Translate

Tuesday 19 January 2016

கல்லறைக் கல்லை அகற்றியது யார்.?


WHO MOVED THE STONE..?

நம் அனைவரினதும் மதிப்புக்குரிய இயேசு கிறிஸ்து அவர்களை சிலுவையில் அறைந்து கொலை செய்து அடக்கம் செய்யப்பட்டதாக (?) நம்பப்படும் குகையின் கல்லறைக்கல் அகற்றப்பட்டது தொடர்பாகவும் அதனுடன் சம்மந்தப்பட்ட நம்பிக்கையின் உண்மைத்தன்மையினை பைபிள் ஒளிியில் பாருங்கள் !

கடந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் மத ஆராய்ச்சியாளர்களையும் வல்லுனர்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கிய ஓர் கேள்விதான் இது..! உண்மையாக பைபிளை சிந்திப்பவர்கள் மாத்திரமே நல்லுணர்ச்சி பெறுவார்கள்..! நம்புவதுதான் நம்பிக்கையில்லை..நம்ப வேண்டியதை நம்புவதுதான் நம்பிக்கை..!

"கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது, அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். (மாற்கு 16: 3, 4).

யார் அகற்றியிருப்பார்???
இந்த வினாவுக்கு விடை காண நுழைந்த பிரபல பைபிள் ஆராய்ச்சியாளர் பிரான்க் மோரிசன், நம்முடைய இந்த வெளியீட்டின் தலைப்பைக்கொண்ட சுமார் 192 பக்க அனுமானங்களால் கோர்க்கப்பட்ட ஓர் புத்தகத்தை எழுதினார். 1930 தொடக்கம் 1975 காலப்பகுதியில் சுமார் 11 பதிப்புகளையும் தாண்டிய அந்த நூலில் “கல்லறைக் கல்லை புரட்டியது யார்” என்ற வினாவுக்கு பதிலளிப்பதில் தோல்வியையே கண்டார். (Faber and Faber, London).தன்னுடைய நூலின் 89ம் பக்கத்தில் “எனவே, காலியாய் இருந்த கல்லறை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நாங்கள் விடப்பட்டிருக்கிறோம்” என்று தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பில் ஆறு அனுமானங்களைக் கொண்டு தன்னுடைய நூலை தொடர்கிறார். அவற்றுள் முதன்மையாக, “ஆர்மத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு எனும் சீடர் இரகசியமாக இயேசுவின் உடலை எடுத்து பிறிதொரு மிக பொருத்தமான ஓய்விடத்திற்கு மாற்றியிருக்க கூடும்” என்று தனது நூலில் பதிவு செய்கிறார் பிரான்க் மோரிசன்.யோசேப்பு “சில பிரத்தியேக காரணங்களுக்காக இயேசுவின் உடலை இடம் பெயர்த்திருக்க கூடும்.!" என அறிவிக்கிறார் !

புனித பைபிள் பிரகாரம், வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையன்று, மகதலேனா மரியாள் இயேசுவுடைய கல்லறைக்குச் சென்றார் என்று யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் பதிவு செய்திருக்கிறார்:

"வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து…" (யோவான் 20:1)
இந்த இடத்திலிருந்து பரிசீலனையை ஆரம்பிக்கலாம்.சிந்தனையை தூண்டக்கூடிய சில வினாக்களை தொடுப்பதனூடாக பல வருட காலமாக இருக்கும் மிகப் பிரதானமான சர்ச்சைக்கு விடை காண முடியும் !

கேள்வி 1
₹₹₹₹₹₹:
மகதலேனா மரியாள் ஏன் இயேசுவினுடைய கல்லறைக்குச் செல்ல வேண்டும்?
பதில்:
₹₹₹₹
சுவிசேஷம் எழுதிய ஆசிரியர்கள் “இயேசுவுக்கு அபிஷேகம் செய்ய (To Anoint)” அல்லது சுகந்தவர்க்கமிடும்படி (வாசனைப்பொருட்களைக் கொண்டு உடலில் பூசுவதற்கு) மரியாள் அங்கு சென்றார் என குறிப்பிடுகின்றனர். அடக்கம் செய்யப்பட்ட உடலில் எவ்வாறு அபிஷேகம் செய்யலாம் என்ற சந்தேகம் வருவதை இவ்விடத்தில் யாராலும் மறுக்க இயலாது. எனவே இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை அறிந்து கொண்டால் விளக்கம் தானாக புரியும்.

அபிஷேகம் செய்தல் (To Anoint) அல்லது சுகந்த வர்க்கமிடுதல் என்று தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் “MASAHA” என்ற ஹீப்ரு வார்த்தை உள்ளது – தடவுதல், தேய்த்தல், அல்லது உருவுதல் என்று இச்சொல்லை மொழிபெயர்க்கலாம். இதுவே அரபியிலும் பயன்படுத்தப்படுகிறது
இவ்வாறு பௌதீக ரீதியாக அபிஷேகம் செய்தல், தடவுதல், தேய்த்தல், அல்லது MASSAGE செய்தல் என்று பொருள்படும் சொல் மரணித்து அடக்கம் செய்யப்பட்டிருக்கும் (?) உடல் தொடர்பில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கும்?
சிலுவையில் மரித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் (?) இயேசுவின் உடலை “தடவி அபிஷேகம் செய்ய அல்லது சுகந்தவர்க்கமிட” மகதலேனா மரியாள் அங்கு சென்றிருக்கிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

கேள்வி 2:
₹₹₹₹₹₹₹
யூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்த வர்க்கமிடுவார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 3:
₹₹₹₹₹₹₹
முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்தவர்க்கமிடுவார்களா?
பதில்: இல்லை.

கேள்வி 4:
₹₹₹₹₹₹₹
கிறித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்தவர்க்கமிடுவார்களா?

பதில்: இல்லை.இல்லை! இல்லை! இல்லை ! என்பதே அனைத்து மார்க்கத்தாரிடமும் இருந்து கிடைக்கும் பதில்.

இங்கு நாம் ஒரு பொதுவான விடயத்தை கவனிக்க வேண்டும். அதாவது ஒரு மனிதன் மரணித்து மூன்று மணித் தியாலங்களில் உடல் கலங்களில் இரசாயன மாற்றம் நிகழ ஆரம்பித்துவிடும். உடற்கலங்கள் பிரிந்து வேறாக்கப்பட்டு, உடலில் விறைப்புத் தன்மை அதிகரிக்கும் நிலை உருவாகும்.மேலும், மூன்று நாட்களில் உடற்பாகங்கள் அழுகும் நிலையை அடைய துவங்கும். இவ்வாறான நிலையில் உள்ள உடலை எம்மால் தடவி அபிஷேகம் செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முற்பட்டால் உடல் துண்டு துண்டாகி உடையக்கூடிய நிலையில்தான் இருக்கும் அல்லவா?

கேள்வி 5:
₹₹₹₹₹₹₹
மூன்று நாட்கள் கழிந்து அழுகும் நிலையை அடைந்த உடலை சுகந்தவர்க்கமிடும் நோக்குடன் மகதலேனா மரியாள் அங்கு சென்றிருப்பார் என்பது அர்த்தமுள்ள வாதமாக இருக்குமா?

பதில்: மரித்த உடலுக்கு மூன்று நாட்கள் கழித்து சுகந்தவர்க்கமிட்டு அபிஷேகம் செய்தல் என்பது எவ்வித அர்த்தமுமில்லாத வாதமாகத்தான் இருக்கும். ஆனால், உயிருடன் உள்ள ஒருவருக்கு வாசனைத்திரவியங்கள், அல்லது மருந்துப் பொருட்கள் மூலம் சுகந்த வர்க்கமிட சென்றிருப்பார் என்றால்தான் இவ்விடத்தில் அர்த்தமுள்ள ஒரு வாதமாக இருக்கும். மேலும், இயேசுவை அடையாளம் கண்ட பின்னர் மரியாள் வெளிப்படுத்தும் பாவனைகளைக் கொண்டும் இதை நாம் அறிந்துகொள்ளலாம். சிலுவையில் இருந்து அகற்றப்பட்ட உடலில் உயிர் இருந்ததை மரியாள் அறிந்திருக்கிறார். இயேசுவுக்கு இறுதிச்சடங்கு (?) செய்யப்பட்ட நேரத்தில் இயேசுவின் சீடர்களில் அங்கிருந்த ஒரேயொரு பெண்மணி இவர்தான். மற்றைய இருவரும் இயேசுவின் அந்தரங்க சீடர்களான யோசேப்பும், நிக்கொதேமுவும் ஆவார்கள். சுவிசேஷம் எழுதியவர்கள் வேண்டுமென்றே நிக்கொதேமு எனும் சீடர் தொடர்பான தகவல்களை மறைத்துள்ளார்கள். இயேசுவின் மீது மிக உயர்ந்த பற்றும், பாசமும் நிறைந்த இந்த தியாகியினைப் பற்றி பிரதான சுவிசேஷ ஆசிரியர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் அறியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவருடைய பெயர் கூட இந்த மூன்று சுவிசேஷங்களிலும் இடம்பெறவில்லை. திட்டமிட்டுத் தான் இந்த சீடருடைய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது என்று உலகின் மிகச் சிறந்த பைபிள் ஆசிரியர்களில் ஒருவரான Dr. Hugh S Schofield என்பவர் கூறுகிறார்.

இயேசுவின் அந்தரங்க சீடரான இவரைப்பற்றி உள்ள குறிப்புக்கள் பவுல் உருவாக்கிய கிறித்தவத்துக்கு எதிராக இருந்திருக்கும் போல…

சரி, மகதலேனா மரியாள் கல்லறைக்குச் சென்றபோது கல்லறையின் வாசற்கல் ஏற்கனவே உருட்டப்பட்டு இருப்பதையும், இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த துணி சுருட்டப்பட்டு கல்லறையின் (மலைக்குகையில் அமைந்த கல்லறை) சுவர் முனையில் இருப்பதையும் கண்டார். இந்தவேளையில் நமது அடுத்த கேள்வி எழுகிறது!

கேள்வி 06:
₹₹₹₹₹₹₹₹
கல்லறையின் வாசற்கல் ஏன் அகற்றப்பட்டிருந்தது?
இயேசுவின் உடலைச்சுற்றியிருந்த துணி சுருட்டப்பட்ட நிலையில் ஏன் இருக்க வேண்டும்?


பதில்: இரத்தமும் சதையும் உள்ள ஓர் பௌதீக உடலுக்குத் தான் குகையினை விட்டு வெளியேறுவதற்கு வாசற்கல் தடையாக அமையும். மேலும், துணியால் சுத்தப்பட்ட நிலையில் இருக்கும் போது நடமாடுவது அசாத்தியமாக இருக்கும். உயிர்த்தெழுந்த ஒருவருக்கு கல்லறையின் வாசலில் இருந்த கல்லை அகற்ற வேண்டிய தேவையுமில்லை, தன்னைச் சுற்றியிருந்த துணியை அகற்ற வேண்டிய தேவையுமில்லை. உயிர்த்தெழுந்தவர் நடமாடுவதற்கு எந்தவொரு பொருளும் தடையாக அமையாது; அது கல்லானாலும் சரி, இரும்புக்கூடானாலும் சரி !

எனவே கல்லறையில் வைக்கப்பட்ட மரித்த உடல் உயிர்த்தெழுந்து சென்றிருக்குமென்றால் இவ்வாறு கல்லறையின் வாசற்கல் அகற்றப்பட்டிருக்காது. மேலும் உடலை சுற்றியிருந்த துணியும் அகற்றப்பட்டிருக்காது.கல்லறையிலே இயேசுவைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த மரியாளை இயேசு பார்த்துக் கொண்டிருக்கிறார். பரலோகத்திலிருந்தல்ல… பூலோகத்திலிருந்து… !

மரியாளுக்கு மிக மிக அருகாமையில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இயேசுவின் அந்தரங்க சீடரான யோசேப்பு என்பவரால் இயேசுவுக்கென்று பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்லறையின் அருகாமையில் இருந்து மகதலேனாவை கண்காணிக்கிறார். இந்தக் கல்லறையும் இதனைச் சுற்றியிருந்த விவசாயத் தோட்டமும் யோசேப்புக்கு சொந்தமானதாகும். அவர் ஒரு வசதி படைத்தவராக இருந்த காரணத்தினால், போதுமான இடவசதியுள்ள ஓர் கல்லறையினை தன்னுடைய ஆஸ்தான போதகருக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கல்லறை தொடர்பில் பிரபல அறிஞர் Jim Bishop விளக்கும்போது, அந்தக் கல்லறை 5 அடி அகலத்தையும், 7 அடி நீளத்தையும், 15 அடி ஆழத்தையும் கொண்டிருந்தது என்று கூறுகிறார் (மலைக் குகையில் அமைக்கப்பட்டது என்பதைக் கருத்திற் கொள்க).நகருக்கு வெளியே 5 மைல்களுக்கு அப்பால் உள்ள தனது தோட்டத்தை கவனிப்பாரற்று யாரும் விடமாட்டார்கள். பராமரிப்பாளர்களையும், தோட்டக்காரர்களையும், காவலர்களையும் நிச்சயமாக பணித்திருக்க வேண்டும். இவ்வாறு தன்னுடைய செல்வாக்கு மிக்க சீடரின் தோட்டத்திலிருந்த குகையில்தான் இயேசுவுக்கான கல்லறை ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே மகதலேனா விசாரித்துக் கொண்டிருக்கையில் அவளிடமிருந்து ஏழு பிசாசுகளை இயேசு துரத்துகிறார். நன்றாக சிந்தியுங்கள், இயேசு எந்த வகையிலும் தனது பணியிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. கடவுளின் நாமத்தைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தியது அவர் இன்னும் மரணிக்கவுமில்லை, உயிர்த்தெழுந்து ஆவியாகி விடவுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறதல்லவா?

சிலுவைச் சம்பவத்துக்கு முன்னர் எவ்வாறு தன்னுடைய பணியினைச் செய்தாரோ அவ்வாறே சிலுவைச் சம்பவத்திற்கு பிறகும் நடந்துகொள்கிறார்.அந்த சந்தர்ப்பத்தில் அழுதுகொண்டிருந்த மரியாளிடம் இயேசு வந்து;

ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார்.
(யோவான் 20:15)

கேள்வி-07
₹₹₹₹₹₹₹₹
அவருக்கு தெரியாதா ஏன் அழுகிறாள் என்று? தன்னைக் குறித்துதான் அழுதுகொண்டிருக்கிறாள் என்பது அறிந்த பின்னரும் ஏன் இவ்வாறு ஓர் வேடிக்கையான கேள்வியை கேட்க வேண்டும்?
பதில்: இயேசு ஒன்றும் வேடிக்கையான கேள்வியைக் கேட்கவில்லை. மகதலேனா மரியாள் ஏன் அங்கு வந்தாள், யாரை தேடுகிறாள், எதற்காக அழுகிறாள் என அனைத்தையும் இயேசு அறிந்திருந்தார். அனைத்தையும் அறிந்திருந்தும் இவ்வாறு ஓர் அர்த்தமற்ற கேள்வியை இயேசு கேட்டிருப்பாரா?

பதில்;- இல்லை, அர்த்தமற்ற கேள்வியல்ல. உண்மையில், இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த நிலையிலும் தன்னுடைய சீடரிடத்தில் நகைச்சுவையாகவே யாரைத் தேடுகிறாய் என்று கேட்டிருக்கிறார். தன்னை அடையாளம் காணமுடியாமல் ஏமாந்துபோய் இருந்த மரியாளிடமே

ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார்.
(யோவான் 20:15)

அதற்கு மரியாள் இவ்வாறு பதிலளிக்கிறாள்.அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி:

ஐயா, நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்.
(யோவான் 20:15)
கேள்வி 08:
₹₹₹₹₹₹₹₹
இயேசுவை ஏன் தோட்டக்காரர் என்று எண்ண வேண்டும்? உயிர்த்தெழுந்தவர்கள் தோட்டக்காரர்களைப் போல் இருப்பார்களா???நாம் அனைவரும் உயிர்த்தெழும் நாளைப்பற்றி சிறிது கற்பனை செய்துபாருங்கள். அனைவரும் உயிர்த்தெழுந்த பின்னர் தோட்டக்காரர்களைப்போல் உருமாறியிருப்போம் என்றால் எவ்வாறு இருக்கும்??? எல்லா ஆண்களும் தோட்டக்காரர் உருவில் இருந்தால் ஒரு மனைவி தன்னுடைய கணவனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வாள்? தன்னுடைய மகனும் தோட்டக்காரனைப்போல் இருந்தால்? மருமகனும் தோட்டக்காரனைப்போல் இருந்தால்? தகப்பனாரும் தோட்டக்காரரைப்போல் இருந்தால்? கணவனும் தோட்டக்காரரைப்போல் இருந்தால்? எவ்வாறு நிலமை இருக்கும்??? குழப்பத்தின்மேல் குழப்பம் அல்லவா பிறக்கும்?இவ்வாறு தோட்டக்காரர் உருவில் அனைவரும் மாறியிருப்பார்கள் என்ற வாதம் அறிவுபூர்வமானதாக இருக்குமா? இல்லை ஒருபோதும் இல்லை. மரித்து உயிர்த்தெழுந்தாலும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள். எடுத்த எடுப்பிலே அடையாளம் காணக்கூடிய நிலையில்தான் நாம் அனைவரும் இருப்போம். எந்த வயதில், எந்த சந்தர்ப்பத்தில் மரித்தாலும் உயிர்த்தெழுதலின்போது அடையாளம் காணக்கூடியவர்களாகவே இருப்போம். அவ்வாறென்றால் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும் இயேசு மட்டும் ஏன் தோட்டக்காரரைப் போல் இருக்க வேண்டும்?

பதில்: ஏனேன்றால், இயேசு தோட்டக்காரரைப் போல் வேடமிட்டிருந்தார்.

கேள்வி 09:
₹₹₹₹₹₹₹₹
ஏன் தோட்டக்காரனைப்போல் வேடமிட்டிருக்க வேண்டும்?

பதில்: ஏனெனில், தன்னைக் கொல்லத் துடிக்கும் யூதர்களுக்கு அஞ்சிய காரணத்தினால் மாறுவேடமிட்டிருந்தார்.

கேள்வி 10:
₹₹₹₹₹₹₹₹
யூதர்களுக்கு ஏன் அஞ்ச வேண்டும்?

பதில்: ஏனெனில் அவர் மரிக்கவுமில்லை; உயிர்த்தெழவுமில்லை. அவர் மரித்து உயிர்த்தெழுந்திருந்தால், யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. ஏன்? ஏனெனில், உயிர்த்தெழுந்த ஒருவர் இன்னொருமுறை மரணிக்கமாட்டார். இதை யார் சொல்கிறார்? பைபிளே சொல்கிறது !

"அன்றியும், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத் தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே" (எபிரேயர் 9:27)

உயிர்த்தெழுந்தவர் இன்னொருமுறை மரணிக்கமாட்டார் என்பதை இயேசுவே மிகத் தெளிவாக கூறியதை இங்கு பதிவு செய்வது இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றைய தினம் அவரிடத்தில் மீண்டும் ஒரு குதர்க்கமான கேள்வியோடு வந்து; "ஏழு பேரை திருமணம் செய்து மரணித்த ஒரு பெண் உயிர்த்தெழும் நாளில் அவ்வேழு பேரில் யாருக்கு மனைவியாயிருப்பாள்?" என்று கேட்டார்கள்.
(பார்க்க: மத்தேயு 22: 23 – 28)

தன்னைச் சோதிக்க வந்தவர்களிடம் சுருக்கமான ஓர் பதிலைக் கூறிவிட்டு அவர்களை புறக்கணித்திருக்க முடியுமென்றாலும், இயேசு அவ்வாறல்லாமல், உயிர்த்தெழுந்தவர்கள் தொடர்பில் அழகான தெளிவான பதிலை வழங்குகிறார். "மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள், அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளான படியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்." (லூக்கா 20: 35, )
"அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் இறவா நிலையை அடைந்துவிடுவார்கள். இரண்டாவது தடவை மரணம் அவர்களை அணுகாது. பசியோ அல்லது தாகமோ இருக்காது. சிறிய சோம்பலோ அல்லது எந்தவொரு உபாதையோ இருக்காது. உயிர்த்தெழுந்தவர்கள் தேவதூதர்களுக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள்.உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்" 
(லூக்கா 20: 36)
உயிர்த்தெழுந்த ஒருவர் மரணத்தை குறித்து அஞ்ச வேண்டிய அவசியமோ அல்லது மறைந்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை. இயேசு உயிர்த்தெழுந்திருந்தால் அவர் தேவதூதருக்கு ஒப்பானவராக இருந்திருப்பார். மரணம் அவரை அணுகாது. அப்படியிருக்க அவர் ஏன் யூதர்களுக்கு அஞ்சி மாறுவேடம் அணிந்திருக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

சரி, மரியாள் அங்கு உயிருடன் உள்ள இயேசுவை தேடி வந்தாளா அல்லது இயேசுவின் பிரேதத்தை தேடி வந்தாளா அல்லது மரித்து உயிர்த்தெழுந்த ஆவியை தேடி வந்தாளா?

உயிர்த்தெழுந்த ஆவியையோ அல்லது பிரேதத்தையோ தேடி வரவில்லை என்பதை தோட்டக்காரரென்று எண்ணி இயேசுவிடம் மரியாள் கேட்கும் கேள்வியிலிருந்து நாம் அறியலாம். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: "ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்." 
(யோவான் 20:15)

கவனமாக நோக்குங்கள், மரியாள் தான் தேடிக்கொண்டிருப்பது அவரை என்று கூறுகிறாள், மாறாக பிரேதத்தை தேடிக்கொண்டிருந்தால் அதை எங்கு வைத்தீர்கள் என்று தான் கேட்டிருக்க வேண்டும். மேலும், அவரை நீங்கள் வைத்த இடத்தை சொல்லுங்கள் என்று கூறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.!
ஏனென்றால், இயேசுவின் பிரேதத்தை குறித்து கேட்டிருந்தால் அதை எங்கு புதைத்தீர்கள் அல்லது அடக்கம் செய்தீர்கள் அல்லது குறைந்த பட்சம் அதை எங்குவைத்தீர்கள் என்றாவது கேட்டிருக்க வேண்டும்...!

.தொடர்கிறது சம்பாசனை…

"நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன். என்று மரியாள் கேட்கிறாள்." (யோவான்20:15)

கேள்வி 11:
₹₹₹₹₹₹₹₹
அழுகும் நிலையிலிருக்கும் பிரேதத்தைக் கொண்டு செல்ல கேட்பதன் நோக்கம் என்ன?

பதில்:தன்னுடைய கட்டிலுக்கடியில் வைப்பதற்காக இருக்குமா? இல்லை அது அபத்தமாகும். அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக இருக்குமா?
இல்லை அது அர்த்தமற்றதாகும். ஒருவேளை அடக்கம் செய்வதற்காக இருக்குமா ? அவ்வாறென்றால் கல்லறையினை யார் வெட்டுவார்!!! இல்லை இல்லை. உண்மையில் உயிரோடு உள்ள இயேசுவை அழைத்துக்கொண்டு செல்வதுதான் மரியாளின் நோக்கமாகும்.

கேள்வி 12:
₹₹₹₹₹₹₹₹
தன்னந்தனியாக அவளால் எப்படி இயேசுவின் உடலை தூக்கிச் செல்ல முடியும்? பதில்: இறந்து அழுகிக்கொண்டிருக்கும் உடலைப்பற்றி மரியாள் சிந்திக்கவில்லை. உயிரோடிருக்கும் தன்னுடைய போதகரையே தேடுகிறாள். மரியாளொன்றும் கதைகளில் வரும் அசகாய பலம் படைத்த பெண் இல்லை, சுமார் 160 இறாத்தல் எடையுள்ள ஒரு மனிதரின் உடலையும் இன்னும் 100 இறாத்தல் கொண்ட வெள்ளைப்போளமும் கரிய போளமும் சேர்த்து (யோவான்19:39) சுமார் 260 இறாத்தல் எடைகொண்ட பொதியை சுமக்கும் அளவுக்கு ஓர் விசித்திர பெண்ணுமில்லை. ஒரு வாதத்திற்கு அவளால் சுமக்க முடியும் என்றாலும், அந்த உடலை தனியாக அடக்கம் பண்ணுவது எவ்வாறு அவளால் முடியும்? எங்காவது ஓர் இடத்தில் புகுத்தி வைக்க வேண்டுமானால் அது முடியும். என்றாலும், அடக்கம் செய்வதும் ஓர் குவியலில் புகுத்தி வைப்பதும் எந்த வகையிலும் தொடர்பில்லாத விடயங்களாகும்.கையோடு கைசேர்த்து அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைக்கவும், நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கக்கூடிய ஓர் சூழலை ஏற்படுத்தவும் தான் உயிருடனுள்ள இயேசுவை மரியாள் தேடுகிறாள்.தான் பேசிக் கொண்டிருப்பது தன்னுடைய போதகர் இயேசுதான் என்று மரியாளுக்கு ஒரு சிறிதளவும் சந்தேகம் வரவேயில்லை, தோட்டக்காரர் வேடமிட்டிருந்ததை

உண்மையில் இனங்கண்டுகொள்ளாமல் போய்விட்டாள். மரியாளின் நிலையை எண்ணி, இயேசு உள்ளுக்குள் புன்னகைத்திருக்க வேண்டும். நீண்ட நேரம் அவராலும் உண்மையினை அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அவளை நோக்கி மரியாளே! என்று அழைத்தார்.

ஒரே வார்த்தை. என்றாலும், அந்த ஒரு வார்த்தை அவளுக்கு போதுமாக இருந்தது.அவர்களுக்கிடையில் பரிமாறப்பட்ட இத்தனை வார்த்தைகளாலும் உணர்த்த முடியாததை இந்த ஒரு வார்த்தை உணர்த்தியது. ஒவ்வொருவருக்கும் தங்களின் நேசத்துக்குரியவரை அல்லது நெருக்கமானவரை அழைக்கும் தனியான தொனி இருக்கும். அந்த அழைப்பிலேயே அறிந்து கொள்வார்கள் தன்னை யார் அழைத்ததென்று. வெறுமனே ஒரு பெயரை அவர் உச்சரிக்கவில்லை. இயேசுதான் தன்னை அழைக்கிறார் என்று மரியாள் அடையாளம் காணவும் உடனே அதனை வெளிப்படுத்தவும் கூடிய வகையில்;-
ரபூனி (போதகரே) என்று மரியாளை அழைக்க வைத்தது இயேசுவின் வார்த்தையிலிருந்த தொனியாகும்.மரியாளின் வருகை குறித்து சிந்திப்பதற்கு இது மிகப் பொருத்தமான தருணம் ஆகும்.

தான் தேடி வந்தது ஆவியையோ அல்லது இறந்த உடலையோ அல்ல. மாறாக உயிருடன் உள்ள இயேசுவைத்தான் என்பது சந்தேகமில்லாமல் புலப்படும் தருணம் இதுதான். !

தோட்டக்காரர் வேடத்தில் இருந்தது இயேசு தான் என்பதை உணர்ந்த மரியாள் அவரை ஆவியென்று அஞ்சாமல் தன்னுடைய போதகர் தான் என்று நம்பி அவரை நோக்கிச் சென்று அவரை தொடுவதற்கு முயல்கிறாள். தன்னுடைய போதகருக்கு மரியாதை செய்ய நாடுகிறாள்.இவ்வளவு காலமும் ரத்தமும் சதையுமாக இருந்த தன்னுடைய போதகர் இன்று மரித்து உயிர்த்தெழுந்து ஆவியாய் நிற்கிறாரே என்பதை வெளிப்படுத்தும் எந்தவொரு அசைவும் அவளிடம் இல்லை. மரியாள் தேடியதும் உயிருடன் உள்ள மனித இயேசுவைத் தான். அவள் கண்டு கொண்டதும் உயிருடன் உள்ள மனித இயேசுவைத் தான். அதனால்தான் எந்த சலனமுமில்லாமல் போதகரே என்று அழைக்க முடிந்தது.இயேசுவை நோக்கிச் சென்ற மரியாளிடம் இயேசு…..

"என்னைத் தொடாதே, என்றார்." (யோவான் 20:17).
கேள்வி 13:
₹₹₹₹₹₹₹₹

அப்படியா? ஏன் தொடக்கூடாது..? தொட்டால் மின்சாரம் தாக்கும் நிலையிலா இருந்தார் இயேசுநாதர்?

பதில்: இல்லை. என்னைத் தொட வேண்டாம், தொட்டால் அது வலியை உண்டாக்கும். பௌதீக ரீதியாக தான் காயப்பட்டதாகவோ அல்லது வேதனைக்குள்ளாகியதாகவோ இயேசு வெளிப்படுத்தாவிட்டாலும், அன்போடும் அக்கறையோடும் அவரை தொடுவது கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ”என்னைத்தொடாதே” என்று இயேசு கூறியமைக்கு இன்னும் ஏதாவது காரணம் இருக்க முடியுமா? இயேசுவே தொடர்கிறார்…!

"நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை" 
(யோவான் 20:17)
கேள்வி 14:
₹₹₹₹₹₹₹
மரியாள் என்ன பார்வையற்றவளா ? ? தான் இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருந்த மனிதனை கண்ணால் பார்க்காமலா இருந்தாள் மகதலேனா? தன்னோடு பேசிக்கொண்டிருந்த மனிதர் இன்னும் மேலே ஏறிப் போகவில்லை. தனக்கு முன்தான் நிற்கிறார் என்பதை உணராமலா இருந்தாள் இந்த பெண் சிஷ்யை ?

பூமியிலே நிற்கும் ஒரு மனிதன் தான் இன்னும் ஏறிப்போகவில்லை என்று சொல்வது நேரடியாக புரிந்து கொள்ளும் வார்த்தைகளா? இவ்வாறு அர்த்தமற்று பேசியிருப்பாரா இயேசுகிறிஸ்து?

பதில்: பல்வேறுபட்ட இந்த வார்த்தைகள் மூலம் இயேசு கூறுவதெல்லாம் “தான் இன்னும் மரிக்கவுமில்லை; உயிர்த்தெழவுமில்லை” என்பதுதான்

அல்குர்ஆன் வருமுன்பே இந்த உண்மையை, இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் தனது சுவிசேஷத்தில் எழுதி விட்டார் ! இன்று பவுல் பரப்பிய ஒரு பொய்யின் மீதுதான் கிருஸ்த்துவம் நிலை நிறுத்தப் பட்டுள்ளது !


நன்றி: 
Tink Fair

No comments:

Post a Comment