Translate

Sunday 27 March 2016

மக்கள் நல கூட்டணியும் குருட்டுப் பூனைகளும்







மக்கள் நல கூட்டணியை குருட்டுப் பூனையை போல பிராண்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

1] தே.மு.தி.க வுடன் இணைந்தாலும், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தாலும், தனிநபர், தனிக்கட்சி ஆட்சி என்பதை உடைத்தெறியும் கூட்டணி மந்திரிசபை எனும் உயர்ந்த ஜனநாயக தத்துவம் தமிழகத்திற்கு ஏற்றம் தரும் நல்ல கொள்கையாக நீங்கள் பார்க்க வில்லையா..?

2] திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக எனும் அரசியல் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர, இப்போதைக்கு கிடைக்கின்ற வாய்ப்பை தானே எவரும் பயன்படுத்த முடியும்.? அந்த வகையில் தே.மு.தி.க உடன் ம.ந கூட்டணி இணைந்தது எவ்வாறு தவறாகும்.?

3] தே.மு.தி.க, திமுக வுடன் இணைந்து கலைஞர் தலைமையில் ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பொம்மையாட்சி நடைபெறுவதையும், பாஜக வுடன் இணைந்து தமிழகத்தில் மதவாத சக்திகள் தலை தூக்குவதையும், தே.மு.தி.கவை தன் பக்கம் இழுத்ததன் மூலம் தடுத்த ம.ந. கூட்டணியின் ராஜதந்திரம் பாராட்டுக்குரியதில்லையா.?

4] மக்களின் ஓட்டை பொறுக்கி ஜெயித்துவிட்டு, ஒட்டு போட்ட மக்களை சந்திக்காமல் முதலமைச்சர் நாற்காலியில் திமிருடன் ஒரு சர்வாதிகாரியைப் போல அமர்ந்திருக்கிற ஜெயலலிதா..

சிலை வைப்பது, மணிமண்டபம் கட்டுவது, மறைந்த தலைவர்களின் பெயர்களை சூட்டுவது அதன் மூலம் சாதி,மத ஒட்டு வங்கிகளை உருவாக்கி வைத்துக் கொண்டு, நாட்டை குடும்பத்தினர் கொள்ளையடிக்க அனுமதிப்பது என்பது போன்ற கயமைத்தனம் கொண்ட திமுக..கருணாநிதி..

வன்னியர் ஒட்டு அன்னியருக்கில்லை என்று முழங்கி விட்டு அன்னியர் ஓட்டை வன்னியருக்கு தேடும் பாமக..

காந்தியின் தேசத்தை கோட்சேயின் தேசமாக மாற்றத் துடிக்கும் பாஜக..

சிங்களவனுக்கு ராஜபக்சே என்றால் தமிழனுக்கு சீமான் என்பது போல பாசிசத்தின் பாதையில் இனத்தூய்மை பேசும் நாம் தமிழர் கட்சி..

இத்தகையோர் மத்தியில் தான்.. ம.ந. கூட்டணி-தே.மு.தி.க கூட்டணி இந்தளவுக்காவது நல்ல கொள்கைகளுடன் எழுந்துள்ளது.. இதனை தூற்றுவது நியாயமா..?


பூமராங் 

28.3.2016


[][][]

No comments:

Post a Comment