Translate

Tuesday 20 October 2015

முஹர்ரம் 10 துக்க நாளா..? இஸ்லாத்தில் இல்லாத மூட நம்பிக்கை.


தூய இஸ்லாத்தை பிளந்து தவறான மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கும் ஸியாக்களே..!

முஹர்ரம் 10 அன்று துக்கம் அனுஷ்டிக்கிறோம் எனும் பெயரில் ரத்தம் வழிய வழிய உடலை கிழித்துக் காயப்படுத்திக் கொள்கிறீர்களே..இது நபிகளார் காட்டித் தந்த வழியா..? சிந்திக்க மாட்டீர்களா..?

சத்திய மார்க்கத்தை எடுத்துரைக்கும் பாதையில் எத்தனையோ இடர்பாடுகளை, இழப்புகளை நபிகளார் சந்தித்தார்களே.. அவர்கள் காட்டிய பொறுமை, சகிப்புத்தன்மை உங்களிடம் எப்படி இல்லாமல் போனது..?

பத்ரு போர்க்களத்தை விடவா..? உஹத் போர்க்களத்தை விடவா..? அங்கே தாக்கப்பட்ட நபிகளாரை விடவா..? அதில் கொல்லப்பட்ட எண்ணற்ற சஹாபிகளை விடவா..? ஹம்சா(ரலி) அவர்களை விடவா..?

எல்லாவற்றையும் இழந்து நபிகளார் மதீனாவிற்கு துரத்தப்பட்டார்களே..அதனை விடவா..? தாயிப் நகரிலே ஏளனத்திற்கும் இழிவுக்கும் அவர்கள் ஆளானார்களே அதனை விடவா..? அங்கிருந்து ரத்தம் வழிய..வழிய கல்லால் அடித்தே துரத்தப்பட்டார்களே.. அதனை விடவா..? திரும்பவும் மக்காவிற்கே தஞ்சம் கேட்டு வந்தார்களே.. அதனை விடவா..?

பிறந்த ஆண்மக்கள் துள்ளிவிளையாடும் பருவத்திலேயே இறந்தார்களே அதை விடவா.. இறுதியில் நபிகளாரே இறந்தார்களே அதை விடவா..உங்களுக்கு துக்கம்..?

நீங்கள் துக்கம் கொண்டாடும் அதே நாள் தான்.. பண்டு இறைவன் (மோசே) மூஸா அவர்களையும் அன்றைய முஸ்லிம்களையும்  கொடுங்கோலன் பிரஅவுனிடமிருந்து காப்பாற்றிய உன்னதமான நாள். மகத்தான இறையருளின் நாள். அந்த நாளை துக்க நாளாக இழிவு படுத்துகிறீர்களே.. நியாயமா..?

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எதற்காக ? என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்என்றார்கள். இதனை கேட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள்..! என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்
(ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

இந்த ஹதீஸை உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்..!

$$$$$$$$$$$$$

இன்ஷா அல்லாஹ் வருகிற ஆஷூரா நோன்பை நோற்று அனைவரும் அல்லாஹுவின் அருளை பெறுவோம்..!
ஆஷூரா நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அது அமையும்..! என்று அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்..! என நபி அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்) 


No comments:

Post a Comment