Translate

Friday 16 October 2015

இஸ்லாத்தைப் பற்றி 40முக்கிய கேள்விகள்- அலி அதீக் அல் தாஹரி






1.   இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற வார்த்தை சாந்தி, சமாதானம், நிம்மதி மற்றும் கீழ்படிதல் என்று பொருள் படும். சாந்தி என்றால், உங்களுக்குள், உங்கள் சுற்றாட லுடன் சாந்தியுடனும், சமாதானத்துடனும் வாழ்வதா கும். கீழ்படிதல் என்பது, இறைவனின் கட்டளைக்கு கீழ்படிதல் ஆகும். இதனை சுருங்கக் கூறுவதாயின் இறைவனின் கட்டளைக்கு கீழ் படிந்து சாந்தியுடன் வாழ்வது என்று பொருள் படும்.
இதன் பெயர் குறிப்பிடுவது போன்று, நீதியான மனோபாவத் தையும், அதனடிப்படையிலான ஒரு வாழ்க்கை முறையையும் குறிப்பிடும் இது ஒரு அபூர்வமான மதமாகும். யூதர்கள் இனத்திலிருந்து யூத மதம் அதன் பெயரை பெற்றது. யேசு கிறிஸ்துவின் பெயரில் கிறிஸ்தவ மதம் அழைக்கப் பட்டது. கௌதம புத்தரின் பெயரில் புத்த மதமும், இந்து நதி தீரத்தில் தோன்றியதால் இந்து மதமும் அப் பெயர்களை கொண்டு அழைக்கப் பட்டன. ஆனால், இஸ்லாம் என்ற தூதுவத்திலிருந்து முஸ்லிம்கள் என்ற பெயரை மக்கள் பெற்றனர். ஆனால் முஹம்மதின் மதத்தவர்கள் என்று முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பவரின் போதனைகளை பின்பற்றும் மக்களை அழைக்க முடியாது.
2.   அல்லாஹ் என்றால் யார்? நபி என்பவர் யார்?
அரபு மொழியில் அல்லாஹ் என்ற வார்த்தை ‘ஒரு இறைவன்” என்பதை குறிக்கும். அல்லாஹ் என்றால் முஸ்லிம்களின் இறைவன்  என்று பொருள் படாது. அவனே சகலவற்றையும் படைத்து அவற்றை பரிபாலனம் செய்யும் காரணத்தால் படைக் கப் பட்ட அனைத்துக்கும் அவனே இறைவனாவான்.
அகிலங்களையும் அவற்றில் உள்ள சகலவற்றையும் படைத்த இறைவன், மனிதர்களை தமக்கு வேண்டியவாறு வாழும் படி கை விடவில்லை. மாறாக, மனித இனத்திலிருந்தே நற்பண்புகள் உள்ள மனிதர்களை காலத்துக்குக் காலம், எல்லா சமூகத் திலும் உருவாக்கினான். நபிமார்கள் என அழைக்கப் பட்ட அந்த உத்தமர்கள் தமது சமூகத்துக்கு நேர் வழி காட்டினார்கள். “இறைவன் ஒருவன். அவனை மாத்திரம் வழிபடுங்கள். உலகில் சமாதானமாக வாழுங்கள்.” என்று போதித்தார்கள். அவர்கள் காட்டிய வழிகள் மதங்களாகின. அவர்க ளின் போதனைகள் மதப் புத்தகங்களாயின. அந்த வழியில் வந்த இப்ராஹிம், தாவூத், மூஸா, ஈஸா போன்ற நபிமார்கள் அனைவரும் உத்தமர்களே. அவர்களுல் முஹம்மத் நபி இறுதியாக வந்தார்கள்.
3.   அல்லாஹ் எம்மை போன்ற தோற்றம் உள்ளவனா?
இல்லை. அல்லாஹ் சம்பூர்ணமானவன். அவனது படைப்புகளை போல் அவன் இல்லை. அல்லாஹ்வை பற்றி, அல்லாஹ் கூறியவைகளை தவிர மேலதிகமாக ஒரு முஸ்லிம் ஒரு போதும் கூறுவதில்லை. அல்லாஹ் சம்பூர்ணமானவன். மிகவும் அபூர்வமானவன்.
4.   கஅபா என்றால் என்ன?
கஅபா என்பது வணக்கம் புரியும் இடமாகும். நான்காயிரம் வருடங்களுக்கு முன் நபிகளாகிய இப்ராஹிம், அவர் மகன் இஸ்மாயில் ஆகிய இருவருக்கும் அதனை கட்டும்படி இறைவன் ஆணையிட்டான். ஆதம் நபி முதன் முதலாக கட்டியதாக அனேகர் நம்பும் அத்திவாரத்தின் மீது கருங்கட்களை கொண்டு  இக் கட்டிடம் மீண்டும் கட்டப் பட்டது. இந்த இடத்தை தரிசிக்க வருமாறு மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் படி இறைவன் இப்ராஹிம் நபிக்கு கட்டளையிட்டான். இப்ராஹிமின் அழைப்புக்கு பதிலளிக்கும் ஹாஜி எனும் யாத்திரீகர்கள்  இன்றும் அங்கு யாத்திரை செய்யும் போது, “இறைவா! உன் சேவைக்காக (உள்ளோம்)” என்று கூறுவார்கள்.
5.   முஸ்லிம் என்று அழைக்கப் படுபவர் யார்?
“முஸ்லிம்” என்ற வார்த்தையின் பொருள் இறைவனின் கட்ட ளைக்கு அடிபணியும் ஒருவன் என்பதாகும். “வணக்கத்துக்கு உரியவன் இல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ் வின் திருத் தூதராவார்” என்று உறுதி கூறுவதன் மூலம் இது நடைபெறுகிறது. பரந்த அடிப்படையில் நோக்கும் போது, அல்லாஹ்வின் கட்டளைக்கு சுய விருப்பத்துடன் அடிபணியும் எவரும் முஸ்லிமாவார். இதன்படி, முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முன் வாழ்ந்த நபிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்று கருதப் படுவார்கள். மூஸா, யேசு (அலைஹிஸ் ஸலாம்) ஆகியோருக்கு நீண்ட காலத்துக்கு முன் வாழ்ந்த இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) பற்றி “அவர் யூதரோ, கிறிஸ்தவரோ ​இல்லை. ஆனால் அவர் ஒரு முஸ்லிம் ஆவார்” என்று குர்ஆன் தெளிவாக குறிப்பிடுகிறது. காரணம், அவர் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்தவராவார். இதன் படி அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் அடி பணியாது வாழும் முஸ்லிம்கள் இருப்பது போல், தம்மால் இயன்ற அளவு இஸ்லாமிய முறையில் வாழ முயற்சிக்கும் முஸ்லிம்களும் இருக்கி றார்கள். முஸ்லிமின் வாழ்க்கையோ, ஒழுக்கமோ எதுவும் இல்லாது, முஸ்லிம் பெயரில் நடமாடும் சிலரை மாத்திரம் பார்த்து இஸ்லாத்தை எடைபோட முடியாது. எந்த அளவுக்கு ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் முஸ்லிமாக இருப்பார்.
6.   முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பவர் யார்?
சுருக்கமாக கூறினால், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அரேபிய நாட்டின், மக்கா என்ற நகரில் கிறிஸ்துவுக்குப் பின் 570ம் வருடம் உயர் கோத்திரத்தில் பிறந்தார். அன்னாரது வம்சம் நபி இப்ராஹிம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்க ளின் மைந்தனாகிய நபி இஸ்மாயில் (அலைஹிஸ் ஸலாம்) முதல் ஆரம்பமாகிறது. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறப்பதற்கு முன்னரே அவரது தந்தை அப்துல்லாஹ் இறந்து விட்டார். அன்னார் பிறந்து ஆறு வயதில் தாயாரும் இறந்து போனார். அன்றைய சமூக வழக்கத்தின் படி ஆரம்பத்தில் செவிலித் தாயிடம் வளர்ந்த முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்னர் பாட்டனாலும், சித்தப்பாவினாலும் வளர்ந்த காரணத்தால், முறையாக பாடசாலை சென்று கல்வி பயில வில்லை. இளம் வயதிலேயே நேர்மை, ஒழுக்கம் ​போன்ற நற் பன்புகளுக்கு புகழ் பெற்ற அவர், மலைக் குகையில் தியாணம் புரியும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். அவரது 40 வயதில் ஜிப்ரீல் என்ற வானவர் அவர் முன் தோன்றிய போது, நபித்துவமும் கொடுக்கப் பெற்றார். அதன் பின் 23 வருடங்களுக் கும் மேலாக இறை வசனங் கள் அவருக்கு இறக்கப்பட்டன. அவை ஒன்று திரட்டப்பட்டு, குர்ஆன் என்று அழைக்கப் படும் அப்புத்தகத்தை இறைவனின் இறுதி வார்த்தையாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். எவ்வித மாற்றத்துக்கும் ஆளாகாமல், ஆரம்பத் தில் இறங்கிய அதே உருவில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் குர்ஆன், தனக்கு முன் இறக்கப்பட்ட தௌராத், கீதம், பைபிள் ஆகிய பழைய வேதங்களில் உள்ள உண்மைகளை உறுதிப் படுத்துகின்றது.
7.           முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபியாகவும் இறைவனின் தூதராகவும் எவ்வாறு ஆனார்?
தனது 40வது வயதில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மலை குகையில் தியானத்தில் இருக்கும் போது, முதலாவது இறை வசனத்தை ஜிப்ரீல் என்ற மலக்கின் மூலம் கொடுக்கப்  பெற்றார். அதன் பின் 23 வருடங்களாக இறக்கப்பட்ட இறை வசனங்கள் குர்ஆன் என்று அழைக்கப் படுகிறது.
ஜிப்ரீல் (அலைஹிஸ் ஸலாம்) கூறிய வார்த்தைகளை மக்களுக்கு பாராயனம் செய்து இறைவன் அறிவித்த உண்மையை மக்களுக்கு போதனை செய்ய ஆரம்பித்தவுடன், அன்னாரும், அவரை பின்பற்றிய சிறிய கூட்டத்தினரும் கொடூரமான துன்பத்துக்கு ஆளாக்கப் பட்டனர். இப்படியான துன்பங்கள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்த போது, 622 வருடம் தாம் வசித்த இடத்தை விட்டு நீங்கி தூரமான இடத்தில் சென்று குடியேறும் படி இறைவன் உத்தரவிட்டான்.  மக்காவை விட்டு வெளியேறி சுமார் 260 மைல்களுக்கப்பால் உள்ள மதினா நகருக்கு சென்ற இச்சம்பவம் ஹிஜ்ரா அல்லது இடம் பெயர்தல் என அழைக்கப்படுவதோடு, முஸ்லிம்களின் வருட ஆரம்பத்தை குறிப்பிடுகிறது.
பல வருடங்களின் பின்பு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அன்னாரை பின் பற்றியவர்களும் மீண்டும் மக்கா நகருக்கு வெற்றியுடன் திரும்பி வரும் வாய்ப்பு கிடைத்தது. அச் சந்தர்ப்பத்தில், தமது எதிரிகள் அனைவரையும் மன்னித்து மக்காவில் இஸ்லாத்தை உறுதியாக ஸ்தாபிக்க அவரால் முடிந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது 63ம் வயதில் மரணமெய்திய போது அரேபிய நாட்டின் பெருமளவிலான பகுதிகள் முஸ்லிம்களாகியிருந்த னர். அன்னாரது மரணத்தின் பின் ஒரு நூற்றாண்டு காலத்துக்குள், மேற்கில் ஸ்பெயின் முதல், கிழக்கில் உள்ள சீனா வரை இஸ்லாம் பரவியது.


8.   முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வணங்குகிறார்களா?
இல்லை. முஹம்மத் (சல்) அவர்க​ளையோ அல்லது வேறு எந்த நபியையோ முஸ்லிம்கள் வணங்குவதில்லை. ஆதம், நூஹு, இப்ராஹிம், தாவூத், சுலைமான், மூஸா, ஈசா (அ​லைஹிமுஸ் ஸலாம்) உட்பட எல்லா நபிமார்கள் மீது முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டுள்ளார்கள். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபிமார்களில் இறுதியாக வந்தவர் என்று முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டுள்ளார்கள். வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே, வேறு எந்த மனிதனையும் வணங்கக் கூடாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

9.   குர்ஆன் என்பது என்ன?
ஜிப்ரீல் (அலைஹிஸ் ஸலாம்) மூலம், முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ் வின் வார்த்தைகள் அடங்கிய பதிவேடு குர்ஆன் ஆகும். அதனை முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனப்பாடம் செய்து தனது சகாபாக்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் எழுதச் செய்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ் நாளிலேயே எழுத்தா ளர்கள் அதனை மீண்டும் சரி பிழை பார்த்தார்கள்.  கடந்த பல நூற்றாண்ட காலத்தில், 114 சூராக்களை கொண்ட குர்ஆனில் ஒரு வார்த்தையேனும் மாறவில்லை. இதன் காரணமாக 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் எல்லா வகையிலும் ஒப்பு இணையற்ற, அற்புதமான வசனங்களைக் கொண்டுள்ளது.
10.       குர்ஆன் எதனைப் பற்றி கூறுகிறது?
இறுதியாக இறக்கி வைக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைக ளாகிய குர்ஆன் முஸ்லிம்களின் இறை விசுவாசத்துக்கும், வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. மனித இனத்துக்கு தேவையான எல்லா விஷயங்களைப் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகிறது. புத்தி, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், சட்டங்கள் என்பன இதில் அடங்கயிருப்பினும்,  இதன் அடிப்படை கருப் பொருள் இறைவனுக்கும் அவனது படைக்களுக்கும் இடையில் உள்ள உறவேயாகும். அதே வேளையில் நேர்மையான சமூகத்துக்கும், மனிதனின் ஒழுக்க மான நடத்தைக்கும், நியாயமான பொருளாதார முறைக்கும் தேவையான வழிமுறைகளை குர்ஆன் காட்டுகிறது.
11.       இதனை தவிர புனிதமான வேறு நூல்களும் உண்டா?
ஆம். அது சுன்னா எனப்படும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை முறைகளும், அறிவுறைகளும் முஸ்லிம்களுக்கு கொடுக்கப் பட்ட இரண்டாவது வழிகாட்டல் களாகும். ​ஹதீஸ் என்பது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது வாழ் நாட்களில் கூறிய, செய்த, அனுமதி கொடுத்த  நம்பகமான நபர்கள் மூலம் அறிவிக்கப் பட்ட விஷயங்களாகும். சுன்னாவின் மீது நம்பிக்கை வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை இறைவிசுவாசத்தில் ஒரு அங்கமாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்  ஹதீஸ் களிலிருந்து சில உதாரணங்கள்.
·         மற்றவர்கள் மீது கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்.
·         தான் விரும்புவதை தன் சகோதரனுக்கும் (கிடை க்க வேண்டு மென) விரும்பும் வரை நீங்கள் உண்மையில் விசுவாசம் கொள்ளவில்லை.
·         பலமுள்ளவன் என்பது அடுத்தவனை அடித்து வீழ்த்துபவன் அல்ல. அதிக கோபமான சந்தர்ப்பத்திலும் தன்னை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையிலயே பலமுள்ளவன். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, பயிஹகி ஆகியோர் அறிவித்தார்கள்.)

12.       இஸ்லாம் தான் உண்மையான மதம் என நாம் அறிவது எப்படி?
·         இறைவனாகிய அல்லாஹ் ஒருவன், இணையற்றவன், பரிபூர்ணமானவன் என்று உறுதி படுத்தும் ஒரே மதம் இஸ்லாம் மாத்திரமே.
·         அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்று கூறும் ஒரே மதம் இதுவே. இதில் ஜேசு வுக்கோ, சிலைகளுக்கோ, வானவர்களுக்கோ வணங்குவதற்கு இடமில்லை.
·         ஒன்றுக்கொன்று முறன்படும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.
·         விஞ்ஞானம் சம்பந்தமான உண்மைகள் 1400 வருடங்களுக்கு முன்பிருந்தே குர்ஆனில் அடங்கியுள்ளன. இவ்வாறு 1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட விஞ்ஞானம் சம்பந்தமான உண்மைகளை இன்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள். குர்ஆன் கூறும் இவ்விபரங்கள் விஞ்ஞானத்துக்கு மாற்றமாக இல்லை.
·         குர்ஆனை போன்று இன்னுமொரு நூலை கொண்டு வரும் படி உலகத்துக்கு அல்லாஹ் சவால் விடுகிறான். மனிதனால் அப்படி யொன்றை செய்யமுடியாது என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
·         சரித்திரத்தில் பெரும் செல்வாக்கு படைத்த மனிதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே. முஸ்லிம் அல்லாத ஒரு மனிதரால் எழுதப் பட்ட “சரித்திரத்தில் பெரும் செல்வாக்கு படைத்த 100 மனிதர்கள்.” என்ற நூலில், முதல் ஸ்தானத்தை முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஜேசு நாதருக்கு கிடைத்தது மூன்றாவது ஸ்தானமே. இங்கு ஜேசு நாதரும் அல்லாஹ்வால் அனுப்பப் பட்ட ஒரு  தூதரே என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.      
13.       இஸ்லாம் ஏனைய மதங்களை மதிக்கிறதா?
“மார்க்கத்துகாக உங்ளுடன் எதிர்த்து போராடா மலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அத்தகை யோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள் பால் நீங்கள் நீதமாக நடந்துக் கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை. அல்லாஹ் நீதியுடன் நடந்துக் கொள்பவர்களை நேசிக்கிறான்.” குர்ஆன் 60 - 8
“மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை.” குர்ஆன் 2– 256

சிறுபான்மை இனத்துக்கு கொடுக்கப்பட்ட  விஷேட சலுகை களை பாதுகாப்பது இஸ்லாத்தின் ஒரு கடமை என்பதால்  இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத வணக்கத் தலங்கள் செழித்து வளர்ந்தன. மற்றைய மதங்களை இஸ்லாம் மதித்து அனுமதித்த சம்பவங்கள் பற்றி சரித்தரம் நிறைய சான்று பகர்கின்றது. உமர் (ரலி) 634 ம் வருடம் ஜெருசலம் நகருக்குள் வெற்றியுடன் பிரவேசித்த போது அங்குள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து அங்கு வாழ்ந்த அனைத்து சமூகத்தி னருக்கும் தங்கள் மதங்களை தொடர்ந்து வழிபடும் சுதந்திரத் தையும் கொடுத்தார். ஸ்பானிய தேசத்தை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுக்கு அவரவர் மதங்களை அனுஷ்டிக்கும்  சுதந்திரத்தை கொடுத்த காரணத்தால் யூதர் சமூகத்தின் பொற்காலம் எனக் கருதப்படும் யுகம் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியின் கீழ் வளர்ச்சியடைந்தது.
அது மாத்திரமன்றி, முஸ்லிம் அல்லாத சிறு பான்மையினர், தங்களது சமூக குடும்பச் சட்டத்தின் அடிப்படையில் தமக்கிடை யிலான வழக்குகளை நடத்தவும் அவர்களுக்கு இஸ்லாமிய சட்டம் இடமளித்தது.

14.       இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் வித்தியாசமான ஆரம்பங்கள் உள்ளனவா?
யூத மதத்துடன் சேர்ந்து, இவ்விரு மதங்களும் அவற்றின் மூலகர்த்தாவாகிய இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடமிருந்து ஆரம்பமா கின்றன. இப்ராஹிமின் மூத்த மகன் இஸ்மாயி லின் சந்ததியில் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், இரண்டாவது மைந்தன் இஸ்ஹாக் (அலைஹிஸ் ஸலாம்) வழியில் மூஸா (அலைஹிஸ் ஸலாம்), ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) ஆகிய இருவரும் தோன்றினார்கள். இன்று மக்கா என அழைக்கப்படும் நகரத்தில் இப்ராஹிம் (அலைஹிஸ் ஸலாம்) கஅபா என்றழைக்கப்படும் கட்டிடத்​தை அமைத்தார். முஸ்லிம்கள் அல்லாஹ் வை தொழும் போது, அதன் பக்கம் முகம் திரும்புவார்கள்.
15.       ஜேசு நாதர் (அலைஹிஸ் ஸலாம்) பற்றி முஸ்லிம்களின் கருத்து என்ன?
ஜேசு நாதர், அன்னாருடைய புனித அன்னை மர்யம் (அலைஹாஸ் ஸலாம்) ஆகியோரை பற்றி முஸ்லிம்கள் மிகவும் உயர்வாக கருதுகிறார்கள். தந்தை இல்லாமல், ஜேசு நாதர் மிகவும் அற்புதமாக பிறந்ததாக குர்ஆன் உறுதியாக கூறுகிறது. “நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே. அவரை (மண்ணால்) படைத்து பின் ‘ஆகுக’ என்று கூறினான். அவர் ஆகிவிட்டார்.” குர்ஆன் 3-59. நபியான அவருக்கு அனேக அற்புதங்கள்  கொடுக்கப் பட்டன. அவற்றுள் தன் தாயின் புனித்தத்துவத்தைப் பற்றி பிறந்தவுடன் பேசிய அற்புதமும் அடங்கும். குருடர்களை, நோயாளிகளை  சுகப்படுத்தியது, மரணித்தவரை உயிர் கொடுத்து  எழுப்பியது, களி மண்ணால் பறவைகள் செய்து  அவைகளை பறக்கக் செய்தது, எல்லாவற்றையும் விட அவர் கொண்டு வந்த செய்தி மிக முக்கியமானதாகும். அன்னார் இறை தூதர் என்பதை உறுதிப் படுத்துவதற்கு இவ்வற்புதங்களை அல்லாஹ் அன்னாருக்கு கொடுத்தான். அன்னார் சிலுவையில் அறையப் படவில்லை எனறு குர்ஆன் கூறுகிளது. (சூரா மர்யம்.)
16.         அல்லாஹ்வை கண்களால் பார்க்கவோ, காதால் கேட்கவோ, தொடவோ,  நுகரவோ, உருசிக்கவோ, கற்பனை செய்யவோ முடியாத போது அவனை விசுவாசம் கொள்வது எப்படி?
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுக் கொடுத்த விஷங்களின்படி, அல்லாஹ்வை ஒருவரும் இவ்வுலக வாழ்வில் கண்ணால் கண்டதில்லை என்று எமக்குத் தெரியும். எமது அறிவைக் கொண்டு அல்லாஹ்வுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள​வும் முடியாது. ஆனால் எமது ஐம்புலன்கள், பகுத்தறிவு ஆகியவற்றை உபயோகித்து இந்த பிரபஞ்சம் சுயமாக உண்டாகியிருக்க முடியாது என்பதை  புரிந்துக் கொள்ளுமாறு இஸ்லாம் எம்மை அழைக்கிறது. யாரேனும் ஒருவர் அனைத்துக்கும் உருவம் கொடுக்கவும், அதன் பின் அவைகளுக்கு அசைவுகள் கொடுக்கவும் வேண்டும். இதனை செய்வது எமது சக்திக்கு மீறிய ஒரு விஷயமாகும். எனினும் எம்மால் அந்த உண்மையை புரிந்துக் கொள்ள முடியும்.
ஓவியத்தின் அழகை காண அதனை வரைந்த ஓவியனை பார்க்க வேண்டுமா? அதே போன்று, ஓவியன் வரைவதை நாம் நேரில் காணாமலே ஓவியங்களை பார்க்க முடியும் போது, அண்ட சராசரங்களை படைத்த அல்லாஹ்வை கண்ணால் பார்க்காமல், (தொடாமல், காதால் கேட்காமல்) நம்பிக்கை கொள்ள முடியும்.(1)
17.       இஸ்லாத்தின் தூண்கள் என்ன?
இஸ்லாத்தில் ஐந்து பிரதான தூண்கள் உள்ளன.
1.    ஈமான் எனும் வணக்குத்துக்குரியவன் ஓரு இறைவன் என்றும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அந்த இறைவனின் தூதர் என்றும் நம்பிக்கை வைத்தல்.
1.     ஒரு நாளைக்கு நிறைவேற்ற வேண்டிய சலாத்.(தொழுகை)
3.    வருடத்தில் ரமதான் மாதம் நோன்பு நோற்றல்
4.    ஏழைகளுக்கு கொடுக்க வேண்டிய சகாத் வரி.
5.    உடல் வலிமையும் பண வசதியும் உள்ள மனிதர்கள் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தல்.
ஒரு கட்டிடத்தின் எல்லா தூண்களும் உயரத்திலும், பலத்திலும் ஒரே அளவில் இருந்தால் தான், கட்டிடத்துக்கு தேவையான உருவமும், அமைப்பும் சரியாக ஏற்படும். ஒருவர் ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றி கட்டாய தொழுகை, நோன்புகளை கைவிட முடியாது. தூன்கள் மாத்திரம் நிற்கும் ஒரு கட்டிடத்தை கற்பனை செய்து பாருங்கள். அதனை கட்டிடம் என எவரும் அழைக்கமாட்டார்கள். அது கட்டிடமாவதற்கு அதற்கு ஒரு கூரை தேவை. அதற்கு சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் தேவைப்படு கின்றன. அதே போன்று, இஸ்லாத்திலும் நேர்மை, உண்மை, உறுதி போன்ற அனேக நற்பன்புகள் உள்ளன. அதனால் ஒரு முஸ்லிமாவதற்கு இஸ்லாத்தின் ஐந்து தூண்களை பின்பற்றுவ துடன், மனிதனுக்குரிய உயர்ந்த நற்பண்புகளும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே கட்டிடம் முழுமை அடைந்து அழகாகத் தோன்றும்.
18.       இஸ்லாத்தில் வணக்கத்தின் நோக்கம் என்ன?
இஸ்லாத்தில் வணக்கத்தின் நோக்கம் இறையச்சத் தோடு வாழ்வதற்கே. இதன் காரணமாக, வணக்கம் எனப்படும் தொழுகை, நோன்பு, சகாத் எனும் ஏழை வரி போன்ற அனைத்தும் இறையச்சம் எனப்படும் நிலையை அடைவதன் நோக்கத்திலேயே நடைபெறுகின்றன. ஆகையால் ஒருவர் இறையச்சம் என்னும் நிலையை அடையும் போது, இவ்வுலக வாழ்வில் சிந்தனையிலும், செயலிலும் உயர்ந்த நிலையை பெற்று இவ்வுலகிலும், மறு உலகிலும் பெரும் நன்மைகளை தேடிக் கொள்ளும் வாய்ப்பை  பெற்றுக்  கொள்வார்.
19.     மரணத்தின் பின் வாழ்வை முஸ்லிம்கள் நம்புகிறார்களா?
அல்லாஹ் மிகவும் நீதமானவன், அதோ போல் தன் நீதத்தை தெளிவாக காட்டுகிறான். ஒவ்வொருவரும் தமது செயல்களுக்கு பொறுப்பெடுக்க வேண்டிய முறையை அவன் அமைத்துள்ளான். நற் காரியங்களை செய்பவர்களுக்கு அவற்றுக்குரிய வெகுமதி உண்டு. அது போன்றே பிழை செய்பவர்களுக்கு அவற்றுக்குரிய தண்டனையும் உண்டு. அதன்படி சுவர்க்கத்தையும், நரகத்தையும் அவனே படைத்தான். அவற்றுக்குள் அனுமதிக்கப் படுவதற்கு நிபந்தனைகள் உள்ளன. இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது என முஸ்லிம்கள் விசுவாசிக்கிறார்கள். இவ்வுலக வாழ்க்கை ஒரு பரீட்சையாகும், இதில் நாம் வெற்றி பெற்றால் சுவர்க்கத்தில், உத்தமர்களின் மத்தியில் என்றென்றும் நிரந்தரமாக வாழக் கூடிய பாக்கியம் எமக்கு கிடைக்கும்.
20.       இறை நம்பிக்கை இல்லாதவர்களின் நற்செயல்கள் வீனாகிப் போகின்றனவா?
இல்லை. “எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்தாரோ அவர் (மறுமையில்) அதன் பயனை கண்டு கொள்வார். மேலும், எவர் ஒரு அணுவளவு தீமையை செய்தாரோ அவர் (மறுமையில்)  அத(ன் பய)னை கண்டு கொள்வார்.” (குர்ஆன் 99; 7,8 வசனங்கள்.)
இறை நம்பிக்கை இல்லாத மக்களும் நற்காரியங் களை செய்தால் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் நற்காரியங்களுக்கு உரிய  வெகுமதியை பெற்றுக் கொள்வார்கள் என்பது இதன் பொருளாகும். அதே நேரத்தில் நற்கருமங்கள் செய்தவர்கள் முஸ்லிமாக இருந்தால், அவர்களுக்கு இவ்வுலகில் வெகுமதி கிடைப்பது மாத்திரமன்றி, மறு உலகிலும் வெகுமதி கொடுக்கப் பெறுவார்கள். எப்படியாயினும், இறுதித் தீர்ப்பு அல்லாஹ்வுக்கே உரியது. (குர்ஆன் 2; 62.)
21.       முஸ்லிக்களின் உடை சம்பந்தப்பட்ட நியதி என்ன?
எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்ணியத்தை கடைபிடிக்கும் படி இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. எவரும் காம இச்சையின் சின்னமாகக் கருதப்படக் கூடாது. உடலுருப்புகளை தெளிவாக எடுத்துக் காட்டும் முறையில் அவர்களுடைய ஆடைகள் மிகவும் மெல்லியதாகவோ, மிகவும் இறுக்கமானதாகவோ இருக்க கூடாது என ஆண்கள், பெண்கள் இரு பாலாருக்கும் பொதுவான வழிமுறைகள் உண்டு. ஆண்கள் குறைந்த பட்சம் தமது முழங்கால் முதல் கொப்புழ் வரை மறைக்க வேண்டும். பெண்கள் தமது முகம், கைகள் தவிர உடம்பின்  ஏனைய பகுதிகளை மறைக்க வேண்டும் என்பது இஸ்லாமிய நியதியாகும்.
22.       முஸ்லிம்களின் உணவு பற்றிய தடைகள் என்ன?
பன்றி இரைச்சி, பன்றியை மூலப்பொருளாகக் கொண்ட உணவுகள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுப்பதற்கு முன்பே இறந்துபோன பிராணிகள், ஏனைய பிராணிகளின் மாமிசத்தை உண்ணும் விலங்குகள், (அவை இறந்த பிராணி களின் மாமிசத்தை உண்பதால்), இரத்தம் அல்லது மது பானம் குடிப்பது, போதையூட்டும் பொருட்கள் உபயோகிப் பது போன்றவை முஸ்லிம்களுக்கு தடை செய்யப் பட்டுவை என குர்ஆன் அறிவிக்கிறது.
23.        ஜிஹாத் என்றால் என்ன?
ஜிஹாத் என்ற வார்த்தை கஷ்டப்பட்டு முயற்சி செய்தல், விஷேடமாக அல்லாஹ்வின் பாதையில் கஷ்டப்பட்டு முயற்சி செய்தல் என்று பொருள் படும். அன்றாட வாழ்க்கையில் ஒருவர் செய்யும் எந்த முயற்சியும் ஜிகாத் என்று கருதப்படும். இவற்றுள் ஒரு கொடுங்கோல் அரசனை எதிர்த்து நின்று, சத்தியத்தை பேசுவது ஜிஹாதின் உயர்ந்த நிலையை குறிக்கும். பிழை செய்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது பெரும் ஜிஹாதாகும். இஸ்லாத்துக்கு எதிராக அல்லது ஒரு முஸ்லிம் தேசத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தும் போது, அதனை பாதுகாக்க ஆயுதம் தாங்குவது ஜிஹாத் ஆகும். இந்த வகையான ஜிஹாத் குர்ஆனையும், சுன்னாஹ்வையும் கடைபிடிக்கும் மார்க்கத் தலைவரால் அல்லது முஸ்லிம் தேசத் தலைவரால் பிரகடணம் செய்யப்பட வேண்டும்.
24.       இஸ்லாமிய வருடம் என்பது என்ன?
கி.பி. 622ம் வருடம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்கா நகரை விட்டு நீங்கி மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற​டைந்த போது ஹிஜ்ரி வருடம் ஆரம்பமானது. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி வருடத்தில் 354 நாட்கள் உள்ளன. இதில் முதலாவது மாதம் முஹர்ரம் ஆகும். கி.பி.1996 என்பது ஹிஜ்ரி 1416ம் வருடமாகும்.

25.       இஸ்லாத்தின் முக்கிய பெருநாட்கள் என்ன?
ஈத் அல் பித்ர் என்பது ரமதான் மாத நோன்​பு முடிவில் கொண்டா டப்படும் பெருநாளாகும். அந்தாளில் மக்கள் அனைவரும் பொது இடத்தில் தொழுது, விஷேட உணவுகள் தயாரித்து, ஒருவருக் கொருவர் பரிசில்கள் பரிமாரிக்கொள்வர்.
ஈத் அல் அழ்ஹா என்பது மக்காவுக்கு மேற் கொண்ட புனித ஹஜ்  யாத்திரையை முடிக்கும் சந்தர்ப்பத்தை கொண்டாடும் பெரு நாளாகும். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தன் மகனாகிய இஸ்மாயில் நபியை அறுத்து தியாகம் செய்ய முன் வந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தின் முக்கியத்தை நினைவு படுத்திக் கூட்டுத் தொழுகையை முடித்த பின், வசதி படைத்த மக்கள் ஒரு ஆட்டை உணவுக்காக அறுப்பார்கள்.
26.       ஷரீஆ என்பது என்ன?
குர்ஆன், முஹம்மத் நபியின் சுன்னாஹ் ஆகிய இரண்டின் அடிப் படையில் பெறப்பட்ட முழுமையான முஸ்லிம் சட்டம் ஷரீஆ என அழைக்கப்படும். ஷரீஆ எனும் இஸ்லாமிய சட்டம் மனிதனின் தனிப்பட்ட  மற்றும் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தை யும் அடக்கியுள்ளது. தனிப்பட்ட மனிதருக்கு வாழ்வதற்கும், சொத்து சம்பாதிப்பதற்கும், அரசியலில் ஈடுபடுதல், தான் விரும்பிய மார்க்கத்தை பின்பற்றுதல் போன்ற அடிப்படை உரிமைகளில்  சுதந்திரமும்,  பெண்கள் மற்றும் சிறு பான்மை யரின் உரிமைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு போன்ற அனைத்தும் ஷரீஆ சட்டத்தில் அடங்கியுள்ளன. முஸ்லிம் சமூகங்களில் மிகக் குறைந்தளவில் நடைபெறும் குற்றங்களுக்கு காரணம் அங்கு அமுல் நடத்தப்படும் இஸ்லாமிய சட்டங்களே. ​
27.       இஸ்லாம் வாள் முனையில் பரப்பப் பட்டதா?
“மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை” என்று குர்ஆன் 2;256 வது வசனம் அறிவிக்கிறது. அதனால் யாரையும் முஸ்லி மாக மதமாற்றம் செய்ய எவருக்கும் அதிகாரமில்லை. அனேக மக்களையும், நாடுகளையும் விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் படைகள் சென்றதும், அவர்கள் அந்த காலத்திய ஆயுதமாகிய வாள்களை ஏந்தி சென்றார்கள் என்பதும் உண்மை. எனினும், இஸ்லாம் வாள்முனையில் பரப்பப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.  காரணம், இன்று பெரும் பான்மையாக முஸ்லிம்கள் வாழும் தூர கிழக்கு நாடுகளான சீனா, இந்துனேஷியா, மற்றும் அனேக ஆபிரிக்க நாடுகளுக்கு எந்த முஸ்லிம் படையும் சென்றதாக சரித்திரத்தில் ஒரு ஆதாரமும் இல்லை. இஸ்லாம் வாள் முனையில் பரவியது என்ற கூற்று, துப்பாக்கிகள், ஜெட் விமானங்கள், அணு குண்டுகள் மூலம் கிறிஸ்தவ மதம் பரவியது எனக் கூறுவதைப் போலாகும். இது உண்மையல்ல. கிறிஸ்துவ மிஷனரி எனப் படும் போதகர்கள் மூலம் கிறிஸ்துவ மதம் பரவியது. அரபு இனத்தவர்களில் 10% கிறிஸ்தவர்கள். “இஸ்லாத்தின் வாள்” மூலம் முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம் அல்லாத சிறு பான்மை மக்கள் அனைவரையும் முஸ்லிமாக மாற்றவில்லை என்பதும் உண்மை. 700 வருடங்கள் முஸ்லிம் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் முஸ்லிம்கள் இன்றும் சிறு பான்மையாகவே வாழ்கின்றனர். மிகவும் வேகமாக இஸ்லாம் பரவும் வட அமெரிகாவில் இன்று 6 மிலியன் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அங்கும் “இஸ்லாத்தின் வாள்” என்பதை காண முடியாது.
28. இஸ்லாம் வன்முறைக்களுக்கும் பயங்கர வாதத்துக்கும் ஆதரவளிக்கிறதா?
இல்லை. இஸ்லாம் என்பது சமாதானமும், இறைவனுக்கு கீழ் பணிதலும் உள்ள மதம் என்பதால் மனித வாழ்வின் புனிதத்து வத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறது. “எவர் ஒருவர் மற்றோர் ஆத்மாவுக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தி(னை தடுப்பத)ற்காகவோ தவிர, (அநியாயமாக ஒருவரை) கொலை செய்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போலாவார். எவர் ஒரு உயிரை வாழவைக்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையும்  வாழ வைத்தவர் போலாவார்.” (குர்ஆன் 5 – 32) சிலுவை யுத்தம், ஸ்பானியா யுத்தம், இரண்டாம் உலக யுத்தம், போன்றவைகளில் நடைபெற்ற எல்லா வன்முறைகளையும் இஸ்லாம் கண்டிக்கிறது. அதோடு பாதிரிமார் ஜிம் ஜோன்ஸ் Rev. Jim Jones, டேவிட் கொரேஷ் David Koresh, டாக்டர் பரூச் கோல்ஸடெயின் Dr. Baruch Goldstein போன்றவர்களின் நடத்தைகளையும், பொஸ்னியா முஸ்லிம்கள் மீது சர்பியாவின் கிறிஸ்தவர்கள் செய்த அட்டூலி யங்களையும் இஸ்லாம் கண்டிக்கிறது. ஒரு மனிதன் வன்முறை களில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில், அவன் தன் மதத்தை பின்பற்றாது விலகி நிற்கிறான். ஆனால் சில சந்தர்ப்பங்களில், கொடுமைக்கு ஆளான மக்கள் தமக்கு கொடுமை செய்தவர்களுக்கு எதிராக வன்செயலில் இறங்குவது மனித சுபாவமே. பலஸ்தீன மக்கள் இதற்கு ஒரு உதாரணமாகும். இது சரியென்று நாம் கூறவில்லை. எனினும், உலக மக்களின் கவனத்தை தம் பக்கம் திருப்ப இது ஒன்று தான் வழியென அவர்கள் நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் இல்லாத எத்தனையோ இடங்களில் பயங்கரவாதமும், வன்முறை யும் இடம்பெற்றன. அயர்லாந்து, தென் ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்கா, சிறி லங்கா போன்ற இடங்களை பார்க்கலாம். சில சந்தர்ப்பங்களில் பணம் படைத்த வர்களுக்கும் ஏழைகளுக்கும்​இடையில் நடக்கும் போராட்டம் அல்லது கொடுங் கோலாட்சி புரியும் தலைவர்களுக்கும், துன்புறும் நாட்டு மக்களுக்கும் இடையில் ஏற்படும் போராட்டம் போன்ற சந்தர்ப்பங்களில் வன்செயல் நடைபெற இடமுண்டு. சாதாரண மக்கள் பயங்கர வாதிகளாக ஏன் மாறுகிறார்கள் என நாம்  தெரிந்துக் கொள்ள வேண்டும். துரதிஷ்ட வசமாக வன்முறை புரியும் பலஸ்தீனர்கள் பயங்கர வாதிகள் என்று பட்டம் சூட்டப் படுகிறார்கள. அதே நேரத்தில் ஆயுதம் தாங்கிய இஸ்ரவேலில் குடியேறியவர்கள், தமது இனத்துக்கு எதிராக வன்முறை புரியும் போது அது பயங்கரவாதம் என அழைக்கப் படுவதில்லை. அமெக்காவின் ஒக்லஹோமா நகரில் குண்டு வெடித்த போது, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்த குற்றத்துக்கு எவ்விதமான விசாரனையு மின்றி முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்திய சம்பவங்களும் உண்டு. சமாதானத்தை தேடுபவர்களும், சமாதானத்தை எதிர்ப்பவர்களும் சில வேளைகளில் ஒரே மதத்தை பின் பற்றுபவர்களாக இருக்கவும் கூடும்.
29.     இஸ்லாமிய அடிப்படை வாதம் என்றால் என்ன?
“அடிப்படைவாதம்” என்று இஸ்லாத்தில் எதுவும் கிடையாது. இந்த வார்த்தையை உருவாக்கியது மேற்கு நாடுகளின் ஊடகமே. இதன் மூலம் இஸ்லாத்தின் அத்திவாரக் கொள்கைகளை பின் பற்றி, அதன்படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் முஸ்லிம்களுக்கு இந்த வார்த்தையை உபயோகித்து களங்கம் விளைவிக்கி றார்கள். இஸ்லாம் என்பது நடுநி​லையான மதமாகும். அதனால் இறையச்சத்துடன் இஸ்லாம் காட்டும் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட முஸ்லிம், மத வெறியனாகவோ அல்லது தீவிரவாதியாகவோ இருக்க முடியாது.
30.       இஸ்லாமிய திருமணம் கிறிஸ்தவர் களின் திருமணம் போன்றதா?
இஸ்லாத்தில், திருமணம் என்பது மனித இனத்தைச் சேர்ந்த  இருவர் இணைந்துக் கொள்ளும் புனிதமான உறவாகும். அத்துடன் இஸ்லாத்தில் திருமணம் என்பது, சட்டபூர்வமான  ஒப்பந்தமும், அதன் படி கணவன் மனைவி இரு சாராரும் நிறை வேற்ற வேண்டிய பொறுப்புகளும் அடங்கிய வாழ்க்கை முறையாகும். இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணுக்கு மகர் எனும் சீர் ஆண் கொடுக்க வேண்டும். பெண்ணிடம் சீதனம் கேட்க முடியாது. ஒரு பெண்ணையோ, ஆணையோ பலவந்நமாக திருமணம் செய்து வைக்கமுடியாது என இஸ்லாம் அறிவிக்கிறது. திருமணத்துக்கு பொருத்தமான ஜோடிகளை தேர்ந்து எடுப்பதற்கு பொற்றோர் துணையாக நின்று நடத்தி வைக்க வேண்டும். ஆனால் தமது முடிவை பிள்ளைகள் மீது திணிக்க பேற்றோருக்கு அதிகாரமில்லை.
31.       பலதார திருமணத்துக்கு இஸ்லாம் ஊக்கமளிக்கிறதா?​
இல்லை. பலதார மணம் என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்ட ஒரு விஷயமேயன்றி, அது கடமையாக்கப் படவில்லை. சரித்திரத்தை பார்த்தால், திருமணமாகாத ஜேசு (ஈஸா) நாதரை தவிர, ஏனைய எல்லா நபிமார்களும் ஒன்றிக்கு மேற்பட்ட மனைவியரை திருமணம் ​செய்திருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்வதற்கு முஸ்லிம் ஆண்களுக்கு குர்ஆனில் அனுமதியளிக்கப் பட்டுள்ளது. இந்த அனுமதி காம இச்சையை திருப்திப் படுத்துவதற்கன்றி, யுத்தங்க ளின் பின் சமூகத்தில் எஞ்சி நிற்கும் விதவைகள், அனாதைகளின் நலன்கள்  ஆகியவற்றை காப்பதற்கே. இஸ்லாத்துக்கு முந்திய சமூகங்களில்  ஆண்கள் பல மனைவிகளை வைத்திருந்தனர். இஸ்லாத் துக்கு வந்தபோது 11 மனைவிகளை வைத்திருந்த ஒரு மனிதர், “எனது மனைவிகளை நான் என்ன செய்வது? என்று முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வினவினார். அதற்கு அன்னார், நான்கு பேர்களை தவிர, ஏனையவர்களை விவாகரத்து செய்யும் படி கூறினார்கள். “உங்கள் மனைவியருக் கிடையில் நீதமாக உங்களால் நடந்துக் கொள்ள முடியுமானால், 2 அல்லது 3 அல்லது 4 பெண்களை நீங்கள் திருமணம் செய்யலாம்.” என குர்ஆன் 4;3 வசனம் கூறுகிறது. மனைவியருக் கிடையில் ஒரேயளவு நீதியாக இருப்பது நடைமுறையில் சாத்திய மாகாத மிகவும் கஷ்டமான விஷயம் என்பதால், பெரும் பாண்மையான முஸ்லிம் ஆண்கள் ஒரு மனைவிக்கு மேல் மண முடிப்பதில்லை.  முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் 24 வயது முதல் 50 வயது வரை கதீஜா (ரலி) என்ற மனைவியுடன் மாத்திரம் வாழ்ந்தார்கள். மேற்கத்திய சமுதாயங் களில், சில ஆண்களுக்கு ஒரு மனைவி மாத்திரம் இருப்பினும், வேறு​ பெண்களுடனும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். U.S.A Today என்ற பத்திரிகை 1988, ஏப்ரல் 4ம் திகதி வெளியிட்ட மதிப்பீட்டில் திருமணம் செய்துக் கொள்ளாது தற்காலிக (சின்ன வீடாக) வைப்பட்டியாக வாழும் 4,700 பெண்களிடம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்ட ​போது “ஒருவனுக்கு ஆசை நாயகியாக இருப்பதை விட சட்டப்படி திருமணம் செய்துக் கொண்ட இரண்டாவது மனைவியாக வாழ்வதை நாம் விரும்புகிறோம்” என கருத்து தெரிவித்தார்கள். காரணம், அவர்களுக்கு சட்டப்படி திருமணம் செய்த மனைவிக்கு இருப்பது போல் எந்த உரிமையோ, செல்வத்தில் சம பங்கோ கிடையாது. ஆண்கள் தமது தேவையை பூர்த்தி செய்வதற்கு  அவர்களுடைய உடலை மாத்திரம் உபயோகிப்பது போல் அந்த பெண்களுக்கு தோன்றுகிறது.

32.               இஸ்லாம் பெண்களை அடக்கி ஆள்கிறதா?​
இல்லை. மாறாக, பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை, செல்வங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் சுதந்திரம், வருமானம் பெற்றுக் கொள்ளும் உரிமை, ஹிஜாப் அணிவதன் மூலம், தான் ஒரு கெளரவத்துக்குரிய பெண் என அடையாளப்  படுத்தல், போன்ற உரிமைகளை ஐரோப்பா உட்பட வேறு எந்த​ சமூகமும் பெண்களுக்கு கொடுக்காத போது, 1400 வருடங்களுக்கு  முன்பே இவ்வுரிமைகளை கொடுத்து, பெண்களின் நிலையை இஸ்லாம் உயர்த்தியது. பெண்கள் இறை பக்தியில் ஆண்க ளுக்கு எல்லா விதத்திலும் சமமானவர்கள் என குர்ஆன் கூறியது. 33; 35. திருமணத்தின் பின் தமது சொந்தப் பெயரை வைத்திருக்கவும், தான் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொள்ளவும், அதனை செலவு செய்யவும், பாதையில் போகும் போது இன்னல்களுக்கு ஆளாகக் கூடிய ஆபத்து இருந்தால், ஆண்களிடம் உதவி கோரவும் இஸ்லாம் அனுமதி கொடுக்கிறது. “எவர் தனது குடும்பத்துக்கு சிறந்தவரோ, அவர் உங்களில் மிகச் சிறந்தவரா வார்.” என முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தார்கள். சில முஸ்லிம் ஆண்கள், பெண்களை கொடுமை படுத்துவது உண்மைதான், ஆனால் அது இஸ்லாத் தின் செயல் அல்ல. இஸ்லாத்தைப் பற்றிய அறிவீனம் அல்லது சில சமூகங்களின் கலாச்சாரம், சம்பிரதாயம், பழக்க வழக்கம் ஆகியவைகளே இதற்கு காரணமாக உள்ளன.


33.       ஏனைய சிறுபான்மை மதத்தவர்களை இஸ்லாம் அனுமதிப்பது இல்லையா?
சிறுபாண்மையினரின் உரிமைகளை இஸ்லாம் மதிக்கிறது. அவர்களின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முஸ்லிம் அரசர்கள் ஜிஸ்யா எனும் வரியை அவர்களுக்காக அறவிட்டார் கள். முஸ்லிம் அல்லாதவர்கள் சகாத் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கிறிஸ்தவர்களின் ஆலயங்கள், யூதர் களின் ஆலயங்கள் ஆகியவற்றை தாக்கி அவற்றை நாசமாக்கு வதை முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களுக்கு தடை செய்தார்கள். முஸ்லிம்களின் தலைவர் காலிபா உமர், யூதர்களின் வணக்கத் தலத்தினுள் முஸ்லிம்கள் தொழுவதைக் கூட தடை செய்தார். ஐரோப்பா நாடுகள் யூதர்களை துரத்தியடித்த சந்தர்ப்பத்தில், யூதர்களை அன்புடன் வரவேற்று, அவர்களை செலிப்புடன் வாழ, வளர, முஸ்லிம் ஸ்பெயின் இடமளித்தது. அந்த கால கட்டத்தை தமது பொற்காலம் என யூதர்கள் கருதுகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்த வர்கள், அரசாங்க உத்தியோங்களில் சேர்ந்து, ஆலயங்களுக்குச் சென்று வணங்கி செல்வாக்குடன், செழிப்புடன் இன்றும் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட கவணிப்பு முஸ்லிம்கள் சிறுபான்மையாக மாறிய பின் ஸ்பெயினில் மதக் கலவரத்திலும், சிலுவை யுத்தங்களின் போதும், சமீபத்தில் நடைபெற்ற பொஸ்னியா, இஸ்ராயில், இந்தியா போன்ற நாடுகளில் காணக் கிடைக்க வில்லை. சில சமயங்களில் நாட்டின் தலைவர்களின் நடவடிக்கை கள்  அவர்கள் பின்பற்றும் மதங்களின் கொள்கை களை பிரதி பலிக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள்.
34.       பின்வரும் விஷயங்கள் பற்றி இஸ்லாமிய கருத்து என்ன?
a.  ஆண் பெண் தனிமையில் நேரத்தை கழிப்பது, விவாகத்துக்கு முன் உடலரவு கொள்வது;
ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுவது, திருமணத்திற்கு முன்பு உடலுறவு  வைத்துக் கொள்வது அல்லது திருமணம் செய்த கணவன் வேறு பெண்களுடன், வேறு ஆண்களுடன்  உறவு  வைத்துக் கொள்வது ஆகியவற்றை இஸ்லாம் அனுமதிக்க வில்லை. இப்படிப்பட்ட தூண்டுதல்களை தடுத்துக் கொள்வதற்கு திருமணம்செய்துக் கொள்ளும்படியும் அதன் மூலம் அன்பு, பாசம், கருணை, அமைதி ஆகியவற்றை இல்லற வாழ்வில் பெற்றுக் கொள்ளும்படியும்  இஸ்லாம் அறிவுறை கூறுகிறது.
b.  கரு அழிப்பது;
கருவை அழிப்பது கொலை குற்றமாகும் எனத் தடுக்கும் இஸ்லாம், ஒரு தாயின் உயிரை காப்பாற்றும் ஒரே நோக்கத்தின் அடிப்படையில் அதனை செய்ய அனுமதி கொடுக்கிறது. 
அல் குர்ஆன் “நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தை களைக் கொலை செய்யாதீர்கள்.” 17;31.
“வறுமைக்காக (அதை பயந்து) உங்கள் குழந்தைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள்.” 6; 151)
c.  ஆண், ஆணோடும், பெண் பெண்ணோடும் ஒரு இன சேர்கை செய்வது, ஏயிட்ஸ் நோய்;
ஒரு பால் உறவை எதிர்க்கும் இஸ்லாம் அச்செயலை பெரும் பாவம் என்று தீர்ப்பு கூறுகிறது. எனினும், ஏயிட்ஸ் நோய் பிடித்த வர்களை, ஏனைய நோயாளிகளை போல் அன்புடன் கவணிக்கும் படி இஸ்லாம் முஸ்லிம் வைத்தியர்களுக்கு உபதேசிக்கிறது.

d.  கருணை கொலை, தற்கொலை;
கருணையின் அடிப்படையில் சுகப்படுத்த முடியாத  நோயால் துன்புறும் நோயாளிகளை கொலை செய்வதையும், தற்கொலை புரிந்துக் கொள்வதையும் இஸ்லாம் வண்மையாக எதிர்க்கிறது. சுகப்படுத்த முடியாத நோயாளிகளை கொலை செய்வதன் மூலம் அவர்களது வேதனையை நீக்க வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
e.  மனித உறுப்புகளை நன்கொடை செய்தல்;
மனித உயிரை காப்பாற்றுவதில் இஸ்லாம் தீவிரமாக செயல் புரிகிறது. குர்ஆன் 5;32. ஆகையால் மனித உறுப்புகள் நன்கொடையின் மூலம் இன்னொரு உயிரை காப்பாற்றுவதற்கு பொதுவாக அனுமதி உண்டு. உறுப்புகளை தானம் செய்பவர் விருப்பத்துடன் தானம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் உறுப்புகள் வியாபாரப் பொருளாக மாறக் கூடாது.

35.       கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் முஸ்லிம்கள் எவ்வாறு  நடத்த வேண்டும்?
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முன்பு வேதங்கள் கொடுக்கப் பட்ட மக்கள் “வேதத்தை உடைய மக்களே” என குர்ஆன் குறிப்பிடுகிறது. அவர்களை மரியாதை யுடனும், நியாயமாகவும் நடத்தும் படி முஸ்லிம்கள் அறிவிக்கப் படுகிறார்கள். அவர்கள் யுத்தம் செய்ய வந்தாலன்றி, அவர்களு டன் யுத்தம் புரிய வேண்டாம் எனவும், அவர்களின் இறை நம்பிக்கையை கேவலப்படுத்த வேண்டாம் எனவும் முஸ்லிம்கள் உத்தரவிடப் பட்டுள்ளார்கள். அவர்களும் ஒரு இறைவனை வணங்கி, அவனிக்கே முற்றிலும்  அடி பணிந்து மக்களாக மாறுவார்கள் என்பது முஸ்லிம்களின் ஒரே விருப்பமாகும்.
“நீர் கூறுவீறாக. ‘வேதத்தையுடையவர்களே எங்க ளுக்கும் இன்னும் உங்களுக்குமிடையே நாம் அல்லாஹ்வைத் தவிர  வேறொன்றையும் வணங்கக் கூடாது. நாம் அவனுக்கு யாதொன் றையும் இணை வைக்கவும் கூடாது. நம்மில் சிலர், சிலரை அல்லாஹ்வையன்றி தெய்வங்களாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்று சமமானதொரு வார்த்தையின் பால் வாருங்கள். (இதை ஏற்காது) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களிடம்) ‘நிச்சய மாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ் படிந்த) முஸ்லிம்கள் என நீங்கள் சாட்சியம் கூறுவீறாக.’ என்று கூறி (விட்டு) விடுங்கள்.” குர்ஆன் 3 ;64

ஹிந்துக்கள், பஹாய்,பெளத்த மதத்தவர்கள் ஆகியோரின் நிலை என்ன?
இஸ்லாத்தைப் பற்றிய அறிவு பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும் முறையில் அவர்களும் ஆதரவுடனும், கெளரவத்துடனும், விவேகத்துடனும் நடத்தப்பட வேண்டும்.

36.       இஸ்லாம் மனித உரிமைகளுக்கு எவ்வாறு உத்தரவாதம் கொடுக்கிறது?
“மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை” என்ற  குர்ஆன் 2;256 வசனத்தின் மூலம் மனிதர்களுக்கு சிந்திக்கும் சுதந்திரத்தை இஸ்லாம் உறுதி படுத்துகிறது.
இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத ஒவ்வொரு பிரஜையினதும் உயிரும் அவனது சொத்தும் புனிதமானதாக கருதப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய நீதி.
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும் ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாக வும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ் விடத்தில் உங்களில் மிக்க கண்ணியம் பொருந்தியவர் உங்களில் மிகவும் பயபக்தி யுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தவன்.” குர்ஆன் 49;13
37.       குடும்பம் முக்கியமான அங்கம் என முஸ்லிம்கள் ஏன் கருதுகிறார்கள்?
இஸ்லாமிய சமுதாயத்தின் அத்திவார​மே குடும்பம் தான். சமாதானமும், பாதுகாப்பும் கொடுக்கும் நிலையான குடும்பம்  விலை மதிக்க முடியாத தொன்றாகும்.  அதன் அங்கத்தவர்களின் ஆத்மீக வளர்ச்சிக்கு அவ்வகையான குடும்ப அமைப்பு மிக அவசியமானதாக கருதப்படுகிறது. உறவினர்கள் ஒன்று சேர்ந்து வாழும் கூட்டு வாழ்க்கை சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்து கிறது. பிள்ளைகள் பேணி பாதுகாக்கப் படுவதால், திருமண வயது வரை வீட்டை விட்டுப் பிரிந்து பொதுவாக விழகி  வெளியில் போக மாட்டார்கள்.
38.       முஸ்லிம்கள் முதியோர்களை எவ்வாறு நடத்து கிறார்கள்?
இஸ்லாமிய உலகில் முதியோர் நிலையங்கள் என்று எதுவும் இல்லை. வயது முதிர்ந்த பெற்றோர்களை அளவற்ற அன்புடன் அவர்களுடைய தள்ளாத வயதில் வீட்டில் வைத்து பராமரிப்பது கெளரவமும், அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கொடுக்கும் செயலா கக் கருதப்படுவதோடு, ஆத்மீக வளர்ச்சியை கொடுக்கும் சந்தர்ப்பமாகவும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. எமது பெற்றோர் களுக்காக தொழுது, துஆ கேட்க வேண்டும் என்பதோடு நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் தமது தேவைகளை தியாகம் புரிந்து பிள்ளைகளாகிய எங்கள் தேவை களை பூர்த்தி செய்த அவர்களை அளவற்ற அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் அன்னையர் விஷேச கெளரவம் கொடுக்கப் படுகின்றனர். “அன்னையர் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
முஸ்லிம் பெற்றோர்கள் முதுமையடைந்தால், அவர்கள் எமக்கு கொடுத்த அதே கருணையும் தியாகமும் காட்டி அவர்களை அன்போடு நடத்த வேண்டும். பெற்றோர்களுக்கு சேவை புரிவது தொழுகை நிறைவேற்றுவதற்கு அடுத்த கடமையாக கருதப் படுவதுடன், அச்சேவையை பிள்ளைகளிட மிருந்து எதிர் பார்க்க பெற்றோர்களுக்கு உரிமையுமுண்டு.
“(நபியே!) உமதிரட்சகன் – அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளை யிட்டிருக் கின்றான். அவ்விரு வரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் ’சீ’ என்று கூட நீர் சொல்ல வேண்டாம்.  அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீறாக.
இன்னும் இவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை (நீர்) தாழ்த்துவீராக. மேலும் ‘என் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை  அவர்கள் வளர்த்தது போல் நீயும் அவ்விருவருக்கம் அருள் புரிவாயாக.  என்றும் கூறுவீறாக.” அல் குர்ஆன் 17; 23, 24.
39.       உணவு பற்றி என்ன கூறகிறீர்கள்?
யூதர்களும், ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் கடைபிடித்த உணவு சம்பந்தப்பட்ட சட்டங்களை விட, இஸ்லாமிய உணவின் சட்டங் கள் இலகுவானவையெனினும் பன்றி இறைச்சி, மது பானம் ஆகியவைகளை பாவிப்பதை தீவிரமாகத் தடுக்கிறது. “உங்கள் உடலுக்கும் உங்கள் மீது உரிமையுள்ளது.” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அதன் அடிப்படையில் சுத்தமான உணவுகளை உண்பதும், சுகாதாரமான வாழ்வு முறையை கடை பிடிப்பதும் மார்க்கத்தின் கடமை என காண முடியும். “அல்லாஹ்விடம் (மார்க்கத்தில்) விசுவாசத்தையும் நல் வாழ்வையும் கோருங்கள். விசுவாசத்தின் பின் சுகாதாரத்தை விட சிறந்த  பரிசை எவருக்கும் கொடுக்கப் படவில்லை.” என நபிகள் ஸல்லல் லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்தார்கள்.
40.       யார் வேண்டுமானாலும் முஸ்லிமாக மாற முடியுமா?
ஆம். எவருக்கும் முஸ்லிம் ஆக முடியும். இதற்கு இரண்டு விடயங்கள் பிரகடணப் படுத்த வேண்டும்.
1.    வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என சாட்சி கூறுதல்.
2.    முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் என்று சாட்சி கூறுதல்.
இவ்விரு கூற்றுக்கள் ஒருவரை முஸ்லிம் ஆக்கும். இவ்விரு சாட்சியங்களை அரபு பாஷையில் மொழிய வேண்டும். அடுத்து அந்த மனிதர் குளிப்பது என்பது நல்லது எனக் கூறப்படுகிறது.
அதன் பின் என்ன?
ஒருவர் முஸ்லிமாகிய பின், தொழுகை, நோன்பு, சகாத்து, ஹஜ் பிரயாணம் போன்ற விஷயங்கள் பற்றி கற்றுக் கொடுக்கப் படும். இவை இஸ்லாத்தின் தூண்களாகும்.
அதன் பின் என்ன?

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள். ஒரு முஸ்லிம் தனக்கென நாடியவைகள், தன் சகோதர, சகோதரி களுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்ப வேண்டும்.
அல்லாஹ்விடமுள்ள செல்வம் ஒரு போதும் குறையாது. எங்கள் அனைவருக்கும் அள்ளிக் கொடுப்பதற்கு அல்லாஹ்வால் முடியும். நாம் ஒருவருக்கொருவர் பிரார்த்தனை புரிய வேண்டும். ஒருவரை ஒருவர் அன்பு கொள்ள வேண்டும். நாம் எமக்கென நாடியவைகள், நமது மார்க்கச் சகோதர, சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டுமென நாம் விரும்ப வேண்டும்.

தமிழில் மொழிபெயர்த்தவர்

ஜாசிம் இப்ன் தஇயான்

نقره لتكبير أو تصغير الصورة ونقرتين لعرض الصورة في صفحة مستقلة بحجمها الطبيعي
1-www: Islamicfinder.org


குறிப்புகள்
Discover Islam, complementary copy by : Sheikha Hind Al-Maktoum . U.A.E
This message is for you, by :Mahmoud Murad , cooperative office for call and guidance . Riyadh, K.S.A
The true religion of god Dr B. Philips, Zaid center for new Muslims . U.A.E.
The principles of Islam, by: Hamoud Al-lahim, cooperative office for call and guidance .Riyadh, K.S.A

The personality of Allah’s last messenger, by abdul Waheed Khan ,IIPH . 

No comments:

Post a Comment