின் ஆய்வறிக்கையில் தவறு நேர்ந்துள்ளது என்றோ அல்லது அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றோ கூற மாட்டார்கள். ஆயினும் விஷமிகள் தடுக்கப்படவில்லையெனில் அக்கட்டிடம் உடனே தகர்க்கப்பட்டு விடும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கும்.

இதைப் போலவே இப்பேரண்டம் 1000 கோடி வருடங்களுக்குள் அழிவுறும் அறிகுறிகள் அப்பேரண்டத்தில் தென்படவில்லை என அறிவியலாளர்கள் கூறினால் அக்கூற்று உண்மையாகவே இருந்த போதிலும் திருக்குர்ஆன் கூறும் பேரண்டத்தின் அழிவு அறிவியலாளர்கள் கூறுவதி லிருந்து வேறுபட்டதாகும் என்பது மிக எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும். அறிவியலாளர்கள் பேரண்டத்தின் இயற்கையான (பேரண்டத்தை இயக்கும் விதிகளின்படி நடைபெறும் நிகழ்ச்சிகள்) அழிவைக் குறித்துப் பேசும் போது திருக்குர்ஆன் இறைவனால் நிகழ்த்தப்படும் செயற்கையான (நாம் இது வரை அறிந்திராத மற்றொரு விதியால் செய்யப் படுபவை) அழிவைக் குறித்தே பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று

இந்த இடத்தில் நாம் மனதிற்கொள்ள வேண்டிய செய்தி யாதெனில் இப்பேரண்டம் ஆயிரம் கோடி வருடங்களுக்குள் அழியப் போவதில்லை எனும் அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் தீர்க்க தரிசனம் இப்பேரண்டத்தின் பேரழிவைப் பற்றிய திருக்குர்ஆனின் கூற்றைப் பொய்ப்பிக்கவில்லை மாறாக மெய்ப்பிக்கவே செய்கிறது என்பதாகும். ஏனெனில் மறுமை எப்போது நடைபெறும் என்பதை இறைவன் ஒருவனைத் தவிர வேறு ஒருவராலும் முன் கூட்டி அறிய முடியாது என்பதும் அதன் வருகை திடீர் வருகையாகவே இருக்கும் என்பதும் திருக்குர்ஆனின் கூற்றாகும். எனவே திருக்குர்ஆன் கூறியது உண்மையாக இருக்க வேண்டு மானால் பேரண்டம் அழிவதற்கான எந்த அறிகுறியும் பேரண்டத்தில் இப்போது தென்படக் கூடாது. எனவே பேரண்டம் இப்போது மட்டுமின்றி 1000 கோடி வருடங்களுக் கிடையில் கூட அழியப் போவதற் கான எந்த அறிகுறியும் அதில் தென்படவில்லை எனக் கூறி திருக்குர்ஆனை மெய்ப்பிக்கும் பணியைத் தான் ஹாக்கிங் செய்து கொண்டிருக்கிறார். தன்னை மறுப்பவர்களிலிருந்தே தமது மெய்மைக்குரிய சான்றுகளைக் கொண்டு வருவதும் திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகும்.

பெரும் சுருக்கத்தின் அறிகுறிகள்

பேரண்டத்தின் அழிவின் போது நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளில் பலவும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. அவற்றுள் சில முக்கியமானவை வருமாறு :

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (அதைச்) செய்பவராவோம்.

(21 : 104)

அந்நாளில் வானம் உருகிய செம்பு போல் ஆகும்.

(70 : 8)

நட்சத்திரங்கள் விழும் இடம் மீது சத்தியம் செய்கிறேன்.

(56 : 75)

சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது, மலைகள் பெயர்க்கப்படும் போது

(81 : 1,2)

அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் நீங்கள் அவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

(30 : 11,12)

பேரண்டத்திற்கு ஏற்படப் போகும் அழிவைக் கூட திருக்குர்ஆன் வர்ணிக்கும் போது இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்க கட்டம் வரை நாம் பெற்றுள்ள அறிவியல் அறிவால் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அமைந் திருப்பது திருமறையின் அறிவியல் ஆய்வாளர்களை வியப்பின் சிகரத்திற்கே அழைத்துக் செல்லக் கூடியதாகும். அவ்வர்ணனைகளில் கீழ்க்காணும் அறிவியல் தகவல்கள் அடங்கியுள்ளன :

1. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானம் சுருட்டப்படுதல்

2. பேரண்டப் படைப்பை முதலில் துவக்கியது போன்றே மீண்டும் தொடங்குதல்

3. வானம் உருகிய செம்பைப் போல் ஆகுதல்

4. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் இடங்கள்

5. சூரியன் சுருட்டப்படுதல்

6. மலைகள் பெயர்க்கப்படுதல்

மேற்கண்ட ஆறு பிரதான நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி எண்-2 ஐத் தவிர மற்றவை யாவும் இப்பேரண்டத்தின் அழிவைக் குறித்ததாகும். அறிவியல் நோக்கில் இப் பேரண்டத்திற்கு இப்போது இல்லாமல் 1000 கோடி வருடங் கள் கழித்தாயினும் ஓர் அழிவு உண்டு என்பதும் அதன் அழிவு ஒரு “பெரும் சுருக்கம் (க்ஷபை உசரஉ) ஆகவும் இருக்கும். பேரண்டம் அவ்வாறு சுருங்கினால் என்னென்ன நிகழ வாய்ப்புண்டோ அந்த நிகழ்ச்சிகளே மேற்கண்ட வர்ணனை யில் கூறப்பட்டுள்ளது.

விரிவடைந்து கொண்டே இருக்கும் ஒரு பொருளின் விரிதலை நிறுத்தி விட்டு அப்பொருள் சுருட்டப்பட்டால் அப்பொருள் சுருங்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. வானகப் பொருட்கள் திட நிலையிலும், வாயு நிலையிலும், பிளாமா நிலையிலும் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அவை சுருக்கமடையும் போது திடப் பொருட்கள் மேலும் மேலும் அடர்த்தியாகும். பூமி சுருக்கமடையும் போது புடைத்து நிற்கும் கன் மலைகள் தெறித்து விழும் காட்சியைப் போன்றதே மலைகள் பெயர்க்கப்படுவதாக திருக்குர்ஆன் கூறும் நிகழ்ச்சியாக விளங்க முடிகிறது. அவ்வாறே வாயுப் பொருட்களும் பிளாமாவும் சுருக்கமடையும் போது முதலில் அவை திரவப் பொருளாக மாறும். சூரியனும் அது போல் வானத்திலுள்ள கோடானு கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் ப்ளாமா நிலையிலுள்ள வாயுப் பொருட்களாக இருப்பதால் அவை சுருங்கும் போது சுருக்கமடைந்து முதலில் திரவமாக மாற்றமடையும். இந்த நிலையில் ஆகாயத்தைப் பார்த்தால் எவ்வாறு தென்படுமோ அந்த நிலையே வானம் உருகிய செம்பைப் போல் ஆகும் எனத் திருக்குர்ஆனின் வர்ணனையாக நமக்கு விளக்கம் கிடைக்கிறது.

வானத்தின் வாயு மற்றும் ப்ளாமாப் பொருட்கள் சுருக்கமடைந்து திரவமாக மாறிய பிறகும் அவை தொடர்ந்து சுருக்கமடைந்து திடப் பொருளாக மாறுகின்றன. இவ்வாறு திடப் பொருளாக மாறிய நட்சத்திரங்கள் முதலாவதாக அவைகளின் காலக்சியின் ஈர்ப்பு மையத்தில் வீழ்கின்றன. இந்த நிகழ்ச்சியையே திருக்குர்ஆன் நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் இடங்கள் எனக் கூறுவதாக விளங்குகிறோம். அதன் பிறகு அவை மீண்டும் சுருங்கி ஒவ்வொரு காலக்சியும் கற்பனைக் கெட்டாத அடர்த்தி மிகு பொருட்களாக மாறி பேரண்டத்தின் ஈர்ப்பு மையத்தில் வீழ்கின்றன. அதன் பிறகும் அங்கு நிலவும் அதி அதி பயங்கரமான ஈர்ப்பு விசையால் அப்பொருட்கள் யாவும் மேலும் மேலும் சுருக்கமடைந்து எல்லையற்ற அடர்த்திக்கு (ஐகேவைந னநளேவைல) உள்ளாகி அவை களின் பரிமாணம் பழையபடி “பூஜ்யமாகி இப்பேரண்டமே இல்லாது போகின்றது.

பேரண்டமே இல்லாது போவதால் மீண்டும் ஒரு பேரண்டம் (பரலோகம் – மறுமை) இறைவன் படைக்க நாடினால் முதலில் அவன் படைத்தது போன்று `குன் எனும் கட்டளை பிறப்பிப்பான் என்றும் அந்த மைக்ரோ கணத்திலேயே மீண்டும் ஒரு பெருவெடிப்பும் அதிலிருந்து பரலோகமும் தோன்றும் என்பதையும் “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம் எனக் கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து நாம் விளங்கலாம்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து இப்பேரண்டத்திற்கு ஒரு அழிவு காலம் உண்டு என்பதும் அது தொலைவில் இல்லை மிக நெருக்கமானதே எனக் கூறும் திருக்குர்ஆன் செய்திகள் மனித அறிவிலிருந்து தோன்றியதில்லை என்றும் அது இறைஞானத்தின் வெளிப்பாடே என்பதில் இதற்கு மேல் ஐயம் கொள்ளத் தேவையில்லை. எனவே இப்பேரண்டத் திற்கு குறைந்த பட்சம் ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன் அழிவில்லை. எனவே அதைப் பற்றிய கவலை இப்போது தேவையில்லை என அறிவியலாளர் ஹாக்கிங் கூறுவது (பார்க்க : பக்கம் 157 மற்றும் 158) நாம் முன்னர் கூறிய உதாரணத்தில் குறிப்பிட்டவாறு கட்டிடத்தைச் சோதித்த பொறியாளர்களின் அறிக்கையைப் போன்றதாகும். எனவே ஹாக்கிங் அவர்களின் அறிக்கையில் தவறில்லையென்றாலும் இம்மாபெரும் பேரண்டம் (ஹாக்கிங் கூறும் பேரண்டத்தின் வயது – 1000 வடி 2000 கோடி வருடங்கள் என்பது – சரியாக இருந்தால்) இதற்கு மேல் அதிக பட்சம் வெறும் 7500 வருடங்கள் கூட நிலை நிற்கப் போவதில்லை. அதற்குள் இப்பேரண்டத்தின் சுருங்கு முகம் (உடிவேசயஉவபே யீயஉந) எப்போது வேண்டுமானாலும் ஆரம்பித்து விட வேண்டுமென்பதே திருக்குர்ஆனிலிருந்து நாம் கண்ட கணித சூத்திரத்திலிருந்து விளங்கும் செய்தியாகும்.

ஆறு நாட்களின் முக்கியத்துவம்

இந்த அத்தியாயத்தை முடிப்பதற்கு முன்னர் மற்றொரு பிரதான செய்தியைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைத் திருக்குர்ஆன் கூறும் போது உலகியல் கணக்குப்படி அன்றி பேரண்டத்தைத் தோற்றுவிக்கும் போது இறைவனிடம் கணக்கிடப்பட்ட காலத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாகும் என முன்னர் கண்டோம். எனினும் பேரண்டம் படைக்கப்படுவதற்கு “ஆறு நாட்கள் தேவைப்பட்டன எனக் கூறியதற்கு பதில்

பேரண்டம் தோன்றுவதற்கு நீண்ட காலகட்டம் தேவைப் பட்டது எனக் கூறியிருந்தால் ஏராளமான விமர்சனங் களைத் தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் சிலருக்கேனும் தோன்றுகிறது. திருக்குர்ஆனின் மீது எழுகின்ற இது போன்ற விமர்சனங்கள் அது கூறும் செய்திகளுக்குள் இறங்கிச் சென்று ஆய்வு செய்யாமல் நுனிப்புல் மேய்வதால் ஏற்படுவ தாகும் என்பதை இந்த அத்தியாயத்தில் நாம் நிறைவாகக் கண்டு விட்டோம். இப்படிப்பட்ட பிழையான விமர்சனங்கள் எக்காலத்திலும் இருந்தே தீரும். ஆயினும் நவீன அறிவியல் உலகம் பேரண்டம் படைக்கப்பட்ட காலத்தைக் கூறும் கணக்கை திருக்குர்ஆனுடைய கணித சூத்திரத்திலிருந்து நாம் வந்தடைய வேண்டுமானால் திருக்குர்ஆன் பயன் படுத்திய ஆறு நாட்கள் என்ற வார்த்தைகள் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதும் அந்த வார்த்தைகளுக்குப் பதில் நீண்ட காலம் அல்லது நீண்ட யுகம் என்பன போன்ற விமர்சகர்கள் கூறும் வார்த்தைகள் ஒரு போதும் பயன் படுத்தப்பட்டிருக்கக் கூடாது என்பதே உண்மையாகும்.

உள்ளபடியே பேரண்டம் படைக்கப்பட்டதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் ஆறு நாட்கள் எனத் திருக்குர்ஆன் கூறியதன் காரணமாகவே திருக்குர்ஆனுடைய கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி நவீன அறிவியல் உலகின் கணிப்பு (பேரண்டம் தோன்றுவதற்கு 1000 வடி 2000 கோடி வருடங்கள் ஆயின எனும் கணிப்பு) திருக்குர்ஆனுடைய கணிப்பிற்கு ஒத்து வருகிறதா எனக் கண்டு பிடிக்க முடிந்தது. ஆனால் ஆறு நாட்கள் என்பதற்குப் பதில் நீண்ட கால அளவு அல்லது நீண்ட யுகங்கள் என்ற சொற்பிரயோகங்கள் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் அக்கால கட்டங்களின் உலகியல் கால அளவை நம்மால் ஒரு போதும் கண்டு பிடித்திருக்க முடியாது என்பதோடு அறிவியல் சமுதாயத் திற்கு பெருவெடிப்புக் கோட்பாடு திருக்குர்ஆன் ஒப்புக் கொள்கிறதா என்பதைக் கண்டறிவதற்குப் பயன்படும் திருக்குர்ஆனுடைய முக்கியமான கணித சூத்திரமும் பயனற்றுப் போயிருக்கும். எனவே திருக்குர்ஆன் பயன் படுத்திய ஆறு நாட்கள் எனும் சொற்பிரயோகம் மிகவும் பொருட் செறிவுள்ளதும் தவிர்க்க முடியாததுமாகும்.

இந்த அத்தியாயத்தில் நாம் இது வரை விவாதித்த விபரங்கள் இப்பேரண்டம் எவ்வாறு படைக்கப்பட்டது எனத் திருக்குர்ஆன் கூறுகிறதோ அதற்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் சான்றளித்துக் கொண்டிருக்கிறது என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாகிய பெருவெடிப்புக் கோட்பாட்டிலிருந்து பெறப்படும் இந்த அதி நவீன உண்மைகளெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் வந்த திருக்குர்ஆனில் கூறப்பட வேண்டுமானால் திருக் குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதும் இறை ஞானத்தின் வெளிப்பாடுமாகும் என்பதற்கு இது ஒரு வலுவான அறிவியல் ஆதாரம் என்பதைப் புறக்கணிக்க முடியாது.

இந்த வசனத்தில் திருக்குர்ஆன் புரட்சிகரமான மற்றும் ஓர் அறிவியலைக் கூறுகிறது. சூரியன் கண்களைக் கூசும் பிரகாசத்துடன் வெண்மையான ஒளியை வெளியிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

நமது வாழ்நாளில் வெவ்வேறு வகையான ஒளிகளை சூரியன் வெளியிட்டதை நாமும் பார்த்ததில்லை அல்லது திருமறை இறங்கிய காலத்திலோ அதற்கு முன்னரோ உலகில் தோன்றிய விஞ்ஞானிகளில் யாரும் சூரியன் வேறு பல வகையான ஒளிகளையும் உள்ளடக்கியதாகும் எனக் கூறியதில்லை. ஆயினும் சூரியனைப் படைத்த இறைவன் அதனை ஒரே ஒளியாக அன்றி பல வகையான ஒளிகளாகப் படைத்துள்ளான் என ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி விட்டான்!

திருமறை கூறிய இந்த அறிவியல் உண்மையை அறிவியல் உலகம் கண்டுபிடிக்க மேலும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. திருக்குர்ஆன் பிறகு பதினொன்று நூற்றாண்டுகளில் அறிவியல் உலகம் பற்பல அறிவியல் உண்மைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கற்றுக் கொண்டே வந்து அவைகளின் துணையுடன் பதினெட்டாம் நூற்றாண் டுக்குள் நுழைந்ததும் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் கூறிய இந்த அறிவியல் உண்மையை முதன் முதலாகக் கண்டு பிடித்தார். ஏனைய விஞ்ஞனிகள் நியூட்டனின் கண்டு பிடிப்பை ஒரு புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்பு எனக் கூறி கவுரவித்தனர்.

இவ்வளவு அற்புதமான அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் கூறியதிலிருந்து இம்மாமறை குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை என்பதை எளிதாக விளங்கிக் கொள்ள இயலும்.

நிறமாலை நோக்கி

சூரியனின் சாதாரண வெண்ணிற ஒளி வெவ்வேறு அதிர்வெண்களையும் வெவ்வேறு நிறங்களையும் கொண்ட வெவ்வேறு ஒளிகளின் கலவை என நியூட்டன் சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் (ஞசளைஅ) செலுத்தி ஒளிப் பிரிகை செய்து வெவ்வேறு நிறங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த வெவ்வேறு வர்ணங்களை உடைய வெவ்வேறு ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் (ஞசளைஅ) அதன் துணைக் கருவிகளும் (யஉஉநளளயசநைள) இணைந்த தொகுதியே நிறமாலை நோக்கி (ளுயீநஉவசயளஉடியீந) ஆகும்.

நிற மாலை நோக்கியின் காட்சிப் பதிவுடன் டாப்ளர் தத்துவத்தை இணைக்கும் போது விஞ்ஞானிகளால் நமது பேரண்டத்திலுள்ள காலக்சிகள் ஒன்றை ஒன்று நெருங்கி வருகிறதா? அல்லது ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல் கிறதா? என்பதைக் கண்டு பிடிக்க முடியும் எனக் கூறினோம். எனவே டாப்ளர் தத்துவம் என்பது என்ன என்று பார்ப்போம். முதலாவதாக இது ஒளியுடன் சம்மந்தப்பட்டதாகும்.

இரயில் எஞ்சினின் விசில் சப்தம் நம் அனைவருக்கும் அறிமுகமானதேயாகும். வழியோரம் நின்றிருக்கும் ஒருவரை நோக்கி இரயில் வண்டி வரும் போது அதன் விசில் சப்தம் சாதாரண நிலையிலிருந்து அசாதாரணமாகக் கூடுவதை அவரால் புரிந்து கொள்ள முடியும். இதைப் போன்று அந்த இரயில் வண்டி அவரைத் தாண்டி செல்லும் போது விசில் சப்தம் படிபடியாகக் குறையாமல் திடீர் எனக் குறைந்து விடுவதையும் சிலராவது கவனித்து இருக்க முடியும்.

செந்நிறப் பெயர்ச்சி

ஒலி அலைகளுக்குரிய இந்த இயற்பியல் பண்பு `ஒளி அலைகளுக்கும் பொருந்தும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நிறமாலை நோக்கியில் தென்படும் காட்சிகளுக்கு டாப்ளர் விளைவைப் பொருத்திப் பார்த்தார்கள். பொதுவாக நிறமாலை நோக்கியில் விழும் சூரிய ஒளி நிறப்பிரிகை அடைந்து அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் அளவு கோலில் (ளஉயடந) ஒவ்வொரு நிறத்திற்கும் உரிய இடத்தில் அமையும் எனக் கண்டோம். இதைப் போன்று அண்ட வெளியிலுள்ள வெவ்வேறு காலக்சிகளின் ஒளிக் கற்றை களை நிறமாலை நோக்கியால் ஆய்வு செய்த போது அவற்றின் ஒளிக் கற்றைகள் சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்வதைக் கண்டு அறிவியலாளர்கள் மிகப் பெரிய வியப்பிற்கு ஆளானார்கள்.

அண்ட வெளியிலுள்ள காலக்சிகளின் ஒளிக் கற்றைகள் நிறமாலை நோக்கியின் அளவுகோலில் இடப் பெயர்ச்சி அடைவதற்குக் காரணம் அந்தக் காலக்சிகள் கூட அதனதன் இடத்தில் நிலைத்திருக்காமல் இடம் பெயர்ந்து கொண்டி ருக்கிறது என்பதாகும். இப்போது அந்த காலக்சிகள் சிவப்பு நிறத்தின் இடத்திற்கு மட்டும் இடப் பெயர்ச்சி செய்கிறது என்பதை டாப்ளர் தத்துவம் விளக்குகிறது.

நிறமாலை நோக்கியின் இரண்டு முனைகளில் ஒன்று குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்திற்கும் மற்றொன்று நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்திற்கும் உரிய இடங்களாகும். அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நோக்கி வருவதாக இருந்தால் பூமிக்கும் காலக்சிக்கும் இடையிலுள்ள தூரம் குறுகிக் கொண்டே வருவதால் அதன் ஒளிக் கற்றைகளின் அலை நீளமும் குறுகிக் கொண்டே வரும். எனவே அந்தக் காலக்சியிலிருந்து வரும் ஒளிக் கற்றைகள் நிறமாலை நோக்கியில் குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்தின் இருப்பிடத்தை நோக்கி இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும். ஆனால் நடப்பதோ நேர் மாற்றமான காட்சியாகும். ஏன்?

ஏனென்றால் அண்ட வெளியிலுள்ள காலக்சிகள் பூமியை நெருங்கி வரவில்லை. அதற்கு மாறாக பூமியை விட்டு விலகிச் செல்கிறது என்பதே அதன் காரணமாகும். காலக்சிகள் பூமியை விட்டு விலகிச் செல்வதால் பூமிக்கும் அந்தக் காலக்சிகளுக்கும் இடையிலுள்ள தூரம் விரிவடைந்து செல்வதால் அதன் ஒளிக் கற்றைகள் நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. அறிவியலாளர்கள் ஒளிக் கற்றைகளின் இந்த இயற்பியல் பண்பை `செந்நிறப் பெயர்ச்சி (சநன ளாகைவ) எனக் கூறுகிறார்கள்.

சென்ற நூற்றாண்டில் திறமை மிக்க அறிவியல் நிபுணராம் `எட்வின் ஹிப்பிள் அவர்களின் இக்கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் அறிவியல் புரட்சியைத் தோற்றுவித்த கண்டுபிடிப்பாகும். ஐன்டீன் அவர்களின் சார்பியல் தத்துவங்களின் தோற்றம் சென்ற நூற்றாண்டில் நிகழாமல் இருந்தால் ஹப்பிள் அவர்களின் கண்டுபிடிப்பு சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற கண்டுபிடிப்பு எனப் போற்றப்பட்டிருக்கும். ஹப்பிள் அவர்களின் கண்டுபிடிப்பைப் பற்றி இன்றைய உலகின் தலை சிறந்த விஞ்ஞானி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :

“கூந னளைஉடிஎநசல வாயவ வாந ரஎநசளந ளை நஒயீயனேபே றயள டிநே டிக வாந பசநயவ வேநடடநஉவரயட சநஎடிடரவடிளே டிக வாந வறநவேநைவா உநவேரசல (பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும். பக்கம் : 42)

பேரண்டத்தின் விரிவாக்கம் திருமறையில்

இருபதாம் நூற்றாண்டில் கூட உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளால் இவ்வளவு தூரம் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பை பாரறிய பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருக்குர்ஆனின் வார்த்தைகள் இதோ :

“வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம். நிச்சயமாக நாம் (அதை) விரிவாக்கம் செய்பவராவோம்.

(51:47)

பேரண்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றிய இரகசியம், இருபதாம் நூற்றாண்டு வரை இருட்டில் புதைந்து கிடந்ததாகக் கூறப்படும் அந்த மர்மம் திருக் குர்ஆனில் இதோ ஏழாம் நூற்றாண்டிலேயே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! ஆனால் யாருக்கும் எந்த அக்கறையும் அதன் பால் இல்லை. எந்த அறிவியலாளர்களின் நிறமாலை நோக்கிகளோ ஏனைய ஆய்வுக் கருவிகளோ இதன் பால் (விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர) திரும்புவதில்லை. என்னதாம் நிகழ்ந்து விட்டது இம்மானிடர் தமக்கு?

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் உலகில் தோன்றிய அறிவியலாளர்களில் ஒருவர் கூட; ஆம்! உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளாம் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்டீன் போன்றவர்களும் கூட இப்பேரண்டம் விரிவடைந்து கொண்டு வருகிறது என்பதைக் கனவில் கூட கண்டதில்லை. அப்படிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பையே திருக்குர்ஆனின் அறிவியல் ஏழாம் நூற்றாண்டில் கூறிக் கொண்டிருக்கிறது! திருக்குர்ஆன் ஒருகாலும் மனித அறிவிலிருந்து தோன்றியிருக்க முடியாது என்பதற்கு இதை விடச் சிறந்த அறிவியல் ஆதாரம் வேறு என்ன வேண்டும்? ஹாக்கிங் கூறுகிறார் :

“இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை என எண்ணிப் பார்ப்பது பொதுவான சிந்தனையின் சூழலில் கவனத்தை ஈர்ப்பதாகும். பேரண்டம் மாற்றமே இன்றி எக்காலமும் இருந்திருக்கிறது என்றோ அல்லது இன்று நாம் காண்பது போன்றே ஏறத்தாழ அதே நிலையில் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் படைக்கப்பட்டிருந்தது என்றோ பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இது அழிவற்ற உண்மைகளில் நம்புவதற்குரிய மக்களின் மனோ நிலைக்கு ஓரளவு காரணமாக இருந்தது………..

(பார்க்க : பக்கம்-6)

அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் கூற்றிலிருந்து எவ்வளவு விலை மதிப்பற்ற அரிய அறிவியல் பேருண்மை கள் திருக்குர்ஆனில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். திருமறையின் அறிவியல் ஞானத்தின் ஆழத்தை மேலும் புரிந்து கொள்வதற்காக நாம் இப்போது ஒரு வினாவை எழுப்புவோம்.

விழுந்து விடப் போகும் வானம்

பேரண்டத்தின் விரிவாற்றல் என்பது பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றலாகும். ஆனால் பேரண்டத்திற்கு இப்படி ஒரு ஆற்றல் உண்டு என அறியப் படாதிருந்த காலங்களில் அதன் ஈர்ப்பாற்றலால் எழும் பிரச்சனைகள் தோன்றாமல் கட்டுப்பட்டிருந்ததற்கு என்ன விளக்கத்தை அறிவியலாளர்கள் கூறி வந்தார்கள் என்பதே நமது வினாவாகும்.

மொத்தப் பேரண்டமும் ஈர்ப்பு விசையால் ஆளப்படு கிறது என்பதும் இதன் காரணமாக பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் பேரண்டத்தில் உள்ள ஏனைய பொருட்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் பூமி உட்பட விண்ணகப் பொருட்கள் அனைத்தும் பேரண்டத்தின் ஈர்ப்பு மையம் செயல்படும் இடத்தில் வீழ்ந்து விட வேண்டும். அவ்வாறு விழும் போது பூமியிலுள்ளவர்களுக்கு பூமியின் மீது வானம் வீழ்வது போன்ற உணர்வே ஏற்படும். ஏனெனில் நாம் இரயில் வண்டியில் செல்லும் போது ஜன்னல் வழியாகப் பார்த்தால் நாம் நகராமல் இருப்பது போன்றும் பாதை ஓரத்தில் உள்ள மரங்கள் ஓடுவது போன்றும் தோன்றுவதைப் போல, பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தாலும் பூமி அசையாமல் இருப்பது போன்றும், ஆனால் சூரியன் பூமியைச் சுற்றுவதைப் போன்றும் தோன்றுவதைப் போன்று பூமி பேரண்டத்தின் ஈர்ப்பு மையத்தில் வீழ்வதாக இருந்தாலும் வானம் பூமியின் மீது வீழ்வது போன்ற நிலையே பூமியிலுள்ள வர்களுக்கு ஏற்படும். ஆயினும் இப்படிப்பட்ட பேராபத்து இன்னும் நடைபெறவில்லை என்பது நமக்குத் தெரியும்.

இந்த இடத்தில் “ஏன் இன்னும் நடைபொறவில்லை? என மற்றொரு வினாவை எழுப்பினால் இக்கேள்விக்கும் கூட நம்ப முடியாதபடி திருக்குர்ஆன் பதிலளித்துக் கொண்டி ருக்கும் அற்புதத்தை நம்மால் காண முடியும். திருமறை கூறுகிறது:

(முஹம்மதே!) பூமியில் உள்ளதையும் அவனது கட்டளைப் படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா? அவன் கட்டளை யிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத் துள்ளான். அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.

(22:65)

அற்புதத் திருமறையின் இந்த அறிவியல் வசனத்தில் வானம் பூமியின் மீது வீழ்ந்து விடாதவாறு தடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதும், எனவே அதைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ் இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து வானங்களின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளான் என்ற செய்தியைக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் அவன் மற்றொரு கட்டளை பிறப்பித்து விட்டால் வானம் இடிந்து பூமியின் மீது விழத்தான் செய்யும் என்பதும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி இன்றைய உலகின் அதிநவீன அறிவியல் உண்மைகளைப் பற்றிய அறிவி லிருந்து நாம் எழுப்பிய வினாவுக்குக் கூட மிகப் பொருத்தமான பதிலை இம்மாமறை தந்து கொண்டிருப்பது இம்மாமறையின் அறிவியல் ஞானத்தை நமக்கு அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறதன்றோ!

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை (ரஎநசளயட பசயஎவையவடி) பற்றியோ அல்லது அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடு பற்றியோ அல்லது அதன் விசையைக் கட்டுப்படுத்தா விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தோ திருக்குர்ஆனுக்கு எதுவும் தெரியவில்லையென்றால் ஆகாயம் வீழ்ந்து விடாதவாறு தடுக்க வேண்டிய தேவை உண்டு; அதனால் அது தடுக்கப்பட்டு வருகிறது என திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடியும்? எனவே குறைந்த பட்சம் பேரண்டத்திற்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதும் மேலும் அதை சமன் செய்யும் மற்றொரு ஆற்றல் இப்பேரண்டத்தில் வெயல்பட்டு வருகிறது எனும் கருத்தும் இந்த வசனத்தில் (22:65) இருந்து தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. அந்த ஆற்றல் எது என்பதையே முன்னர் கண்ட வசனத்தில் (51:47) கூறப்பட்டிருக்கும் பேரண்டத்தின் விரிவாக்க ஆற்றலாகும். திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தில் இன்னும் ஐயுறத் தேவையுண்டா?

ஐன்டீனுக்கும் அடி சருக்கும்

திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தில் இதற்கு மேலும் ஐயம் கொள்பவர்கள் திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தி இருக்கும் பேரண்டத்தின் விரிவாற்றல் குறித்தும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் கூட அதைக் கண்டு பிடிக்க முடியாமல் வழி தவறிப் போனது குறித்தும் ஹாக்கிங் அவர்களே தமது நூலில் கூறி இருப்பதைப் பார்த்து விட்டு முடிவெடுக்கட்டும். ஹாக்கிங் கூறுகிறார் :

“பேரண்டம் விரிந்து செல்கிறது எனும் கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சியாகும். நியூட்டனுக்கும் மற்றவர்களுக்கும் முன்னர் ஏன் இதைப் பற்றி யாருமே சிந்திக்கவில்லையென்றால் ஒரு மாறாநிலைப் (ளவயவஉ ரஎநசளந) பேரண்டம் விரைவிலேயே சுருங்கி விடும் என்று புரிந்து கொண்டிருப்பார்கள் என எளிதாக நம் அகக்கண் வியப்பெய்தலாம்.ஆனால் பேரண்டம் விரிந்து செல்கிறது என்றே வைத்துக் கொள்வோம். பேரண்டம் நன்கு மெதுவாக விரிவடைந்து கொண்டிருக்குமேயானால் ஈர்ப்பாற்றல் படிப்படியாக அதன் விரிவாக்கத்தை நிறுத்தியிருக்கும். பிறகு சுருங்கத் தொடங்கியிருக்கும். இருந்த போதிலும் விரிவாக்கம் ஒரு தீர்மான விகிதத்திற்கு (உசவைஉயட சயவந) மேல் இருந்தால் ஈர்ப்பாற்றல் அதை நிறுத்துவதற்கு ஒருபோதும் ஆற்றல் பெறாது. எனவே பேரண்டம் தொடர்ந்து எக்காலமும் விரிந்து கொண்டிருக்கும். இது ஒருவர் பூமியின் மேலிருந்து ராக்கெட்டை ஏவும் போது நிகழ்வதற்கு ஓரளவு ஒப்பான தாகும். அது மிகக் குறைவான வேகத்தைப் பெற்றிருந்தால் ஈர்ப்பாற்றல் படிப்படியாக ராக்கெட்டை நிறுத்துவதுடன் அது தரையில் விழத் தொடங்கும். அதற்கு மாறாக அந்த ராக்கெட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தீர்மான வேகத்திற்கு மேல் இருந்தால் (வினாடிக்கு ஏழு மைல்) ஈர்ப்பாற்றல் அதைக் கீழ்நோக்கி இழுக்கும் சக்தியைப் பெறாது. எனவே அது பூமியை விட்டு காலமெல்லாம் போய்க் கொண்டே இருக்கும். பேரண்டத்தின் இந்தப் பண்பு நியூட்டனின் ஈர்ப்பாற்றல் தத்துவத்திலிருந்து 19-ம் நூற்றாண்டில் அல்லது 18-ம் நூற்றண்டில் அல்லது 17-ம் நூற்றாண்டின் கடைசி கட்டத் தில் கூட எந்த நேரத்திலும் அனுமானித்திருக்கலாம். ஆயினும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் வரை பிடிவாதமாக இருந்த ஒரு மாறாநிலைப் பேரண்டத்தில் (ய ளவயவஉ ரஎநசளந) நம்பிக்கை அவ்வளவு பலமாக இருந்தது. 1915-ல் ஐன்டீன் பொது சார்பியல் தத்துவத்தை உருவாக்கும் போது கூட பேரண்டம் மாறாநிலையானது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்ததால் அதன் சாத்தியத்தை உருவாக்குவதற்காக தன்னுடைய சமன்பாடு களில் (நளூரயவடிளே) இது வரை “பேரண்ட மாறா குணாங்கம் (உடிளஅடிடடிபஉயட உடிளேவயவே) என அழைக்கப்பட்டு வந்த குணாங்கத்தைப் பயன்படுத்தினார். ஐன்டீன் அறிமுகம் செய்த `எதிர் ஈர்ப்பு (யவேபைசயஎவைல) என்பது மற்ற விசைகளைப் போலன்றி எந்த ஒரு குறிப்பிட்ட மூலத்திலிருந்தும் (ளடிரசஉந) வராமல் மிகச் சரியாக கால-இடத்தின் கட்டுமானத்திற்குள் கட்டப்படுவதாகும். கால இடத்திற்கு விரிவடையும் உள்ளார்ந்த தன்மை (வநனேநஉல) உண்டு என்றும் இதுவே பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஈர்ப்பாற்றலையும் துல்லியமாக சமன் செய்கிறது என்றும் எனவே மாறாநிலைப் பேரண்டம் உருவாகிறது என்றும் ஐன்டீன் வாதிட்டார்.

(பார்க்க:பக்கம் 42:43)

ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டி லிருந்து இரண்டு முக்கியமான விபரங்களை அறிகிறோம். முதலாவதாக திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பறை சாற்றிக் கொண்டிருக்கும் `பேரண்டத்தின் விரிவாக்கம் எனும் இயற்பாடு (யீலளஉயட உயசநஉவநசளைவஉ) 17-ம் நூற்றாண்டின் கடைசி கட்டத்திலேயே கண்டுபிடிக்கும் ஆற்றலை அறிவியல் உலகம் பெற்று விட்டது என்பதாகும். (இதிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அறிவியல் உலகத்திற்கு அறவே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க!) ஆயினும் எந்த ஒரு அறிவியல் மேதையாலும் இருபதாம் நூற்றாண்டு வரை அதை அனுமானிக்க இயலவில்லை.

இரண்டாவதாக இந்நாள் வரை அறிவியல் உலகில் தன்னிகரற்ற அறிவியல் மேதையாகத் திகழ்ந்து கொண்டி ருக்கும் ஐன்டீனின் தன்னிகரற்ற அறிவியல் கண்டு பிடிப்பாம் பொது சார்பியல் தத்துவம் பேரண்டம் மாறாநிலை பண்புடையதில்லை என்றும் அதற்கு மாறாக பேரண்டம் எப்போதும் விரிந்து கொண்டிருக்கும் பண்புடையது என்பதை யும் உட்பொருளாகக் கொண்டிருந்தது என்றும் அவரே உருவாக்கிய கணித சமன்பாடுகளிலிருந்து அவருக்கு தெரிய வந்தது. எனினும் பேரண்டம் மாறாநிலை (ளவயவஉ) பண்புடை யது என்பதில் அவருக்கு இருந்த பிடிவாதமான நம்பிக்கையின் காரணமாக அவர் உருவாக்கிய கணித சமன்பாடுகளை அவருடைய நம்பிக்கைக்கேற்ப அவரே மாற்றி அமைத்தார் என்றும் இதற்காக `எதிர் ஈர்ப்பு எனும் தவறான ஒரு கருது கோளை உருவாக்கி மேலும் அதற்காக `பேரண்டத்தின் மாறா குணாங்கம் எனும் ஒன்றை தமது கணித சமன்பாடுகளில் தவறாக அறிமுகப்படுத்தினார் என்பதுமாகும்.

அறிவியல் உலகின் முடிசூடா மன்னர்கள் கூட வழி தவறிய போதும் திருக்குர்ஆனுக்கு மட்டும் வழி தவறுவதே இல்லை! ஏன்? திருக்குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை என்றும் அது இறைவனிடமிருந்துள்ள ஒரு வெளிப்பாடே என்பதையும் இது நமக்கு அறிவுறுத்தவில்லையா?

இயற்கைக்கு அப்பால்

இப்பேரண்டத்தின் படைப்பு ஒரு படைப்பாளன் இல்லாமல் தான்தோன்றியாக (ளயீடிவேயநேடிரள) நடைபெற்ற நிகழ்ச்சி இல்லையென்றும் எல்லையற்ற ஆற்றலும் விரிவாக்க இயலாத நூண்ணறிவும் பெற்றவனே – இறைவனே – அதனை வடிவமைத்தான் என்பதை வன்மை யாக நிருபித்துக் கொண்டிருக்கும் மற்றொரு உண்மையும் பேரண்டத்தின் விரிவாற்றல் எனும் அதன் இயற்பாடு தன்னகத்தே கொண்டுள்ளது. அதைக் குறித்த விபரங் களைப் பார்ப்போம்.

அறிவியல் மேதை ஹாக்கிங் கூறிய ராக்கெட் உதாரணத்தை மீண்டும் கவனத்தில் கொள்க. அந்த உதாரணத்தில் ராக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்க வேண்டிய வேகம் எக்காரணத்தைக் கொண்டும் வினாடிக்கு ஏழு மைல் என்பதில் சற்றே குறைந்தாலும் கூட ராக்கெட் புவிஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்பட்டு அது மீண்டும் பூமியில் வீழ்ந்து விடும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்படி ஒரு திட்டமிட்ட வேகம் ராக்கெட் பெற வேண்டு மானால் எந்த ராக்கெட்டும் தான்தோன்றித்தனமாக அதைப் பெற்று விடுவதில்லை. பல்லாயிரம் வருடங்களில் நாம் பெற்ற படிப்படியான அறிவியல் அறிவே புவிஈர்ப்பு விசையையும் கண்டுபிடித்து அதைத் தாண்டிச் செல்வதற்குரிய வேகத்தை யும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்ததோடன்றி அந்த வேகத்தை அடைவதற்குரிய ஆற்றலையும் கண்டுபிடித்து அந்த ராக்கெட்டை வடிவமைப்பு செய்தது என்பதை நாம் அறிவோம்.பேரண்டத்தோடு ஒப்பிடும் போது கடுகினும் சிற்றளவுள்ள இந்த பூமியின் ஈர்ப்பு விசையை மீறுவதற்கே இவ்வளவு பிரச்சனைகள் இருந்தால் பேரண்டம் படைக்கப் படும் முன்னரே அதன் ஈர்ப்பு விசையை முன்கூட்டிக் கணித்து அதற்கேற்ற ஆற்றலுடன் பெருவெடிப்பை நிகழ்த்தியது யார்?

இயற்கையா?

இந்த இடத்தில் `இயற்கை என்ற வாதம் பலனளிக்காது. ஏனென்றால் மற்ற இடங்களில் இந்த வாதத்திலுள்ள பேதமை இலைமறைவாக இருப்பதைப்போல் இந்த இடத் தில் மறைந்திருப்பதில்லை. இங்கு வெளிப்படையாகவே தென்பட்டு விடும்.

இயற்கையும் சோதிடமும்

இராக்கெட் உதாரணத்தில் இராக்கெட்டின் தொடக்க வேகம் வினாடிக்கு ஏழு மைலுக்கு மேல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டதையும் அதை விடக் குறைவாக தொடக்க வேகம் அமைந்து விட்டால் இராக்கெட் திரும்பவும் பூமியில் விழுந்து விடும் எனக் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இதைப் போன்று பெருவெடிப்பின் ஆற்றலும் இவ்வளவு காலமாக வீழ்ந்து விடாமல் இப்போதும் விரிவாகிக் கொண்டிருக்க வேண்டுமானால் பெருவெடிப்பின் தொடக்க வேகமும் பெருவெடிப்புக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெரு வெடிப்பே படைப்பின் தொடக்கம் என்பதும் அதற்கு முன் எதுவுமே இல்லை என்பதுமே பெரு வெடிப்புக் கோட்பாடாக இருக்கும் போது பெருவெடிப்பு தொடங்குவதற்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண் டிய அதனுடைய தொடக்க வேகத்தை நிர்ணயித்தது யார்?

இயற்கையா?

பெருவெடிப்புக்கு முன்னர் ஏது இயற்கை?

இயற்கை என்றால் என்ன என்பதை இந்த நூலின் மற்றொரு தலைப்பில் ஆய்வு செய்துள்ளோம். ஆனால் இயற்கை என்ற பெயரில் ஏதேனும் ஒன்று செயல்பட வேண்டுமானால் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே பொருள் இல்லையேல் இயற்கையும் இல்லை. பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லை யென்பதால் அந்த நேரத்தில் இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? இயற்கையின் இடத்தில் இறைவனையே அன்றி வேறொன்றையும் வேறொருவரையும் காணமுடியாது என்பதையே இது காட்டுகிறது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பெருவெடிப்புக்கு முன்பே இயற்கை இருந்தது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அந்த இயற்கையால் பேரண்டத்தின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்திருக்க இயலாது. ஏனெனில் இயற்கைக்கு சோதிடம் கிடையாது. புலனறிவுக்கு உட்பட்டதை வைத்தே இயற்கை தீர்மானங்களை எடுக்க முடியும். பூமியின் ஈர்ப்பு விசையை அதன் இயற்கை என்று கூறினால் பூமி இருப்பதால் தாம் அதில் அதன் இயற்கையாம் ஈர்ப்பு விசை தோன்றியது. இல்லாத பூமியில் இயற்கை தோன்றாது. இயற்கையின் இயற்கையே இப்படியென்றால் பெருவெடிப்பிற்கு முன் இல்லாத பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலை இயற்கையால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? பெருவெடிப்பிலிருந்து தோன்றப் போகும் இம்மாபெரும் பேரண்டத்தின் பொருண்மையைக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டுமானால் பேரண்டம் தோன்றிய பிறகே அதைச் செய்ய முடியும். பேரண்டம் தோன்ற வேண்டுமானால் பெருவெடிப்பு நிகழ வேண்டும். பெருவெடிப்பு நிகழ வேண்டுமானால் அதனுடைய விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருவெடிப்பின் விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட வேண்டுமானால் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றப் போகும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் என்ன என்பது மிகத் துல்லியமாக பெரு வெடிப்புக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும். இயற்கையால் அது சாத்தியமா?

எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஒன்றை அதற்கான அறி குறிகள் எதுவுமில்லாமல் அறிதல் என்பது காலவேற்றுமை களால் பாதிக்கப்படாத; முக்காலமும் உணர்ந்த; மேலும் சரியாகக் கூறினால் ஒரே நேரத்தில் முக்காலங்களிலும் நிலை கொள்கின்ற சிறப்பியல்பை தனக்குள் பெற்றுக் கொண்ட ஒருவனாலன்றி வேறொருவராலும் இயலாத காரியமாகும். எனவே அப்படிப்பட்ட இயல்பைக் கொண்டவன் யாரோ அவனையே நாம் இறைவன் என்று அழைக்கிறோம். ஒருகால் கடவுளை மறுப்பதற்காக இயற்கையாலும் இப்படியெல்லாம் முடியும் என்று வாதிடும் அளவிற்கு இந்த விஷயத்தில் யாரேனும் பேதமை காட்ட முயன்றால் கடவுளைப் பெயர் மாற்றம் செய்து இயற்கை எனக் கூறுவதற்கு ஒப்பானதாகி விடுமே அன்றி படைப்பாளனின் இடத்திலிருந்து அவனை ஒரு போதும் அகற்றிப் பார்க்க முடியாது.

பெருவெடிப்பு ஒரு இயற்கை நிகழ்ச்சி எனக் கூறுவது கடுகளவும் பகுத்தறிவைப் பயன்படுத்தாத வாதமாகும். ஏனெனில் நிகழ்ச்சிகள் என்பது பொருட்களின் செயல் களாகும். எனவே பொருட்கள் இல்லையேல் செயல்களும் இருக்க முடியாது என்பது மிக மிக எளிய செய்தியாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு மிகச் சாதாரண அறிவே போதுமானதாகும். இருப்பினும் நாம் இயற்கை வாதிகளுக்கு சாதகமாக பெருவெடிப்பு இயற்கையாகவே தோன்றியது என்பதையும் அதிலிருந்து தப்பித்தவறி ஒரு பேரண்டம் தோன்றி விட்டதாகவும் கற்பனை செய்வோம். இவ்வாறு ஒரு பேரண்டம் தோன்றினால் கூட அந்த வேகத்திலேயே அப்பேரண்டம் தோன்றிய புள்ளியிலேயே வீழ்ந்து விடும்படி அப்பேரண்டத்தின் சொந்த ஈர்ப்பாற்றலே அதை நிர்பந்தம் செய்யும். அதற்கு மாறாக நாம் வாழ்வதைப் போன்ற சீரானதும் (ரகைடிசஅ) இவ்வளவு வழவழப்பானதுமான (ளஅடிடிவா) பேரண்டம் ஒரு போதும் உருவாக முடியாது. அப்படிப்பட்ட ஒரு பேரண்டம் உருவாகுவதற்கு நிகழ் தகவு (யீசடியெடைவைல) கூட இல்லை என்கிறார் இன்றைய உலகிள் தலைசிறந்த விஞ்ஞானியான ஹாக்கிங் அவர்கள். எனவே நாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற பேரண்டம் உருவாக வேண்டு மென்றால் பெருவெடிப்பின் ஆரம்ப வேகம் மிக மிகத் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

பேரண்டத்தின் விரிவாக்கத்தைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட செய்திகள் யாவும் அதை இறை மறுப்புக் கோட் பாட்டின் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலாகவே காட்சியளிக்கச் செய்கிறது. பேரண்டத்தின் படைப்பிற்கு கடவுளின் தேவையை வலியுறுத்திக் காட்டுவதற்காக பேரண்ட விரிவாக்கத்தின் தொடக்க வேகத்திற்கு நாம் அளவு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சில வாசகர்களாவது எண்ணிவிடக் கூடும். எனவே அதைக் குறித்த அறிவியலாளர் களின் கண்டுபிடிப்புகள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

திடுக்குறச் செய்யும் புள்ளி விபரங்கள்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சில பாராக்களைப் படிக்கும் போது பேரண்டப்படைப்புக்கு மிக மிக இன்றியமை யாததாய் விளங்கும் அதன் இயற்பாடாம் விரிவாற்றலின் தீர்மானமான விகிதத்தின் (உசவைஉயட சயவந டிக வாந நஒயீயளேடி) தேர்வை நாம் மிகைப்படுத்திக் காட்டி கடவுளின் தேவையை வலியுறுத்துவதாக சிலர் எண்ணக் கூடும். ஆனால் அந்த எண்ணம் தவறானது என்பதை ஹாக்கிங் அவர்களின் கீழ்க்காணும் கூற்று அவர்களைத் தெளிவாக்கும். அவர் கூறுகிறார்: “பெருவெடிப்பு நிகழ்ந்து ஒரு வினாடிக்குப் பிறகு விரிவாற்றல் நூறு ஆயிரம் மில்லியன் மில்லியன் பாகங்களில் ஒருபாகம் அளவு சிறியதாக இருந்திருந்தால் கூட பேரண்டம் இன்றைய நிலையை அடையாமல் குலைந்து போயிருக்கும்! (பக்கம்:128)

பேரண்டத்தின் விரிவாற்றலின் விகிதம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் விதம் நுண்மையிலும் நுண்மை என எவ்வளவு நுண்மைகளைக் கூறினாலும் தகும் என்பதையே ஹாக்கிங் அவர்களின் கூற்று புலப்படுத்துகிறது. (நூறாயிரம் மில்லியன் மில்லியன் என்பது ஒன்றுக்குப் பின் பதினேழு சைபர்கள் கொண்ட எண் ஆகும்!) இந்த அதி அற்புதமான தேர்வு பேரண்டம் இன்றுள்ள நிலையை அடையச் செய்ய ஆரம்ப கட்டத்தில் அதன் பணியை எவ்வளவு தூரம் துரிதப்படுத்தியது என்பதை மசாசூசெத் தொழிற்கலை விஞ்ஞான கழகத்தின் (அயளளயஉரளநவவள ளேவவைரவந டிக வநஉடிடடிபல) விஞ்ஞானி `அலன் குத் (ஹடய ழுரவா) அவர்களை மேற்கோள் காட்டி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :

“ஒரு வினாடியின் மிகச் சொற்பமான நேரத்திலேயே (வலே கசயஉவடி டிக ய ளநஉடினே) பேரண்டத்தின் ஆரம் (சயனரைள) ஒரு மில்லியன், மில்லியன், மில்லியன், மில்லியன், மில்லியன், (ஒன்றுக்கு பின்னால் முப்பது சைபர்கள் கொண்ட எண்) மடங்கு பெரிதாகி விட்டது!! (பக்கம் : 134)

ஒரே ஒரு வினாடியின் சொற்பமான நேரத்திற்குள் இவ்வளவு பிரமாண்டமான விரிவாக்கமா? நமது அன்றாட வாழ்வியல் அறிவுக்கு முற்றிலுமாக முரண்பட்டு அணு அளவு கூட நம்ப முடியாததாய் காட்சியளிக்கும் மேற்கண்ட உண்மையான புள்ளி விபரங்களையெல்லாம் நம்ப வேண்டுமாயின் அந்த நபர் எல்லையற்ற ஆற்றலைப் பெற்ற ஒரு கடவுளின் உள்ளமையில் (நஒளைவயஉந) நம்பிக்கை கொண்டிருந்தாலே அன்றி அந்த நபரின் நம்பிக்கை அறிவார்ந்த நம்பிக்கையாக இருக்க இயலாது.

ஒரு வினாடியின் சொற்பமான நேரத்திற்குள் ஒன்றுக்குப் பின்னால் முப்பது சைபர்களைக் கொண்ட எண்ணின் மதிப்புக்கு நிகராக அப்போதிருந்த பேரண்டம் விரிவுபடுத்தப் (பேரண்டம் அப்போது ஒரு மைக்ரோன் – ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு – மட்டுமே இருந்திருந்தால் கூட அந்த சொற்ப நேரத்திலேயே 1,000,000,000,000,000,000,000 கிலோ மீட்டர் துரத்திற்கு அதன் ஆரம் விரிவடைந்திருக்கும்! இவ்வளவும் பெருவெடிப்பு நிகழ்ந்த வினாடியின் சொற்ப நேரத்திற்குள்)பட்டது எனில் ஹாக்கிங் கூற்றுக்கு இணங்க இப்பேரண்டம் உருவாகத் தொடங்கி இரண்டாயிரம் கோடி வருடங்கள் ஆகி இருப்பின் அது இப்போது எவ்வளவு கோடானு கோடி கோடி கோடி………. கிலோ மீட்டர் அளவுக்கு விரிவடைந்திருக்கும்? இப்புள்ளி விபரங்களைப் பார்க்கை யில் ஒருவருக்கு நூறு தலைகள் இருப்பின் அந்த நூறு தலைகளும் சுற்றும்! இறையாற்றலின் மாட்சிமையை என்னென்றுரைப்பது!

அந்த சொற்ப நேரத்திலேயே இம்மாபெரும் விரி வாற்றலை வெளிப்படுத்தியதன் காரணமாகவே இப்போதும் இப்பேரண்டம் சீர்குலையாமல் நிலைபெற்றுள்ளது. இதை இறைவனே செய்தான் எனில் எந்த நோக்கத்திற்காக இவ்வளவு அரும் பணியை அவன் செய்தான்? அவனுடைய எந்தத் தேவையை பேரண்டம் நிறைவு செய்கிறது? இப்படிப்பட்ட கேள்விகளை பல தரப்பட்டவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இக்கேள்விகளை இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் நாம் பரிசீலனை செய்கிறோம். ஆயினும் மிக முக்கியமான ஒரு காரணத்தை இங்கு குறிப்பிடுவது சிறப்பாகும்.

இறைவனுடைய எந்தத் தேவைக்காகவும் இப்பேரண்டம் படைக்கப்படவில்லை. இறைவனுடைய படைப்பினங்களில் அவன் தேவைற்றவன் என்பதைத் திரும்பத் திரும்ப திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. (பார்க்க : 22:64, 3:97 நவஉ) இருப்பினும் இப்பேரண்டம் இவ்வளவு காலம் நிலை நிற்கும் விதத்தில் படைக்கப்படவில்லையாயின் மானிட இனம் இங்கு தோன்றி இருக்க இயலாது என்பதையே அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. பகுத்தறிவுள்ள உயிரினம் பேரண்டத்தில் எங்கேனும் தோன்றுவதற்குரிய காலகட்டம் இதற்கு முன் இப்பேரண்டத்தில் இருந்ததில்லை என்பதை யும் ஹாக்கிங் அவர்களின் நூல் குறிப்பிடுகிறது.

(பார்க்க : பக்கம் 130-133)

நவீன அறிவியலில் இறைவனின் தேவை

முன் பத்திகளில் மிக முக்கியமான மூன்று அறிவியல் உண்மைகளை நாம் கண்டோம். முதலாவதாக பேரண்டம் தோற்றம் எடுத்த ஆரம்ப கட்டத்தில் வழங்கப்பட்ட மிகக் கணிசமான, நுண்மையான மிகக் கவனமாகத் தீர்மானிக்கப் பட்ட துல்லியமான விரிவாக்க வேகமே இப்பேரண்டத்தை இப்போதும் நிலை நிறுத்தியுள்ளது என்பதாகும். இரண்டாவ தாக இப்படிப்பட்ட விதத்தில் இப்பேரண்டம் உருவாகி இருக்க வேண்டுமாயின் அதை வடிவமைத்து இயக்கும் அபாரமான ஆற்றல்களைப் பெற்ற இறைவன் இல்லாமல் நடைபெற்றிருக்க முடியாது என்பதாகும். மூன்றாவதாக இப்பேரண்டம் இந்த விதத்தில் தோன்றியதன் காரணமாகவே மானிடர்களாகிய நம்மால் இதில் தோன்ற முடிந்தது என்பது மாகும். இப்போது நாம் வந்தடைந்த இந்த முடிவுகளைக் குறித்து ஹாக்கிங் அவர்களின் கருத்து என்னவென்று பார்ப்போம். அவர் கூறுகிறார்:

ஐவ றடிரடன நெ எநசல னகைகஉரடவ வடி நஒயீடய றால வாந ரஎநசளந ளாடிரடன யஎந நெபர தரளவ வாளை றயல, நஒஉநயீவ யள வாந யஉவ டிக ய ழுடின றாடி வேநவேநன வடி உசநயவந நெபேள டமைந ரள (யீயபந 134)

(நம்மைப் போன்ற உயிரினங்களைப் படைக்க வேண்டும் என்ற நோக்கமுள்ள ஒரு கடவுளின் செயலைத் தவிர பேரண்டம் ஏன் இந்த விதத்தில் துவங்க வேண்டும் என விளக்குவது மிகக் கடினமாகும்)

நமது ஆய்வில் கண்ட உண்மைகளை எவ்வளவு பட்ட வர்த்தனமாக வெளியிடுகிறார் அறிவியல் மேதை ஹாக்கிங்! தங்களை அறிவியல் பற்றுள்ளவர்களாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர்களில் சிலர் தோற்றமும் மறைவும் இயற்கையே அன்றி கடவுள் இல்லை என கூறிக் கொண்டிருக்கும் போது அறிவியலாளர் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட வார்த்தை கள் எவ்வளவு அற்புதமாக இறைவனின் உள்ளமை ஓர் அறிவியல் தேவை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது!

நியூட்டன் மற்றும் ஐன்டீன் உள்ளிட்ட அறிவிய லாளர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே ஹாக்கிங் அவர்களுக்கும் கடவுள் விஷயத்தில் சற்று நம்பிக்கை இருந்து விட்டால் அதில் வியப்பதற்கெதுவும் இல்லை எனக் கூறி ஹாக்கிங் அவர்களின் கூற்றை அறிவியல் அன்பர்களால் ஒருகாலும் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் முன்னர் கூறப்பட்ட அறிவியலாளர் களில் யாரும் தங்களின் அறிவியல் ஆய்வுகள் கடவுளின் தேவையை வலியுறுத்துவதாகக் கூறியதில்லை. ஆனால் இதற்கு மாறாக ஹாக்கிங் அவர்களின் கூற்று கடவுளின் தேவை அவருடைய வெறும் நம்பிக்கையைச் சார்ந்ததன்று. அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை இருந்ததில்லை என்பது உலகறிந்த விஷயமாகும். ஆனால் பேரண்டத்தின் அறிவியல் ஆய்வுகளில் அவர் கண்ட அறிவியல் உண்மைகளே ஒரு கடவுளின் பணி அதில் அவசியம் என்பதை வலியுறுத்துவ தாக அவர் கூறுகிறார். எனவே இந்த நவீன அறிவியல் யுகத்தில் கடவுளை ஏற்றல் என்பதும், கடவுளின் தேவையும் ஓர் அறிவியல் உண்மையாகும்.

ஹாக்கிங் முழுமையாக இறைவனை ஏற்றுக் கொண்டதாக அவரது நூலிலிருந்து விளங்க இயலாது. அதற்குச் சில கேள்விகள் அவருக்குத் தடையாக இருப்பதாகத் தோன்றுகிறது. அக்கேள்விகளை நாம் இந்நூலின் இறுதியில் பரிசீலனை செய்துள்ளோம்.

இதுவரை நாம் இவ்விரு அத்தியாயங்களில் விவாதித்த விபரங்களை ஆய்வுக் கண்ணோடு பார்வையிடும் ஒருவருக்கு அவர் இதற்கு முன் திருக்குர்ஆனை வெறும் மேலோட்டமாகப் பார்த்தவராக இருந்திருந்தாலும் கூட இப்போது திருக்குர்ஆனின் ஆழிய அறிவியல் ஞானத்தின் தோற்றுவாய் இறைவனே அன்றி வேறில்லை என ஐயமறக் கண்டுணரலாம் என்பது திண்ணம்.

அத்தியாயம் 3

ஆகாயங்களைப் படைக்கும் அதிசயக் குரங்கு (?)

மனித இனம் உலகில் தோன்றி எவ்வளவு காலம் ஆயிற்று என்ற வினாவிற்கு சிலர் 30,000 வருடங்கள் என்றும், வேறு சிலர் 2,00,000 வருடங்கள் என்றும் கூறுகின்றனர். இவைகளன்றி சில மாற்றுக் கருத்துக்களும் அதில் நிலவு கிறது. ஆனால் எவ்வளவு தொன்மை காலத்தில் மனிதன் தோன்றி இருப்பினும் வானம் இப்போது இருப்பது போல் அப்போதும் இருந்தது. அந்த வானை இப்போது நாம் பார்ப்பது போன்று அப்போதும் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை மானிடர்க்கு வெறும் கண்களுக்குப் புலப்படாத அதன் குறிப் பிடும்படியான பற்பல இயற்பியல் பண்புகள் திருக்குர்ஆனுக்கு மட்டும் புலப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட இயற்பாடுகளில் இரண்டை கீழ்க்காணும் திருமறை வசனம் கூறுகிறது :

ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்தான் என்பதை நீங்கள் காணவில்லையா?

(71:15)

இந்த வசனத்தில் முதலாவதாக வானங்களின் எண் ணிக்கை மொத்தம் ஏழு எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆயினும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் இது வரை ஆகாயத்தின் வெளித் தோற்றம் அல்லது வடிவம் எப்படிப்பட்டது என்பதை சரியாக விளங்க முடியவில்லை. ஆகவே ஆகாயங்களின் எண்ணிக்கை என்ன என்பதை அறிவியலாளர்களால் இதுவரை திட்டமாக மதிப்பிட முடியவில்லை. எனவே இது திருக்குர்ஆனுக்குரிய எதிர்கால அறிவியல் ஆதாரமாகும்.

பேரண்டங்களின் எண்ணிக்கை

அறிவியல் உலகம் பெருவெடிப்புச் சித்தாந்தத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஆகாயம் ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடும் எனக் கருதியதில்லை. ஆனால் பெரு வெடிப்புச் சித்தாந்தத்தைப் பற்றிய அறிவியல் அறிவு வந்ததற்குப் பின்னர் நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. இப்போதைய அறிவியலாளர்களின் கருத்து பேரண்டங்களின் எண்ணிக்கை ஒருகால் எண்ணிலடங்காததாக இருக்கலாம் அல்லது எண்ணிலடங்காத குட்டிக்குட்டி பேரண்டங்களைக் கொண்ட ஒரு எல்லையற்ற மகாப் பேரண்டமாகவும் இருக்கலாம். (பார்க்க : எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம் – பக்கம் 129-130) எப்படிப் பார்த்தாலும் ஒரே ஒரு வானம் (பேரண்டம்) எனும் கருத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருப்பது நாம் மேலே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆனுடைய அறிவியலை நோக்கிய பயணத்தின் முதல் கால்வைப்பாக இருக்குமோ என்பதற்கு காலம் பதில் சொல்லும். பேரண்டத்தின் அமைப்பைக் குறித்து திருக்குர்ஆன் மற்றொரு அரிய அறிவியல் தகவலையும் தருகிறது. அது வருமாறு :

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

(37:6)

இத்திருமறை வசனத்திலும் வானங்கள் ஏழு இருப்பினும் நட்சத்திர அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது முதல் வானத்திலேயே ஆகும் எனத் தெளிவாகக் கூறியுள்ளது. பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது எனக் கருதும் அறிவியலாளர்கள் அவற்றுள் ஒன்று கூட நட்சத்திரங்களோ காலக்சிகளோ இருப்பதற்கு வாய்ப்பில்லை என முடிவு செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால் நமது பேரண்டத்தில் பல்லாயிரம் கோடானு கோடி நட்சத்திரங்களும் காலக்சிகளும் இருக்கின்றனவே! இதெப்படி எனக் கேட்டால் இது குறித்து அறிவியல் உலகில் நிலவி வரும் கருத்தை ஹாக்கிங் அவர்கள் கீழ்வருமாறு அறிமுகப்படுத்துகிறார்.

“ஐக வாந ரஎநசளந ளை ளயீயவயைடடல கேவைந டிச கை வாநசந யசந கேவைநடல அயலே ரஎநசளநள வாநசந றடிரடன யீசடியெடெல நெ ளடிஅந டயசபந சநபடிளே ளடிஅநறாநசந வாயவ ளவயசவநன டிரவ ய ளஅடிடிவா யனே ரகைடிசஅ அயநேச. ஐவ ளை ய வை டமைந வாந றநடட-மடிற டிசனந டிக அடிமேநலள யஅஅநசபே யறயல டி வலயீந றசவைநசள அடிளவ டிக றாயவ வாநல றசவைந றடைட நெ பயசயெபந, ரெவ எநசல டிஉஉயளடியேடடல லெ யீரசந உயஉந வாநல றடைட வலயீந டிரவ டிநே டிக ளாயமநளயீநயசள ளடிநேவள. ளுஅடையசடல, வாந உயளந டிக ரஎநசளந உடிரடன வை நெ வாயவ றந யசந டஎபே ய சநபடி வாயவ தரளவ யயீயீநளே லெ உயஉந வடி நெ ளஅடிடிவா யனே ரகைடிசஅ? ஹவ கசைளவ ளபைவ வாளை அபைவ ளநநஅ எநசல அயீசடியெடெந, நெஉயரளந ளரஉ ளஅடிடிவா சநபடிளே றடிரடன நெ நயஎடைல டிரவ ரேஅநெசநன லெ உயடிவஉ யனே சைசநபரடயச சநபடிளே. ழடிறநஎநசந ளரயீயீடிளந வாயவ டிடேல வாந ளஅடிடிவா சநபடிளே றநசந படயஒநைள யனே ளவயசள கடிசஅநன யனே றநசந உடினேவைடிளே சபைவ கடிச வாந னநஎநடடியீஅநவே டிக உடிஅயீடஉயவநன ளநடக-சநயீடஉயவபே டிசபயளைஅள டமைந டிரச ளநடஎநள றாடி றநசந உயயீயடெந டிக யளமபே வாந ளூரநளவடி : றுல ளை வாந ரஎநசள ளை ளடி ளஅடிடிவா? கூளை ளை ய நஒயஅயீடந டிக வாந யயீயீடஉயவடி டிக றாயவ ளை மடிற யள வாந யவோசடியீஉ யீசஉயீடந…….. (யீயபந : 130)

அறிவியல் நூல்களை படிக்கும் வழக்கமில்லாதவர் களுக்கு மேற்கண்ட ஹாக்கிங் அவர்களின் மேற்கோளைப் புரிந்து கொள்வது சற்று கடினமாகவே இருக்கும். எனவே அதன் நேரடியான மொழிபெயர்ப்பு அவர்களுக்குப் பயனளிக்காது என்பதால் இந்த மேற்கோளை மையமாக வைத்து நமது பாணியில் அதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.

பிரச்சனைகளை உருவாக்கும் வினா

இயற்பியல் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவர் தண்ணீர் என்பதன் கூட்டுப் பொருட்கள் எவை எனக் கேட்டால் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என மாணவர்கள் பதிலளிப்பார்கள். ஆசிரியர் மீண்டும் அவை என்ன விகிதத் தில் இணைந்தால் தண்ணீர் தோன்றும் எனக் கேட்டால் 2:1 என்ற விகிதத்தில் இணைந்தால் என பதில் கூறுவார்கள். இந்த வினாக்களுக்கு வேறு எந்த பதிலைக் கூறினாலும் அவை பிழையானதாக இருக்கும். ஆசிரியர் மீண்டும் தண்ணீர் எதற்காகத் தோன்றியது எனக் கேட்பாரேயானால் அவை உயிரினங்களின் பயன்பாட்டிற்காக என பெரும்பாலான மாணவர்கள் பதில் சொல்வார்கள். இதைப் போன்று பேரண்டம் எப்படித் தோன்றியது எனக் கேட்டால் பெரு வெடிப்பு, காலம், விரிவாக்கம், பொருட்கள் மற்றும் பற்பல விசைகளால் தோன்றியது என பதில் கூறலாம். இவை பேரண்டமாக எவ்வாறு உருப்பெற்றது எனக் கேட்டால் அதற்குரிய விதிகளால் என பதில் கூறலாம்.

இதுவரை கூறப்பட்டவைகளுக்கு அறிவியல் அடிப் படை உண்டு. எனவே வேறு பதில்களைக் கூறினால் நாம் இது வரை கண்ட அறிவியலுக்கு முரணாகும். இப்போது இன்னும் சற்று ஆழமாகச் சென்று பேரண்டம் ஏன் தோன்றியது எனக் கேட்டால் சிலருக்கு பதில் இல்லாமல் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இப்படிக் கூறுவார்கள். “இனவிருத்தி செய்யக் கூடியதும் நம் போன்று சிந்தித்து “பேரண்டம் ஏன் இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது எனக் கேட்கும் அளவிற்கு பகுத்தறிவுள்ளதுமான உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்கு என பதிலளிக்கிறார்கள். இது ஆந்தரபிக் கோட்பாடு என அழைக்கப்படும் அறிவியலாளர்களின் கருத்துரையே (எநசயடி) அன்றி அறிவியல் சித்தாந்தமன்று.

இந்த அறிவியல் கருத்துரை திருக்குர்ஆனை மெய்ப்பிக்க உதவும் தகவல் என்பதை கடைசி அத்தியாயத்தில் விளக்கியுள்ளோம். எனவே இது வரை பிரச்சனை எதுவும் இல்லை. ஆயினும் அடுத்த வினாவிற்குள் புகும் போது பிரச்சனைகள் எழுகின்றன.

இப்போது நமது வகுப்பாசிரியர் மாணவர்களை நோக்கி உயிரினங்களின் பயன்பாட்டிற்காகவே தண்ணீர் தோன்றியது எனில் அதைத் தோற்றுவித்தவர் யார் எனக் கேட்பாரேயானால் மாணவர்கள் இரண்டு விதமாக பதில்களைக் கூறுவார்கள். ஒரு பிரிவார் தண்ணீரைத் தோற்றுவித்தது விதிகளையும், பொருட்களையும் உருவாக்கிய கடவுளே எனக் கூறும் போது மறு பிரிவைச் சார்ந்தவர்கள் யாரும் எதையும் உருவாக்க வில்லை; எல்லாமே விதிகளின்படி தோன்றியவைகளே எனப் பதில் கூறுவார்கள். இதைப் போன்று பேரண்டம் உருவாக்கி யது யார் என்ற வினாவிற்கு சிலர் கடவுள் என்று கூறும் போது அந்த்ரபிக் கோட்பாடு கடவுளைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியைத் தேடிக் கண்டுபிடித்தது. அந்த பதிலைத் தான் ஹாக்கிங் நமக்கு முன்னர் கண்ட மேற்கோள் வழியாக அறிமுகப்படுத்தினார்.

எண்ணற்ற பேரண்டங்களின் தோற்றுவாய்

மானிடத் தோற்றம் நடைபெறுவதற்கு நட்சத்திரங்கள் இருக்கவேண்டுமென்பதை ஆந்த்ரபிக் கோட்பாடு வலியுறுத்துகிறது. நட்சத்திரங்களும் அவைகளை உருவாக் கும் நெபுலாக்களும் இணைந்து ஒரு குழுவாகச் செயல்படும் தொகுதியே காலக்சிகள் ஆகும். காலக்சிகளும், நட்சத்திரங் களும் தோன்ற வேண்டுமாயின் குறைந்த பட்சம் பெரு வெடிப்பும், விரிவாக்கமும் முன் அத்தியாயத்தில் குறிப்பிட்ட விதத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். மில்லியன் கணக்கான பேரண்டங்கள் தான்தோன்றித்தனமாக (ஒழுங்கும் வழவழப்பும் இன்றி) தோன்றியதாகவும், அவைகளில் ஒன்றே ஒன்று மட்டும் குழப்பமான நிலையிலிருந்து ஒழுங்கும் (சநபரடயச) வழவழப்பும் (ளஅடிடிவா) பெற்று காலக்சிகளும், நட்சத்திரங்களும் தோன்றின என அனுமானித்தால் கூட அப்போதும் கடவுளின் தேவையை மறுக்க இயலாத நிலையே தொடரும். மில்லியன் கணக்கான பேரண்டங்களில் என்பதற்கு பதிலாக நூறு கோடி என்றோ அல்லது பத்து இலட்சம் கோடி என்றோ எண்ணிக்கை அதிகரித்தால் கூட கடவுளின் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கும். எனவே எண்ணற்ற பேரண்டங்கள் தான்தோன்றித் தனமாக தோன்றியதாகவும் அவைகளில் ஒன்றே ஒன்றில் நட்சத்திரங்களும் காலக்சி களும் தப்பித் தவறி தோன்றி விட்டன எனவும் வைத்துக் கொண்டால் கடவுளின் தேவையைத் தவிர்த்து விடலாம் என்று எண்ணி பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது என அனுமானித்தனர்.

இது ஒரு திறமையான (?) கண்டுபிடிப்பு. ஒருவர் ஒரு கொலையைச் செய்து விட்டால் அக்கொலைக்கு அவரைப் பொறுப்பாளியாக்கி விடுவார்கள். அந்தப் பொறுப்பிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமானால் அவர் சகட்டு மேனிக்கு கண்டவரையெல்லாம் வெட்டிக் கொல்ல வேண்டும். அப்போது அவர் எல்லாவிதமான கொலைகளின் பொறுப்பி லிருந்தும் விடுவிக்கப்படுவார். ஏனெனில் அவருக்குப் பைத்தியம். எனவே அவருடைய கொலைகளுக்கு நோக்கம் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்படும். ஆனால் பேரண்டங்களின் எண்ணிக்கையை எப்படிக் கூட்டினாலும் நாம் வாழுகின்ற அந்தப் பேரண்டம் நோக்கமின்றி படைக்கப்பட்டதாக எவ்வளவு சிறந்த வழக்குரைஞரின் வாதத் திறமையாலும் நிரூபிக்க முடியாத அளவிற்கு இது ஒழுங்கையும், வழவழப்பையும் பெற்றுள்ளது. இதை எப்படிச் சமாளிப்பது? ஆனால் ஆந்த்ரபிக் கோட்பாட்டினர் நாம் சிந்தித்தது போன்று பைத்தியக்காரத் தனமான ஒரு பைத்தியக்காரனைக் கொண்டு பிரச்சனையைச் சமாளிக்க முயலவில்லை. அதற்குப் பதிலாக ஒரு படுசூப்பர் ஐடியாவை (?) கண்டு பிடித்தார்கள். இதோ அந்த ஐடியா!

மந்திக்கு வந்த வாழ்வு!

ஒரு குரங்கைப் பிடித்து வந்து தட்டச்சு இயந்திரத்தில் உட்கார வைத்தால் அது சரியாக அந்த தட்டச்சு இயந்திரத்தின் விசைத் தட்டில் (முநல க்ஷடியசன) தடதடவெனத் தட்டுமாம். அப்படித் தட்டத் தொடங்கினால் பெரும்பாலான தாள்களில் எந்த வார்த்தையும் இல்லாமல் அவை வெறும் குப்பைக் கூளமாகவே (பயசயெபந) இருக்குமாம். இந்த நிலையில் ஏதேனும் ஒரு தாளில் `ளுகூஹசு எனும் ஒரு வார்த்தை கிடைக்க வேண்டுமானால் அதற்காக எவ்வளவு தாள்களை அக்குரங்கு வீணடிக்க வேண்டும்? அவை ஏராளமாக இருக்கும். இப்போது அந்தக் குரங்கு கூறமேடந, வறமேடந டவைவடந ளவயச என்ற கவிதை வரியை ஒரு தாளில் தற்செயலாக (தப்பித்தவறி) தடதட செய்ய வேண்டுமானால் எவ்வளவு தாள்கள் வீணாக்கப்படும்? ஆனால் நமது பேரண்டம் ஒரு பள்ளிச் சிறுவனால் உருவாக்கப்படும் தரத்திலன்றி நமது அறிவியலையெல்லாம் முடமாக்கிவிடும் பெருவெடிப்பு சிங்குலாரிட்டியிலிருந்து தோன்றியது. எனவே அதற்கீடான அறிவாற்றல் தேவைப்படும் ஒரு கவிதையை டைப் செய்ய வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு கவிதையைத் தேடுவது இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவதற்கு ஒப்பாகும் என்பதை விளக்கத் தேவையில்லை. அதற்காக முயற்சியைக் கைவிட்டு விடக் கூடாது. ஏனெனில் கடவுளின் பங்கைத் தவிர்த்தே ஆக வேண்டும். இருக்கவே இருக்கிறது ஷேக்பியரின் கவிதை கள். இக்கவிதைகளை மீறுவதற்கு உலகில் கவிதைகளே இல்லை. (இது உலகில் நிலவும் ஒரு பொதுவான கருத் தாகும்) எனவே அப்படிப்பட்ட கவிதை ஒரு குரங்கின் தடதட பொழுது போக்கிலிருந்து டைப் ஆகி வரவேண்டுமானால் அதனுடைய `நிகழ் தகவு (யீசடியெடெவைல) எண்ணற்றதாகும். இதன் பொருள் அக்குரங்கு எண்ணற்ற தாள்களை வீணடித்தால் மட்டுமே அதிலிருந்து ஒரு ஷேக்பியரின் கவிதை தோன்ற முடியும் என்பதாகும்.

அந்த ஷேக்பியரின் கவிதையே நாம் வசிக்கும் இந்தப் பேரண்டம். அக்குரங்கு வீணடித்த எண்ணற்ற ஏனைய தாள்களே ஏனைய ஒழுங்கற்ற (சைசடிபரடயச) மற்றும் வழவழப்பற்ற (ளஅடிடிவாடநளள) பேரண்டங்களாகும். இப்பேரண்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பேரண்டங்களாகவும் இருக்கலாம் (கேவைநடல அயலே ரஎநசளநள) அல்லது அவை யாவும் ஒரு குழுவாக இணைந்திருந்தால் அந்த மகா பேரண்டம் அண்ட வெளியில் எல்லையற்றதாகவும் (ளயீயவயைடடல கேவைந) இருக்கலாம்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டங்களின் எண்ணிக்கையை எல்லையற்றதாகக் கூறியதற்குக் காரணம் கடவுளின் தேவையை மறுப்பதற்கே அன்றி அக்கருத்து அறிவியலை அடிப்படையாகக் கொண்டதில்லை என்பதை இப்போது விளங்கிக் கொண்டிருப்பீர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கோட்பாடு தமக்குத்தாமே முரண் பட்டதே என்பதாகும்.

காலம் இல்லையேல் நிகழ்ச்சிகளும் இல்லை!

நாம் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் பேரண்டத்தைப் போன்று சீரான, வழவழப்பான ஒரு பேரண்டம் உருவாகுவதற்குரிய நிகழ்தகவு (நடைபெறு வதற்குரிய சாத்தியக் கூறு) எண்ணற்றவைகளில் ஒன்றாகும் எனில் அது உருவாகுவதற்கு எல்லையற்ற காலமும் தேவைப்படும். ஏனெனில் காலம் இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை. காலம் என்பதன் வரைவிலக்கணமே (னநகவைடி) `நிகழ்ச்சிகளின் இடைவெளி (ஒரு நிகழ்ச்சிக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கும் இடையிலுள்ள தூரம்) என்பதாகும். எனவே நிகழ்ச்சிகள் நடைபெற காலமும் இருந்தாக வேண்டும். இதிலிருந்து எண்ணற்ற பேரண்டங்கள் தோன்ற வேண்டுமாயின் அதற்காக எல்லையற்ற காலமும் தேவைப்படும் என்பது திண்ணம். சுருங்கக் கூறின் நமது பேரண்டம் எண்ணற்ற பேரண்டங்களுள் ஒன்றாகத் தோன்றும் நிகழ்தகவையே பெற்றுள்ளது எனில் அதன் பொருள் நமது பேரண்டம் தோன்றுவதற்கு எல்லையற்ற காலமும் தேவை என்பதாகும். இப்போது எழும் முதல் கேள்வி எல்லையற்ற காலத்தில் தோன்ற வேண்டிய நமது பேரண்டம் எப்படி இப்போதே தோன்றி விட்டது என்பதாகும்.

மேலும் இக்கோட்பாடு அறிமுகப்படுத்தியிருக்கும் நிகழ்தகவைக் கணித முறைப்படி பரிசோதனை செய்து பார்த்தால் கூட இப்பேரண்டம் தோன்றுதல் என்பது மிகவும் நிகழ்தகவற்றது எநசல அயீசடியெடெந – என்பதை ஹாக்கிங் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மேற்கோளில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். மேலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் இவ்வாறு அமைவதற்குக் காரணமாக இருந்த அதன் குறிப்பிடும்படியான தொடக்க நிகழ்ச்சிகள் ஏன் அப்படி நடை பெற்றது என்பதை ஒரு கடவுளின் செயலில்லாமல் விளங்கு வது கடினம் என அவர் குறிப்பிட்டு இருப்பதையும் கருத்தில் கொண்டால் ஹாக்கிங் மந்த புத்தி கூட இல்லாத இந்த மந்திக் கவிதை வாதத்தை ஏற்கவில்லை எனப் புலனாகிறது.

மந்திக் கவிதையின் அறிவியல் முரண்பாடுகள்

ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதம் காலம் எல்லையற்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னர் கண்டோம். எனவே காலம் எல்லையற்றது இல்லையெனில் மந்திக் கவிதையும் இல்லை என்பது அதன் பொருளாகும். இப்போது நமது கேள்வி காலம் எல்லையற்றது எனும் வாதம் அறிவியல் சார்ந்ததா? என்பதே.

காலம் எல்லையற்றது இல்லையென்றும் அதற்கு ஒரு தொடக்கம் இருக்கிறது என்றும் பெருவெடிப்பு எந்தக் கணத்தில் தொடங்கியதோ அந்தக் கணத்தில் தான் காலம் தொடங்கியது என்பதையும் நாம் முன்னர் கண்டோம். மேலும் பெருவெடிப்புக்கு முன்னால் ஏதேனும் நடைபெற்றிருந்தால் கூட அதை நாம் அறிவியல் விதிகளால் கண்டுபிடிக்க இயலாது என்பதே நமது அறிவியலின் நிலை என்பதையும் முன் அத்தியாயங்களில் கண்டோம். இந்த நிலையில் பெருவெடிப்புக்கு முன்னால் எண்ணற்ற குழம்பிய சீரற்ற பேரண்டங்கள் தோன்றியுள்ளன என்பதை மந்திக் கவிதையின் ஆதரவாளர்கள் எந்த அறிவியல் விதிகளால் கண்டுபிடித்தனர் என்பதே நமது கேள்வியாகும்.

இறையியலை நிராகரித்து விட்டு அறிவியலை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்த மந்திக் கவிதை வாதம் உள்ளபடியே எல்லாக் கோணங்களிலும் அறிவியலுக்கு முரணாக இருப்பதால் அறிவியல் அன்பர் களால் இதை ஏற்க இயலாது என்பது ஐயத்திற்கு இடமில்லாததாகும்.

இது வரை விவாதித்த விபரங்களிலிருந்து நாம் வசிக்கும் இந்தப் பேரண்டம் கடவுளின் செயலின்றி தோன்றியிருக்க முடியாது எனக் கண்டோம். இருப்பினும் கடவுளின் பங்கு இல்லாமல் இப்பேரண்டம் தோன்றியதாக இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்க முடியுமா எனச் சிலர் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். இவர்களின் வாதத்திற்கு குறைந்த பட்சம் ஒரு வாதத்தகுதி(டயறபஉ)யாவது இருக்க வேண்டு மாயின் பேரண்டங்களின் தோற்றம் எக்காலத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் எவ்வித நோக்கமும் இல்லாத நிகழ்ச்சிப் போக்கு எனும் அறிவியல் சாத்தியமற்ற ஒரு கருத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பேரண்டங்களின் எண்ணிக்கை எண்ணற்றது என கூற வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் பேரண்டங்களின் தோற்றத்தில் அறிவியல் பார்வை வலியுறுத்தும் கடவுளின் பங்கை ஏற்றுக் கொள்ளும் போது பேரண்டங்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சனையே இல்லை என்பதை விளக்கத் தேவையில்லை. எனவே பேரண்டங்களின் எண்ணிக்கை ஏழு எனத் திருக்குர்ஆன் கூறியதிலும் எவ்வித அறிவியல் முரண் பாடும் இல்லை என்பதும் மிகத் தெளிவாகும்.

அடுக்குகளாய் அமைந்த வானம்

அத்தியாயத்தின் தொடக்கத்தில் நாம் கண்ட திருக் குர்ஆன் வசனம் (71:15) ஆகாயங்களின் எண்ணிக்கை ஏழு என்பதோடு அவை பல அடுக்குகளாய் படைக்கப்பட்டுள்

ளன எனும் ஓர் அரிய அறிவியல் தகவலையும் தந்துள்ளது. பேரண்டங்களின் (ஆகாயங்களின்) எண்ணிக்கை எவ்வளவு என அறிவியலால் தீர்மானிக்க முடியவில்லையென்றாலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் அடுக்குகளால் உருவானதே என்பதை அறிவியல் ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன.

சர் வில்லியம் ஹெர்ஷல் என்பவரே முதலாவதாக இத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்ட அறிவியலாளர் ஆவார். கலிலியோ கண்டுபிடித்த தொலை நோக்கியின் தொழில் நுட்பத்தில் சில மாற்றங்களைச் செய்து அதை விட முன்னேறிய மற்றொரு தொலை நோக்கியை உருவாக்கி அவர் விண்ணை ஆராயத் துவங்கினார். இருப்பினும் நவீன அறிவியல் உலகின் தொலை நோக்கியுடன் ஒப்பிடும் போது ஹெர்ஷலின் தொலை நோக்கியின் பார்வைத் திறம் மிகவும் குறைவாகவே இருந்ததால் பல வருடங்கள் இடைவிடாமல் முயற்சி செய்த பிறகும் ஆகாயத்தில் 688 அடுக்குகளைத் தாம் அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. பேரண்டங்களின் அடுக்குகளைப் பற்றிய சரியான தகவல் மேலும் மிகத் தாமதமாகவே அறிவியல் உலகம் கண்டுபிடித்தது.

1924ல் எட்வின் ஹப்பிள் என்பவர் தாம் பேரண்டம் என்பது காலக்சிகள் எனும் நட்சத்திர மண்டலங்களின் ஏராளமான தொகுதிகளால் உருவானதே எனக் கண்டு பிடித்தவராவார். காலக்சிகள் என்பதைச் சுருக்கமாக நட்சத்திரக் கூட்டங்கள் (ளவயச உடரளவநசள) நட்சத்திர மேகங்கள் (ளவயச உடடிரனள) அல்லது நெபுலாக்கள் இவற்றுடன் ஏராளமான ஒற்றை நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்கள் (வற ளவயசள) பன்மை நட்சத்திரங்கள் (அரடவயீடந ளவயசள) வால் நட்சத்திரங்கள் (உடிஅநவள) நியூட்ரான் நட்சத்திரங்கள் (ரேவசடி ளவயசள) கருங்குழிகள் (டெயஉம டிடநள) மற்றும் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளிட்ட மாபெரும் ஓர் அண்டத் தொகுதியாகக் குறிப் பிடலாம். பேரண்டத்தில் இவைகளின் எண்ணிக்கை நூறு கோடியென்றும் ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் அறிவியலாளர் ஷேப்லி கணக்கிட்டுள்ளார். (பக்கம் 8-9) ஆனால் நவீன கணக் கீட்டின்படி கேலக்சியின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சில பதினாயிரம் கோடிகளாகும்.

(பார்க்க பக்கம் 38:39 எ ப்ரீஃப் ஹிடரி ஆப் டைம்)

நமது அறிவியல் திறமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு வருவதால் இதை விட அதிகமான காலக்சிகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் எதிர் காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம். எப்படிப் பார்த்தாலும் நாம் வசிக்கும் பேரண்டம் காலக்சிகளின் அடுக்குகளால் உருவாக்கப் பட்டிருப்பதால் ஏனைய ஆறு பேரண்டங்களும் அடுக்கு களின் தொகுதிகளாக இருந்து விட்டால் அது எவ்வித அறிவியல் முரண்பாடும் இல்லாததே என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

விண்ணகத்தின் அமைப்பைப் பற்றி நாம் இது வரை விவாதித்த விபரங்களில் சில எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை சார்ந்ததாக இருப்பினும் அவற்றுள் ஒன்றாகிய நாம் வசிக்கும் இப்பேரண்டம் என்பது ஏராளமான அடுக்குகளால் உருவாக்கப்பட்டதே என்பதை நாம் இப்போதே கண்டுபிடித்து விட்டிருக்கிறோம். வானங்கள் அடுக்குகளால் அமைந்தவையே எனப் பொருள்படும் திருக்குர்ஆன் வசனத்தை மெய்ப்பிக்கும் அறிவியல் ஆதாரமே இதுவாகும். நவீன அறிவியல் உலகில் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளின் உதவியால் ஆகாயத்தில் அறிவியல் ஆய்வுகள் நடத்துபவர்களால் மட்டும் அறிந்து கொள்ள முடியும். இந்த அறிவியல் உண்மை ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடிந்தது என்பதை சிந்திக்கும் போது திருக்குர்ஆன் பேரண்டங்களைப் படைத்த இறைவனின் ஞானத்திலிருந்து தோன்றியதே அன்றி ஒரு மனிதனின் அறிவிலிருந்து தோன்றி இருக்க முடியாது என்பது ஓர் அறிவியல் உண்மை யாக நம்மால் மிக எளிதாக விளங்க முடிகிறது.

அத்தியாயம் 4

சீராக அமைந்த வானங்கள்

சென்ற அத்தியாயத்தில் பேரண்டத்தின் சில முக்கிய மான இயற்பியல் குணங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். அந்த முக்கியமான பண்புகளில் ஒன்று நமது பேரண்டத்தின் சீரான மற்றும் ஒழுங்கான (ரகைடிசஅ யனே சநபரடயச) அமைப்பும் அதன் வழவழப்பான (ளஅடிடிவா) தன்மையுமாகும். மொத்த அறிவியல் உலகையும் பேரண்டத்தின் இப்பண்பு பெரும் வியப்பிற்குள் ஆழ்த்தும் போது அறிவியலாளர்களில் ஒரு பிரிவாராகிய இறை மறுப்பாளர்களை வியப்பிற்கு பதிலாக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நமது சிற்றினம் (ளயீநஉநைள) இந்த பூமியில் தோன்றிய காலம் முதல் நம்முடன் தோன்றிய அறிவியல் அறிவின் உட்கிடக்கை (நசவையபந)கு ஏற்ற வகையில் எப்படியல்லாம் சிந்தித்த போதும் இப்படிப்பட்ட ஒரு பேரண்டம் தோன்ற வேண்டுமாயின் அது முன் கூட்டித் தீர்மானித்த நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற செயலாகக் காட்சியளிப்பதால் கடவுளைத் தவிர்க்க இயலாத நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் அறிவியலை ஏற்பதற்காகக் கடவுளை ஒப்புக் கொள்வதா அல்லது கடவுளை மறுப்பதற்காக அறிவியலைப் புறக்கணிப்பதா எனத் தீர்மானிக்க வேண்டிய கட்டம் வந்த போது கடவுளை மறுக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றி பெற்றதால் அதற்கேற்ற ஓர் அறிவியல் புனைவை (ளஉநைஉந கஉவடி) கற்பனை செய்து கொண்டார்கள். இதன் விளைவாக பேரண்டம் எவ்வித நோக்கமும் இல்லாமல் இயற்கையாகத் தோன்றுகின்றன என்றும் அதனை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆந்த்ரபிக் மந்திக்கு ஏற்பட்ட தவறே நாம் வசிக்கும் இப்பேரண்டம் எனும் அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு அறிவியல் புனைவை உருவாக்கி அதை அறிவியல் கருத்துரையாக அறிமுகப் படுத்துகின்றனர்.

நாம் வசித்துக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பான இயற்பியல் பண்புகளும் அதன் முக்கியத்துவமும் சென்ற நூற்றாண்டின் கடைசியில் தாம் தெரிய வந்தது. இது தெரிய வந்த போது அது எவ்வளவு பெரிய வியப்பை அறிவியல் உலகில் தோற்றுவித்ததோ அதை விடப் பெரிய வியப்பிற்குரிய செய்தி யாதெனில் நமது பேரண்டத்தின் இச்சிறப்பியல்புகளும் அதற்காக இறை மறுப்பாளர்கள் கூறும் காரணங்களும் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஏழாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் ஓங்கிய குரலில் பாரறிய பறை சாற்றிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

குறையற்ற வானங்கள்

அறிவியலாளர்களை வியக்கச் செய்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவ்வித ஏற்றக் குறைச்சலை யும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையைச் செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும்.

(67 : 3-4)

மேற்கண்ட திருமறை வசனங்கள் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் தலைப்போடு தொடர்பு கொண்டது எனக் கூறப்பட்ட பிறகும் சட்டெனப் புரியாத நிலை பலருக்கும் காணப்படலாம். எனவே இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வசிக்கும் இப்பேரண்டத்தின் ஒழுங்கான மற்றும் சீரான பரவலும் (னளைவசரெவடி) வழவழப்பான தன்மையும் அதன் மிக முக்கியமான இயற்பியல் குணங்களாகும் என முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். பேரண்டம் இவ்வாறு சீராக ஒழுங்காகப் பரவியுள்ளது எனில் அண்டவெளியில் எவ்வித ஏற்றக் குறைச்சலும் இல்லை என்பதே அதன் பொருளாகும், ஏற்றக் குறைச்சல் இல்லை என்றால் எதனுடைய ஏற்றக் குறைச்சல் எனும் கேள்வி வாசகர்களிடம் இப்போது எழுந்திருக்கும். விளக்குவோம்.

ஆகாயம் என்பது வெறும் சூன்யமான அண்டவெளியே அன்றி அப்படி எதுவும் இல்லை என இப்போதும் பொது மக்களில் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும். ஆகாயம் என்பது உண்மையிலேயே படைக்கப் பட்ட ஒரு பேருருவமாகும். அதில் பெரும் பெரும் நட்சத்திர மண்டலங்கள் (காலக்சிகள்) ஏராளமாக உள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே அதை விடப் பன்மடங்கு பிரமாண்டமான அண்டவெளி இருக்கிறது. இதைப் பற்றி அறிவியலாளர் டேவிட்சன் கூறுவது வருமாறு:

இந்த அண்டவெளியில் பல்வேறு தனிமங்களின் மூலக் கூறுகளும், அணுக்களும் பரவியுள்ளன. இவைகளுடன் அண்டத் துகள்களும் (உடிளஅஉ னரளவள) கலந்துள்ளன. இருப்பினும் பூமியில் உருவாக்கக் கூடிய வெற்றிடத்தை விட மிகக் குறைந்த வாயுப் பொருட்களே காலக்சிகளின் இடை வெளியில் இருக்கின்றன. அதே நேரத்தில் காலக்சிகளின் பரப்பளவை விடப் பன்மடங்கு பிரமாண்டமான இடை வெளியை அவை பெற்றுள்ள காரணத்தால் பேரண்டத்தி லுள்ள மொத்த நட்சத்திரங்களின் பொருண்மைக்கு நிகராகவோ அல்லது அதை விட அதிகமாகவோ பொருண்மையை காலக்சிகளின் இடைவெளியிலுள்ள பொருட்கள் பெற்றிருக்கும்.

(பார்க்க பக்கம் 1-2 அட்ரானமி ஃபார் எவரி மேன்)

பேரண்டப் பெருவெளி நம் கற்பளைக் கெட்டாத தூரம் பரவிக் கிடக்கின்ற போதிலும் நம் அறிவியல் கண்களுக்கு எட்டிய தூரமெல்லாம் அண்டவெளியில் பரவியிருக்கும் அண்டத் துகள்களும் ஏனைய மூலக் கூறுகள் மற்றும் அணுக் களும் செவ்வொழுங்காக ஒரே சீராகப் பரவியிருக்கின்றன. எந்த ஓர் இடத்திலும் ஏற்றக் குறைவு இல்லை. அவை எந்த ஓர் இடத்திலும் அடர்த்தி மிகுந்தோ அல்லது அடர்த்தி குறைந்தோ காணப்படவில்லை. அதோடு எந்த ஓர் இடத் திலேனும் அவை அறவே இல்லாமல் எவ்விதமான பிளவு களும் உருவாகவில்லை. இது மட்டுமின்றி பேரண்டம் மொத்தமும் பரவியுள்ள வெப்பமும் (2.2 மு) ஒரே சீராக உள்ளன.

வழுக்கும் வானங்கள்!

அண்டவெளியின் அமைப்பு இதற்கு மாறாக சில இடங்களில் அடர்த்தி மிகுந்து காணப்பட்டால் அந்த இடத்தை நாம் ஒரு கரடுமுரடான அல்லது மேடான இடமாகக் கற்பனை செய்யலாம். அதே நேரத்தில் வேறு ஓர் இடத்தில் அண்டவெளி அடர்த்தி மிகக் குறைவாகக் காணப்பட்டால் அந்த இடத்தை ஒரு பள்ளமான இடமாகக் கற்பனை செய்யலாம். வேறு வார்த்தைகளில் கூறினால் நமது பேரண்டம் மேடு பள்ளங்களோ, பிளவுகளோ, குண்டும் குழியுமாகவோ இல்லாமல் வழவழப்பாக ஒழுங்குற அமைந்த ஆகாயமாகும். நமது ஆகாயப் பெருவெளி இவ்வளவு ஒழுங்குற அமைந்திருப்பது அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பேரண்டம் ஏன் இவ்வளவு வழுக்கலாக (ளஅடிடிவா) இருக்கிறது எனும் வினா ஹாக்கிங் அவர்களின் நூலில் பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.

ஹளவசடிடிஅல கடிச நஎநசல அய – நுனவைநன லெ ஆயசவ னுயஎனைளடி சுநஎளைநன நனவைடி 1954 – கூந ஹடனநே ஞசநளள – டுநவஉ றுடிசவா ழநசவள

அத்தியாயம் 4

சீராக அமைந்த வானங்கள்

சென்ற அத்தியாயத்தில் பேரண்டத்தின் சில முக்கிய மான இயற்பியல் குணங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். அந்த முக்கியமான பண்புகளில் ஒன்று நமது பேரண்டத்தின் சீரான மற்றும் ஒழுங்கான (ரகைடிசஅ யனே சநபரடயச) அமைப்பும் அதன் வழவழப்பான (ளஅடிடிவா) தன்மையுமாகும். மொத்த அறிவியல் உலகையும் பேரண்டத்தின் இப்பண்பு பெரும் வியப்பிற்குள் ஆழ்த்தும் போது அறிவியலாளர்களில் ஒரு பிரிவாராகிய இறை மறுப்பாளர்களை வியப்பிற்கு பதிலாக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நமது சிற்றினம் (ளயீநஉநைள) இந்த பூமியில் தோன்றிய காலம் முதல் நம்முடன் தோன்றிய அறிவியல் அறிவின் உட்கிடக்கை (நசவையபந)கு ஏற்ற வகையில் எப்படியல்லாம் சிந்தித்த போதும் இப்படிப்பட்ட ஒரு பேரண்டம் தோன்ற வேண்டுமாயின் அது முன் கூட்டித் தீர்மானித்த நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற செயலாகக் காட்சியளிப்பதால் கடவுளைத் தவிர்க்க இயலாத நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் அறிவியலை ஏற்பதற்காகக் கடவுளை ஒப்புக் கொள்வதா அல்லது கடவுளை மறுப்பதற்காக அறிவியலைப் புறக்கணிப்பதா எனத் தீர்மானிக்க வேண்டிய கட்டம் வந்த போது கடவுளை மறுக்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றி பெற்றதால் அதற்கேற்ற ஓர் அறிவியல் புனைவை (ளஉநைஉந கஉவடி) கற்பனை செய்து கொண்டார்கள். இதன் விளைவாக பேரண்டம் எவ்வித நோக்கமும் இல்லாமல் இயற்கையாகத் தோன்றுகின்றன என்றும் அதனை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆந்த்ரபிக் மந்திக்கு ஏற்பட்ட தவறே நாம் வசிக்கும் இப்பேரண்டம் எனும் அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு அறிவியல் புனைவை உருவாக்கி அதை அறிவியல் கருத்துரையாக அறிமுகப் படுத்துகின்றனர்.

நாம் வசித்துக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பான இயற்பியல் பண்புகளும் அதன் முக்கியத்துவமும் சென்ற நூற்றாண்டின் கடைசியில் தாம் தெரிய வந்தது. இது தெரிய வந்த போது அது எவ்வளவு பெரிய வியப்பை அறிவியல் உலகில் தோற்றுவித்ததோ அதை விடப் பெரிய வியப்பிற்குரிய செய்தி யாதெனில் நமது பேரண்டத்தின் இச்சிறப்பியல்புகளும் அதற்காக இறை மறுப்பாளர்கள் கூறும் காரணங்களும் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஏழாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் ஓங்கிய குரலில் பாரறிய பறை சாற்றிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

குறையற்ற வானங்கள்

அறிவியலாளர்களை வியக்கச் செய்து கொண்டிருக்கும் இப்பேரண்டத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவ்வித ஏற்றக் குறைச்சலை யும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையைச் செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும்.

(67 : 3-4)

மேற்கண்ட திருமறை வசனங்கள் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் தலைப்போடு தொடர்பு கொண்டது எனக் கூறப்பட்ட பிறகும் சட்டெனப் புரியாத நிலை பலருக்கும் காணப்படலாம். எனவே இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வசிக்கும் இப்பேரண்டத்தின் ஒழுங்கான மற்றும் சீரான பரவலும் (னளைவசரெவடி) வழவழப்பான தன்மையும் அதன் மிக முக்கியமான இயற்பியல் குணங்களாகும் என முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். பேரண்டம் இவ்வாறு சீராக ஒழுங்காகப் பரவியுள்ளது எனில் அண்டவெளியில் எவ்வித ஏற்றக் குறைச்சலும் இல்லை என்பதே அதன் பொருளாகும், ஏற்றக் குறைச்சல் இல்லை என்றால் எதனுடைய ஏற்றக் குறைச்சல் எனும் கேள்வி வாசகர்களிடம் இப்போது எழுந்திருக்கும். விளக்குவோம்.

ஆகாயம் என்பது வெறும் சூன்யமான அண்டவெளியே அன்றி அப்படி எதுவும் இல்லை என இப்போதும் பொது மக்களில் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும். ஆகாயம் என்பது உண்மையிலேயே படைக்கப் பட்ட ஒரு பேருருவமாகும். அதில் பெரும் பெரும் நட்சத்திர மண்டலங்கள் (காலக்சிகள்) ஏராளமாக உள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே அதை விடப் பன்மடங்கு பிரமாண்டமான அண்டவெளி இருக்கிறது. இதைப் பற்றி அறிவியலாளர் டேவிட்சன் கூறுவது வருமாறு:

இந்த அண்டவெளியில் பல்வேறு தனிமங்களின் மூலக் கூறுகளும், அணுக்களும் பரவியுள்ளன. இவைகளுடன் அண்டத் துகள்களும் (உடிளஅஉ னரளவள) கலந்துள்ளன. இருப்பினும் பூமியில் உருவாக்கக் கூடிய வெற்றிடத்தை விட மிகக் குறைந்த வாயுப் பொருட்களே காலக்சிகளின் இடை வெளியில் இருக்கின்றன. அதே நேரத்தில் காலக்சிகளின் பரப்பளவை விடப் பன்மடங்கு பிரமாண்டமான இடை வெளியை அவை பெற்றுள்ள காரணத்தால் பேரண்டத்தி லுள்ள மொத்த நட்சத்திரங்களின் பொருண்மைக்கு நிகராகவோ அல்லது அதை விட அதிகமாகவோ பொருண்மையை காலக்சிகளின் இடைவெளியிலுள்ள பொருட்கள் பெற்றிருக்கும்.

(பார்க்க பக்கம் 1-2 அட்ரானமி ஃபார் எவரி மேன்)

பேரண்டப் பெருவெளி நம் கற்பளைக் கெட்டாத தூரம் பரவிக் கிடக்கின்ற போதிலும் நம் அறிவியல் கண்களுக்கு எட்டிய தூரமெல்லாம் அண்டவெளியில் பரவியிருக்கும் அண்டத் துகள்களும் ஏனைய மூலக் கூறுகள் மற்றும் அணுக் களும் செவ்வொழுங்காக ஒரே சீராகப் பரவியிருக்கின்றன. எந்த ஓர் இடத்திலும் ஏற்றக் குறைவு இல்லை. அவை எந்த ஓர் இடத்திலும் அடர்த்தி மிகுந்தோ அல்லது அடர்த்தி குறைந்தோ காணப்படவில்லை. அதோடு எந்த ஓர் இடத் திலேனும் அவை அறவே இல்லாமல் எவ்விதமான பிளவு களும் உருவாகவில்லை. இது மட்டுமின்றி பேரண்டம் மொத்தமும் பரவியுள்ள வெப்பமும் (2.2 மு) ஒரே சீராக உள்ளன.

வழுக்கும் வானங்கள்!

அண்டவெளியின் அமைப்பு இதற்கு மாறாக சில இடங்களில் அடர்த்தி மிகுந்து காணப்பட்டால் அந்த இடத்தை நாம் ஒரு கரடுமுரடான அல்லது மேடான இடமாகக் கற்பனை செய்யலாம். அதே நேரத்தில் வேறு ஓர் இடத்தில் அண்டவெளி அடர்த்தி மிகக் குறைவாகக் காணப்பட்டால் அந்த இடத்தை ஒரு பள்ளமான இடமாகக் கற்பனை செய்யலாம். வேறு வார்த்தைகளில் கூறினால் நமது பேரண்டம் மேடு பள்ளங்களோ, பிளவுகளோ, குண்டும் குழியுமாகவோ இல்லாமல் வழவழப்பாக ஒழுங்குற அமைந்த ஆகாயமாகும். நமது ஆகாயப் பெருவெளி இவ்வளவு ஒழுங்குற அமைந்திருப்பது அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பேரண்டம் ஏன் இவ்வளவு வழுக்கலாக (ளஅடிடிவா) இருக்கிறது எனும் வினா ஹாக்கிங் அவர்களின் நூலில் பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.

ஹளவசடிடிஅல கடிச நஎநசல அய – நுனவைநன லெ ஆயசவ னுயஎனைளடி சுநஎளைநன நனவைடி 1954 – கூந ஹடனநே ஞசநளள – டுநவஉ றுடிசவா – ழநசவள

சுருங்கக் கூறின் நமது ஆகாயப் பெருவெளி மிகவும் வழுக்கலானது. எனவே அங்கு உராய்வு (கசஉவடி) என்பது அறவே இல்லை. உராய்வு இல்லாததால் அங்கு நடக்கவும் இயலாது. ஒரு விண்வெளி வீரர் (யளவசடியேரவ) தன்னுடைய கப்பலை (ளயீயஉந ளாயீ) விட்டு வெளியேறி ஆகாயத்தில் நகர வேண்டுமென்றால் அவரால் நடக்க இயலாது. அவர் விண் வெளியில் நடப்பதற்காக நீந்த வேண்டியிருக்கும். விண்ணகப் பொருட்கள் எதுவாயினும் அவைகளின் நகர் வைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் போது அதற்கேற்ற பதப் பிரயோகத்தைப் பயன்படுத்துவது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

நாம் இது வரை கூறியதிலிருந்து நாம் வசிக்கும் இப்பேரண்டம் நமது அறிவிற்கு எட்டிய தூரமெல்லாம் அதன் விண்வெளி சீர்மை ஒழுங்குடன் வழவழப்பாக அமைந் துள்ளது எனக் கண்டோம். இருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட இந்த அறிவியல் கண்டுபிடிப்பு அறிவியலா ளர்களை இன்னமும் வியக்க வைக்கிறது. அறிவியலாளர் களை வியக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்தப் புதிரும் அதற்குரிய விடையுமே நாம் கண்ட திருக்குர்ஆன் வசனம் (67:3-4) கூறிக் கொண்டிருக்கும் செய்தியாகும்.

பொருள் விளக்கம்

இப்போது அண்டவெளியின் வினியோகத்தைக் குறித்து திருக்குர்ஆன் கூறும் செய்தியை விளக்கமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். அவ்வசனங்களில் கூறப்பட் டுள்ளபடி ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் எனும் முதலாவது செய்தியை நாம் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டோம். அவ்வசனங்களில் இரண்டாவதாகக் கூறப்பட்டிருக்கும் “(அவனுடைய) படைப்பில் எவ்வித ஏற்றக் குறைவும் காண மாட்டீர்! என்பதன் பொருளும் வாசகர்கள் இப்போது விளங்கிக் கொண்டிருப்பீர்கள். அதாவது அண்டவெளியில் பரவியிருக்கும் அதன் பொருட்களை அவன் வினியோகம் செய்திருப்பதில் எவ்வித ஏற்றக் குறைவும் இல்லை என்பதாகும். ஆனால் “மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? எனத் திருக்குர்ஆன் கூறுகிறதே இதன் பொருள் என்ன? ஆகாயத்தில் ஏதேனும் பிளவுகள் இருப்பதாக யாரேனும் கூறினார்களா? அப்படி யாரும் கூறவில்லையென்றால் மீண்டும் இரு முறை பார்வையைச் செலுத்துவீர்!எனத் திருமறை ஏன் கூற வேண்டும்? அது மட்டுமின்றி மீண்டும் இரு முறை பார்வையைச் செலுத்தினால் கூட அந்தப் பார்வைகள் “களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும் என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. இதற்கெல்லாம் பொருளென்ன?

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து எவ்விதக் குறைபாடும் இன்றி வழவழப்பாகப் படைக்கப்பட்ட வானவெளியில் பிளவுகளைப் போன்ற சில குறைபாடுகள் உண்டு என சிலர் குறை கூறுகின்றனர் என்றும் அவர்களுக் குரிய அறிவுரையாகவே ஆகாயத்தை மீண்டும் நன்கு பார்வையிடும்படி கூறப்பட்டிருக்கிறது என்றும் நாம் யூகிக்க முடிகிறது. இந்த யூகம் மெய்யென்றால் ஆகாயத்தின் படைப்பில் குறைபாடுகள் உண்டு எனக் கூறியது யார் எனும் கேள்வி இப்போது எழுகிறது.

யார் அந்த விமர்சகர்?

இறைத் தூதர் நபிகள் நாயகம் (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) அவர்கள் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில் என்பதும் அவருடைய வாழ்நளில் தாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அவருக்கு வழங்கப் பெற்றது என்பதும் வரலாறு. இறைத் தூதரையும் திருக்குர்ஆனையும் விமர்சனம் செய்து கொண்டிருந்த நிராகரிப்பாளர்கள் இறைத் தூதரும் திருக்குர்ஆனும் போதித்த இலாத்தின் ஏகத்துவ வாதத்தை மட்டுமே நிராகரித்தார்களே அன்றி இறைவனின் உள்ளமையையோ, அவனது எல்லையற்ற படைப்பாற்றலையோ கடுகளவும் மறுத்ததில்லை. ஆகவே அவர்கள் இந்த விமர்சனத்தைச் செய்யவில்லையென்பது சர்ச்சைக்கு இடமில்லாததாகும்.

இந்த நிலையில் அன்று வாழ்ந்திருந்த அறிவியலாளர் களில் யாரேனும் இந்த விமர்சனத்தைச் செய்து இருக்கிறார் களா என்பதைப் பார்த்தால் அன்று நிலவி வந்த அறிவியல் கருத்துக்களில் பெரும் செல்வாக்கு செலுத்திய அரிடாட் டில் (ஹசளைவடிவடந 384 க்ஷஉ – 322 க்ஷஉ) கூட இப்படிப்பட்ட விமர்சனத்தை நடத்தவில்லை எனத் தெரிய வருகிறது.

அறிவியல் வளர்ச்சியோ அல்லது வானியலைப் பற்றிய பிழையற்ற அறிவைப் பெறும் பொருட்டு தகுதி வாய்ந்த அறிவியல் கருவிகளோ இல்லாத பண்டைக் காலத்தில் வானியலில் அரிடாட்டிலுக்கு பெரும் பிழைகள் நேர்ந்துள்ளது என்பது உண்மையே. இதைப் பிரதிபலிக்கும் வகையில் நவீன அறிவியல் உலகின் அறிவியலாளர்கள் அதை நையாண்டியாகக் கூறுவதும் உண்டு.

பூமி பேரண்டத்தின் மையத்தில் அசையாதிருக்க சூரியன் அதைச் சுற்றி வருகிறது என்றோ, இலேசான பொருட்களை விட கனமான பொருட்கள் பூமியின் மீது வேகமாக வீழ்கின்றன என்றோ அரிடாட்டில் கூறினால் ஏனைய அறிவியலாளர்களின் தலைவிதி “அரிடாட்டில் அவ்வாறு கூறினால் அது அப்படியே ஆகும் எனக் கூற வேண்டும் என்பதாகும். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு அறிவியல் உலகில் தன்னிகரில்லா செல்வாக்கு பெற்ற அரிடாட்டில் கூட ஆகாயத்தில் ஓட்டைகளோ, விரிசல்களோ இருக் கின்றன எனும் தவறான கருத்தைத் தெரிவிக்கவில்லை. பிறகு யார் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்க முடியும்?

பண்டைகால அறிவியலாளர்களில் யாரும் பேரண்டப் படைப்பில் இப்படிப்பட்ட ஒரு குறைபாட்டைக் கூறவில்லை என்பதில் இருந்து இப்படிப்பட்ட ஒரு விமர்சனம் செய்யப் பட்டிருப்பின் அது நவீன உலகின் அறிவியலாளர்களால் செய்யப்பட்டதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் நவீன உலகின் அறிவியலாளர்கள் பேரண்டத்தின் படைப்பில் இப்படிப்பட்ட ஒரு குற்றச் சாட்டைக் கூறுவார்கள் என்பது ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குர்ஆனுக்கு எப்படித் தெரியும்?

ஆனால் ஆய்வுக்குரிய திருமறை வசனங்களை ஒன் றல்ல பலமுறை பார்வையை திரும்பத் திரும்பச் செலுத்தினா லும் இறைவனுடைய படைப்பில் குறை கண்டவர்களிடம் அவர்கள் கூறுவது போன்ற குறைபாடுகள் ஏதும் அங்கு இல்லையென்றும் அதை ஒன்றுக்குப் பலமுறை நன்றாகப் பார்த்து தெளிந்து கொள்ளும்படி கூறும் வார்த்தைகளாகவே அவை காட்சியளிக்கிறது. இந்த நிலையில் மெய்யாகவே நவீன உலகின் அறிவியலாளர்கள் யாரேனும் திருக்குர்ஆன் குறிப்பிடும் வகையில் குறை கூறியிருந்தால் திருக்குர்ஆ னுடைய இறைஞானமே அதை தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே கண்டு அதற்குரிய பதிலையும் முன்கூட்டியே கூறிவிட்டது என்பது தெளிவு.

ஹெர்ஷலுக்கு நேர்ந்த தவறு

நவீன வானியல் என்பது தொலை நோக்கியின் குழந்தை எனக் கூறினால் மிகையாகாது. எனவே தாயில்லாமல் சேயில்லை என்பதைப் போன்று தொலை நோக்கி இல்லை யேல் வானியலும் இல்லை. கலீலியோ 1609ல் தொலை நோக்கியை உருவாக்கி வானத்தை ஆய்வு செய்யத் துவங்கினார். அவர் நிலவின் நிலம் சார்ந்த சில குறிப்பிடும் படியான அடையாளங்களையும், சனிக் கோளின் வளையங் களையும் வியாழனின் (துரயீவைநச) நிலாக்களையும் (அடிடிளே), வெள்ளியின் (ஏநரேள) பிறை வடிவங்களையும் (யீயளநள) சூரியனின் அச்சில் சுழற்சியின் (யஒயைட சடிவயவடி) விபரங்களையும் கண்டுபிடித்தார். இதைத் தவிர அவரது மிகக் குறைந்த பார்வைத் திறம் கொண்ட தொலை நோக்கியால் நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பரப்பளவைக் கொண்ட பெருவெளி எனக் கண்டுபிடிக்க இயன்றதே அன்றி அதற்கு மேல் முன்னேற இயலவில்லை.

வானியல் ஆய்வின் முன்னேற்றம் தொலை நோக்கியின் பார்வைத் திறனைச் சார்ந்ததாகும். ஆனால் அதன் முன் னேற்றமோ மந்தமாகவே போய்க் கொண்டிருந்தது. ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1783 ல் வில்லியம் ஹெர்ஷல் (றுடைடயைஅ ழநசஉநட) எனும் உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் தொலை நோக்கியில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களைச் செய்து அண்டவெளியை ஆராயத் துவங்கினார். மிகப் பொறுமை யாக தன் ஆய்வை நடத்திக் கொண்டிருந்த ஹெர்ஷலுக்கு ஏற்பட்ட வானியல் வியப்புகளில் ஒன்றைப் பார்ப்போம்.

ஒரு நாள் அவர் ஆகாயத்தின் வட திசை அரைக் கோளத் தில் (சூடிசவாநச நஅளையீநசந) தம் ஆய்வை நடத்திக் கொண்டிருந்த போது அவருடைய கழுகுக் கண்கள் எதன் மீதோ நிலைகுத்தி நின்று விட்டது. நம்பினாலும் சரி! இல்லாவிட்டாலும் சரி! எல்லையற்ற ஆச்சரிய மிகுதியால் “அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை! வெளி உலகிற்கு ஒரு ஜன்னல்! எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் (யுரேக்கா! யுரேக்கா! எனக் கூக்குரலிட்டுக் கொண்டே நிர்வாணமாக வீதியில் ஓடவில்லை யென்றாலும்) தம் சகோதரியை அழைத்து வந்து தாம் கண்ட ஆச்சரியத்தை தம் சகோதரிக்கும் காட்டியதாகவும் கூறப்படு கிறது. இவர் மட்டும் அன்றி ஆகாயத்தின் தென்பகுதியை ஆராய்ந்து கொண்டிருந்த அவருடைய மகன் ஜான் என்பவரும் இதைப் போன்று ஆகாயத்தில் கருநிறக் கோடுகளை (னுயசம டநேள) கண்டதாகவும் கூறப்படுகிறது.

(பார்க்க பக்கம் 50 நியூ ஹேன்ட் புக் ஆப் ஹெவன்)

பாவம் ஹெர்ஷல் அவர்கள் அண்டவெளியில் ஒரு மாபெரும் அற்புதத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் வாழ்ந்து சென்று விட்டார். ஆனால் அவரும் அவருடைய மகன் ஜான் என்பரும் ஆகாயத்தில் கண்டதாக் கூறிய ஓட்டையும், விரிச லும் (னுயசம டநேள – இருண்ட கோடு) உண்மையே தாமா? நிச்சய மாக இல்லவே இல்லை. நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொலை நோக்கியின் வளர்ச்சியில் முன்னேற்றங்கள் வந்த பின் வானு லகை ஆராய்ந்த அறிவியலாளர்கள் ஹெர்ஷலுக்கும் அவருக்குப் பின்னால் தோன்றிய ஆயிரக் கணக்கான அறிவியலாளர்களுக் கும் நேர்ந்த தவறைக் கண்டுபிடித்து விட்டார்கள். இதைப்பற்றி அதே நூலின் பக்கம் 93-94ல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

அதில் ஒரு வரி இவ்வாறு காணலாம். குடிச அயலே லநயசள வாநளந பசநயவ சைசநபரடயச யசநயள வாந நயஎநளே றநசந வாடிரபாவ வடி நெ டிடநள வாந ளமல றாஉ வாநசந றநசந டி ளவயசள ரெவ றந மடிற வாயவ வாந னயசம சநபடிளே யசந ளடைடிரநவவநள டிக ரடைடரஅயேவநன நேரெடயந வாயவ னைந வாந ளவயசள நொனே.

(பல வருடங்களுக்கு ஆகாயத்திலுள்ள இந்த ஒழுங் கற்ற பெரும் பிரதேசங்கள் நட்சத்திரங்களே இல்லாத ஓட்டைகளாகக் கருதப்பட்டன. ஆனால் அந்த இருண்ட பகுதிகள் நட்சத்திரங்களைப் பின் பக்கம் மறைத்துக் கொண்டிருக்கும் ஒருவித நெபுலாக்களின் நிழல் உருவங்களே என்பது நமக்குத் தெரியும்.)

திருக்குர்ஆனின் தீர்க்க தரிசனம்

திருக்குர்ஆனின் தெய்வீக ஞானத்தை நிரூபிக்கும் எவ்வளவு அற்புதமான அறிவியல் ஆதாரங்கள் இவை! 18ம் நூற்றாண்டிலும், 19ம் நூற்றாண்டிலும் தோன்றக் கூடிய

சூநற ழயனே க்ஷடிடிம டிக ழநளஎநளே – அஉ ழுசயற ழடைட க்ஷடிடிம ஊடிஅயீயலே ஐஉ, சூநற லுடிசம, டுடினேடி

சூயஅந டிக ஹரவாடிசள : 1. ழநசநெசவ து. க்ஷநயசன, 2. னுடிசடிவால ஹ. க்ஷநநேவ, 3. ழரப ளு. சுஉந

ஆயிரக் கணக்கான வானியல் விஞ்ஞானிகளுக்கு ஏற்படக் கூடிய தவறுகளை முன்கூட்டியே கண்டு அவைகளைச் சுட்டிக் காட்டும் பணியை அத்தவறுகள் தோன்றுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் செய்துள்ளது எனில் அதன் தெய்வீக ஞானத்தை யாரால் தாம் புறக்கணிக்க முடியும்? இருப்பினும் இந்த தெய்வீக வெளிப்பாட்டில் யார் அக்கறை காட்டினார்கள்? மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும் இந்த இறை வேதத்தை வெறும் ஆராதனைகளுக்கு மட்டும் உரியதாக எண்ணி ஒதுக்கி வைத்தனர்.

ஹெர்ஷலுக்குப் பிறகு ஆகாயத்தில் எப்பொழுதெல்லாம் ஒரு இருண்ட நெபுலாவை அறிவியலாளர்கள் பார்க்கிறார் களோ அப்பொழுதெல்லாம் அதை ஆகாயத்தின் ஒழுங்கற்ற பகுதியாம் குழியாகவோ, விரிசலாகவோ (திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள `ஃபுதூர் – எனும் வார்த்தை பிளவு, விரிசல், ஓட்டை, உடைந்து விடுதல், கிழிந்து விடுதல் என்பது போன்ற விரிவான அர்த்தங்களைக் கொடுக்கும் சொல்லாகும் என்பதைக் கவனத்தில் கொள்க.) கருதிக் கொண்டனர். சுருங்கக் கூறின் ஆகாயத்தில் ஏராளமான இருண்ட நெபுலாக்கள் இருப்பதால் அவை யாவும் ஆகாயத்தில் உள்ள குழிகளும், விரிசல்களுமாக கற்பளை செய்யப்பட்டு பேரண்டம் என்பதே குண்டும், குழியும் நிறைந்து ஒழுங்கற்ற ஒரு பேருருவமாகக் கிட்டத்தட்ட இரண்டு நூற்றண்டு கால அளவுக்கு அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால் திருக்குர்ஆன் ஆகாயத்தில் அப்படிப்பட்ட குறைபாடுகள் எதுவும் இல்லை என ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி இருந்தும் உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்குக் கூட திருமறை கூறிய அறிவியல் உண்மைகளைக் கண்டு பிடிக்க மேலும் பதிமூன்று நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. திருக்குர்ஆன் மானிடப் படைப்பு இல்லை. அது தெய்வீக வெளிப்பாடே என்பதற்கு இதைவிட சிறந்த அறிவியல் ஆதாரங்கள் வேறென்ன இருக்கப் போகிறது?

மந்திக் கவிதைக்கும் செக்

இது வரை நாம் விவாதித்த விபரங்களிலிருந்து ஆகாயத்தின் படைப்பில் எவ்விக் குறைபாடுகளும் இல்லை எனத் திருக்குர்ஆன் கூறியது ஒரு மகத்தான அறிவியல் உண்மை என்தை நாம் ஐயமற விளங்கிக் கொண்டோம். இந்த வசனங்களில் திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் தனிப்பட்ட பாணி (பார்ப்பீராக! ஏதேனும் பிளவைக் காண் கிறீரா?) யிலிருந்து ஆகாயத்தின் படைப்பில் தவறுதலாகக் குறை கூறக் கூடிய விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்றும், அவ்வாறு எதிர்காலத்தில் அவர்கள் கூறப் போகும் குறைபாடுகளுக்குரிய பதிலே அந்தக் குறிப்பிட்ட பாணியில் திருமறை தெரிவித்திருக்கும் விபரங்களாகும் எனவும் நாம் விளங்கிக் கொண்டோம். இந்த விளக்கம் கூட பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு வார்த்தைக்கு வார்த்தை நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் விளங்கிக் கொண்டோம்.

ஆனால் அந்த வசனங்களின் இறுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும் “களைப்புற்ற இழிந்ததாகவே பார்வை உம்மைத் திரும்ப அடையும் எனும் வரி ஹெர்ஷலுக்கோ, அவரைப் போன்ற தவறுகள் நேர்ந்த இதர விஞ்ஞானிகளுக்கோ கூறப்பட்டுள்ள வார்த்தைகளாக அவை ஒரு போதும் இருக்க முடியாது. அந்த எச்சரிக்கை முன் அத்தியாயத்தில் கண்ட ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதத்திற்கு கூறப்பட்ட வார்த்தைகளாக இருப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அந்த வார்த்தைகளில் ஒரு கடுமையான எச்சரிக்கையும் அறைகூவலும் உள்ளன. பேரண்டத்தை ஆய்வு செய்யும் ஒருவர் இருண்ட நெபுலாவைப் பார்த்து தவறுதலாக அவை ஓட்டை என்பதை முடிவு செய்வதைக் குறித்து சொல்லப்பட்டதாக அது இருக்க இயலாது. ஏனெனில் பேரண்டத்தின் படைப்பில் இறைவனின் பங்கை நிராகரிக்க வேண்டும் எனும் எண்ணம் அவரிடம் சிறிதளவும் இல்லை. அவருடைய ஆய்வில் இயல்பாக நிகழும் ஒரு தவறுதலே அது ஆகும். எனவே இந்த எச்சரிக்கை பேரண்டப் படைப்பில் இறைவனின் பங்கை நிராகரிக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே குறைபாடுள்ள பேரண் டங்கள் எண்ணற்றவை உண்டு என்று எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் கூறிக் கொண்டிருப்பவர்களுக்கே அந்த எச்சரிக்கை பொருந்தும். மேலும் படைப்புப் பணியில் இறைவனை நிராகரித்து விட்டு அவனுடைய இடத்தில் ஒரு குரங்கை கற்பனை செய்து இறைமையை இழிவு செய்பவர் கள் யாரோ அவர்களே இந்த எச்சரிக்கைக்கும் அறைகூவலுக் கும் எல்லா விதத்திலும் பொருத்தமானவர்கள் ஆவார்கள். இந்த விளக்கத்திலிருந்து திருக்குர்ஆனுடைய இந்த எச்சரிக்கை ஆந்த்ரபிக் கோட்பாட்டின் மந்திக் கவிதை வாதத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கையே என்பது தெளிவு.

குறைபாடுடைய (குழம்பிய, சீரற்ற – (உயடிவஉ யனே சைசநபரடயச) பேரண்டங்கள் எண்ணற்றவை இருக்கின்றன எனக் கூறி இறைவனை நிராகரிக்க முயற்சி செய்து கொண்டி ருப்பவர்கள் எவ்வளவு தாம் முயற்சி செய்து விண்ணைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்த்தாலும் அப்படிப்பட்ட குறைபாடுள்ள ஒரே ஒரு பேரண்டத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் பார்த்துப் பார்த்து கண்கள் சோர்ந்து போய் தங்களுடைய வாதத்தில் தோல்வியுற்று இழிவையும் தாங்கி அவர்களுடைய பார்வை அவர்களிடமே திரும்பி விடும் எனும் விளக்கம் இவ்வசனங்களிலிருந்து நாம் பெறுகிறோம். நன்கறிந்தவன் அல்லாஹ் ஆவான்.

ஃப்ரீடுமன் அனுமானமும் மந்திக் கவிதையும்

மந்திக் கவிதை வாதப்படி பேரண்டங்களின் பரவல் இரண்டு விதங்களில் அமையலாம் என முன்னர் கண்டோம். ஒழுங்கற்று குழம்பிக் கிடக்கும் எண்ணற்ற தனித்தனி பேரண்டங்கள் இருக்க அவற்றில் ஒன்றே ஒன்றாக நாம் வசிக்கும் வழவழப்பான பேரண்டம் இருக்கலாம் என்றோ அல்லது நாம் வசிக்கும் வழவழப்பான ஒரே ஒரு குட்டிப் பேரண்டமும் அதைத் தவிர ஒழுங்கற்று குழம்பிய வேறு எண்ணற்ற குட்டிப் பேரண்டங்கள் ஒன்றாக இணைந்த ஒரு எல்லையற்ற மகா பேரண்டமாக இருக்கலாம் என்பதே அவ்வாதமாகும். இது அறிவியல் தத்துவங்களுக்கு முரணான கற்பனை என்பதை நாம் முன்னர் கண்டோம். மேலும் ஒழுங்கற்ற குட்டிக்குட்டிப் பேரண்டங்களைப் பற்றிய வாதம் ஃப்ரீடுமன் அனுமானத்திற்கும் (இதைப் பற்றி முதல் அத்தியாயத்தில் கூறியுள்ளோம்.) முரண்பட்டதாகும்.

இப்பேரண்டம் எத்திசையிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பது அவருடைய முதல் அனுமானம். பேரண்டத்தின் எந்த இடத்திற்குச் சென்று தரிசனம் நடத்தினாலும் இதுவே உண்மையாகும் என்பது அவருடைய இரண்டாவது அனுமானமாகும். இவை உண்மையாக இருந்தால் மந்திக் கவிதையின் குழம்பிய குட்டிக்குட்டிப் பேரண்டங்களின் வாதம் தவறாகும். ஏனெனில் ஃப்ரீடுமன் அவர்களின் அனுமானம் உண்மையென்றால் நாம் வசிக்கும் பேரண்டத்தின் இப்பகுதி எப்படி இருக்கிறதோ அப்படியேதாம் பேரண்டத்தின் மற்ற எல்லா பகுதிகளும் இருந்தாக வேண்டும். எனவே பேரண்டத்தில் நாம் வசிக்கும் பகுதி செவ்வொழுங்குடன் வழவழப்பாக இருந்தால் பேரண்டத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளும் அவ்வாறே இருந்தாக வேண்டும். எனவே ஒழுங்கற்ற குழம்பிய வேறு குட்டிப் பேரண்டங்கள் நாம் வசிக்கும் இப்பேரண்டத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதே ஃப்ரீடுமன் அனுமானத்திலிருந்து பெறப்படும் விளக்கமாகும்.

இப்போது ஃப்ரீடுமன் அனுமானங்களுக்கு நிரூபணங் கள் கிடைக்கத் துவங்கியுள்ளன. 1965 ல் இரு அமெரிக்க விஞ்ஞானிகளால் மைக்ரோ வேவ் டிடக்டர் (அஉசடிறயஎந னநவநஉவடிச) சோதனை இடப்பட்டுக் கொண்டிருந்த போது தற்செயலாக நிகழ்ந்த ஓர் அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் தமது நூலில் விவரிக்கிறார். அக் கண்டுபிடிப்பு ஃப்ரீடுமன்னின் முதல் அனுமானத்தை உறுதி செய்ததாக அவர் கூறுகிறார். அதை உறுதி செய்த அர்னோ பென்ஸியா (ஹசடி ஞநணேயைள) மற்றும் ராபர்ட் வில்சன் (சுடிநெசவ றுடைளடி) எனும் அறிவியலாளர்களுக்கு அக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கருதி, 1978 க்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. (பார்க்க பக்கம் : 43-45 எ ப்ரீஃப் ஹிடரி ஆப் டைம்) அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த விகிதத்தில் முன்னேறிக் கொண்டிருந்தால் மெய்யான இறைவனின் கலப்பற்ற நூலாம் திருக்குர்ஆனிலிருந்து நாம் இங்கு ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனங்களின் கடைசி வரியின் நிறைவேற்றத்தை இந்த நூற்றாண்டிற்குள்ளாகவோ அல்லது அடுத்து வரும் ஓரிரு நூற்றாண்டுக்குள்ளாகவோ உலகம் காணத்தாம் போகிறது. ஏனென்றால் இது திருக்குர்ஆனின் வார்த்தை.

அத்தியாயம் 5

பூமியின் வடிவம் உருண்டை

பூகோளத்தின் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான இயற்பாடுகளில் ஒவ்வொரு நாளும் காலம் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராப்பகல் மாற்றமும் ஒன்றாகும். மனித இனம் உலகில் வாழத் துவங்கிய காலம் முதல் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விந்தையைப் பார்த்து வியப்படைந்தவாறே வாழ்ந்து வந்தது. இதை ஆராய்ந்த பழங்கால அறிவியலாளர்கள் இதற்கான கோட்பாடு ஒன்றை உருவாக்கினர். புவி மையக் கோட்பாடு (கூந நயசவா உநவேநசஉ வாநடிசல) என்பது இதன் பெயராகும்.

பூகோளம் பேரண்டத்தின் மையத்தில் அசையாது நிலைபெற்றிருக்கிறது என்பதும் சூரியனும் இதர கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்பதும் இக்கோட்பாட்டின் கருத்தாகும். பழங்கால அறிவியல் உலகின் தன்னிகரற்ற அறிவியலாளராம் அரிடாட்டில் இக்கோட்பாட்டைச் சோதித்து அங்கீகாரம் அளித்தபடியால் இக்கோட்பாடு கேள்விக்கிடமில்லாமல் மொத்த உலகிலும் நம்பப்பட்டு வந்தது. இப்போது திருக்குர்ஆனின் அறிவியல் இக்கோட் பாட்டிற்கு எந்த அளவிற்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதைப் பார்போம்.

புவிமையத்தின் கோட்பாட்டில் பேரண்டத்தின் அச்சாணி யைப் போன்று அசையாதிருப்பதாக கற்பளை செய்யப்பட்ட பூமியைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

யாவும் விண்ணில் நீந்துகின்றன

“அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனை யும் படைத்தான். ஒவ்வொன்றும் வானவெளியில் நீந்துகின்றன.

(21:33)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்திக் கொண்டிருக்கின்றன என்றும் கூறியதிலிருந்து பூமியும் விண்ணில் நீந்திக் கொண்டிருப்ப தாகப் பொருள்படுகிறது. எனவே பேரண்டத்தின் மையத்தில் பூமி அசையாதிருப்பதாகக் கூறப்பட்ட புவிமையக் கோட் பாட்டை திருக்குர்ஆன் நிராகரித்து விட்டது என்பதே அதன் பொருளாகும்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து திருக்குர்ஆன் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்திய பதப் பிரயோகங்களின் (இரவும், பகலும்… விண்ணில் நீந்துகின்றன) வாயிலாக அது வெளிப் படுத்திய அறிவியல் பதினொன்றாம் நூற்றாண்டிலும், பதினே ழாம் நூற்றாண்டிலும் கோபர் நிக்கஸும், கலீலியோவும் உலகில் தோற்றுவித்த புரட்சிகரமான அறிவியல் கொந்தளிப்பை விட ஆழம் மிக்கத் தீவிரமான அறிவியலாகும் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் மேற்கண்ட அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகள் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் நகர்வைப் பற்றி மட்டும் குறிப்பிடும் போது திருக்குர்ஆன் பேரண்டத்தி லுள்ள அனைத்து நட்சத்திரக் குடும்பங்களின் நகர்வையும் ஏழாம் நூற்றாண்டிலேயே கூறி விட்டது. திருக்குர்ஆன் மானிட அறிவிலிருந்து தோன்றியதில்லை என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரமாக இது தோன்றவில்லையா?

சூரிய மையக் கோட்பாடு

திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் விண்ணகப் பொருட்களின் நகர்வு பற்றியும் அதில் உள்ளடங்கிய பூமியின் நகர்வு பற்றியும் கூறிய அறிவியலை பல நூற்றாண்டுகள் கழிந்தாயினும் அறிவியல் உலகமும் அதை உண்மைப்படுத்தி விட்டது. நமது பள்ளிச் சிறுவர்கள் கூட இன்று பூமி ஆகாயத் தில் ஓய்ந்திராமல் சூரியனைச் சுற்றி வருகிறது எனக் கற்பிக்கப் பட்டு வருகிறார்கள். இதைக் கண்டுபிடித்த முதலாவது அறிவியலாளர் கோபர் நிக்க (1473-1543) ஆவார். ஜோஹன்ன கெப்ளர் (1571-1630) எனும் அறிவியலாளர் பூமியும், இதர கோள்களும் சூரியனைச் சுற்றிவரும் விதியைக் கண்டுபிடித்தார். இவர்களின் கோட்பாடு சூரிய குடும்பத்தின் மையத்தில் சூரியன் அசையாதிருக்க கோள்கள் யாவும் சூரினைச் சுற்றி வருகிறது எனக் கூறிற்று. இக்கோட்பாடு சூரிய மையக் கோட்பாடு (ளுடிடயச உநவேசஉ வாநடிசல) என அழைக்கப்பட்டது.

புவியின் வடிவச் சிறப்பு

பூமியின் மீது இராப்பகல் மாற்றம் எவ்வாறு நடைபெறு கிறது என்பதே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட விவாதப் பொருளாகும். சூரியன் பூமியைக் சுற்றி வருவதா லேயே இராப்பகல் மாற்றம் தோன்றுகிறது எனும் கருத்து தவறு என்றும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதனா லேயே இராப்பகல் மாற்றம் ஏற்படுகிறது என்பதே சரி என்பதையும் நாம் கண்டோம். பூமியின் மீது நிகழ்ந்து கொண் டிருக்கும் இராப்பகல் மாற்றத்திற்கு பூமி தன்னைத்தானே சுற்றுவது பிரதான காரணமாக இருந்த போதிலும் அம்மாற்றம் செவ்வனே நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் அமையும் பொருட்டு பூமியின் வடிவமும் அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம். பூமியின் உருவம் உருண்டையாக இல்லாமல் தட்டையாக இருந்திருப்பின் இராப்பகல் மாற்றம் இப்போது நடப்பதைப் போன்று செவ்வனே நடைபெறாமல் பூமியின் மொத்த நிலப்பரப்பிலும் ஒரே வினாடியில் சூரியன் திடீரென உதித்து சூரியன் திடீரென மறையும் நிலை ஏற்பட்டிருக்கும். எனவே பூமியின் உருண்டை வடிவம் பூமியின் நிலப்பரப்பில் சூரியனின் உதயமும் மறைவும் படிப்படியாக நடைபெற உதவிசெய்கிறது.

கடலில் செல்லும் கப்பல் தரும் படிப்பினை

பூமிசூரியனைச் சுற்றி வருகிறது என்பது பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகே அறிவியல் உலகம் தெரிந்து கொண்ட போதிலும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதை நிரூபிப்பதற்கு எளியதும் முற்றிலும் சரியானதுமான நிரூபணத்தைக் கடலில் செல்லும் கப்பலைப் பார்த்து கற்றுக் கொண்டிருந்தனர்.

கப்பல் ஒன்று கடலில் செல்லும் போது அக்கப்பல் நீண்டநேரம் கடலில் சென்று கொண்டே இருந்த பிறகு படிப்படியாகக் கப்பலின் உருவம் சிறுத்துக் கொண்டே வந்து கடைசியில் கப்பல் முற்றாக மறைந்து போவதில்லை. அதற்கு மாறாக கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல் சற்று நேரத்திற்குப் பிறகு கப்பல் தெளிவாக கண்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும் போதே முதலாவதாக கப்பலின் அடிபாகம் மறைந்து போகிறது. அதன்பிறகு அதன் நடுப்பகுதி மறைந்து போகிறது. அதன்பிறகு கடைசியாக கப்பலின் கொடிமரமும் (பண்டைகாலங்களில் பாய்க்கப்பல்கள் மட்டுமே இருந்தன என்பதும் அவற்றிற்கு கொடி மரங்கள் இருந்தன என்பதையும் நினைவிற்கொள்க) மறைந்து கப்பல் முற்றாக மறைந்து போகிறது. இக்காட்சி கப்பல் ஒரு கீழ்நோக்கிய வளைவில் இறங்குவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இப்போது கடலிலிருந்து கரையை நோக்கி வரும் மற்றொரு கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இதற்கு நேர்மாறான காட்சியைத் தாம் பார்க்க முடியும். கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பலின் கொடிமரமே முதலில் கடலுக்கு மேல் தோன்றும். அதன் பிறகு கடைசியாக கப்பலின் அடிப்பகுதியும் கடலுக்கு மேல் தோன்றி கப்பல் முற்றிலுமாக கடலுக்கு மேல் தென்படும். இக்காட்சி அக்கப்பல் கடலின் கீழ்நோக்கிய வளைவிலிருந்து மேலேறி வருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உலகின் எப்பகுதிக்குச் சென்று கப்பல் போக்குவரவைக் கவனித்தாலும் இவ்வாறே தென்படும். இது நமது பூமி அதன் எல்லா திசைகளிலும் கீழ்நோக்கி வளைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. இவ்வாறு எத்திசையிலும் வளைந் திருக்கும் ஒரு பொருள் உருண்டையாகவே இருக்கும் என்பதும் அந்த உருண்டையின் மேல் நின்று பார்ப்பதாலேயே அதன் வளைவு கீழ்நோக்கிக் காணப்படுகிறது என்பதும் கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வு செய்ததிலிருந்து தெரிந்து கொண்டார்கள்.

வானவெளியில் பூமியைப் படைத்து அதில் இராப்பகல் மாற்றம் செவ்வனே நடைபெறும் பொருட்டு பூமி உருண்டை வடிவத்தில் படைக்கப்பட்டுள்ளதை பள்ளிச் சிறுவர்களும் இன்று அறிகிரார்கள். ஆயினும் கடலில் செல்லும் கப்பல்களை ஆராய்ந்து பண்டை கால கிரேக்கத்து அறிவியலாளர்கள் பூமியின் வடிவம் உருண்டை என்பதைக் கண்டறிந் திருந்தார்கள். இப்போது அதற்குப்பின் தோன்றிய திருக் குர்ஆன் பண்டைகால கிரேக்கர்கள் கூறியதை ஏற்கிறதா? அல்லது மறுக்கிறதா? எனக் கேட்டால் திருக்குர்ஆனுடைய பதில் வருமாறு:

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் ….. விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

(2:104)

மேற்கண்ட வசனத்தில் பண்டைகால விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு முறையையே எடுத்துக் கூறி அதில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலுள்ளவர்கள் அனைவருக்கும் சான்றுகள் கிடைக்கும் எனக் கூறியதிலிருந்து பண்டைகால விஞ்ஞானிகள் கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வு செய்து பூமி உருண்டை வடிவம் கொண்டது எனக் கூறுயதை ஏற்றுக் கொள்வதோடன்றி கடலில் செல்லும் கப்பலை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளுதல் என்பது மிகச் சிறந்த ஆய்வு முறையாகவும் அதிலிருந்து ஒன்றல்ல பல சான்றுகள் கிடைக்கலாம் எனவும் திருக்குர்ஆன் கூறுவதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆம்! அதுவே திருக்குர்ஆன்! பொய்யையும், மெய்யை யும் பிரித்தறிவிக்கும் அதி அற்புத வான்மறை! உண்மைகள் எதையும் அது ஒப்புக்கொள்ளும்! பொய்கள் எதையும் அது தன்னை நெருங்க விடாது! அதுவே தூய்மையின் ஒப்பற்ற உதாரணம்!

அந்தரத்தில் நிலை கொள்ளும் ஆகாயம்

இப்போது கடலில் செல்லும் கப்பல்களை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்வதிலிருந்து பல சான்றுகள் கிடைக்கும் என திருக்குர்ஆன் கூறியதற்கிணங்க முதலாவ தாக பூமியின் வடிவத்திற்கான சான்றைப் பெற்றோம். இது “வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் எனத் திருக்குர்ஆன் கூறியதிலுள்ள “பூமியைப் படைத்தல் என்ப திலுள்ள சான்றாகும். இனி திருக்குர்ஆனின் கூற்றிற்கிணங்க “வானத்தைப் படைத்ததிலும் எனும் வார்த்தைகளை நிரூ பிக்க கடலில் செல்லும் கப்பல்களால் ஏதேனும் சான்று வழங்க முடியுமா எனப் பார்த்தால் அதோ முக்கியமான சான்று கப்பல் ஓட்டும் மனிதனுக்காகக் காத்திருக்கிறது.

இந்தச் சான்றை பெறுவதற்கு கடற்கரையில் நின்று கொண்டு கவனித்தால் மட்டும் போதாது. இதற்கு ஒரு நீண்ட கடற்பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஒருவர் நீண்ட தூரம் கடலில் பயணம் செய்து கொண்டே போனால் அவர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வந்து சேருவதால் பூமியின் வடிவம் உருண்டையானதே என்பதைத் தெரிந்து கொள்வ தோடு இப்பயணம் ஆகாயத்தைப் பற்றிய ஒரு மூடநம்பிக்கை யையும் விலக்கிவிடக் கூடியதாகும்.

ஆகாயத்தைப் பற்றிய பண்டைகால மூடநம்பிக்கைக ளில் ஒன்று எல்லையில்லா பூமியில் நெடுந்தொலைவிற்கப் பால் ஆகாயத்தின் குடை போன்று வளைந்து காணப்படும் முகட்டின் கீழ் விளிம்பு ஊன்றப்பட்டுள்ளது என்பதாகும். ஆயினும் பூமியை முழுமையாக ஒரு சுற்று சுற்றிவந்த போதும் ஆகாயத்தின் விளிம்பு பூமியில் எங்கும் ஊன்றப்படவில்லை என்பது மட்டுமன்றி ஆகாயத்தின் முகடு பூமியின் மீது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே தெரிந்ததும் ஒரு குறிப்பிடத் தகுந்த சான்றாகும். ஏனெனில் பூமியின் மீது ஆகாய முகடு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தெரிதல் என்பது பூமிக்குரிய அகாயம் விளிம்பற்றது என்பதற்கான ஓர் அற்புத மான அறிவியல் சான்றாகும். எனவே திருக்குர்ஆன் கூறியதற் கிணங்க கடலில் செல்லும் கப்பல் ஆயாகத்தின் படைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிவிப்பதிலும் தன்னால் இயன்றதைத் தரவல்ல ஒன்றாகும் என்பதையும் நாம் கண்டு விட்டோம். இதிலிருந்து பண்டை கிரேக்கர்களின் விளக்கத்தை விட திருக்குர்ஆனுடைய அறிவியல் வசனம் மேலும் விரிவான அறிவியல் தகவலை உள்ளடக்கியதாகும் என்பது தெளிவு.

பூமியின் கீழ்ப்பகுதியும் நடக்கத் தகுந்ததே!

பூகோளத்தின் உருவ அமைப்பைப் புரிந்து கொள்ளும் வகையில் மேலும் சில குறிசொற்களைத் (உடரநள) திருக்குர்ன் பயன்படுத்தியுள்ளது. சான்றாக பண்டைகால அறிவியலாளர் கள் பூமியின் வடிவம் உருண்டை என்பதை அறிந்திருந்தார்கள் எனக் கண்டோம். ஆயினும் கல்வியைப் பரப்பும் சாதனங்கள் மிகமிக அரிதாக இருந்த அக்கால கட்டத்தில் பொதுமக்களிடம் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைப் பற்றிய செய்திகள் வருவதும் அரிதாகவே இருந்தது. எனவே பொதுமக்களைப் பொருத்தவரை பூமி அப்போதும் தட்டையாகவே இருந்தது. பூமியின் வடிவம் தட்டையானது எனப் பொதுமக்கள் நம்பி வந்த காரணத்தால் பூமியின் மேற்பரப்பில் மட்டுமே மனிதர் களால் நடமாட முடியும் என்றும் அதன் பக்கவாட்டிலோ அதன் அடிப்பகுதிக்கோ செல்ல நேர்ந்தால் மனிதன் கீழே விழுந்து விடுவான் என நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் திருக் குர்ஆன் கூறிய செய்தி வியப்பிற்குரியதாகும். அது வருமாறு:

“அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்….

(67:15)

இந்த செய்தியில் பூமியின் படைப்பைப் பற்றி இரண்டு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலொன்று பூமி மனிதர் கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளது என்பதும் இரண்டாவதாக பூமியின் எல்லாப் பகுதிகளுக்கும் மனிதர்கள் சென்று பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அது படைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியுமாகும். இந்த இரண்டாவது செய்தி பூமி தட்டையாக இருப்பதால் அதன் ஒரே பகுதியில் (மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் நடமாட முடியும் என்றோ அதன் பக்கவாட்டிலோ அடிப்பகுதியிலோ மனிதர்கள் நடமாட முடியாது எனும் நம்பிக்கையை திருக் குர்ஆன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது “எனவே அதன் பல பகுதிகளுக்கும் செல்லுங்கள் எனும் வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியதிலிருந்து திருக்குர்ஆன் எளிதாக விளங்கச் செய்கிறது.

கொலம்பஸின் தோல்வி

பூகோளத்தின் முன்னர் கூறப்பட்ட இயற்பாடுகளை திருக்குர்ஆன் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைக் கூறிவதில் கூட தேர்ந்தெடுத்த சில சொற்பிரயோகங்ளில் உள்ளடக்கித் தந் திருப்பதைக் காண முடிகிறது. கொலம்ப (உசளைவடியீநச உடிடரஅரௌ, 1451-1506) எனும் உலகப் புகழ் பெற்ற மாலுமியைப் பற்றி கேள்விப்படாதோர் அரிதாகும். கடற் பயணத்தை மேற்கொண்டு உலகம் உருண்டை என நிரூ பித்த மாவீரராக இவரைப் பற்றி அவ்வப்போது கூறப்படுவ துண்டு. ஆனால் இது தவறாகும். அவர் ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கி கடற்கயணம் செய்து ஆசியாவிற்கு ஒரு புதிய கடல்மார்க்கத்தை கண்டுபிடிப்பதாகக் கூறி இசபெல்லா மகாராணியிடம் பொருளுதவி பெற்று கடற்பயத்தை துவக்கி யது உண்மையே. தாம் கூறியபடி அவர் செய்து காட்டியிருந் தால் அவர் உலகம் உருண்டை என்பதை கடற்பயணத்தால் நிருபித்துக் காட்டிய மாவீரராவதற்கு தகுதி பெற்றிருப்பார். ஆனால் உண்மையில் அவர் தம்முடைய முயற்சியில் வெற்றி பெறவில்லை.

கொலம்ப முதலாவதாக 1492லும் அதன் பிறகு தொடர்ந்துள்ள வருடங்களில் மேலும் சில முயற்சிகளையும் செய்தபோதும் அவரால் ஆசியாவை அடைய முடியவில்லை. எனவே அமெரிக்காவிற்கு சென்று வந்த பெருமையோடு திருப்திபட்டுக் கொள்ளவேண்டியதாயிற்று. (அவர் அமெரிக்கா கண்டத்திற்கு சென்று வந்ததால் அவரே அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என பாடபுத்தகங்களில் கூட எழுதப்படு கிறது. ஆனால் அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்த முதல் மனிதர் இவர் இல்லை. அவருக்கு பல நூற்றாண்டு களுக்கு முன் லீஃப் எரிக்சன் (டுநகை நுசஉளடி) எனும் ஒரு கடல் கொள்ளைக்காரன் அமெரிக்கா சென்று வந்துள்ளான் என்பதும் நமது தலைப்போடு தொடர்பில்லாத செய்தியாகும்).

மாவீரர் துல்கர்னைன்

ஆனால் தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றைக் கூறும் வியப்பிற்குரிய செய்தியையும் திருக்குர்ஆனில் நம்மால் பார்க்க முடிகிறது.

திருக்குர்ஆன் வழங்கப்படுவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் “துல்கர்னைன் எனும் பேரரசர் ஒருவர் நீதிநெறி தவறாத சிறப்பான ஆட்சியை நடத்தி வந்தார். இந்த அரசரைப் பற்றிய செய்தியை வம்சாவழியாக கேள்விப் பட்டிருந்த அரேபிய மக்கள் தங்களுக்கு இடையில் இறைவ னுடைய தூதர் ஒருவர் தோன்றிய போது துல்கர்னைன் அவர் களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காக இறைத் தூதரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார்கள். தன்னுடைய தூதரிடம் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட வேண்டிய பதிலை இறைவன் தன்னுடைய தூதருக்கு அறிவிக்கிறான். இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது :

“(முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன் என்று கூறுவீராக! அவருக்கு பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் (பயணம்) சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் காண்டார். அங்கே (அவர்) சமுதாயத்தைக் கண்டார்….

(18:83-86)

பயணத்தின் திசை மேற்காகும்

இவ்வசனங்களில் கூறப்பட்டிருக்கும் பேரரசருக்கு “துல்கர்னைனி என்பது பட்டப்பெயராகும். இச்சொல்லுக்கு “இரு கொம்புகளின் உடைமையாளர் (டுடிசன டிக வறடி டிசளே) என்பது பொருளாகும். இவருடைய இயற்பெயர் என்ன என்பதோ அல்லது இவர் காலம், இவர் ஆண்ட தேசங்கள் எது என்பதோ திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. சிலர் இவரே மாவீரர் அலெக்ஸாண்டர் (ஹடநஒயனேயச வாந ழுசநயவ) என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் மற்றும் சிலர் இவர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஓர் அரசர் என்றும் வெவ்வேறு விதத்தில் அபிப்பிராயப்படுகின்றனர். ஆனால் இவையாவும் நமது தலைப்போடு தொடர்பு கொள்ளவில்லை.

நமது தலைப்போடு தொடர்பு கொண்ட விபரங்களாவன இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய தமது பேரரசின் ஆட்சி நிர்வாகப் பணிகளை (உஎடை ஹனஅளைவசயவடி) முன்னிட்டு துல்கர்னைன் அவர்கள் ஒரு நீண்ட பயணத்தை துவங்கினார் என்பது முதலாவதாகத் தெரிய வருகிறது.

இரண்டாவதாக அவர் அப்பயணத்தின் ஒரு கட்டத்தில் “சூரியன் மறையும் இடத்தை அடைந்தார் எனத் தெரிய வருகிறது. இது திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் அறிவியல் ஆழம் மிக்க தனிச்சிறப்பான சொற்பிரயோகமாகும். இதைப் பற்றி கூடுதல் விபரங்கள் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அத்தியாயத்தோடு தொடர்புள்ள விபரங்கள் வருமாறு :

1. முதலாவது செய்தி “சூரியன் மறையும் இடத்தை அடைந்தார் எனத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து துல்கர்னைன் அவர்கள் தமது (திருக்குர்ஆனின் வரலாற்றுப் புகழ் மிக்க) அந்த நீண்ட பயணத்தை மேற்கு திசையிலேயே ஆரம்பித்தார் என்பதாகும்.

2. இரண்டாது செய்தி சூரியன் நீர்நிலையில் மறைவதை அவர் கண்டார் எனக் கூறப்பட்டதிலிருந்து அவரது அந்தப் பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது எனத் தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் மேலும் மேற்கு திசையில் அமைந்துள்ள கடயற்கரைக்கு வந்து சேரும் எந்த ஒரு நபரும் கடல் நீரில் சூரியன் மறைகின்ற அக்கண் கொள்ளாக் காட்சியை காணத் தவற மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

3. அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அந்நகர மக்களிடம் குற்றங்களை தடுப்பதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் தேவையான சில உத்தரவுகளை (இதைக் குறித்து திருக்குர்ஆனைப் பார்த்து தெரிந்து கொள்க) இறைவனின் வழிகாட்டுதலின்படி நடைமுறைப் படுத்தும்படி கட்டளை இட்டதாகத் தெரிய வருகிறது. அதன் பிறகு உலகின் வேறு சில பகுதிகளில் தாம் நிறைவேற்ற வேண்டிய வேறுசில முக்கியமான பணிகளுக்காக தமது பயணத்தை மீண்டும் தொடர்கிறார்.

4. துல்கர்னைன் அவர்களுடைய இந்த நீண்ட பயணத் தில் அவர் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந் தார் என விளங்கப் பெற்றதிலிருந்து அதுவரை அவர் செய்தது தரை வழிப் பயணமே என்பதும் புலனாகிறது.

மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!

தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் அவர்கள் திசைமாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆனுடைய வாசகங்களில் அவர் பயணத்தில் சென்றடைந்த நாடு, நகரம், சந்தித்த மக்களினம் போன்ற விபரங்கள் எதற்கும் தரப்படாத முக்கியத்துவம் அவர் பயணம் செய்த திசைக்கு வழங்கப் பட்டுள்ளது என்பது கருத்தூன்றி கவனிக்க வேண்டிய சிறப் பம்சமாகும். எனவே துல்கர்னைன் அவர்களின் பயணத்தில் திசைமாற்றம் நடைபெற்றிருந்தால் திருக்குர்ஆனில் சிறப்பாகக் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் திருக்குர்ஆன் திசைமாற்றம் குறித்து எதுவும் கூறாமல் அவர் மீண்டும் பயணம் தொடர்ந்ததைப் பற்றியே கூறுகிறது. எனவே துல்கர்னைன் அவர்களுடைய மேற்கொண்டுள்ள பயணம் கடல்வழிப் பயணமாகும்.

துல்கர்னைன் அவர்களுக்கு அவ்வளவு பண்டைகாலத் திலேயே கடல்கடந்து பயணம் செய்யும் அளவிற்கு தகுதி வாய்ந்த பயண வசதிகள் இருந்தனவா என்ற ஐயம் எழுமாயின் அவருடைய பயணத்தையும் அப்பயணத்தில் செய்து முடிக்கவேண்டிய பணிகளுக்கும் தேவையான யாவும் அவருக்கு இறைவனால் வழங்கப்பட்டிருந்தது என்பதே “ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத் தினோம் எனக் கூறப்பட்டதில் உள்ளடங்கிய கருத்தாகும். எனவே பேரரசர் துல்கர்னைன் தன்னுடைய பரிவாரங்களுடன் (திருக்குர்ஆனுடைய சம்பந்தப்பட்ட வசனங்களிலிருந்து பேரரசர் துல்கர்னைனின் பயணக்குழுவில் படைவீரர்களும் வல்லுநர்களும் தொழிலாளர்களும் அடங்கிய பெரும் பரிவாரமே இடம் பெற்றிருந்தது எனத் தெரிய வருகிறது) கடல் மார்க்கமாகப் பயணத்தைத் தொடர்கிறார். இப்பயணத் தைக் குறித்து திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

“பின்னர் ஒரு வழியில் சென்றார்

(18:89)

இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள் ளது. ஆயினும் அப்பயணம் தரைவழிப் பயணமன்றி கடல் வழிப் பயணமே என்பது “பின்னர் ஒரு வழியில் எனத் திருக்குர்ஆன் கூறியதிலிருந்து விளங்கலாம். இந்தப்பயணத் தில் அவர் சென்றடைந்த இடத்தைப் பற்றிய வியக்கத்தகு செய்தி ஒன்றை திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம்! இப்போது சென்றடைந்த இடம் :

“முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.

(18:90)

என்னே வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் அவர்கள் : “முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார் இது எப்படிச் சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைய முடியுமா? ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்த தாகத் திருக்குர்ஆன் கூறுவதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.

இக்கடல் வழிப்பயணத்தின் முடிவில் அவர் மற்றொரு தேசத்தை (நிலப்பகுதியை) அடைந்தார் என்பது வீடுகளில் லாத ஒரு நாடோடிக் குழுவினரை தூல்கர்னைன் அவர்கள் அங்கு கண்டார். எனப் பொருள்படும் திருமறை வசனங்களி லிருந்து விளங்கலாம். இதன் பிறகு கடல் வழியிலிருந்து மீண்டும் தரைவழி பயணத்திற்கு மாறிய துல்கர்னைன் அவர்களின் பயணத்தின் தொடர்ச்சி திருமறையில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது.

நாம் இதுவரை கூறியதிலிருந்து பூமியின் மீது கடல் மற்றும் கரை வழியாக நீண்டதூரப் பயணம் செய்து பூமி உருண்டை வடிவம் கொண்டதே என நிறுவியவர் துல்கர்னைன் அவர்களே என்றும் அந்த வரலாறு திருக்குர்ஆன் எடுத்துக் கூறி உண்மைபடுத்துவதால் திருக்குர்ஆனின் அறிவியலும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமாகும்.

பூமியின் மீது நடைபெறும் இராப்பகல் மாற்றம் செவ்வனே நடைபெறும் பொருட்டு பூமி உருண்டை வடிவம் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம். அடுத்தபடியாக பூமின் அச்சில் சுழற்சியைப் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

தொடரும்.. 

No comments:

Post a Comment